என் மலர்
நீங்கள் தேடியது "Koyambedu Market"
- கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது.
- இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கள் விற்பனைக்கு வருகிறது.
விவசாய பணியில் ஈடுபட்டு வரும் தொழி லாளர்களில் பெரும்பா லானவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 நாட்கள் வரை விடுமுறை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் காய்கறி உற்பத்தி மற்றும் அறுவடை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து கடந்த 2 நாட்களாகவே வெகுவாக குறைந்துவிட்டது.
கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது. இந்த நிலையில் இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ரூ.40-க்கு விற்ற பீன்ஸ் தற்போது விலை அதிகரித்து ரூ.70-க்கும், ரூ.50-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ90-க்கும், ரூ.70-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.10-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.
அதேபோல் கத்தரிக்காய், முட்டை கோஸ், அவ ரைக்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்து உள்ளது.
தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளில் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.120 வரையிலும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.130 வரையும் விற்கப்படுகிறது.
சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் பச்சை காய்கறிகள் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-
தக்காளி-ரூ.23.
நாசிக் வெங்காயம்-ரூ.36
ஆந்திரா வெங்காயம்- ரூ.20
சின்ன வெங்காயம்- ரூ.110
உருளைக்கிழங்கு-ரூ.27
ஹாசன் உருளைக்கிழங்கு- ரூ.42
கத்திரிக்காய்- ரூ.20
வரி கத்திரிக்காய்- ரூ.15
அவரைக்காய்- ரூ.40
வெண்டைக்காய்- ரூ.25
பீன்ஸ்- ரூ.70
ஊட்டி கேரட்-ரூ.90
பீட்ரூட்- ரூ.25
முள்ளங்கி- ரூ.22
வெள்ளரிக்காய்- ரூ.12
கோவக்காய்- ரூ.35
பன்னீர் பாகற்காய்- ரூ.40
முட்டை கோஸ்- ரூ.20
காலி பிளவர் ஒன்று - ரூ.25
முருங்கைக்காய்- ரூ.90
சுரக்காய்- ரூ.15
புடலங்காய்-ரூ.15
பீர்க்கங்காய்-ரூ.35
சவ்சவ்-ரூ.15
இஞ்சி-ரூ.65.
- தக்காளி 47 லாரிகள், வெங்காயம் 40 லாரிகள் உட்பட 370 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
- பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
இன்று தக்காளி 47 லாரிகள், வெங்காயம் 40 லாரிகள் உட்பட 370 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன. ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.
நள்ளிரவு மந்தமாக தொடங்கிய காய்கறி விற்பனை படிப்படியாக வியாபாரிகளின் வரத்து குறைய தொடங்கியதால் அதிகாலையில் மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடியது.
இதனால் மூட்டை மூட்டையாக காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேங்கின. இதனால் காய்கறி விலை குறைந்து விற்கப்பட்டது.
கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்ற ஊட்டி கேரட் விலை குறைந்து ரூ.50-க்கும், ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் ரூ.40-க்கும், ரூ.23-க்கு விற்ற தக்காளி ரூ.19-க்கும் விற்கப்படுகிறது.
தக்காளி, கத்தரிக்காய், புடலங்காய், முள்ளங்கி, நூக்கல், முட்டைகோஸ், சவ்சவ், வெள்ளரிக்காய், காலி பிளவர் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் ஏராளமான மூட்டைகளில் தேக்கமடைந்து இருப்பதால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.
- வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
தினசரி 8 முதல் 10 வாகனங்களில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இதன் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தற்போது தினசரி ஒன்று முதல் 2 வாகனங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
இதன் காரணமாகவே சின்ன வெங்காயம் விலை திடீரென அதிகரித்தது. இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வெங்காய மொத்த வியாபாரி தண்டபாணி கூறியதாவது:-
கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு மட்டுமே விற்கப்பட்டது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் உற்பத்தி செய்வதற்கு ரூ.20 வரை செலவு ஆகிறது.
ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்வதை திடீரென நிறுத்திவிட்டனர். இதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டு சின்ன வெங்காயம் விலை அதிகரித்து உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.
- மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.
வழக்கமாக தினமும் 28 மினி வேன்கள் மூலம் மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதில் ஏறத்தாழ 20 மினி வேன்கள் அளவிலான மல்லிகை பூக்களை வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இங்கிருந்து வாங்கி செல்வது வழக்கம். பனி சீசன் நேரத்தில் பொதுவாகவே மல்லி பூ விளைச்சல் இருக்காது.
