என் மலர்
நீங்கள் தேடியது "india vs australia"
- கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு துவங்கப்பட உள்ளது.
- பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு துவங்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டுள்ளனர். ஏராளமான ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற நள்ளிரவு முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.இதனால் சேப்பாக்கம் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது.
பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
- ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
- 117 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் கில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
இதையடுத்து ரோகித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதில் கேப்டன் ரோகித் 13 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 31 ரன்னில் வீழ்ந்தார். அக்சார் பட்டேல் 29 ரன்களையும் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய ராகுல் 9 ரன், ஹர்த்திக் பாண்ட்யா 1 ரன், ஜடேஜா 16 ரன், குல்தீப் 4 ரன், ஷமி 0 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸி. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களில் சுருண்டது இந்தியா.
அந்த அணி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. 117 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.
இறுதிவரை ஆட்டம் இழக்காமல் மிட்சல் மார்ஷ் 62 ரன்களையும், ட்ராவிஸ் ஹெட் 46 ரன்களையும் எடுத்தனர்.
- இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது
- பயனர்களின் "வாலட்" கணக்கில் பரிசு தொகை சேர்க்கப்படும் என்றார் புனீத்
இந்தியாவில் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் புகழ் பெற்ற இணையவழி ஜோதிட வலைதளமான "அஸ்ட்ரோடாக்" (Astrotalk) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புனீத் குப்தா (Puneet Gupta), இந்தியர்களையும், இந்திய அணியினரையும் உற்சாகப்படுத்தும் ஒரு செய்தியை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ளார்.
2011ல் இந்தியா உலக கோப்பையை வென்ற போது தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ள புனீத், இந்த இறுதி போட்டியில் இந்தியா உலக கோப்பையை வென்றால், அஸ்ட்ரோடாக் வலைதள பயனர்கள் அனைவருக்கும் ரூ.100 கோடி தொகையை சமமாக பகிர்ந்து வழங்க போவதாகவும், பகிர்மான தொகை பயனர்களின் "ஆப் வால்ட்" (app wallet) கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் போட்டி முடிவதற்குள் பலர் இந்த வலைதளத்தில் பயனர்களாக பதிவு செய்யக்கூடும் என்பதால் இதனை சந்தை வியாபார யுக்தி என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜோதிட இணையதளமான அஸ்ட்ரோடாக், இன்றைய போட்டியில் யார் வெல்ல போவது என கணித்து தெரிவிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- இறுதி போட்டி என்பதால் இரு அணியினரும் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்
- அத்துமீறி நுழைந்த நபர், கோலியை நெருங்கி அவர் தோளில் கை போட முயன்றார்
4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2023 போட்டித்தொடர் அக்டோபர் 5 அன்று இந்தியாவில் தொடங்கியது. பல சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19 அன்று நடைபெற்றது.
மதியம் தொடங்கிய இப்போட்டியில் "டாஸ்" வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியினர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.
விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போட்டியில், 13-வது ஓவர் நிறைவடையும் நேரத்தில் இந்தியா 3 விக்கெட்களை இழந்திருந்தது. இறுதி போட்டி என்பதால் இரு அணியினரும் தீவிர கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.
அப்போது திடீரென பார்வையாளர்கள் அரங்கத்திலிருந்து ஒரு நபர், மைதானத்திற்குள் அத்துமீறி புகுந்தார். இவரை கண்ட பாதுகாவலர்கள் விரைந்து வந்து அவரை தடுக்க முயன்றனர்.
முகத்தை துணியால் மூடி, பாலஸ்தீன ஆதரவு வாசகங்களை கொண்ட டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த நபர் வேகமாக ஓடி, இந்திய ஆட்டக்காரர் விராட் கோலிக்கு அருகே சென்றார். அவரை நெருங்கிய அந்த நபர், ஒரு சில வினாடிகள் விராட் கோலியின் தோளில் கை போட முயன்றார். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி வெளியேற்றினர்.
இச்சம்பவத்தால் சில வினாடிகள் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாவலர்கள் அந்த நபரை அழைத்து சென்றனர். அத்துமீறிய நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ஆட்டம் இயல்பாக தொடர்ந்து நடைபெற்றது.
- 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடியவர் ஹேடன்
- வெள்ளை நிற மாடலை ஹேடன் விரும்பி தேர்வு செய்துள்ளார்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் (Matthew Hayden).
தொடக்க வீரராக களம் இறங்கி ரன் குவிப்பில் பல சாதனைகளை புரிந்த ஹேடன், சுமார் 15 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரராக திகழ்ந்தார்.
