என் மலர்
நீங்கள் தேடியது "Jaggery"
- உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
உடுமலை :
உடுமலை அருகேயுள்ள அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தாங்களாக வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு வருவாய் பெருக்கும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி செய்து வரும் விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைத்துக் கொள்ளலாம்.இதில் விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் 10 அச்சு வெல்லம் தயாரிக்கும் மையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
எனவே அச்சு வெல்லம் உற்பத்தி மையம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான ஆவணங்கள், போட்டோ, ஆதார் அட்டை, நிலச்சிட்டா மற்றும் கரும்பு சாகுபடி செய்வதற்கான இடப் பற்றிய விவரம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பெறப்பட்ட கடன், ஒப்படைப்பு கடிதம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 75488 16636, 86875 40709, 99979 45711, 8610 752985 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை சீசன் சமயத்தில் வெல்லத்தின் தேவை அதிகரித்து வரும்.
- சேலம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அன்னதானப்பட்டி:
சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் வெல்லம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காமலாபுரம், நாலுகால்பாலம், டேனிஷ்பேட்டை, கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, பேளூர், தும்பல், உள்ளிட்ட பகுதிகளில் 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை அதன் விவசாயிகள் சேலம் அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள வண்டிக்காரன் நகர் பகுதியில் கரும்பு வெல்லம் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தில் பொது ஏலத்தில் விட்டு வருகிறார்கள். இங்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் சபரிமலை கோவில் சீசன் கடந்த மாதம் 16- ம் தேதி தொடங்கியது. அய்யப்ப சாமிக்கு அரவணை, அப்பம், பாயாசம், பஞ்சாமிர்தம், பானகம் போன்ற பிரசாதங்கள் நிவேதிக்கப்படுகிறது. இதனால் வெல்லத்தில் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி வழக்கத்தைவிட 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை சீசன் சமயத்தில் வெல்லத்தின் தேவை அதிகரித்து வரும். இதனால் உற்பத்தியாளர்கள் வெல்லம் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் உற்பத்தியாகி இங்கு வரும் வெல்லத்தை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏலம் மூலம் வாங்கிச் செல்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 முதல் 70 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக 80 முதல் 100 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய விலை நிலவரப்படி 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் குண்டு வெல்லம் ரூ.1230 முதல் ரூ.1290 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெல்லம் ரூ.41- ரூ.43 என விற்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வெல்லம் விற்பனை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை சீசன் வரை விற்பனை மும்முரமாக நடைபெறும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
- விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
- விவசாயிகள் தங்களின் கரும்புகளை விற்றுச் செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், சாணார்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், கபிலர் மலை, கபிலக்குறிச்சி, பாகம் பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், ஜேடர்பாளையம், சிறு நல்லிகோவில், கொத்தமங்கலம், குரும்பலம் மகாதேவி, ஜமீன் இளம்பள்ளி, சோழசிராமணி மாரப்பம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். விவசாயிகள் தங்களின் கரும்புகளை விற்றுச் செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,320 க்கும் விற்பனையானது.
நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,285-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,370-க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.3000 வரை விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கரூர் பகுதிகளில் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்
கரூர் :
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யாத கரும்பு விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர்.
தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெல்லம் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,290-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,370 க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,260க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,220க்கும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- பரமத்தி வேலூர் தாலுகா பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
- விவசாயிகள் தங்களின் கரும்பு களை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3000 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பர மத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், சேளூர், அய்யம்பா ளையம், வடகரை யாத்தூர், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகா தேவி, கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, ஆனங்கூர், பாகம் பாளை யம், சின்ன மருதூர், பெரிய மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ள னர். பதிவு செய்யாத விவ சாயிகள் தங்களின் கரும்பு களை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3000 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர்.
தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகா மையில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட் டிற்கும்
மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்ற னர். வெல்ல சிப்பங்களை வாங்கி தமிழ கத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,290-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,330-க்கும் விற்பனை யானது. நேற்று உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,260-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,2 20-க்கும் விற்பனையானது.
