என் மலர்
நீங்கள் தேடியது "Italy"
- பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.
- தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமதித்ததாக மெலோனி தொடர்ந்த வழக்கில் ராபர்ட்டோ சேவியானோ என்ற மற்றொரு பத்திரிகையாளருக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் கோர்டீஸே[Cortese] கடந்த 2021 இல் தனது எக்ஸ் [ட்விட்டர்] பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.

'நீ என்னை பயமுறுத்த முடியாது,மெலோனி.. நீ வெறும் 1.2 மீட்டர் [4 அடி] உயரம்தான். என்னால் உன்னை பார்க்க கூட முடியவில்லை' என்றும் கோர்ட்டிஸே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். எக்ஸ் தளத்தில் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்து தொடர்பாக இருவருக்குமிடையில் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மெலோனி கோர்டீஸே மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த மிலான் நீதிமன்றம் தற்போது கோர்டீஸே -கு 5000யூரோக்கள் [ ரூ.4.5 லட்சம்] அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2021 இல் மெலோனியின் தீவிர இடதுசாரி சகோதரர்கள் கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன்பின்னர் 2022 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அக்கட்சி சார்பில் மெலோனி இத்தாலி பிரதமர் ஆனார். தற்போது இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள கோர்டீஸே,'கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக தீவிர பிரச்னையை இத்தாலி அரசு கொண்டுள்ளது. இது சுயாதீன பத்திரிகையாளர்களுக்கு கடுமையான காலம். வரும் காலத்தில் சிறந்த நாட்களுக்காக நாம் காத்திருப்போம். நாங்கள் மனம் தளரப் போவதில்லை' என்று தெரிவித்துள்ளார்.
Italy's government has a serious problem with freedom of expression and journalistic dissent. This country seems to get closer to Orbán's Hungary: these are bad times for independent Journalists and opinion leaders. Let's hope for better days ahead. We won't give up!@Reuters https://t.co/sWojOlMJz1
— Giulia Cortese (@GiuliaCortese1) July 18, 2024
முன்னதாக ராபர்ட்டோ சேவியானோ என்ற பத்திரிகையாளர் தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமதித்ததாக மெலோனி தொடர்ந்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரோம் நீதிமன்றம் ராபர்ட்டோவுக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
- இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் நழுவியது
இத்தாலிய உயரம் தாண்டுதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான ஜியான்மார்கோ தாம்பெரி [ Gianmarco Tamberi] நேற்று தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்சில் பங்கேற்றுள்ளார். இத்தாலி நாட்டின் சார்பில் நேற்று முன் தினம் இரவு செய்ன் நதி [Seine River] மீது படகில் நடந்த தொடக்கவிழா அணிவகுப்பில் இத்தாலிய கோடியை அவர் ஏந்திச்சென்றார்.

இந்நிலையில் அன்றைய இரவு தனது திருமண மோதிரத்தை செய்ன் நதியில் அவர் தொலைத்துள்ளார். அதற்கு அவர் தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மனுஷன் என்னமா பீல் பண்ணி எழுதியிருக்கிறார் என்று இணையவாசிகள் மனம் நெகிழ்ந்து வருகின்றனர்.

மோதிரத்தை தொலைத்ததற்காக அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ள இன்ஷ்டாகிராம் பதிவில், 'என்னை மன்னித்துவிடு அன்பே, இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் [என் கை விரலில் இருந்து] நழுய தருணத்தில் [அது படகின் உள்ளே விழுந்துவிடும் எடுத்துக்கொள்ளலாம்] என்று ஒரு சிறிய நம்பிக்கை இருந்தது.
ஆனால் அது கீழே விழுந்து தவறான திசையில் எகிறி நதிக்குள் சென்றது. எதோ அது அங்கு தான் இருக்கவேண்டும் என்று விரும்பியதுபோல் இருந்தது. சில கணம் நான் உறைந்து நின்றேன். ஆனால் இது நடந்துதான் தீரும் என்றால் இந்த நதியை விட சிறந்த ஒரு இடத்தை என்னால் கற்பனை செய்திருக்க முடியாது. காதலின் நகரமான பாரிசில் உள்ள இந்த நதிப்படுகையில் அது [மோதிரம்] என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

