என் மலர்
நீங்கள் தேடியது "Karaikal fishermen"
- காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது.
- பாண்டிச்சேரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வந்து மீன் பிடித்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது.
இதனை கண்ட மாமல்லபுரம் மீனவர்கள் 5 பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று காரைக்கால் மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து அதில் இருந்த 14 மீனவர்களை சிறைபிடித்தனர். அவர்களை படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். விசைப்படகை கடலிலேயே நிறுத்தி வைத்தனர்.
இதே போல் இன்று காலையில் பாண்டிச்சேரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வந்து மீன் பிடித்தனர். அவர்களையும் மாமல்லபுரம் மீனவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடிக்கிறது. மாமல்லபுரம் மீனவர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
- சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களை மீட்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நாகையிலிருந்து மீன்பிடிக்க காரைக்கால் மாவட்டம் கீழ்காசாக்குடி அன்பழகன், 15 வயது சிறுவன், காரைக்கால்மேடு பாண்டியன், வேலாயுதம், மயிலாடுதுறை மாவட்டம் கலைமணி, தங்கதுரை, செல்வகுமார், ரமேஷ், 16 வயது சிறுவன், நாகை ராஜசேகர் ஆகிய 10 மீனவர்கள் சென்றிருந்தனர்.
அவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கடந்த 8-ந் தேதி இரவு 11.30 மணிக்கு விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர்.
- படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால்:
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிறை பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக வேதாரண்யம், ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கோடியக் கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களை சிறை பிடித்த போது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளனர்.
சமீபத்தில்தான் 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 13 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
- மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேதாரண்யம், ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
- எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
- அப்போது இரண்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று அதிகாலை காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களை சிறைப்பிடித்த போது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடுநடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரக தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மீனவர்கள் மீது துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் இலங்கை அரசிடம் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை ராணுவம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை அடிக்கடி கைது செய்து வருகிறது. ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதுவும் இலங்கை அதிபராக அனுர குமார திஷநாயகே பதிவு ஏற்ற பிறகு நடைபெறம் முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.
- துப்பாக்கி முனையில் படகில் இருந்த11 மீனவர்கள், கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் என 13 பேரையும் கைது செய்தனர்.
- காயமடைந்த பாபு, செந்தமிழ் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் புதுவை, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகளை பிடித்துச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தவேல். அவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் கடந்த 26-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். இதனால் மீனவர்கள் செய்வதறியாமல் திகைத்த நிலையில் நடுக்கடலில் வைத்து வானத்தை நோக்கியும், படகு மீதும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால் பயந்து போன மீனவர்கள் பாபு, செந்தமிழ் ஆகியோர் கடலுக்குள் குதித்து தப்ப முயன்றனர். இதில் அவர்கள் இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து துப்பாக்கி முனையில் படகில் இருந்த11 மீனவர்கள், கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் என 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவர்களில் காயமடைந்த பாபு, செந்தமிழ் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சி காட்சிகள் வெளியானது.
மீனவர்களின் படகுகளை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது.
- சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.
ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேரை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை செய்து செய்தது.
சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய இலங்கை நீதிபதி ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
புதுவை மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 3-ந்தேதி காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்மணி, செல்வமணி, தங்கமணி, மகேந்திரன், வீரப்பன், ரவிக்குமார், ரத்தினம் ஆகிய 7 பேர் ஒரு படகிலும், அரசமணி, மனோகரன், சந்திரன், கதிரேசன், சுபாஷ் ஆகிய 5 பேர் மற்றொரு படகிலும், அருணகிரி, மோகன், சேகர், தமிழ்மணி, முருகன், சாந்தன், ஆகிய 6 பேர் இன்னொரு படகிலும் என மொத்தம் 3 பைபர் படகுகளில் 18 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலை எல்லை தாண்டிச்சென்று இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 18 மீனவர்களையும் சிறை பிடித்தனர். மேலும் அவர்களின் 3 பைபர் படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களை யாழ்ப்பாணம் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தகவல் அறிந்த காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்தார் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கரனுடன் சென்று மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, மீன்வளத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். #FishermenArrested
கஜா புயல் கடந்த 16-ந் தேதி வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் புதுவை மாநிலம் காரைக்காலில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
ஏராளமான பைபர் மற்றும் விசைப்படகுகள் சேதமடைந்தன. புயல் கரையை கடக்கும் முன்பே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால், பட்டினச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மீனவர்கள் கடந்த 13-ந் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கஜா புயல் கரையை கடந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். புயலால் சேதம் அடைந்த படகுகளுக்கு பதில் புதிய பைபர் படகுகள் வழங்க வேண்டும். இல்லையென்றால் படகுகளை முற்றிலும் சீரமைப்பதற்காக நிவாரண தொகையை முழு அளவில் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் புதுவை அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது சம்பந்தமாக நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை மீனவர்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இருப்பினும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இன்று 17-வது நாளாக அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் கடலூர், சிதம்பரம், மரக்காணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காரைக்காலுக்கு மீன்கள் வருகின்றன. இதனால் காரைக்காலில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.