கரும்பு ஒரு டன் ரூ.3000 வரை விற்பனையாகிறது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- பரமத்தி வேலூர் தாலுகா பல்வேறு பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளில் விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
- பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர், செல்லப்பம்பாளையம், சாணார்பாளையம், பிலிக்கல் பாளையம், பாகம் பாளையம், அய்யம்பாளை யம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், தி.கவுண் டம்பாளையம், நல்லிக்கோ வில், ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, சோழ சிராமணி, பெரிய சோளிபா ளையம், சின்ன சோளிபா ளையம், இருக்கூர், கோப் பணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளில் விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
கரும்பை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பல விவசாயிகள் பதிவு செய் துள்ளனர்.
பதிவு செய்யாத விவ சாயிகள் தங்களின் கரும்பு களை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அதை அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர்.
தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழ கத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந் திரா, கேரளா, கர்நா டகா, மகாராஷ்டிரா, உத்த ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல் லம் ஒரு சிப்பம் ரூ1,180-க் கும், அச்சுவெல்லம் ரூ.1,070-க்கும் விற்பனையா னது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,2 20க்கும் விற்பனையானது.
கரும்பு ஒரு டன் ரூ.3000 வரை விற்பனையாகிறது. வெல்லம் உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பரமத்திவேலூர் வட்டத்தில் பல பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
- கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.
பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங் களாக (மூட்டைகளாக) கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,500 வரையிலும் ஏலம் போனது. நாட்டுச் சர்க்கரை சிப்பம் ஒன்று கடந்த வாரம் ரூ.1,300-க்கும், நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டு சர்க்கரை சிப்பம் ஒன்று ரூ.1,350- க்கும் ஏலம் போனது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்க உள்ள நிலையில் வெல்லம் விலை உயர்ந்திரு ப்பதாக வியாபாரி கள் தெரிவித்தனர்.வெல்லம் விலை உயர்ந்திருப்பதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இதன் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும்.
- வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிபருப்பு- 200 கிராம்
ரவை- 100 கிராம்
வெல்லம்-500 கிராம்
தேங்காய்-அரை கப்
ஏலக்காய்தூள்- ஒரு ஸ்பூன்
நெய்- 100 கிராம்
முந்திரி- அலங்கரிக்க
செய்முறை:
செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம். இதன் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும் அளவுக்கு இனிப்பு சுவையுடன் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரும் மிகவும் விரும்பி சப்பிடுவர்.
ஒரு காடாயில் வாணலிவைத்து காய்ந்ததும் 200 கிராம் பாசிபருப்பை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும் கருகிவிடக்கூடாது. இதனை ஒரு குக்கரில் வைத்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கழுவி அந்த பருப்பை தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இப்போது வெல்லத்தை கரைத்து எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு அடிகனமான பாத்திரத்த்தை அடுப்பில் வைத்து வெல்லம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு காய்ச்சி எடுக்க வேண்டும். ஒரு கப் பாசிபருப்புக்கு 3 கப் வெல்லம் என்ற அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு அதிகம் விரும்புபவர்கள் என்றால் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். பாகு கம்பிபதம் வர வேண்டாம். பாகு கரைந்து வந்தால் போதுமானது. வெல்லம் கரைந்து வந்தவுடன் இதனை ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைக்க வேண்டும்.
அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 3 கரண்டி நெய் சேர்க்க வேண்டும். இந்த உக்காரைக்கு சுவை சேர்க்கக்கூடியது இந்த நெய்தான். நெய் காய்ந்ததும் அதில் அரை கப் ரவை சேர்க்க வேண்டும். ரவையை பொன்னிறமாக நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் இதில் துருவி வைத்த தேங்காய் சேர்க்க வேண்டும். இதுவும் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். நன்றாக வறுத்து எடுத்துக்கொண்டால் கெட்டுப்போகாமல் இருக்கும்.
இந்த கலவையில் நாம் வேகவைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கலந்துவிடவேண்டும். அப்போது ரவை நன்றாக் வெந்துவரும். அப்போது நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை வடிகட்டியில் வடித்து சேர்க்க வேண்டும். வெல்லப்பாகு சேர்த்தவுடன் இந்த கலவையை நன்றாக கைவிடாமல் கலந்துகொண்டே வர வேண்டும். இதனுடன் நெய் சேர்க்க வேண்டும். கடைசியில் இதனுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை தயார்.
