என் மலர்
நீங்கள் தேடியது "INDvsBAN"
- குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர்.
- ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.
மிர்பூர்:
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர். இதனால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 80 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.
- வங்காளதேச அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 80 ரன்களை குவித்தார்.
- இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்களை இழந்து 265 ரன்களை குவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹாசன் 80 ரன்களையும், தௌஹித் ரிடோய் 54 ரன்களையும் நசும் அகமது 44 ரன்களையும் குவித்தனர்.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இவர்தவிர முகமது ஷமி இரண்டு விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
- கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.
கிரிக்கெட் களத்தில் ஆடும் லெவனில் இருந்தாலும், இல்லை என்றாலும் விராட் கோலி ரசிகர்களை மகிழ்விக்காமல் இருந்ததே இல்லை என்லாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனக்குள் இருக்கும் காமெடியை வெளிப்படுத்த விராட் கோலி தவறியதே இல்லை.
அந்த வகையில், இன்று இந்தியா மற்றம் வங்காளதேசம் அணிகள் இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் விராட் கோலி ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இன்றைய போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் போது, "வாட்டர் பாய்"-ஆக களத்தில் இருந்த இந்திய அணி வீரர்களுக்கு நீராகாரம் கொண்டு வந்தார். அப்போது விராட் கோலி வேகவேகமாக ஓடி வந்தார். திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை விராட் கோலி ஓடிய விதம் அனைவரையும் சிரிப்பலையில் மூழ்க செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- இங்கிலாந்து தொடர் முழுவதும் விராட் கோலி விளையாடவில்லை.
- கார் விபத்து காரணமாக ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் விளையாடி 600 நாட்களுக்கு மேல் ஆகிறது.
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.
அதன்பின் தற்போது வருகிற 19-ந்தேதியில் இருந்து வங்கதேச அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இங்கிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரில் விராட் கோலி முழுமையாக விளையாடவில்லை. தனிப்பட்ட காரணத்திற்கான தொடரில் இருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. பின்னர் லண்டனில் அவரது மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்ததால் விலகியது தெரியவந்தது. இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்.
ரிஷப் பண்ட் மோசமான கார் விபத்திற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளார். சுமார் 600 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
துலீப் டிராபியில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அனைத்து வீரர்களும் துலீப் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்கள்.
டி20 உலகக் கோப்பைக்குப் பின் பும்ரா சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டும் வரும் முகமது ஷமியும் இடம் பெற வாய்ப்பில்லை.
ஆல்-ரவுண்டர் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் மூவரும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
வேகபந்து வீச்சில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பெறலாம்.
வங்கதேச அணிக்கெதிராக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் அகமது, தேவ்தத் படிக்கல், ஜடேஜா, அக்சர் பட்டேல், அஸ்வின், ரிஷப் பண்ட், த்ருவ் ஜுரேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோரும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போராடுவார்கள்.
- முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
- டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
வருகிற 19 ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (செப்டம்பர் 9) துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் கட்டணம் ரூ. 1000-இல் துவங்குகிறது. அதிகபட்ச விலை ரூ. 15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது.
இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது.
- சென்னையில் வானம் மேகமூட்டமாக உள்ளதாக வங்கதேசம் பந்து வீச்சு தேர்வு.
- டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருப்போம் என்றார் ரோகித் சர்மா.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கான டாஸ் சரியாக 9 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் வங்கதேச அணி கேப்டன் ஷன்டோ டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
பொதுவாக இந்திய மைதானங்களில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். ஆனால் சென்னையில் இன்று காலை லேசான மழை பெய்தது. மெலும், தற்போது மேகமூட்டமாக உள்ளதால், சூழ்நிலை பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருப்போம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
வங்கதேச ஆடும் லெவன் அணி:-
1. ஷத்மான் இஸ்லாம், 2. ஜகிர் ஹசன், 3. நஜ்முல் ஹொசைன் ஷன்டோ (கேப்டன்), 4. மொமினுல் ஹக், 5. முஷ்பிகுர் ரஹிம், 6. ஷாஹிப் அல் ஹசன், 7. லிட்டோன் தாஸ், 8. மெஹிதி ஹசன் மிராஸ், 9. தஸ்கின் அகமது, 10. ஹசன் முகமது, 11. நஹித் ராணா.
இந்தியா ஆடும் லெவன் அணி:-
1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. கே.எல். ராகுல், 6. ரிஷப் பண்ட், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. பும்ரா, 10. ஆகாஷ் தீப், 11. முகமது சிராஜ்.
- இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
- ஜெய்ஸ்வால்- ரிஷப் பண்ட் ஜோடி 54 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.
இவரது பந்து வீச்சில் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (0), விராட் கோலி (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சுமார் இரண்டு வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய ரிஷப் பண்ட் முதலில் திணறினார். அதன்பின் சுதாரித்து விளையாட ஆரம்பித்தார்.
மறுமுனையில் ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்த ஜோடி விக்கெட் இழக்காமல பார்த்துக் கொண்டது. இவர்களின் நிதானமான மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் வங்கதேச அணியால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது.
இதனால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 37 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- அஷ்வின், ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இவரது பந்து வீச்சில் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (0), விராட் கோலி (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், ரிஷப் பண்ட் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரவிச்சந்திரன் அஷ்வின் சதமடித்து அசத்தினார். 108 பந்துகளில் சதம் கடந்த அஷ்வின் பத்து பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரங்களுடனும், ஜடேஜா 86 ரங்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் சார்பில் ஹாசன் முகமது 4 விக்கெட்டுகளையும் நஹித் ராணா மற்றும் மெஹிடி ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா இந்தி அமைப்பினர் கோஷம்
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
போட்டியை தடை செய்ய கோரிய கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஷ்வின் சதமடித்து அசத்தினார்.
- இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அஷ்வின் சதமடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
தனது சொந்த மண்ணில் சதமடித்து அசத்திய அஷ்வினை முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "நம் மண்ணின் சிறந்த ஆல்ரவுண்டர் அஷ்வினின் டெஸ்ட் சதத்திற்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர். மிகச்சிறப்பான ஆட்டம் அஷ்வின். உங்களின் ஹோம் மைதானத்தில் மீண்டும் சதம் விளாசியது மிகுந்த மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.
- சதம் அடித்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
- இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களுடன் தடுமாறியது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சரிவில் இருந்த இந்திய அணியை ஜடேஜாவுடன் சேர்ந்து மீட்டதோடு, சதம் அடித்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
இந்த இன்னிங்ஸில் 112 பந்துகளில் 102 ரன்களை எடுத்துள்ள அஷ்வின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். போட்டி துவங்கியதில் இருந்து இரண்டு இடைவெளியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களுடன் தடுமாறியது.

அப்போது களமிறங்கிய அஷ்வின் இன்றைய ஆட்டநேரம் முடியும் வரை தனது விக்கெட்டை கொடுக்காமல், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகர கேப்டனான எம்எஸ் டோனி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்களை மட்டும் அடித்துள்ளார். அந்த வகையில், இன்றைய போட்டியில் சதனம் அடித்ததன் மூலம் அஷ்வின் எம்எஸ் டோனி போன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்களை நிறைவு செய்துள்ளார். சதம் அடித்த அஷ்வினுக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ஜெய்ஸ்வால் 10 இன்னிங்சில 755 ரன்கள் குவித்துள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜார்ஜ் ஹெட்லி 747 ரன்கள் அடித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா 34 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆனால் ஜெய்ஸ்வால் 56 ரன்கள் அடிக்கவும், அஷ்வின் (102*)- ஜடேஜா (86*) ஜோடி அபாரமாக விளையாடவும் இந்தியா சரிவில் இருந்து மீண்டு முதல் நாள் ஆட்ட முடிவில் 80 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்துள்ளது.
ஜெய்ஸ்வால் 56 ரன்கள் அடித்ததன் மூலம் சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்சில் 750 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதன்மூலம் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்சில் 750 ரன்களுக்கு மேல் குவித்தவர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
ஜெய்ஸ்வால் 755 ரன்கள் விளாசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜார்ஜ் ஹெட்லி 747 ரன்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானின் ஜாவித் மியான்தத் 743 ரன்கள் அடித்துள்ளார். ஜிம்பாப்வேயின் டேவ் ஹக்டன் 687 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவ் ரிச்சர்ட்சன் 680 ரன்களும் அடித்துள்ளனர்.