என் மலர்
நீங்கள் தேடியது "india communist"
புதுச்சேரி:
புதுவை சட்டசபை வளாகத்திற்குள் இரு சக்கர வாகனங்கள் அனு மதிக்கப்படுவதில்லை. அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இரு சக்கர வாகனங்களில் வந்தால் அவர்கள் மட்டும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வேறு யாருடைய வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் கட்சி நிர்வாகி தாமோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சட்டசபை வளாகத்திற்குள் வந்தார். அவரை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து சலீம் ஏன் சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? எப்போது முதல் இந்த விதிமுறை உள்ளது? என கேட்டார். சபை காவலர்கள் நேரடியாக பதில் கூறாமல், அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சலீம் அவர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து சபை காவலர்கள் வாகனத்தை அனுமதிக்க மறுத்தனர். இதனால் சலீம் சட்டசபைக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு சட்டசபை வளாகத்திற்குள் சென்றார். #puducherryassembly
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி.யும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அஜீஸ்பாஷா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் பா.ஜனதா ஆட்சியின் 4 ஆண்டுகாலத்தில் நாட்டின் பொருளாதாரம் 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிற் சாலைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு, திருப்பூர், கோபிசெட்டிபாளையத்தில் வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகிற ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்திக்கும். இதை கருத்தில் கொண்டே பாராளுமன்றத்துடன் மாநிலங்களுக்கு நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அரசியலமைப்பு சட்டத்தையே சீர்குலைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் ஆகியோர் உடனிருந்தனர். #pmmodi #indiacommunist
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான குருசாமி முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
தொண்டியானது முன்பு துறைமுக நகரமாக விளங்கியுள்ளது. இப்போதும் முதல் நிலை பேரூராட்சியாகவும் மக்கள் தொகை அதிகம் கொண்டதாகவும், தொழிற்துறையில் வளர்ந்து வரும் நகரமாகவும் விளங்குகிறது.
கிராமமான நம்புதாளையானது, திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட 47 கிராம பஞ்சாயத்துக்களில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாக உள்ளது.
இந்த 2 பகுதிகளையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் ஒன்றிணைத்து தொண்டியை நகரசபையாக மாற்றினால் பெரிய நகரமாக மாறவும், தொழிற்சாலைகள் உருவாகவும் வாய்ப்பாக அமையும்.
எனவே தொண்டி, நம்புதாளை பகுதிகளை இணைத்து நகரசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:
அனைத்துக்கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அருணாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அயனாபுரம் முருகேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வருகிற 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன், தமிழர் தேசிய முன்னணி மாநில தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைக்காக போராடும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். இது கண்டனத்துக்கு உரியது.
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தும் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல் துறை உடனே கைவிட வேண்டும். தமிழகத்தில் இயற்கை வளத்தை அழித்து மக்களை பாதிக்க வைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணை போகிற திட்டங்களை அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.
இதில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் திருஞானம், பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் மீதான விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு இதன் மீதான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் மாட்டு வண்டிகளில் இன்று தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது மாட்டுவண்டிகளை முன்னே நிறுத்தியும், காலி சிலிண்டர் ஒன்றை நடுவில் வைத்து கொண்டு அதற்கு பூ மாலை போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று காலை தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.
சத்தியமங்கலம் பஸ் நிலையம் எதிரே அந்த கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதனால் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சத்தியமங்கலம் போலீசார் ஸ்டாலின் குணசேகரன் உள்பட 32 பேரை கைது செய்தனர்.
திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதிக்கு நரியங்காடு துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் மின்சாரம் இரவு பகல் எந்த நேரத்திலும் முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி தடை செய்யப்படுகிறது. இதனால், விவசாயம் , வியாபாரம், சிறுதொழில்கள் உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, திருச்சிற்றம்பலம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
திடீர் மின் வெட்டு இல்லாமல், மும்முனை மின்சாரத்தை நாளொன்றுக்கு 16 மணி நேரம் வழங்க கோரியும், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்பகோரியும், நரியங்காடு 33 கிலோவாட் துணைமின் நிலையத்தை 110 கிலோவாட் திறன் கொண்டதாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17-ந்தேதி காலை 10மணிக்கு திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திருச்சிற்றம்பலம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருச்சிற்றம்பலம் கிளை செயலாளர் சதீஸ்குமார் தலைமை வகிக்கிறார். முன்ளாள் வட்டாரச் செயலாளர் கவிஞர் செல்வகுமார், ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.