2003 ஐசிசி ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியாவுடனான இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடி அந்த அணி வெற்றி பெற வழி தேடி தந்தவர்களில் ஹேடனும் ஒருவர்.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா ஆட்டோ. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் இவர்களுக்கு கிளைகள் உள்ளன.
கடந்த 2015ல் மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான ஆஸ்திரேலிய தூதராக மேத்யூ ஹேடன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்நிறுவனத்தின் பல கார்களை இணையதள வழியாக ஹேடன் விளம்பரப்படுத்தி வருகிறார்.
சில தினங்களுக்கு முன் ஹேடன், மஹிந்திரா நிறுவன தயாரிப்பான ஸ்கார்பியோ என் (Scorpio N) கார் ஒன்றை வாங்கினார். "எவரெஸ்ட் வைட்" (Everest White) எனும் வெள்ளை நிற ஸ்கார்பியோ மாடலை அவர் தேர்வு செய்துள்ளார். இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனையில் உள்ளது.
இது குறித்து ஹேடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோவில் ஸ்கார்பியோவின் பல அம்சங்களை ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன் புகழ்ந்து பேசுகிறார்.
பயணிகளுக்கான கார்களில் எஸ்.யூ.வி. (SUV) எனப்படும் வாகன வகையை சேர்ந்த ஸ்கார்பியோ காரை நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்த உள்ளதாக ஹேடன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் "ஸ்கார்பியோ என்" மாடல்களில் டீஸல் எஞ்சின் பொருத்தப்பட்டவை மட்டுமே விற்கப்படுகின்றன.
ஹேடன் தேர்வு செய்துள்ள "ஸ்கார்பியோ என்", கடந்த ஜூலை மாதம், ஆஸ்திரேலியாவின் சிம்ப்சன் பாலைவனத்தை (Simpson Desert) அதிவேகமாக கடந்ததற்காக கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவில், மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஸ்கார்பியோ கார்தான் அதிக விற்பனையை குவிக்கும் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது
- கருப்பு மண் இரவில் கான்க்ரீட் போலாகி விடும் என பெய்லி தெரிவித்தார்
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி, நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது.
இந்த போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்தியா, இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. வெற்றி உறுதி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோல்வியுற்றது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. அதன் கேப்டன், பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்தியாவை ஆஸ்திரேலிய அணி 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. பிறகு ஆடிய அந்த அணி முதலில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், டிராவிஸ் ஹெட் அடித்த சதத்தினால் எளிதாக உலக கோப்பையை வென்றது.

இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
நான் ஆஸ்திரேலிய தேர்வாளர் ஜார்ஜ் பெய்லியை சந்தித்து உரையாடும் போது, எப்போதும் முதலில் ஆடுவதை விரும்பும் ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றும் ஏன் பவுலிங்கை தேர்வு செய்தார்கள் என கேட்டேன்.
அதற்கு பெய்லி, "ஐபிஎல் (IPL) மற்றும் பல இருதரப்பு போட்டிகள் இங்கு நாங்கள் விளையாடி உள்ளோம். சிவந்த மண் நேரம் செல்ல செல்ல தளர்ந்து போகும். ஆனால், கருப்பு மண் அப்படி அல்ல; மாலை விளக்கு ஓளியில் நன்றாக தெரியும். சிவந்த மண்ணில் பனிப்பொழிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கருப்பு மண் மதிய வேளையில் பந்தை நன்றாக 'டர்ன்' செய்யும். பிறகு இரவு நேரத்தில் கான்க்ரீட் போன்று ஆகி விடும்" என கூறினார்.
நான் அவர் பதிலால் ஆச்சரியம் அடைந்தேன்.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.
பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக திட்டமிட்டு கோப்பையை வென்றதை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
- இறுதி போட்டியை காண பிரதமர் மோடியும் வந்திருந்தார்
- இனி வரும் காலங்களில் ஊக்கமுடன் செயலாற்ற இது உதவும் என்றார் சேவாக்
4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரின் 2023க்கான 13-வது போட்டி தொடர், அக்டோபர் 5 அன்று தொடங்கி நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது. அனைத்து போட்டிகளும் இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்றது.
இப்போட்டி தொடரின் இறுதி போட்டி, குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது.
இப்போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்தார்.
இத்தொடரின் ஆரம்பம் முதல், பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்திய அணியினர், இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியினரிடம் தோல்வி அடைந்தனர். உலகம் முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த படுதோல்வி, இந்திய அணியினரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. போட்டி முடிந்ததும் விளையாட்டு மைதானத்திலேயே சில இந்திய அணி வீரர்கள் கண்ணீர் சிந்தினர்.
