என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanimozhi MP"

    • அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ, சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா?
    • பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது தானா ?

    தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (கே.வி) தமிழ் கற்பிப்பதற்கு தமிழாசிரியர்களே இல்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் "0". ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.

    அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா?

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.

    இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர்.
    • தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.

    பாராளுமன்ற கூட்டத்தில் கேந்திரிய வித்யாலயாவில் தமிழ், இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.

    கனிமொழி எம்.பி கேட்ட கேள்விக்கு தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    கூடுதலாக 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 86 இந்தி, 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.

    தமிழ்நாட்டில் 21,725 பள்ளிகளில் ஒரு மொழி மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 35,092 பள்ளிகளில் இரு மொழி, 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்றார். 

    • தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
    • 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

    மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.

    இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22-ந்தேதி தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் அமைச்சர் ரகுபதி தலைமையிலான தமிழக குழு சந்தித்து அழைப்பு விடுத்துள்ளது.

    அந்த சந்திப்பில், திமுக எம்பி கனிமொழி, எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோர் இடம் பெற்றன.

    • நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தர்மமாக வழங்கியது போல் காட்டினார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

    இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பின்தங்கியுள்ளது. 3 ஆம் வகுப்பு மாணவர்களால் 1 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை.

    திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது:-

    பாஜக அரசு, தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது. இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் இழிவுப்படுத்தப்பட்டார். நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்.

    நிதியமைச்சரும் அனைத்து அமைச்சர்களும் ஒரு நிகழ்ச்சி நிரலைப் பெற்று, தமிழக அரசை அவமதிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    நேற்று, நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தர்மமாக வழங்கியது போல் காட்டினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
    • விழாவில் ஆதிதிராவிடர் மக்களுக்கு 57 பேருக்கு இணைய வழி இ-பட்டாக்களும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    விழாவில் 235 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து சமூகபாது காப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித ்தொகை, ஆதரவற்ற விதவை உதவிதொகை மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தேவை உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களை 77 பேருக்கு வழங்கினார்.

    வீட்டுமனைப் பட்டா

    அதேபோல வருவா ய்த்துறை சார்பாக பெரிய தாழை, படுக்கப்பத்து, கட்டாரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 101 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், ஆதிதிராவிடர் மக்களுக்கு 57 பேருக்கு இணைய வழி இ-பட்டாக்களும் கனிமொழி எம்.பி. வழங்கி பேசினார்.

    விழாவில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர், தாசில்தார் தங்கையா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சின்னத்தாய், தி.மு.க. மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன்முருகேசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபதி, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அலெக்ஸ் புருட்டோ, ஆழ்வை ஒன்றிய செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லாபாய் வரவே ற்றார். முடிவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜோசப் நன்றி கூறினார்.

    • உலமாக்கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
    • கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக் கள், பணியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா காயல் பட்டினத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஆணையாளர் குமாரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை நல மாவட்ட அலுவலர் விக்னேஸ்வரன் வரவேற்று பேசினார்.

    விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் முத்து செல்வன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, நகர அவைத் தலைவர் முகமது மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது
    • இன்று இருக்க கூடிய டெக்னாலஜி இன்னும் 2 வாரத்தில் காணாமல் போய்விடுகிறது.

    தூத்துக்குடி:

    வாகைக்குளம் அருகே உள்ள மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் வக்கீல் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.

    இதில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொரு மாணவ- மாணவியருக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான மகிழ்ச்சி தரக்கூடிய கனவுகள் விரிந்து நிற்க கூடிய நாளாகும். கோவிட் என்ற மிகப் பெரிய சிக்கலை கடந்து நிற்க கூடிய தலைமுறையை சேர்ந்தவர்கள் நீங்கள்.

    கொரோனா என்ற சூழ்நிலையில் கல்லூரிக்கு வரமுடியாமல் ஆசிரியர்களை நேரில் சந்திக்க முடியாமல் கல்வி பயின்று பட்டதாரிகளாக வெற்றி பெற்றுள்ளீர்கள். இதை தாண்டி வந்த உங்களுக்கு உலகத்தில் சாதிக்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. இன்றைய உலகில் நீங்கள் இருக்கிற துறையில் தான் பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உலகம் என்பது மாறி கொண்டே இருக்க கூடிய ஒரு விஷயம்.

    ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸில் இருந்து தொடங்கி பல்வேறு புதிய விஷயங்கள் தினம் தினம் உருவாகி கொண்டே இருக்க கூடிய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இன்று இருக்க கூடிய டெக்னாலஜி இன்னும் 2 வாரத்தில் காணாமல் போய்விடுகிறது.

    காலம் மாறிக் கொண்டு இருக்க கூடிய சூழ்நிலையில் உங்களுடைய அறிவாற்றல்தான் இன்றைக்கு உங்களுக்கு மிக பெரிய சக்தி. நீங்கள் இருக்க கூடிய துறையில் மட்டுமில்லாது உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதான் உங்களுக்கு வெற்றிகளை கொண்டு வந்து குவிக்கும். எனவே மாணவர்கள் தங்கள் அறிவாற்றலை எல்லா துறைகளிலும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    • செம்புலிங்க புரத்தில் ரூ.11.10 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன் வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்குஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட செம்புலிங்க புரத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11.10 லட்சம் மதிப்பில் யூனியன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக அங்கன் வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    ஆதியாக்குறிச்சி ஊராட்சி தீதத்தாபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.19.91 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகக் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.

    இப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி தொடக்க விழா நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிதலைவர் பால சரஸ்வதி, ஆதியா குறிச்சி ஊராட்சிதலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.இதில் மாநில தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சிதுணைத் தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பால முருகன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் ராமஜெயம்,

    அருணாசலம், மகா விஷ்ணு, மாவட்டப் பிரதிநிதிகள் ரவிராஜா, மதன்ராஜ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டக் காங்கிரஸ், பொருளாளர் நடராஜன், ஆதியாகுறிச்சி ஊராட்சி துணைத் தலைவர் பவுல், ஊராட்சி, செயலர் (பொறுப்பு) ரசூல் திமுகவைச் சேர்ந்த மணல் கணேசன். பாய்ஸ், அஜய் உடன்குடி பேரூராட்சியின் கவுன்சிலர்கள் முன்னாள் கவுன்சிலர்கள், பேரூ ராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தி.மு.க. மீனவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • எல்லோருக்கும் உயர் படிப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் ஆட்சியில் மாவட்டத் தோறும் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டது

    தூத்துக்குடி:

    உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மீனவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் தலைமை தாங்கினார்.

    கனிமொழி எம்.பி

    மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் டென்சிங், மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் ராபர்ட், கவுன்சிலர்கள் ரெக்ஸிலின், பவாணி மார்ஷல், மெட்டில்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் வரவேற்றார்.

    இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மீனவர் தினத்தையொட்டி நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் தையல்மிஷின், சேலை உள்பட 800 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    நீட்தேர்வு

    மொழியின் மூலம் மருத்துவர்கள் ஆக வேண்டிய மாணவ- மாணவர்களின் எதிர்காலம் நீட் தேர்வின் மூலம் தடைபடுகிறது. எல்லோருக்கும் உயர் படிப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் ஆட்சியில் மாவட்டத் தோறும் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டது.தவறான கொள்கையை கடைபிடிக்கும் பா.ஜ.க.வை அனைவரும் புறக்கனிக்க வேண்டும். மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு தந்து விடக்கூடாது.

    தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. திரேஸ்புரம் படகு நிறுத்தும் இடம் விரிவாக்கம், திரேஸ்புரம் கடற்கரை திரேஸ்புரம் சாலை இனிகோநகர் கடற்கரை, ஆகிய பகுதிகளில் ஹை மாக்ஸ் லைட் அமைத்து மற்றும் உங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருகிறேன்.

