என் மலர்
நீங்கள் தேடியது "Karagam"
- 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
- என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சியும் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக நீலமேகம் மற்றும் அவரது மனைவி கவிதா அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகின்றனர்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மாநில மாவட்ட கருத்தாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான பொருட்களை வைத்து எண்ணும் எழுத்தும் பயிற்சி மேற்கொண்ட ஆசிரியர் தம்பதியினரை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்விக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில், இப்பள்ளி யில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோடியக்காடு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.
இதில் ஆசிரியர்கள் குணசுந்தரி, சாந்தி, கவிதா, மணிமாலா, புஷ்பா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மீனாம்பாள், தாமரைச்செ ல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 1 முதல் 3 வரை பயிலும் மாணவர்களால் என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சியும், 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி பரிசு வழங்கினார்.
முடிவில் ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.
- பக்தர்கள் கரகம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
- இரவு அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
அது சமயம் குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் கரகம் காவடி எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மன் தீ குண்டத்திற்கு எழுந்தருள கங்கணம் கட்டிய ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே திருக்கக்காவூர் மந்தக்கருப்பண்ண சுவாமி, ஏழைக்காத்தம்மன், காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாகவிழா நடைபெறாதநிலையில் இந்தாண்டுகோவிலின் திருவிழா கொடியேற்ற த்துடன் தொடங்கியது.
உப்பனாற்றங்கரையில் இருந்து கரகம் எடுத்து வரப்பட்டது. அதனையடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாலியை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்து வைத்தனர்.
தொடர்ந்து கோவிலில் இருந்து பெரிய கரகத்தை எடுத்து செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு உப்பனாற்று கரைக்கு சென்றனர்.
அங்கு பூஜைகள் முடிவடைந்த பின்னர் பெண்கள் அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடனை செலுத்திய பின்னர் கோவி லுக்கு வந்து வழிபட்டனர்.
- அக்னிகொப்பரை, சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி புறப்பட்டு வாணவேடிக்கையுடன் வீதியுலா நடைபெற்றது.
- அம்பாளுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுவாமிமலை:
கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோட்டில் அமைந்துள்ள ஜலசந்திர மகா மாரியம்மன் கோவில் உற்சவ பெருவிழா கடந்த 5ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .அதனைத் தொடர்ந்து காவேரி ஆற்றங்கரையில் இருந்து அக்னிகொப்பரை, சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி புறப்பட்டு வானவேடிக்கையுடன் வீதி உலா காட்சிகள் நடைபெற்றது.
இதையடுத்து அம்பாளுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை நாதஸ்வர கச்சேரியுடன் வான வேடிக்கை முழங்க ஜலசந்திர மகா மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோடு தெருவாசிகள், பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.