இதையடுத்து சோர்வுடன் தங்களின் ஒய்வு அறையில் இருந்த இந்திய அணியினரை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கை குலுக்கி ஆறுதல் வார்த்தைகள் கூறி உற்சாகப்படுத்தினார். மேலும், இந்திய அணியினரை டெல்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.
இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான "அதிரடி மன்னன்" வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
வீரர்களை ஓய்வு அறையில் (dressing room) நாட்டின் பிரதமரே நேரில் சென்று காண்பது அபூர்வமான விஷயம். ஒரு மோசமான தோல்விக்கு பிறகு நொறுங்கிய அவர்களின் இதயங்களையும், உற்சாகத்தையும் மேலே கொண்டு வர இது அவசியம். தனது முக்கிய பணிகளுக்கு இடையே ஒரு பிரதமர் தோல்வியடைந்த வீரர்களை காண வருவது இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் அற்புதமான நடத்தை இது. படுதோல்விக்கு பிறகு அணியினர், குடும்ப உறுப்பினர்களை போன்று ஒற்றுமையுடன் ஆறுதல் கூற எவரேனும் உள்ளனரா என ஏங்கும் தருணம் அது. இனி வரும் காலங்களில் பல நாடுகளில் பல போட்டிகளில் பங்கு பெற உள்ள நம் நாட்டு அணியினருக்கு பிரதமரின் வார்த்தைகள் ஊக்கமாக அமையும். இப்போது நடந்தது போல், இனி வரும் போட்டிகளில் இறுதி கட்ட தடை கற்களை தாண்டவும் இது உதவும்.
இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.
112 கிரிக்கெட் வீரர்களை கொண்ட ஐசிசியின் "ஹால் ஆஃப் ஃபேம்" (Hall of Fame) எனும் புகழ் பெற்ற சாதனையாளர்களின் பட்டியலில் சில வாரங்களுக்கு முன், வீரேந்தர் சேவாக்கின் பெயர் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சேவாக், இப்பட்டியலில் இணையும் 8-வது இந்திய வீரர் ஆவார்.
- ஐசிசி உறுப்பினர்களில் பிசிசிஐ அதிக வருமானம் ஈட்டும் வாரியமாக உள்ளது
- ஆஸ்திரேலிய வாரியத்தை விட பிசிசிஐ 28 மடங்கு அதிக மதிப்பு உடையது
பல விளையாட்டுகள் இந்தியாவில் பிரபலமாக இருந்தாலும், பெரும்பான்மையான இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்குத்தான் முதலிடம் தருகிறார்கள் என்பது நிதர்சன உண்மை.
தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு, பிசிசிஐ (BCCI) எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம். இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் இயங்குகிறது.
ஐசிசி (ICC) எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்புடன் இந்தியாவின் சார்பான உறுப்பினராக இணைந்திருந்தாலும், ஐசிசி எடுக்கும் முடிவுகளில் பிசிசிஐ ஆதிக்கம் செய்யும் அளவிற்கு பலம் பொருந்தி இயங்கி வருகிறது.
இது ஒரு தனியார் அமைப்பாக செயல்படுவதால், இதன் வருமானம் இந்திய அரசாங்கத்தை சார்ந்து இல்லை. மற்ற வாரியங்களை விட ஐசிசி அமைப்பின் பெரும்பான்மை வருமானம் பிசிசிஐ அமைப்பிற்கே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் நிகர மதிப்பு ரூ.18,700 கோடி ($2.25 பில்லியன்) என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு அடுத்த நிலையில், இரண்டாவது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) அமைப்பு ரூ.660 கோடி ($79 மில்லியன்) மட்டுமே ஈட்டுகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் 2023 விளையாட்டு தொடரில் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் வருமான அடிப்படையில், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை விட 28 மடங்கு அதிக நிகர மதிப்பு கொண்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமே இந்திய ரசிகர்கள் தரும் அதிக வரவேற்பினால், பிற நாடுகளும் இந்திய அணியினர் தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுவதையும் அதன் மூலம் வரும் விளம்பர வருவாயையும் பெரிதும் விரும்புகின்றனர்.
2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் (IPL) எனப்படும் இந்திய பிரீமியர் லீக் விளையாட்டு தொடருக்கு பிறகு பிசிசிஐக்கு கிடைத்து வரும் வருமானம் ஆண்டுதோறும் மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
- இன்றைய போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
செயின்ட் லூசியா:
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 2-ல் இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.
குரூப் 1-ல் நான்கு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்திய அணி மட்டுமே தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்ற அணிகளான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் 2-ல் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. வங்காளதேசம் 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் அரையிறுதிக்கு எந்த அணி தகுதி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மிக முக்கியமான ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டும் நன்றாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தோல்வியடைந்தாலும் ரன்ரேட் வலுவாக உள்ளதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாறாக இந்த ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா 2-வது இடத்திற்கு சரியும். அதே நேரம் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 83 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும்.
இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க கடுமையாக போராடும்.
- பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
- இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது டெஸ்டாகும்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டுவில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இந்த டெஸ்டிலும் இந்திய அணியின் அதிரடி நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆன பிறகு பெர்த் டெஸ்டில் பெற்ற வெற்றி மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் லெவனுக்கு எதிரான பகல்-இரவு பயிற்சி ஆட்டத்திலும் வென்று இருந்தது.
முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் அவருடன் தொடக்க வீரராக ஜெய்ஷ்வால் ஆடுவார். கே.எல்.ராகுல் 3-வது வரிசையில் களம் இறங்குவார். தேவ்தத் படிக்கல் கழற்றி விடப்படுவார்.
பெர்த் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ஜெய்ஷவால்-ராகுல் ஜோடியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.
துருவ் ஜிரல் நீக்கப்பட்டால் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும். அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் சுழற்பந்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்டில் இடம் பெற்றார். இதே நிலை 2-வது டெஸ்டிலும் நீடிக்குமா? என்று தெரியவில்லை.
முதல் டெஸ்டில் ஜெய்ஷ்வால் (161 ரன்) விராட் கோலி சதம் அடித்து முத்திரை பதித்தனர். பந்து வீச்சில் பும்ரா (8 விக்கெட்), முகமது சிராஜ் (5), ஹர்சிக் ரானா (4) சிறப்பாக செயல்பட்டனர். முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டு 2-வது இன்னிங்சில் அபாரமாக ஆடி இந்தியா பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானதாகும்.
பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 108 போட்டியில் இந்தியா 33-ல், ஆஸ்திரேலியா 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 29 டெஸ்ட் டிரா ஆனது. ஒரு போட்டி டையில் முடிந்தது.
நாளை டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நாளை தொடங்குகிறது.
- முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டுவில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆன பிறகு பெர்த் டெஸ்டில் பெற்ற வெற்றி மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் லெவனுக்கு எதிரான பகல்-இரவு பயிற்சி ஆட்டத்திலும் வென்று இருந்தது.
இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளெயிங் 11 அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோஸ் ஹேசில்வுட்டிற்கு பதிலாக ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 4 முறை சந்தித்து இருக்கின்றன.
- இதில் 2 ஆட்டத்தில் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளை வரிசையாக போட்டுத்தாக்கி தனது பிரிவில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்தது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் பட்டேல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடர்ந்து தடுமாற்றம் காணும் கேப்டன் ரோகித் சர்மா பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். இதேபோல் கோலியும் கைகொடுத்தால் இந்தியாவின் பேட்டிங் வலிமையடையும்.
பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் கலக்குகிறார்கள். முந்தைய நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். அந்த ஆட்டத்தில் இந்தியா 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடி நியூசிலாந்தை திக்குமுக்காடச் செய்தது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்தியா 4 சுழல் யுக்தியை தொடரும் என்று தெரிகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு இடம் கிடைக்காது.
'பி' பிரிவில் அங்கம் வகித்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. அதில் ஜோஷ் இங்லிஸ் சதம் விளாசினார். தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்கள் மழையால் ரத்தானது.
அந்த அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் இல்லை. அதனால் அவர்களின் பந்து வீச்சு சற்று பலவீனமாகவே தோன்றினாலும், பேட்டிங்கில் அசுர பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.
டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி சூப்பர் பார்மில் உள்ளனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய பங்காற்றினார். அதே போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியிலும் சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார்.
அதாவது இந்தியா என்றாலே அடிப்பேன் என்பது போல டிராவிஸ் ஹெட் விளையாடி வருகிறார். இது போன்ற பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் டிராவிஸ் ஹெட்டை சீக்கிரமாக வீழ்த்த இந்திய அணி தீவிரமாக போராடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகிய மேத்யூ ஷார்ட்டுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் கூபர் கனோலி சேர்க்கப்பட்டுள்ளார். பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ் ஆகியோரைத் தான் அதிகம் நம்பி உள்ளது.
பொதுவாக ஆஸ்திரேலிய அணி ஐ.சி.சி. தொடர்களில் நெருக்கடியை சிறப்பாக கையாளக்கூடியது. அதனால் இந்தியாவுக்கு கடும் சோதனை காத்திருக்கிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகள் இதுவரை 151 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 57-ல் இந்தியாவும், 84-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 10 ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 4 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 2 ஆட்டத்தில் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன. மழையால் ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.