என் மலர்
நீங்கள் தேடியது "Kendriya Vidyalaya"
- தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர்.
- தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.
பாராளுமன்ற கூட்டத்தில் கேந்திரிய வித்யாலயாவில் தமிழ், இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.
கனிமொழி எம்.பி கேட்ட கேள்விக்கு தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 86 இந்தி, 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.
தமிழ்நாட்டில் 21,725 பள்ளிகளில் ஒரு மொழி மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 35,092 பள்ளிகளில் இரு மொழி, 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்றார்.
- மத்திய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை
- மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் மத்திய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. அருண் நேரு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்பது PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (முன்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) மூலம் மீண்டும் தெளிவாகிறது.
திருச்சிராப்பள்ளியில் உள்ள PM Shri கேந்திரிய வித்யாலயா எண் 2, 2025-26 கல்வியாண்டிற்கான ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்காக நேர்காணல் அறிவிப்பை 16-03-2025 அன்று வெளியிட்டுள்ளது.
இதில்: PGT (பட்டதாரி ஆசிரியர்): பொருளாதாரம், ஆங்கிலம்
TGT (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்): இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்
PRT (முதன்மை ஆசிரியர்): பொது மற்றும் இசைபோன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆனால், தமிழ் மொழிக்கு எந்த பணியிடமும் குறிப்பிடப்படவில்லை. இது தமிழ்நாட்டின் மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்பிக்க விருப்பமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், RTI தகவல்களின்படி, தமிழ் ஆசிரியர்கள் இல்லை, ஆனால் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த பள்ளிகள் தற்போது PM Shri என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டு, தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) மற்றும் அதன் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், இந்த பள்ளிகள் இன்னும் இருமொழி கொள்கையை (இந்தி மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றுகின்றன, தமிழ்நாட்டின் மொழியான தமிழை கூட அவர்கள் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால் இப்பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது.
சமீபத்திய நிகழ்வுகளில் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்கள் NEP 2020 வலியுறுத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றி செயல்படும் PM Shri பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடவில்லை என்ற காரணத்தால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (SSA) மூலம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 2000 கோடி அளவிலான நிதியை நிறுத்தி வைத்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது தமிழ்நாட்டின் மொழியியல் அடையாளத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் புறக்கணிப்பதாகும். தமிழ்நாடு இரு மொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றுகிறது, மற்றும் இந்தியை திணிக்கும் முயற்சியாக NEP 2020-ஐ எதிர்க்கிறது. ஆனால் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் ஒன்றிய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பண்பாட்டையும் மொழியையும் மதிக்க வேண்டும். PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் SSA நிதிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- நாடு முழுவதும் 1,250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில் 3 பள்ளிகளும் இயங்குகின்றன.
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கே.வி.எஸ்-ஐ "ஆலமரம்" என்று குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 1,250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில் கேவிஎஸ் நடத்தும் மூன்று பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கேவிஎஸ்) வைர விழாவையொட்டி, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், "பல மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முக்கிய பங்காற்றியுள்ளன" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கேந்திரிய வித்யாலயா குடும்பத்தின் அனைத்து மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும், துணைப் பணியாளர்களுக்கும் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கும் வைர விழாவையொட்டி வாழ்த்துக்கள். இந்த மதிப்பிற்குரிய கல்விச் சமூகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும்.
பல ஆண்டுகளாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பல மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதன் மூலம் நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கே.வி.எஸ்-ஐ "ஆலமரம்" என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து மேலும் அவர், "கடந்த ஆறு சதாப்தங்களாக மாணவர்களுக்கு தரமான கல்வியை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வழங்கி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த "ஆலமரம்" முக்கிய காரணியாக உள்ளது. இன்று நாம் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் போது கேவிஎஸ்-ன் பங்கு முக்கியமானதாகிறது.
கேவிஎஸ் குடும்பம் 21ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப கல்வி மூலம் எதிர்காலம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பாதையில் தொடர்ந்து முன்னேறட்டும். மேலும் என்இபி (தேசிய கல்விக் கொள்கை) தரையில் செயல்படுத்தப்படுவதற்கு பங்களிக்கட்டும்" என்றார்.
- மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- அரிவாளால் வெட்டிய மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணத்தில் இந்திய கடற்படை வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவர் ஒருவர் மீது தண்ணீரை சிந்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாணவர்களுக்கிடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை மாணவர் தனது வீட்டில் இருந்து சிறிய அரிவாள் ஒன்றை எடுத்து வந்து தன் மீது தண்ணீர் சிந்திய மாணவரை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த மாணவர் அலறி துடித்தார். உடனே அரிவாளால் வெட்டிய மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சம்பவம் குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த மாணவனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்திருக்கிறது.
- கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதிகள் மாற்றப்பட வேண்டும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருந்தார்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது.
இதனையடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தேர்வுகள் ஜனவரி 13 முதல் 16 வரை நடக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பொங்கல் திருநாளை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதிகள் மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதனடிப்படையில் , ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்திருக்கிறது.
பொங்கல் விழாவுக்காக கேந்திரிய வித்யாலயா தேர்வுத் தேதிகளை மாற்றக்கோரிய எனது கடிதத்திற்கு தரப்பட்டுள்ள பதில்;
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), சென்னை பிரிவு, பொங்கல் திருவிழா நாட்களில் தேர்வுகள் நடக்காமல் இருக்க தேர்வுத் தேதிகளை மாற்றியமைத்திருக்கிறது.
தேர்வுகள் முதலில் ஜனவரி 13, 2025 முதல் தொடங்க இருந்த நிலையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு தேதி மாற்றப்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தேன்.
அதனடிப்படையில் , ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா பதில் தந்துள்ளது.
கோரிக்கையை ஏற்று இந்த மாற்றத்தை விரைவாக செய்த கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு நன்றி. மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
- பீகாரின் நிலைமை உண்மையில் மோசமாக உள்ளது.
- பீகார் மக்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை.
"பீகாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாகிவிடும்" என கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை தீபாலி பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆசிரியை தீபாலி அந்த வீடியோவில், "இந்தியா முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. என்னை இந்தியாவில் எதாவது ஒரு ஊரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக சேர்த்திருக்கலாம்.
கொல்கத்தாவை பலருக்கும் அவ்வளவாக பிடிக்காது. ஆனால் நான் அங்கு செல்லவும் தயாராக இருந்தேன். மேற்குவங்கத்தில் எங்கு வேலைக்கு சேர்ந்திருந்தாலும் பரவாயில்லை. எனது நண்பர் டார்ஜிலிங்கில் பணியமர்த்தப்பட்டார், உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மற்றொரு நண்பர் வடகிழக்கில் உள்ள சில்சாரில் பணியமர்த்தப்பட்டார். இன்னொரு நண்பர் பெங்களூரில் இருக்கிறார். ஆனால் ஒரு மோசமான மாநிலத்தில் (பீகாரில்) என்னை பணியமர்த்தியதற்கு என் மேல் அவர்களுக்கு என்ன விரோதம்?
என்னுடைய முதல் பணி என்றும் என் நினைவில் இருக்கும். என்னை கோவாவிலோ ஒடிசாவிலோ அல்லது தென்னிந்தியாவில் எதாவது ஒரு பகுதியில் பணியமர்த்திருக்கலாம். ஏன் யாரும் செல்ல விரும்பாத லடாக்கில் கூட பணியமர்த்திருக்கலாம். நான் அங்கு கூட செல்ல தயாராகவே இருந்தேன்.
நான் கேலி செய்யவில்லை, பீகாரின் நிலைமை உண்மையில் மோசமாக உள்ளது. நான் இங்கே இருப்பதால், அதை தினமும் பார்க்கிறேன். பீகார் மக்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை. பீகார் இருப்பதால் இந்தியா இன்னும் வளரும் நாடாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பீகாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாகிவிடும்" என்று பேசியுள்ளார்.
ஆசிரியை தீபாலி பேசிய வீடியோ வைரலாக, பீகார் எம்பி சாம்பவி சவுத்ரி, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் ஆணையருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.