கடந்த 10நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் அதனை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு பூ சந்தைக்கு வரும் மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து தினசரி விற்பனைக்கு வரும் ஐஸ் மல்லிகை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்ற நிலையில் இன்று விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்கப்படுகிறது. மல்லிகை பூவை தொடர்ந்து ஐஸ் மல்லிகை விலையும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மல்லிகை பூ வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
- அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதால் கடந்த 2 நாட்களாக சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து அதிகரித்து காய்கறி விற்பனை மீண்டும் சூடு பிடித்துள்ளது.
- கத்தரிக்காய், கேரட், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது கணிசமாக அதிகரித்து உள்ளது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 420 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் கடந்த வாரம் வரை மழை காரணமாக காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை.
இதனால் கோயம்பேடு சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வெகுவாக குறைந்தது. விற்பனை ஆகாமல் காய்கறிகள் தேக்கமடைந்தது. அவை வீணாவதை தடுக்க மொத்த வியாபாரிகள் கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையை 30 சதவீதம் வரை குறைத்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதால் கடந்த 2 நாட்களாக சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து அதிகரித்து காய்கறி விற்பனை மீண்டும் சூடு பிடித்துள்ளது.
அதேபோல் கத்தரிக்காய், கேரட், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது கணிசமாக அதிகரித்து உள்ளது.
இன்று மொத்த விற்பனை கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கும், முருங்கைக் காய் கிலோ ரூ.70-க்கும், ஊட்டி கேரட் கிலோ ரூ.65-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.30-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.
இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விவரம் வருமாறு (கிலோவில்):-
தக்காளி ரூ.13, நாசிக் வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.100, ஆக்ரா உருளைக்கிழங்கு ரூ.25, கோலார் உருளைக்கிழங்கு ரூ.33, பீன்ஸ் ரூ.25, ஊட்டி கேரட் ரூ.65, பீட்ருட் ரூ.25, முள்ளங்கி ரூ.18, சவ் சவ் ரூ.10, அவரைக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.25, பன்னீர் பாகற்காய் ரூ.40, சுரக்காய் ரூ.15, பீர்க்கங்காய் ரூ.40, புடலங்காய் ரூ.25, நைஸ் கொத்தவரங்காய் ரூ.60, பட்டை கொத்தவரங்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.70, உஜாலா கத்தரிக்காய் ரூ.35, வரி கத்தரிக்காய் ரூ.20, வெள்ளரிக்காய் ரூ.7, பச்சை மிளகாய் ரூ.35, குடை மிளகாய் ரூ.30, இஞ்சி ரூ.63, இஞ்சி (புதுசு) ரூ.45.
- கடந்த சில நாட்களாகவே மல்லி, கனகாம்பரம், ஜாதி உள்ளிட்ட பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்ற மல்லி இன்று மேலும் அதிகரித்து கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், சேலம், திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓசூர் ஆகிய பகுதிகள் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பூ தினசரி விற்பனைக்கு வருகிறது.
மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் முகூர்த்த நாட்கள் அடுத்த டுத்து வருவதால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே மல்லி, கனகாம்பரம், ஜாதி உள்ளிட்ட பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று சுப முகூர்த்த நாள், நாளை மறுநாள் கார்த்திகை தீபம் என அடுத்தடுத்து விசேஷ நாட்கள் என்பதால் பூக்கள் விலை மேலும் அதிகரித்து உள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்ற மல்லி இன்று மேலும் அதிகரித்து கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ ரூ.800-க்கு விற்ற ஐஸ் மல்லி இன்று ரூ.1500 வரை விற்கப்படுகிறது.
இன்றைய பூக்கள் விலை விவரம் வருமாறு (கிலோவில்):- சாமந்தி (ரகத்தை பொறுத்து)-ரூ.50 முதல் ரூ.80 வரை, அரளி-ரூ.250, பன்னீர் ரோஸ்-ரூ.100 முதல் ரூ.120 வரை, சாக்லேட் ரோஸ்-ரூ.140 முதல் ரூ.160 வரை, மல்லி-ரூ.2000, ஐஸ் மல்லி-ரூ.1200 முதல் ரூ.1500 வரை, முல்லை-ரூ.1000, கனகாம்பரம் (ரகத்தை பொறுத்து)-ரூ.600 முதல் ரூ.800 வரை, ஜாதி-ரூ.500 முதல் ரூ.600 வரை.
