என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JMM"

    • ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வான அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    அங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளன.

    இதற்கிடையே, அம்மாநிலத்தின் பகூர் மாவட்டம் லிதிபரா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த தினேஷ் வில்லியம்ஸ் மராண்டி செயல்பட்டு வந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தினேஷ் வில்லியம்ஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார்.

    லிதிபரா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் தினேஷ் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    பா.ஜ.க.வில் இணைந்துள்ள தினேஷுக்கு நடப்பு தேர்தலில் லிதிபரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 13-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
    • அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    பாட்னா:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    இதையடுத்து, அங்கு 2-வது கட்டமாக 38 தொகுதிகளில் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது. நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதல் மந்திரி ஹேமந்த் சோரனும், காங்கிரசும் தலைநகர் ராஞ்சியை கராச்சியாக மாற்ற விரும்புகின்றனர்.

    அதேபோல் தும்கா, தியோகர் மற்றும் சாஹிப்கஞ்ச் மாவட்டங்களை வங்காளதேசமாக மாற்ற விரும்புகிறார்கள். காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் எங்களைப் பிரிக்க நினைக்கின்றன.

    ஜார்க்கண்டில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, மக்கள் தங்கள் 'பாஹு-பேட்டி'யின் பாதுகாப்பிற்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அவர்கள் 'ஓட்டு ஜிஹாத்' பற்றி பேசுகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளைப் பிரிப்பதே இவர்களின் அடிப்படை நோக்கம். இதை மக்கள் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.

    • நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடந்து முடிந்தது.
    • பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    மகாராஷ்டிர மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த ஆளும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜேஎம்எம்] மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 81 இடங்களை கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்துக்குக் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடந்து முடிந்தது.

    முன்னிலை நிலவரம் 

    பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் ஜேஎம்எம் இந்தியா கூட்டணி 51 இடங்களிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    திடீர் மாற்றம் 

    முன்னதாக பாஜகவின் என்டிஏ 41 இடங்கள், இந்தியா கூட்டணி 32 இடங்கள் முன்னிலை என்று இருந்த நிலையில் திடீரென டிரண்ட் மாறி இந்தியா கூட்டணி பெரும்பாண்மை இடங்களில் முன்னிலைக்கு வந்துள்ளது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

    கருத்துக்கணிப்பு

    ஜார்க்கண்டில் நியூஸ்18 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க. கூட்டணி 47 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    என்டிடிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் பா.ஜ.க. கூட்டணி 44 முதல் 53 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 37 இடங்களிலும், மற்றவை 5 முதல் 9 இடங்களிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    • ஒடிசாவின் மயூர்பஞ்ச்சில் கல்வியை முடித்து புவனேஸ்வரில் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெற்றவர்.
    • பிரசாரத்தின்போது கல்பனாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போன் மூலமாகப் பேரணியில் உரையாற்றினார்.

    ஜார்கண்ட் தேர்தல் 

    81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தொடக்கத்திலிருந்தே இந்தியா கூட்டணியைச் சேர்ந்த லாலுவின் ஆர்ஜேடி, ஆளும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜேஎம்எம்] மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. இந்தியா கூட்டணி 56 இடங்களிலும் பாஜக 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

    ஜேஎம்எம் 

    பார்ஹைத் [Barhait] தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சோரன் வெற்றி முகத்தில் உள்ளார். ஆனால் அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 92482 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் முன்யா தேவியை விட + 6862 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். ஆனால் இந்த தேர்தலில் கல்பனா சோரனின் பங்களிப்பு ஜேஎம்எம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் முக்கிய காரணி ஆகும்.

    அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரியில் மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்தார். ஹேம்நாத் சோரன் சிறையிலிருந்த சமயத்தில் முதல்வராக இருந்த சம்பாய் சோரன் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்குத் தாவினார். இது ஹேமந்த் சோரனுக்கு பெரும் பின்னடைவாகக் காணப்பட்டது.

