என் மலர்
நீங்கள் தேடியது "Indian team"
- தென்ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
- தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெறும் ஆர்வத்தில் அமெரிக்கா உள்ளது.
வாஷிங்டன்:
20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிந்தது.
சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப் 2-ல் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

சூப்பர்-8 சுற்று நாளை தொடங்குகிறது. இதில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
அந்த அணி பேட்டிங்கில் டி காக்,ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், கிளாசன், ஸ்டெப்ஸ், டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் நார்ஜே, ரபடா, மார்கோ ஜேனசன் ஆகியோர் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தனது வெற்றி உத்வேகத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.
முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்கா அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. லீக் சுற்றில் பாகிஸ்தான், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் தோற்றது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து ஆனது.
அந்த அணியில் ஸ்டீவன் டெய்லர், ஆரோன் ஜோன்ஸ், ஆண்ட்ரிஸ் கவுஸ், மோனாத் பட்டேல், நிதிஷ்குமார், கோரி ஆண்டர்சன், அலிகான், சவுரவ் நேத்ராவல்கர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெறும் ஆர்வத்தில் அமெரிக்கா உள்ளது.
- டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று நாடு திரும்பியது.
- உலகக் கோப்பையுடன் டெல்லி வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படாசில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர். உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, வெஸ்ட் இண்டீசில் ஏற்பட்ட புயல் மழையால் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு இயக்க திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்துசெய்யப்பட்டது.
அந்த பயணிகள் விமானம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அழைத்துச் செல்ல பார்படாசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மாற்று விமானம் எதுவும் வழங்கப்படவில்லை என பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை டிஜிசிஏ கோரியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
- சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றது. 17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து, டி20 உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில், பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்சக் கணக்கான ரசிகர்கள் சாலையில் திரண்டு இந்திய அணி வீரர்களை வரவேற்றனர்.
ரசிகர்கள் கூட்டத்திற்கிடையே, மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடைந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் இந்த அணிவகுப்பைக் காண திரண்டிருந்த ரசிகர்களை கண்டு திகைத்துப்போன மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மரைன் டிரைவிற்கு புதிய செயரை வைத்துள்ளார். அதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் ரியாக்ட் செய்துள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், " இனி இது மும்பையில் உள்ள குயின்ஸ் நெக்லஸ் அல்ல. அது இப்போது மும்பையின் மேஜிக்கல் ஹக்" என்று பதிவிட்டிருந்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டத்தை மாற்றும் கேட்சை பிடித்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவிற்கு ரியாக்ட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
- இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது.
- பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்கு பின்னர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது. பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.
இந்நிலையில் யார் யாருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்ற விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.5 கோடி. அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கபட்டுள்ளது.
- ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
- இந்த தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு:
ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் வரும் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளமும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வரும் 19-ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதுகிறது. அடுத்த லீக் ஆட்டங்களில் இந்திய அணி 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 23-ம் தேதி நேபாளத்தையும் எதிர்கொள்கிறது.
- ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன்.
- நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்திய சமி, கடந்த நவம்பருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் சமி விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 34 வயதான முகமது சமி தற்போதைய தனது உடல்தகுதி குறித்து கூறியதாவது:-
நான் சில காலமாக இந்திய அணிக்கு விளையாடாமல் இருப்பதை அறிவேன். அதனால் அணிக்கு விரைவாக திரும்ப கடுமையாக முயற்சித்து வருகிறேன். இருப்பினும் நான் அணிக்கு திரும்பும் போது, உடல் அளவில் எந்த வித அசவுகரியமும் இன்றி இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது.
அடுத்து வரும் வங்காளதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என எந்த அணிக்கு எதிரான தொடராக இருந்தாலும் அவசரப்பட்டு அணிக்கு வந்து, மறுபடியும் காயமடைந்தால் சிக்கலாகி விடும். அதனால் இந்த விஷயத்தில் நான் எந்த 'ரிஸ்க்'கும் எடுக்க விரும்பவில்லை.
ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன். ஆனால் 100 சதவீதம் உடற்தகுதியை அடையும் வரை அணிக்கு திரும்புவதில் எந்த ஒரு வாய்ப்பையும் எடுக்கபோவதில்லை. எனது உடற்தகுதியை சோதிக்க உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் அதற்கும் தயார். எந்த அணிக்கு எதிராகவும், எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. கடந்த தொடரில் அங்கு நாம் இளம் வீரர்களுடன் விளையாடினோம். சில சீனியர் வீரர்கள் இல்லை. ஆனாலும் நாம் தான் சிறந்த அணி என்று நிரூபித்து காட்டினோம். இந்த முறை கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறேன். ஆனால் இந்தியா வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சமி கூறினார்.
இதுவரை 64 டெஸ்டுகளில் விளையாடி 229 விக்கெட் வீழ்த்தி இருக்கும் முகமது சமி அடுத்த மாதம் நடக்கும் ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக ஏதாவது ஒரு ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.
- பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் சுப்மன் கில்லுக்கு முகமது சமி பந்துவீசியுள்ளார்.
- முகமது சமி இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்விக்கு மத்தியில் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. சின்னசாமி மைதானத்தில் வலைப்பயிற்சியின் போது பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் சுப்மன் கில்லுக்கு முகமது சமி பந்துவீசியுள்ளார்.
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷமி 11 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத முகமது சமி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை முகமது சமி வீழ்த்தியிருந்தார்.
முகமது சமி இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் சமி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.
- ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சர்பராஸ் கான், துருவ் ஜுரல், அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்
ஹர்ஷித் ரானா மற்றும் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் அறிமுகமாகின்றனர்.
ரிசர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது
புஜாரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
- சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.
- சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி 19-ந்தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. அதை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துடன் சொந்த மண்ணில் ஐந்து டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 22-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை இங்கிலாந்துக்கு எதிரான தொடர் நடக்கிறது.
அதை தொடர்ந்து இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் 'டிராபி' போட்டியில் பங்கேற்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடை பெறும்.
இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.
15 பேர் கொண்ட அணியை நாளைக்குள் (12-ந்தேதி) அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. அணியில் மாற்றம் செய்ய பிப்ரவரி 13-ந் தேதி வரை ஐ.சி.சி. அனுமதி அளித்து உள்ளது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. வீரர்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) முறையிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி 19-ந்தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக போட்டி தொடங்குவதற்கு 1 மாதத்துக்கு முன்பு அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
- முகமது சமி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
- துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மீண்டும் முகமது சமி இடம் பிடித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சாம்சன், அபிஷேக் சர்மா, திலக், நிதிஷ் ரெட்டி, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, ஜூரல், ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
- இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
இத்தொடரில் விளையாடும் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு நாளை காலை மும்பையில் அணிகளைத் தேர்ந்தெடுக்கும். கூட்டம் முடிந்து அணிகள் இறுதி செய்யப்பட்டவுடன், அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மதியம் 12:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்திய அணியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
- பாகிஸ்தான் தவிர மற்ற அணிகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர மற்ற கிரிக்கெட் வாரியங்கள் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்