- மார்க்கெட் வளாகத்தில் தினசரி 200 டன் அளவுக்கு கழிவுகள் தேங்கி வருகிறது.
- பூ மார்க்கெட்டில் தேங்கும் கழிவுகளை மறுமணம் வீசும் அகர்பத்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கிடவும் பரிசீலனை நடந்து வருகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழம் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை கடைகள் இயங்கி வருகிறது.
கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் ஏறத்தாழ 4 ஆயிரம் கடைகளில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது.
கோயம்பேடு சந்தைக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள், பூ வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள், பொதுமக்கள் என சாதாரண நாட்களில் நாள்தோறும் 60ஆயிரம் பேர் வரையிலும் பண்டிகை, முகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் ஒரு லட்சம் பேர் வரையிலும் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
அதேபோல ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறி, பழங்கள், மளிகை உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் இங்கிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய வரும் சில்லரை வியாபாரிகளின் வாகனங்கள் என 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களும் நாள்தோறும் இந்த சந்தை வளாகத்திற்கு வந்து செல்கிறது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் அங்காடி நிர்வாக குழு மூலம் அதிகாரி நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்த சந்தை வளாகத்தில் மழைநீர் வடிகால், சாலைகள் மற்றும் கழிவறைகளை சீரமைப்பது, மின் விளக்கு, போக்குவரத்து நெரிசல், உள்ளிட்ட முக்கிய அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து மார்க்கெட் வளாகத்தை நவீனப்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்திய சி.எம்.டி.ஏ மற்றும் அங்காடி நிர்வாக குழு நிர்வாகம் சீரமைப்பு பணிகளை தொடங்கி துரிதப்படுத்தியுள்ளது.
அதன்படி அங்காடி நிர்வாக குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிமம் பெற்ற கடை வியாபாரிகள் அனைவருக்கும் கடை எண் பொறிக்கப்பட்ட "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்பட உள்ளது.
காய்கறி, பழம், மளிகை உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் அந்தந்த கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள "ஸ்மார்ட் கார்டு" மூலம் மட்டுமே இனி மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைய முடியும். இதற்காக மார்க்கெட் வளாகத்தில் உள்ள நுழைவு வாயில்கள் அனைத்தும் கணினி முறையில் நவீனமயமாக்கப்பட உள்ளது.
அவ்வாறு வரும் வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்கி செல்வதற்கு தனியாக இடமும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனால் இனி மார்க்கெட் வளாகத்திற்குள் தேவையற்ற வாகனங்கள் நுழைவது முற்றிலுமாக தடுக்கப்படும்.
அதேபோல் கடை இல்லாத வெளிநபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இனி மார்க்கெட் வளாகத்தில் எந்தவொரு பொருட்களையும் விற்பனை செய்ய முடியாது. இதனால் போக்குவரத்து நெரிசல் இனி ஏற்படாது.
முதல் கட்டமாக பழ மார்க்கெட் வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் எண் 18ல் கணினி முறையிலான நுழைவு வசதி சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து நுழைவு வாயில்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது.
மார்க்கெட் வளாகத்தில் நீண்ட காலமாக மிக பெரிய சவாலாக உள்ள போக்குவரத்து நெரிசலை சீரமைக்க ஏற்கனவே ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து அதிகாரி, போக்குவரத்து உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் என 3 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த குழுவின் மேற்பார்வையில் மார்க்கெட் வளாகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சரி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் உள்ள எல் மற்றும் எம் பிளாக்கில் ஏறத்தாழ 50ஆயிரம் சதுர அடியில் "ஆர்கானிக் ஸ்டோர்" எனப்படும் இயற்கை உணவு பொருட்கள் விற்பனைக்கு என தனியாக கடைகள் அமைய உள்ளது.
மார்க்கெட் வளாகத்தில் தினசரி 200 டன் அளவுக்கு கழிவுகள் தேங்கி வருகிறது. இதில் தற்போது தினசரி 25டன் காய்கறி கழிவுகளை சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று பயோ கியாஸ் எனப்படும் "உயிரி எரிவாயு" உற்பத்தி செய்வதற்கு காய்கறி மொத்த வியாபாரிகளிடம் இருந்து நேரடியாக எடுத்து சென்று பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேக்கமடைந்து வீணாகும் காய்கறி கழிவுகளை உரமாக மாற்றுவது, மின்சாரம் தயாரிப்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்திடவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும் பழ மார்க்கெட்டில் தினசரி தேங்கும் 70 டன் வாழைத்தார் போன்ற கழிவுகளை வீணாக்காமல் மறு சுழற்சி முறையில் அவற்றை எவ்வாறு எல்லாம் பயன்படுத்த முடியும் என்பது குறித்து ஐ.ஐ.டி உள்ளிட்ட பல்வேறு வல்லுனர் குழுக்களின் கருத்துக்களை கேட்டு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் பூ மார்க்கெட்டில் தேங்கும் கழிவுகளை மறுமணம் வீசும் அகர்பத்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கிடவும் பரிசீலனை நடந்து வருகிறது.
இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை நவீன முறையில் சீரமைக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டு அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
ஒரு சில பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியே மார்க்கெட் வளாகம் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.
இதற்கு கடை நடத்தும் வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மார்க்கெட் வளாகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தினசரி விற்பனை ஆகாமல் தேக்கமடையும் சுமார் 600 கிலோ காய்கறிகளை மொத்த வியாபாரிகளிடம் இருந்து பெற்று அங்காடி நிர்வாக குழு மூலம் 40-க்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்திற்கு சுழற்சி முறையில் வழங்கி உதவி செய்து வருகிறோம்.
ஆர்.ஓ இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படும் தண்ணீரில் இருந்து தேக்கமடையும் நீரை வீணாக்காமல் அவற்றை கழிவறைக்கு எடுத்து சென்று பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மார்க்கெட் வளாகத்தில் உள்ள ஒ.எஸ்.ஆர் எனப்படும் "திறந்தவெளிக்கான ஒதுக்கீட்டு நிலங்களில்" 2ம் கட்டமாக மரக்கன்றுகள் நடுவது மற்றும் தோட்டங்கள் அமைக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் தூய்மையான சந்தையாக கோயம்பேடு சந்தை மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று 40 லாரிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மினி வேன்களில் சாமந்தி பூக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு குவிந்துள்ளது.
- இன்று அதிகாலை முதல் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வரத்து குறைந்துள்ளதால் எதிர்பார்த்த அளவுக்கு பூ விற்பனை நடக்கவில்லை.
போரூர்:
கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து பூ தினசரி விற்பனைக்கு வருகிறது.
நேற்று முன்தினம் முகூர்த்த நாளை முன்னிட்டு மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை திடீரென அதிகரித்தது. ஒரு கிலோ மல்லி ரூ.2 ஆயிரத்திற்கும், ஐஸ் மல்லி ரூ.1,500 வரையிலும் விற்கப்பட்டது.
இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அலங்காரத்திற்காக அதிக அளவில் பூக்கள் தேவைப்படும் என்பதால் கடந்த 2 நாட்களாகவே சாமந்தி மற்றும் ரோஸ் ஆகிய பூக்கள் வழக்கத்தை விட அதிகளவில் விற்பனைக்கு குவிந்து வருகிறது.
இன்று 40 லாரிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மினி வேன்களில் சாமந்தி பூக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு குவிந்துள்ளது. மேலும் முகூர்த்த நாளையொட்டி அதிகரித்த பூக்களின் விலையும் நேற்று முதல் மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.
வியாபாரிகள் வரத்து அதிகரித்து நேற்று மாலை வரை பூ விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன் காரணமாக அனைத்து பூக்களும் விற்று தீர்ந்து விட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வரத்து குறைந்துள்ளதால் எதிர்பார்த்த அளவுக்கு பூ விற்பனை நடக்கவில்லை. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-
மல்லி-ரூ.1500, முல்லை-ரூ.900, கனகாம்பரம்-ரூ.700, ஜாதி-ரூ.600, சாமந்தி-ரூ.50 முதல் ரூ.80 வரை, ரோஸ்- ரூ.100, சாக்லேட் ரோஸ்-ரூ.120, அரளி-ரூ.200.
- காய்கறிகள் தேக்கமடைந்து வீணாவதை தடுத்திடும் வகையில் அதிகாலையில் மொத்த வியாபாரிகள் அதிரடியாக விலையை குறைத்து விற்பனை செய்தனர்.
- விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் இன்று 500 டன் அளவிலான பச்சை காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று 480 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து பாதியாக குறைந்து விட்டது.
இதனால் காய்கறிகள் தேக்கமடைந்து வீணாவதை தடுத்திடும் வகையில் அதிகாலையில் மொத்த வியாபாரிகள் அதிரடியாக விலையை குறைத்து விற்பனை செய்தனர்.
உஜாலா கத்தரிக்காய் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.500-க்கும், வரி கத்தரிக்காய் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.300-க்கும், பீன்ஸ் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.500-க்கும் சவ்சவ் ஒரு மூட்டை (50கிலோ) ரூ.300-க்கும் விற்கப்பட்டது.
எனினும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் இன்று 500 டன் அளவிலான பச்சை காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளது. இதனால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதேபோல் புயல் அச்சம் காரணமாக பொதுமக்கள் வரத்து அதிகளவில் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
- முருங்கைக்காய் விலை ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது.
- தக்காளி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
சென்னை
'மாண்டஸ்' புயல் கரையை கடந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்தும் வருகிறது.
தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் தாக்கம் காய்கறி விலையில் எதிரொலித்துள்ளது. இதனால் காய்கறி விலை ஓரிரு நாளிலேயே 'கிடுகிடு'வென உயர்ந்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமான காய்கறி வரத்து மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு ரூ.20 வரை விற்பனையான ஒரு கிலோ பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறி தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை ஆகிறது. பாகற்காய், கத்தரி, பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றின் விலை ரூ.10 அதிகரித்துள்ளது. தக்காளி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ரூ.12 முதல் ரூ.17 வரை விற்பனையான தக்காளி, தற்போது ரூ.30 வரை விற்பனை ஆகிறது. முருங்கைக்காய் விலையும் ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது.
தற்போது மழை குறைந்திருப்பதால் விலை சற்று மீண்டு வருகிறது. நிலைமை சீரடையும் பட்சத்தில் காய்கறி விலை ஓரிரு நாளில் குறைந்து முன்புபோலவே விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை மழை காரணமாக மார்க்கெட்டுக்கு மக்கள் வருகை கணிசமாக குறைந்திருப்பதால், வாங்க ஆளில்லாமல் காய்கறி வீணாகி அழுகி போய் குப்பையில் கொட்டும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இது அனைவருக்குமே கவலையை தந்துள்ளது. வரும் நாட்களில் இந்த நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு:- (மொத்தவிலையில்/கிலோவில்)
பீன்ஸ்- ரூ.30, அவரை- ரூ.30 முதல் ரூ.35 வரை, பாகற்காய் (பன்னீர்) - ரூ.50, பாகற்காய் (பெரியது) - ரூ.50, கத்தரி-ரூ.30 முதல் ரூ.40 வரை, வெண்டை-ரூ.40, புடலங்காய்-ரூ.30 முதல் ரூ.40 வரை, சுரைக்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.40, பச்சை மிளகாய்-ரூ.40, பீட்ரூட்-ரூ.40 முதல் ரூ.50 வரை, கேரட் (ஊட்டி) - ரூ.50, கேரட் (மாலூர்) -ரூ.35, முள்ளங்கி- ரூ.20 முதல் ரூ.25 வரை, முட்டைக்கோஸ்- ரூ.15 முதல் ரூ.20 வரை, இஞ்சி- ரூ.65, சாம்பார் வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.100 வரை, பல்லாரி வெங்காயம் (நாசிக்) - ரூ.20 முதல் ரூ.25 வரை, பல்லாரி வெங்காயம் (ஆந்திரா) - ரூ.15 முதல் ரூ.20 வரை, தக்காளி- ரூ.30, சேனைக்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.50 வரை, சேப்பங்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.50 வரை, காலிபிளவர் (ஒன்று) - ரூ.20, முருங்கைக்காய்- ரூ.120 முதல் ரூ.130 வரை, உருளைக்கிழங்கு- ரூ.30 முதல் ரூ.35 வரை, எலுமிச்சை- ரூ.40 முதல் ரூ.50.
வெளிச்சந்தையில்...
கோயம்பேடு மார்க்கெட் விலையை காட்டிலும் ஆள் கூலி, வாகன வாடகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிச்சந்தையில் ரூ.10 முதல் ரூ.25 வரை கூடுதலாக காய்கறி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை பரவலாக நீடித்தது.
- காய்கறி விற்பனை மந்தம் காரணமாக அதிக அளவில் காய்கறிகள் தேக்கமடைந்தன.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று தக்காளி 60 லாரிகள் உட்பட 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து இருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை பரவலாக நீடித்தது.
இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
காய்கறி விற்பனை மந்தம் காரணமாக அதிக அளவில் காய்கறிகள் தேக்கமடைந்தன. சுமார் 500 டன் காய்கறிகள் மூட்டை மூட்டையாக விற்பனை ஆகாமல் குவிந்து கிடந்தது. குறிப்பாக தக்காளி, முட்டைகோஸ், முள்ளங்கி, சவ்சவ் உள்ளிட்டவை அதிகம் தேங்கியது. இது மொத்த வியாபாரிகளை பெரிதும் கவலை அடைய செய்து உள்ளது.
இதுகுறித்து மொத்த வியாபாரி சுகுமார் கூறும்போது, நள்ளிரவில் பெய்த மழை மற்றும் பண்டிகை விடுமுறை காரணமாக சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து பாதியாக குறைந்து விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 500 டன் காய்கறிகள் தேங்கி கிடக்கின்றன என்றார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை (கிலோவில்) வருமாறு :-
தக்காளி-ரூ.13, நாசிக் வெங்காயம்-ரூ.30, ஆந்திரா வெங்காயம்-ரூ.20, சின்ன வெங்காயம்-ரூ.90, உருளைக்கிழங்கு-ரூ.20, உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, வரி கத்தரிக்காய்-ரூ.20, அவரைக்காய்-ரூ.50, வெண்டைக்காய்-ரூ.40, கோவக்காய்-ரூ.35, பீன்ஸ்-ரூ.40, ஊட்டி கேரட்-ரூ.25, பீட்ரூட்-ரூ.16, முருங்கைக்காய்-ரூ.120, முட்டைகோஸ்-ரூ.6, சவ்சவ்-ரூ.6, முள்ளங்கி-ரூ.12, நூக்கல்-ரூ.25, காலி பிளவர் ஒன்று-ரூ.15, பீர்க்கங்காய்-ரூ.50, பன்னீர் பாகற்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.20.
- விற்பனை மந்தம் காரணமாக காய்கறிகள் மூட்டை மூட்டையாக தேங்கி உள்ளன.
- சில நாட்களாகவே கோயம்பேடு மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து குறைந்து உள்ளது.
போரூர்:
கோயம்பேடு மார்ககெட்டுக்கு இன்று 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது. தக்காளி 52 லாரிகளிலும், வெங்காயம் 40 லாரிகளிலும் வந்திருந்தன.
கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து குறைந்து விற்பனை மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே வரத்து அதிகம் காரணமாக தக்காளி, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, சவ்சவ், காலி பிளவர் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கேரட் ஒரு கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ100-க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ100-க்கும் விற்பனை ஆனது.
விற்பனை மந்தம் காரணமாக காய்கறிகள் மூட்டை மூட்டையாக தேங்கி உள்ளன. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, பண்டிகை மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து குறைந்து உள்ளது.
தினமும் 7 லாரிகளில் தக்காளி, 5 லாரிகளில் முட்டைகோஸ், காலிபிளவர் விற்பனை ஆகாமல் தேங்குகிறது. வரத்து அதிகம் காரணமாக காய்கறிகள் விலை குறைந்து உள்ளன என்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் வருமாறு:-
அவரைக்காய்-ரூ.50,
பீன்ஸ்-ரூ.35,
கத்தரிக்காய்-ரூ.35,
வெண்டைக்காய்-ரூ.35, கோவக்காய், பாகற்காய், பீர்க்கங்காய்-ரூ.40,
உஜாலா கத்தரிக்காய்-ரூ.35,
வரி கத்தரிக்காய்-ரூ.20,
பீட்ரூட்-ரூ.15,
முட்டை கோஸ்-ரூ.5,
முள்ளங்கி-ரூ.8,
சவ்சவ்-ரூ.7,
காலி பிளவர் ஒன்று-ரூ.15,
நூக்கல்-ரூ.20,
கோவக்காய்-ரூ.40,
பன்னீர் பாகற்காய்-ரூ.40,
சுரக்காய்-ரூ.15,
புடலங்காய்-ரூ.20.