     

    கல்பனா முர்மு சோரன்

    ஆனால் இந்த நேரத்தில் ஜேஎம்எம் கட்சியின் பிரதான முகமாக ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா முர்மு சோரன் [39 வயது] உருவெடுத்தார். கல்பனா, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கல்வியை முடித்து புவனேஸ்வரில் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெற்றவர்.

    ஹேமந்த் சோரன் சிறையிலிருந்த இந்த இடைப்பட்ட 6 மாத காலத்தில் அதுவரை பெரிதாக அரசியலில் ஈடுபடாத கல்பனா சோரன் கட்சி தலைமை பொறுப்பை ஏற்று தேர்தல் வெற்றிக்கான வேலைகளைத் தொடங்கினார். மார்ச் 4 ஆம் தேதி கிரித் [Giridih] மாவட்டத்தில் ஜேஎம்எம் கட்சி தொடங்கியதன் 51வது ஆண்டு விழாவில் கல்பனா பொதுவெளியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

    நம்பிக்கை நட்சத்திரம் 

    இந்தியா கூட்டணி சார்பில் 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நடந்த 'உல்குலன் நய்' பேரணி ஏப்ரல் 21 அன்று ராஞ்சியில் நடந்தது. இந்த பேரணியில் கல்பனாவின் பேச்சு அவருக்குத் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் ஜேஎம்எம் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக கல்பனா விளங்கினார்.

     

     பழங்குடியின அடையாளம்

    பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது. முக்கியமாகப் பழங்குடியின பெண்களிடையே ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தனது பிரசாரங்களின்மூலம் அதிக செல்வாக்கைப் பெற்றவராகத் திகழ்கிறார்.

    அரசியல் உரை 

    ஜார்கண்டில் கட்சி செயல்படுத்திய சமூக நலத் திட்டங்களை பிரதானதப்படுத்தி கல்பனா சோரன் மேடைகள் தோறும் பேசினார். சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தியதாலேயே தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினார்.

     

    அரசியல் உரைகளாக அல்லாமல் பழங்குடியின பெண்களைச் சென்று சேரும் வகையில் எளிமையாக கல்பனா சோரன் பேசியது பெரும் வரவேற்பைப் பெற்றது. கணவர் ஹேமந்த் சோரனை போலல்லாது தனது ஒவ்வொரு பேச்சையும் கல்பனா நன்கு திட்டமிட்டுத் தயாரித்துப் பேசினார்.

    வெற்றி 

    இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது கல்பனாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போன் மூலமாகப் பேரணியில் கல்பனா மைக்கில் பேசிய நிகழ்வும் அரங்கேறியது.  இந்நிலையில்  தற்போது கல்பனா சோரனின் வெற்றி காண்டே தொகுதியோடு மட்டும் இல்லாமல் ஹேமந்த் சோரனின் ஒட்டுமொத்த மாநில வெற்றிக்கும் கல்பனா சோரன் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.  கல்பனா சோரனுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

     

    • ஜார்க்கண்ட் தேர்தல் பிரசார பொறுப்பாளராக இருந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா செயல்பட்டார்
    • மாலை நிலவரம் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது.

    ஜார்க்கண்ட் தேர்தல் 

    ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டி விட்டது.  இதன்மூம் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு  முற்றிலும் பொய்துள்ளது.

     

    பாஜக வியூகம்  

    இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு எதிராக பாஜக பெரிய அளவிலான தேர்தல் பிரசாரங்களை ஒருங்கிணைத்தது. பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஹிமந்தா பிஸ்வா

    பிரதமர் மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை பாதேங்கே தோ கதேங்கே [ஒன்றாக இருந்தால் வாழ்வோம் - பிரித்து இருந்தால் வெட்டப்படுவோம்] என்ற இந்துக்களை முன்னிறுத்தி கோஷம் எழுப்பினர். ஜார்க்கண்ட் தேர்தல் பிரசார பொறுப்பாளராக இருந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா முஸ்லிகள் எண்ணிக்கை அதிகரிப்பு என்ற ஒற்றை குற்றச்சாட்டை அம்மாநிலத்தில் பாஜகவின் பிரதான தேர்தல் வியூகமாக வகுத்து செயல்பட்டார். ஜேஎம்எம் முக்கிய தலைவர் சம்பாய் சோரன் பாஜக பக்கம் சென்றதும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

    ஹேம்ந்த் சோரன்

    ஆனால் பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது.