நேற்று நடந்த இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் ஒரு கவித்துவமான தன்மையும் இணைந்தே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீ விரும்பினால் உனது மோதிரத்தையும் இந்த நதியில் வீசி விடலாம். அவ்வாறாக இருவரின் மோதிரங்களும் நதியில் ஒன்று சேரும். இதில் இன்னொரு நன்மையும் உள்ளது, நீ அடிக்கடி என்னிடம் கேட்பதுபோல், நாம் உறுதிமொழி கூறி புதிதாக மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துகொள்ளலாம்' என்று எழுதியுள்ளார்.
- 62 வயதான ஃபேப்ரிசியோ லாங்கோ கடந்த 2013 முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் யூனிட்டுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார்.
- அடமெல்லோ மலைத்தொடரில் அமைந்துள்ள Cima Payer சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி [Audi] நிறுவனத்தின் இத்தாலி யூனிட்டின் தலைவர் ஃபேப்ரிசியோ லாங்கோ [Fabrizio Longo] மலையேற்றத்தில் போது 10,000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான ஃபேப்ரிசியோ லாங்கோ கடந்த 2013 முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் யூனிட்டுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார்.

மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட லாங்கோ இத்தாலி-சுவிஸ் எல்லைக்கு சில மைல் தூரத்தில் உள்ள அடமெல்லோ மலைத்தொடரில் [Adamello mountains] அமைந்துள்ள Cima Payer சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். கேபிள்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் இருந்தும் துரதிருஷ்டவசமாகச் சிகரத்தின் அருகில் செல்வதற்கு முன்னர் 10,000 ஆதி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.

அவருடன் சென்ற மற்றொரு மலையேற்ற வீரர் உடனே மீட்புக்குழுவுக்குத் தகவல் தெரிவித்த நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் 700 அடி பள்ளத்தாக்கிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஃபேப்ரிசியோ லாங்கோ மறைவுக்கு ஆடி நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.
- அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
- பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்ற கேள்வி எழுந்தது
உலக பணக்காரருக்கும் தொழிலதிபருமான 53 வயதாகும் எலான் மஸ்க்கும் 47 வயதாகும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் அவர்கள் இருவரின் புகைப்படங்கள் பரவி வருகிறது. நியூயார்க்கில் சம்பீத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் மெலோனிக்கு எலான் மஸ்க் விருது வழங்கி பாராட்டி பேசியுள்ளார்.

வெளிப்புறத்தை விட உள்ளுக்குக்குள் அதிக அழகாக இருக்கும் ஒருவருக்கு, இத்தாலி பிரதமராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் நான் பார்த்து வியக்கும் மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி. மெலோனி உண்மையான நேர்மையான ஒருவர் என்று மஸ்க் அந்த விழாவில் மெலோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்று அவர் மெலோனியை புகழும் வீடியோவையும் இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் என் தாயாருடன் பங்கேற்றேன். அதிபர் மெலோனியுடன் எந்த காதல் உறவும் இல்லை என்று மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

- 20-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக பிக்காசோ திகழ்ந்தார்.
- பிக்காசோ ஓவியங்கள் இன்றும் கலைப்பிரியர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.
இத்தாலி நாட்டில் பழைய பொருட்களை சேகரிக்கும் தொழிலாளியான லுங்கி லோ ரோஸா 1962-ல் தனக்குக் கிடைத்த இந்த ஓவியத்தை தனது வீட்டில் மாட்டிவைத்துள்ளார்.
சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்பு அந்த ஓவியம் பிரபல ஓவியரான பிக்காசோவின் ஓவியம் என அவரது மகன் கண்டுபிடித்துள்ளார்.
இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.50 கோடி என தெரிய வந்துள்ளது. பிக்காஸோ யார் என தெரியாததால் இதன் மதிப்பு குறித்து அவருக்கு தெரியவில்லை. தற்போது ஓவியத்தை பரிசோதனை செய்த மகன் உண்மையை கண்டறிந்துள்ளார்.
1881ல் ஸ்பெயின் நாட்டின் மலாகா பகுதியில் பிறந்த பிக்காசோ அந்நாட்டின் பார்சிலோனா நகரில் வளர்ந்தார். 1904ல் பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்து, தனது படைப்புகள் மூலம் 20-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக பிக்காசோ திகழ்ந்தார். 1973ல் தனது 92-வது வயதில் மறையும் வரை சுமார் 70 வருடங்கள் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் கலைப்பிரியர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பீஜிங்:
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலோனி, சாரா எர்ரானி ஜோடி-அமெரிக்காவின் மேடக் சாண்ட்ஸ், சோபியா கெனின் ஜோடியுடன் மோதியது.
இதில் இத்தாலி ஜோடி 6-3, 1-6, 10-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி ஜோடி, தைவானின் சான் ஹாவ் சிங், ரஷியாவின் வெரோனிகா ஜோடி உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
- அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது.
- இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது.
ரோம்:
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அண்டை நாடான இஸ்ரேலுக்கு புகுந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போரை தொடங்கியது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்தநிலையில் ஒரு ஆண்டை கடந்து போர் நீடித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது. இந்தநிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது" என்றுள்ளார்.
- இந்தியா சார்பில் சென்ற பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார்
- பேச்சுவார்த்தை நடக்கும் மேஜையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் வைத்து 19-வது ஜி 20 உச்சி மாநாடானது நேற்றும் இன்றும் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் கலந்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளனர்.
அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் ஜி 20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது. தற்போது நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், இத்தாலி, பிரான்ஸ் அதிபர்கள் என உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் சென்ற பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார். இந்நிலையில் ஜி20 மாநாட்டின் ஹைலைட்டாக இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒன்றில் அனைத்து தலைவர்களும் சேர்ந்த எடுத்த குரூப் போட்டோவில் அமெரிக்க அதிபரை காணவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.


ஜோ பைடன் வருதற்கு தாமதமானதால் அவர் புகைப்படத்தில் இருந்து விடுபட்டுள்ளார் என்று மாநாட்டை ஏற்பாடு செய்த பிரேசில் அதிகாரிகள் விளக்கமளித்தாலும், ஜோ பைடன் பதவிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைய உள்ளது என்பதால் அதன் பின்னர் அவரது முக்கியத்துவம் உலக அரங்கில் இருக்காது என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் இருப்பதால் இதை இணையவாசிகள் டிரண்ட் செய்து வருகின்றனர்.
மற்றொரு புகைப்படம் இந்திய பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ லியோனி ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடக்கும் மேஜையில் எதிரெதிரே அமர்ந்து நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் கண்கொட்டாமல் பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மெலோனி மற்றும் மோடி நட்புறவு, கடந்த ஜூன் மாதத்தில் இத்தாலியில் வைத்து நடந்த ஜி7 மாநாட்டில் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு மெலோனி + மோடி = மெலோடி என்று பொருள்படும்படி அதிபர் மெலோனி சமூக வலைதளத்தில் பதிவிட்டது வைரலானது. எனவே தற்போது ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மெலோனியை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ""ரியோ டி ஜெனிரோ ஜி 20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதை மையமாக வைத்து எங்களது பேச்சுக்கள் அமைந்தன.
கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம். இந்தியா-இத்தாலி நட்புறவு ஒரு சிறந்த உலக முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
- டிரம்ப் ஜனவரி 12-ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
வாஷிங்டன்:
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். டிரம்ப் ஜனவரி 12-ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் இத்தாலி செல்கிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை ரோம் நகருக்குச் செல்கிறார்.
அதிபர் ஜோ பைடன் ஜனவரி 10-ம் தேதி அன்று போப் பிரான்சிசை சந்திக்கிறார். அப்போது உலகம் முழுவதும் அமைதியை முன்னேற்றுவதற்கான முயற்சிகளைப் பற்றி விவாதிப்பார் என தெரிவித்துள்ளது.
ஜனவரி 12-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் அதிபர் ஜோ பைடன் செல்லும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கலாம் என தெரிகிறது.
- தெலுங்கானாவின் சூர்யாபேட்டையைச் சேர்ந்தவர் கிராந்தி குமார் பணிகேரா டிரில்மேன்.
- இத்தாலியின் லோ ஷோ டீ ரெக்கார்ட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் இவர் பங்கேற்றார்.
சுழலும் 57 மின்விசிறிகளை நாக்கால் தடுத்து நிறுத்தி இந்தியாவை சேர்ந்த கிராந்தி ட்ரில்மேன் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தெலுங்கானாவின் சூர்யாபேட்டையைச் சேர்ந்தவர் கிராந்தி குமார் பணிகேரா- டிரில்மேன். இத்தாலியின் லோ ஷோ டீ ரெக்கார்ட்[ Lo Show Dei Record] என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் இவர் பங்கேற்றார்.

