என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jitendra Singh"

    • அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.
    • வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.

    அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

    நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

    அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.

    பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

    இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.

    அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

    நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

    அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.

    பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

    இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 45 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டது.
    • அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு பா.ஜனதா ஆட்சியிலேயே அதிகம் அளிக்கப்பட்டது

    புதுடெல்லி :

    பா.ஜனதா ஆட்சியில் இதுவரை 9 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணுசக்தி, விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 45 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், தற்போது பா.ஜனதாவின் 9 ஆண்டுகால ஆட்சியில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 191 அரசு வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதிலும், பிரதமர் மோடியின் 6 வேலைவாய்ப்பு முகாம்களிலும் (ரோஜ்கர் மேளா) தலா 70 ஆயிரம் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

    சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 45 ஆயிரத்து 431 பேர் தேர்வு பெற்றனர் என்றும், பா.ஜனதா ஆட்சியில் 50 ஆயிரத்து 906 பேர் நியமனம் பெற்றனர் என்றும் கூறினார். அதாவது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பா.ஜனதா ஆட்சியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு பெற்றதாகவும் தெரிவித்தார். இதைபோல அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் பா.ஜனதா ஆட்சியிலேயே அதிகம் அளிக்கப்பட்டது என்றும் மந்திரி கூறினார்.

    • பேப்பர் உள்ளிட்ட கழிவு பொருட்களை விற்பனை செய்ததில் அரசுக்கு ரூ.2,364 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
    • தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையை பிரதமர் மோடி பாராட்டினார்.

    மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பேப்பர் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்களை விற்பனை செய்த வகையில் மத்திய அரசு ரூ.2,364 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு பின்னர் தேவையற்ற பொருட்களாக மாறிய பேப்பர் உள்ளிட்ட கழிவு பொருட்களை விற்பனை செய்ததில் அரசுக்கு ரூ.2,364 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஸ்கிராப் விற்பனையின் மூலம் மூன்றாண்டுகளில் 2,364 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதற்காக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

    • 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
    • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் தள பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு (டிச.30) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஏவப்பட்ட ராக்கெட், ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார். பதிவில், "சர்வதேச அதிசயங்களை ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் விண்வெளித் துறையுடன் இணைந்து இருப்பது பெருமை அளிக்கிறது."

    "ஸ்பேஸ் டாக்கிங் தேடும் நாடுகள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் நான்காவது இந்தியா இணைந்து இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "பாரதிய டாக்கிங் சிஸ்டம்" மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது."

    "ஆத்மனிர்பார்-இல் இருந்து விக்சித் பாரத்-க்கு முன்னேறும் பிரதமர் மோடியின் குறிக்கோளுக்கு நன்றி. இந்த குறிக்கோள் தான் நம் பயணத்தை விண்வெளித்துறையில் "ககன்யான்" மற்றும் "பாரதிய அந்த்ரிக்ஷா ஸ்டேஷன்" ஆகியவற்றுக்கு வழி வகை செய்யும்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • போலீசார், ராணுவ வீரர்களுடன் சேர்ந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • நீர்வீழ்ச்சியின் அருகே மூன்று பேரின் உடல்கள் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டன.

    ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம், மல்ஹார் அருகே கடந்த மார்ச் 5ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காணாமல் போனார்கள்.

    வருண் சிங் (வயது 15), அவரது மாமா யோகேஷ் சிங் (வயது 32), தாய் மாமா தர்ஷன் சிங் (வயது 40) ஆகிய மூவரும் அவர்களின் இல்லத் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறிது நேரத்தில் காணாமல் போயினர். அன்றைய இரவு 8.30 மணியளவில் தர்ஷன் தனது வீட்டிற்கு கடைசியாக தொலைபேசியில் அழைத்து, வழி தவறிவிட்டதாகக் கூறியுள்ளார்.

    இதுபற்றி குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர்களுடன் சேர்ந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    டிரோன் மூலம் நடந்த தேடுதல் வேட்டையில் கதுவாவின் பில்லாவர் தாலுகாவின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே மூன்று பேரின் உடல்கள் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டன.

    அவற்றை மீட்டு அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை என்றாலும் அவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    இந்நிலையில் மூன்று பேரும் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    இன்று இதுகுறித்து பேசிய அவர், இது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்த அமைதியான பகுதியில் சூழலைக் கெடுப்பதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருப்பதாகத் தெரிகிறது.

    இந்த விஷயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நிலைமையை மதிப்பிடுவதற்காக மத்திய உள்துறைச் செயலாளரே ஜம்முவுக்குச் நேரடியாக செல்கிறார் என்று கூறினார். ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் இருந்து பாஜக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 

    வேளாண் மற்றும் பால்வளத்துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் இந்தியா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையின் மூலம் கடந்த கடந்த எட்டு ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 300 லிருந்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தீர்மானிக்கும். உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கும்.

    ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதில்  உலகில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. ஆராய்ச்சி, கல்வி, தொழில் துறை நிறுவனங்களுடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

    தகவல் தொழில்நுட்பம்,கணினி, தகவல் தொடர்புத் துறையை தொடர்ந்து பிற துறைகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும். 

    வேளாண் மற்றும் பால்வளத்துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விண்வெளித் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
    • புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்திய விண்வெளி கூட்டமைப்பின் முதலாம்  ஆண்டுவிழா மாநாட்டு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:

    இந்திய விண்வெளித் துறையில், தனியார் துறையினருக்கு சுதந்திரம் வழங்குவது, இளம் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. 


    செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விரைவில் தொடங்கும். இந்திய இளம் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆற்றல் மற்றும் புதிய சிந்தனைகள் நமது விண்வெளி தொழில்நுட்பத்தை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றி வருகிறது.

    தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளிக் கூட்டமைப்பு,முதலீடுகளையும் பெற்று வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்ரோவின் சாதனைகள் மூலம் உலக அளவில் இந்திய விண்வெளி கூட்டமைப்பு அங்கீகாரத்தையும், புகழையும் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரே ஆண்டுக்குள் 140 திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • நவீன வசதிகள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

    ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள் தற்போது டெல்லியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பிரதமர் அலுவலக விவகாரத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: 


    ஜம்மு- காஷ்மீருக்கு பிரதமர் மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார் .வளர்ச்சி மற்றும் அமைதியின் புதிய விடியலை ஜம்மு-காஷ்மீர் கண்டு வருகிறது. 2022 ஜனவரி முதல் இதுநாள் வரை 1.62 கோடி சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்துள்ளனர். 75 ஆண்டு சுதந்திர வரலாற்றில் இதுவே மிகவும் உயர்ந்த எண்ணிக்கையாகும்.

    நாட்டில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக ஜம்மு-காஷ்மீரை மாற்றுவதற்கான பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370 -வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின், ரூ. 56 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

    ஒரே ஆண்டுக்குள் 140 படப்பிடிப்புகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் திறமைமிக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நவீன வசதிகள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இது தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.
    • மாநிலப் பணிகளில் 434 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களின் வருடாந்திர மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பணியாளர்துறை மந்திரி ஜிதேந்திர சிங், நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் மத்திய பணி என்பது ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார்.


    மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார். மேலாண்மை தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். அகில இந்திய பணி அதிகாரி என்பவர் மாநில, மத்திய அரசுகளை இணைக்கம் முக்கியமான ஒருங்கிணைப்பாளர் என்றும் தெரிவித்தார்.

    ஐ.ஏ.எஸ் உள்பட இதர அகில இந்திய பணி அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்ப வகை செய்யுமாறு மாநில அரசுகளை அவர் வலியுறுத்தினார். நடப்பு ஆண்டில், குடிமைப்பணி தேர்வு மூலம் 180 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு வெற்றிகரமாக பணிகளை ஒதுக்கியுள்ளது என்றார்.

    மாநிலப் பணிகளில் இருந்து 434 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊழலில் சிக்குவோர் மற்றும் திறமையற்ற அதிகாரிகளை களையெடுக்க மாநில அரசுகள் உதவுமாறும் மந்திரி ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.

    • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
    • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை இந்தியா ஆதரித்து வருகிறது.

     பிட்ஸ்பர்க்: 

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உலக தூய்மை எரிசக்தி நடவடிக்கை அமைப்பு கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    போக்குவரத்தில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயோடெக்னாலஜி துறை மூலம் இந்தியா, மேம்பட்ட உயிரி எரிபொருள்கள் மற்றும் கழிவுகளிலிருந்து ஆற்றல் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை ஆதரித்து வருகிறது.

    நவீன உயிரித் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மேம்பட்ட நிலையான உயிரி எரிபொருளில் பணிபுரியும் ஒரு இடைநிலைக் குழுவைக் கொண்ட 5 உயிரி ஆற்றல் மையங்களை இந்தியா நிறுவியுள்ளது. காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

    2030 ஆம் ஆண்டில் உமிழ்வு தீவிரத்தை 35% குறைக்கும் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தை இந்தியாவும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய அரசு பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை.
    • சுயசார்பு தொழில் முனைவோராக பெண்கள மாறுவதற்கு வாய்ப்பு.

    ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:

    கடந்த 8 வருடங்களில் பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தம் மூலம் பெண்களின் பணிச்சூழலை எளிதாக்கியுள்ளது. பெண்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் பணியாற்றுவதற்கான பெரிய சமூக சீர்திருத்தம், மேற்கொள்ளப்பட்டுள்ளது.   


    மத்திய அரசு பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எனது அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்புடனும் அவர்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு வாய்ப்பளிக்கப் படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது.
    • மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது.

    டெல்லியில் நடைபெற்ற கல்வி உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த கால முரண்பாடுகளை சரி செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தம் மட்டுமல்ல முற்போக்கான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது. 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப இது உள்ளது. தேசிய கல்வி கொள்கை சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் கல்வியை மாற்றியமைக்கும்.

    இது மாணவர்களின் திறமை, அறிவு மற்றும் திறனுக்கு முன்னுரிமையை அளிக்கிறது. மனித நேயத்தை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான மற்றும் பலதரப்பட்ட பாடத் திட்டத்தை இது பரிந்துரைக்கிறது. சுவாமி விவேகானந்தரின் மனிதனை உருவாக்கும் கல்வி, ஸ்ரீஅரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வி ஆகியவற்றை தேசிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது.

    இன்று சுமார் 40 மில்லியன் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து உள்ளனர், இது அமெரிக்காவை விட அதிகம். பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் குறித்து பாடங்களை இணைக்க வேண்டும். இதை அர்த்தமுள்ள முறையில் செய்தால், குறுகிய காலத்தில் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கும்.

    முந்தைய கல்விக் கொள்கையின்படி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மனித வள அமைச்சகம் என்ற பெயரிடப்பட்டது. மோடி அரசு தற்போது அதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்தது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையில் இந்தியா முன்னேறியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்து 2021 இல் 46 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×