    நில முறைகேடு தொடர்பான 2 வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் 6 மாதம் கழித்து விடுதலையானார். இடைப்பட்ட காலத்தில் அவரது மனைவி கல்பனா சோரன் கட்சியை வலுவோடு வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்த தேர்தலில் பாஜக ஜார்கண்ட் மக்களிடையே தனது பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்துவதாகச் சோரன் குற்றம் சாட்டினார்.

     

    இந்நிலையில் பாஜகவின் வியூகங்களை உடைத்து ஹேமந்த் சோரனின் கட்சி தேர்தல் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் பாஜக முன்னிலையிலிருந்த நிலையில் சட்டென மாறிய நிலவரம் இந்தியா கூட்டணியை அபார வெற்றியை நோக்கி இட்டுச் சென்றுள்ளது.

    How's the josh?

    மொத்தம் உள்ள 81 இடங்களில் இந்தியா கூட்டணி 57 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மாலை நிலவரம் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது.இதை கொண்டாடும் விதமாக ஜேஎம்எம்கட்சி கட்சி "How's the josh?" என்ற கேப்ஷனுடன் ஹேமந்த் சோரன் படத்தை பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது.

    "How's the josh?" என்பது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வெற்றி சொல்லாகப் பார்க்கப்படுகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு பாலிவுட் வெளியான URI படத்தின் மூலம் இந்த சொல் டிரண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்ட் என்றும் ஜேஎம்எம் கோட்டை என்பதை நிரூபித்ததாக அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • 81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டி விட்டது. இதன்மூலம் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு முற்றிலும் பொய்துள்ளது.

    81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி படுதோல்வி அடைந்தாலும் ஜார்கண்டில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெற்றி பெற்றது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இந்தியா கூட்டணிக்கு அபார வெற்றியை பரிசளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜேஎம்எம் கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்துகள். இது அரசியல் சாசனத்துடன் நீர், காடுகள் மற்றும் நிலங்களின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    • இன்று மாலை 4 மணியளவில் ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் காங்வர் - ஐ சந்தித்து ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்
    • 4 வது முறையாக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்வராக பதவி ஏற்கிறார்.

     81 சட்டமன்றங்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்துக்குக் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குபதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்றைய தினம் நவம்பர் 23 எண்ணப்பட்டது.

    இதில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஜேஎம்எம் - ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரசை உள்ளடக்கிய [இந்தியா] கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34; காங்கிரஸ் 16; ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றி பெற்றது. எதிரித்து போட்டியிட்ட பாஜக 21 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஹேமந்த் சோரன்  54 இடங்களுடன்  மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

    கடந்த 24 ஆண்டுகளில் ஜார்கண்டில் ஆளும் கட்சியே அடுத்த தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

     

    இந்நிலையில் ஹேமந்த் சோரன் வரும் வியாழக்கிழமை  [நவம்பர் 28] மீண்டும் ஜார்கண்ட் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வது முறையாக அவர் ஜார்கண்ட் முதல்வராக பதவி ஏற்கிறார்.

    கடந்த 2013 ஆம் ஆண்டில் முதன் முறையாக முதல்வர் பதவி ஏற்ற அவர் அதைத்தொடர்ந்து கடந்த 2019 தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார்.கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அப்போது இடைக்கால முதல்வராக சம்பாய் சோரன் செயல்பட்டார். 6 மாதம் கழித்து ஜாமினில் வெளியே வந்து கடந்த செப்டம்பரில் மீண்டும் மூன்றாவது முறையாக பதவி ஏற்றார். இந்நிலையில் நாளை மறுநாள் 4 வது முறையாக பதவியேற்ற உள்ளார்.

    ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

     

    இதற்கிடையே இன்று மாலை 4 மணியளவில் ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் காங்வர் - ஐ சந்தித்து ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×