அதில் 57 ஓடும் மின் விசிறிகளை 1 நிமிடத்துக்குள் தனது நாக்கால் நிறுத்தியுள்ளார். தனது நாக்கை பயனப்டுத்தி அவர் மின் விசிறிகளின் சுழலும் பிளேடுகளை நிறுத்தும் வீடியோவை கின்னஸ் உலக சாதனைகள் (GWR) அமைப்பு அதன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
அவர் இந்த உலக சாதனையை படைக்கும்போது அந்த ஷோவில் இருந்த ஜட்ஜ்கள் உட்பட அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். எப்போதும் வித்தியாசமான செயல்கள் மூலம் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பணிகேரவின் இந்த சாதனை அவரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது. இதை பயிற்சி இல்லாதவர்கள் முயற்சிப்பது ஆபத்தில் முடியும்.
- இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.
- என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது.
Zerodha இணை நிறுவனர் நிகில் கமத் தொகுத்து வழங்கிய 'People by WTF' தொடரின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற வீடியோ நேற்று வெளியானது.
அதில், தன்னைப் பற்றியும் இத்தாலிய இணை ஜோர்ஜியா மெலோனி பற்றியும் வைரலான மீம்ஸ்களை பற்றி மோடி மனம் திறந்துள்ளார்.
இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள். அதைப் பற்றி ஏதாவது பகிர விரும்புகிறீர்களா? அந்த மீம்ஸை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று காமத் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, மீம்ஸ்கள் எப்போதும் வந்துக்கொண்டேதான் இருக்கும்... மீம்ஸ்கள், சமூகவலைதள விவாதங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. நான் உணவுப் பிரியன் அல்ல, எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்கள் வழங்கும் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவேன்.
எனக்கு ஒரு மெனு கொடுத்தால், என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. நான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்தபோது மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவும் என் முன் உள்ள உணவும் ஒன்றா என்று கூட எனக்குத் தெரியாது. அதனால் அப்போதெல்லாம் மறைந்த அருண் ஜெட்லியிடம்தான் உணவை ஆர்டர் செய்யக் கூறுவேன் என்று தெரிவித்தார்.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
- அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். டிரம்ப் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை ரோம் நகருக்குச் செல்கிறார் என்றும், அதிபர் ஜோ பைடன் போப் பிரான்சிசை சந்திக்க உள்ளார் என தெரிவித்து இருந்தது.
அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் அதிபர் ஜோ பைடன் செல்லும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் இத்தாலி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை போராடி அணைக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அதிபரின் இத்தாலி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.