    மாணவிகளுக்கு

    ரூ. 1000

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளது. எம்.பி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. உங்களோடு நின்று பணியாற்றும் இயக்கம் தி.மு.க. ஓன்றிய அரசோடு சேர்ந்து அ.தி.மு.க. மக்கள் விரோத பறிப்பு செயலில் ஈடுபட வருவார்கள். அதற்கு இடமளிக்க வேண்டாம். தமிழகத்தை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கவும் முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், ஒன்றிய அரசு 2-வது முறையாக பொறுப்பேற்ற பின் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அழிக்கும் வகையில் செயல்படுகிறது. ஓரேநாடு ஓரே மொழி என்பது சாத்தியப்படாது. நாம் தமிழ் பேசுகிறோம். உணவு கலச்சாரம் மாறுப்படுகிறது. மற்ற மொழிகளை பயன்படுத்தி தமிழ் மொழியை அழித்து வேலைவாய்ப்பை பறிக்கிறது. தமிழர்கள் நல்ல முறையில் படித்து உழைப்பின் மூலம் உலகம் முழுவதும் அவர்களது திறமையின் மூலம் வாழ்கின்றனர். சமஸ்கிருத மொழிக்கு ரூ. 640 கோடி ஓதுக்கீடு, தமிழ் மொழிக்கு ரூ. 70 கோடி ஓதுக்கீடு என ஒன்றிய அரசு வேறபாடு காட்டுகிறது என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, மாநகராட்சி மண்டலததலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், மீனவரணி நிர்வாகிகள் பெப்பின், ஜேசையா, மாதவடியான், அந்தோணிராஜ், சந்திரமோகன், ஸ்மைலன், ஜெனிபர், அண்டன் பொன்சேகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது.
    • 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் பிரம்ம சக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட் செல்வின், செந்தூர் மணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், சோபியா, மாவட்ட பொரு ளாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

    இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்கு மார், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசுதீன், உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப், பேரூராட்சி துணைத் தலைவரும், நகர செயலாளருமான சந்தையடி யூர்மால் ராஜேஷ், யூனியன் சேர்மன்கள் ரமேஷ், வசுமதி அம்பாசங்கர், கோமதி ராஜேந்திரன், ஜெயபதி, திருச்செந்தூர் நகராட்சி சேர்மன் சிவ ஆனந்தி, காயல்பட்டணம் முத்து முகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், முத்துச் செல்வன், இந்திரகாசி, சாகுல் ஹமீது, கணேசன், ஆறுமுக பாண்டியன், ராஜலெட்சுமி, ரவி செல்வகுமார், முகம்மது அலி ஜின்னா, மாவட்ட அமைப்பாளர்கள் மகாவிஷ்ணு, சந்தடி ரவி ராஜா, ஒன்றிய செயலாளர்கள் நவின் குமார், ரமேஷ், சதீஷ், முத்து முகமது, சுடலை, ரவி, பார்த்திபன், ஜோசப், கொம்பையா, கோட்டாளம், இசக்கி பாண்டியன், பாலமுருகன், பொன் முருகேசன், ஜெயக்கொடி, சுப்பிபிரமணியன், சரவண குமார், இளையராஜா, ராமசாமி, சுரேஷ் காந்தி, சிவக்குமார், ஆஸ்கர், உடன்குடி தொடக்க வே ளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், உடன்குடி முன்னாள் நகர செயலாளர் ஜான் பாஸ்கர், உடன்குடி பேரூராட்சி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள், இளைஞர் அணியை சேர்ந்த பாய்ஸ் அஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    இக்கூட்டத்தில் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு வாழ்த்து தெரிவிப்பது, வரும் 27-ந் தேதி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பூத் கமிட்டி பணிகள் உடனடியாக தொடங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல்ஆட்சியை இந்திய நாடேதிரும்பி பார்க்கிறது. இந்தியாவிற்கு எடுத்துக் காட்டாக நடந்து வருகிறது.வரும் பாராளுமன்றதேர்தலை சந்திக்க பணிகளை இப்போழுதேதொடங்க வேண்டும் அனைவரும் ஒற்றுமையுடன் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். பா. ஜனதா அரசு தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் வெற்றி காண துடிக்கிறது. அதற்கு தமிழக மக்களாகிய நாம் இடம் கொடுக்கக் கூடாது, அனைத்து ஜாதியினரையும் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.

    ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் நன்றி கூறினார்.

    • பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற்று வரும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
    • ஒவ்வொரு மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    நெல்லை:

    தமிழக அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா பாளையில் நேற்று தொடங்கியது.

    கனிமொழி எம்.பி.

    பாளை நேருஜி கலைய ரங்கில் நடைபெற்று வரும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அவர் மாணவ, மாணவிகள் எழுதிய தபால் கவிதை தொகுப்பினை கலெக்டர் விஷ்ணு, பொது நூலக இயக்ககத்தின் இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எழுத்தாளர் கலாப்பிரியா ஆகியோரிடம் வழங்கினார். விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    இலக்கிய திருவிழாக்கள்

    தமிழகத்தில் இலக்கிய செழுமைமிக்க தமிழ்மொழி யின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவாணி மற்றும் பொருநை என 5 மண்டலங்களில் இலக்கியத் திருவிழாக்களை சிறப்பாக நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக புத்தகம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

    புத்தகம் வாசிப்பு

    குறிப்பாக பள்ளி, மாணவ-மாணவிகள் புத்தகம் வாசிப்பதன் மூலம் தன்னுடைய அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியும். புத்தகம் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் தமிழ் இலக்கியங்களை எளிதாக அறிய முடியும்.

    இந்த பொருநை இலக்கிய திருவிழா மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. படிப்பை நேசித்தவர் பேரறிஞர் அண்ணா, புத்தகம் வாசிப்பதை மிகவும் ஆர்வம் கொண்டு இறுதி மூச்சு வரை புத்தகத்தை நேசித்தவர் கலைஞர்.

    எனவே புத்தகம் வாசிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள். திராவிட இயக்கம் தான் தமிழர்களை தலை நிமிர செய்தது.

    பள்ளியில் எது சரி, எது தவறு என்று சொல்லி தரக்கூடிய பல நேரங்களில் புத்தங்கள் நமக்கு கைக்கொடுக்கிறது. புத்தகங்கள் படிக்க, படிக்க உங்கள் சிந்தனைகள் விரிவாகும்.

    புத்தகங்கள் தரும் உலகம் என்பது நம்முள் பல கேள்விகளை பல கருத்துக்களை முன் வைக்கும். புத்தகத்தை படித்து படித்து சிந்திக்கும் தலைவன் தான் நம்மை அழைத்துச் செல்லும் தலைவனாக இருக்க முடியும். அத்தகைய தலைவர்கள் தான் திராவிட இயக்க தலைவர்கள்.

    இன்று தமிழகத்தில் ஜாதி மதம் என்ற பெயரால் யாரும் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது என்றால் அதற்கு திராவிட இயக்க எழுத்தாளர்கள் தான் காரணம். எனவே, பொதுமக்கள், இளம் தலைமுறையினர், மாணவ, மாணவியர்கள் அனைவரும் பொருநை இலக்கிய திருவிழாவிற்கு வந்து ஓலைச் சுவடி வடிவிலான இலக்கியங்கள், மூல புத்தக மற்றும் நாட்டு புறக் கலைகள் தொடர்புடைய பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மனு கொடுத்தார்.
    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கிராமப்புறங்களில் உள்ளது போல நகர்ப்புறங்களிலும் அனைத்து பயிற்சிகளையும் வழங்கிட வேண்டும்'

    தென்திருப்பேரை:

    உடன்குடி மற்றும் சாத்தான்குளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்ரீவைகுண்டம் சுற்றி செல்லாமல் ஆழ்வார்திருநகரி, காடுவெட்டி, குலசேகரநத்தம், ஆயத்துறை வழியாக தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க கனிமொழி எம்.பி. யிடம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மனு கொடுத்தார். இந்த புதிய வழித்தடம் நடைமுறைக்கு வந்தால் கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களின் பயண நேரம் கணிசமாக குறைவது மட்டும் இன்றி இந்த சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள் என்பதை வலியுறுத்தியதாக கூறினார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கிராமப்புறங்களில் உள்ளது போல நகர்ப்புறங்களிலும் அனைத்து பயிற்சிகளையும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்ததாக கூறினார்.

    ×