- உற்பத்தி அதிகரிப்பால் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி
- சிப்பம் ஒன்று 1,260 வரையிலும் விற்பனையானது.
வேலாயுதம்பாளையம்,
கரூர்மாவட்டம் நொய்யல் ,மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகழூர், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி ,வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
கரும்புகள் விளைந்த உடன் விற்பனைக்காக புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பறையில் ஊற்றி பாகு தயார் செய்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் அருகாமையில் செயல்பட்டு வரும் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி செல்கின்றனர். வாங்கிய வெல்ல சிப்பங்களை லாரிகளில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ,உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,370 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,260 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று 1,260 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் அச்சு வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- பரமத்திவேலூர் வட்டத்தில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பம், 1,600 அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரத்து 600 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும் ஏலம் போனது. இதே போல் கடந்த வாரம் கரும்பு டன் ஒன்று ரூ.2,300 வரையிலும் விற்பனையானது. வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
- கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங் களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளை யம், சோழசிராமணி, அய்யம் பாளையம், கபிலர் மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங் களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு தொடர் மழை காரணமாக வெல்லம் உற்பத்தி செய்ய முடியாததால் குறைந்த அளவிலேயே வெல்லம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 4 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், ஆயிரத்து 500 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,300 வரையிலும் ஏலம் போனது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெல்லம் உற்பத்தி செய்ய முடியாததாலும், வரத்து குறைந்ததாலும் வெல்லம் விலை உயர்வடைந்து உள்ளதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
- ஏதாவது ஒரு வடிவத்தில் தினமும் உடலில் சர்க்கரை சேருகிறது.
- நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறப்பானது.
டீ, காபி, ஸ்மூத்தி, ஜூஸ் என ஏதாவதொரு பானம் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த பானங்களில் ஏதாவதொரு வகையில் சர்க்கரையின் பங்களிப்பு இருக்கிறது. வெள்ளை சர்க்கரை, வெல்லம், தேன், பிரவுன் சுகர் எனப்படும் பழுப்பு நிற சர்க்கரை இவற்றில் ஏதாவது ஒரு வடிவத்தில் தினமும் உடலில் சர்க்கரை சேருகிறது. இதில் எந்த சர்க்கரை நல்லது என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது. இது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.
வெள்ளை சர்க்கரை, புரவுன் சுகர், வெல்லம் இவை எல்லாமே கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. சுத்திகரிப்பு முறைதான் இதன் தன்மையை நிர்ணயிக்கின்றன. வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது பிரவுன் சுகர் அதிகம் சுத்திகரிக்கப்படுவதில்லை. இவை இரண்டுடன் ஒப்பிடும்போது வெல்லம் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை.
ஆனால் வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகர், வெல்லம் இவற்றில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எதை எடுத்துக்கொண்டாலும் அனைத்துமே ஒரே விதமான கலோரிகளைத்தான் கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் சுமார் 20 கலோரிகள் வரை இருக்கும். ஒரு டீஸ்பூன் தேனிலும் சுமார் 20 கலோரிகள் இருக்கின்றன.
இருப்பினும் வெள்ளை மற்றும் பழுப்பு நிற சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருக்கும். வெல்லத்தின் கிளைசெமிக் குறியீடும் குறைவுதான். அதனால் வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சட்டென்று அதிகரிக்க செய்யாது.
அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறப்பானது. வெள்ளை சர்க்கரைக்கு மாற்று தேடுபவர்களுக்கு வெல்லம் சிறந்த தேர்வாக அமையும்.
வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகரை பொறுத்தவரை சுவையின் தன்மையில் மாற்றத்தை உணரலாம். சர்க்கரையை உருக வைத்து இனிப்பு பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேரமல் சுவையை விரும்புபவர்களுக்கு பிரவுன் சுகர் சிறந்த தேர்வாக அமையும். வெள்ளை சர்க்கரையை அனைத்து வகையான இனிப்புகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். எந்த சர்க்கரையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல.