என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Labourer"

    • கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
    • தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலை யார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அவருக்கும், அதே மில்லில் வேைல பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டி னுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்ைத அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.

    அவர் தான் பாண்டி யம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்ற தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தபபட்டது.

    பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று அய்யப்பன் தனியார் பஸ்சில் மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார்.
    • இது குறித்து நெல்லிக்குப்பம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி சொர்ணாவூர் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு காமாட்சி என்கிற மனைவி, ஒரு மகன் உள்ளனர் சம்பவத்தன்று அய்யப்பன் தனியார் பஸ்சில் மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார். அப்போது சந்தத்தோப்பு திடலில் குடிபோதையில் மயங்கி கிடந்தார். இதனை தொடர்ந்து அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அய்யப்பன் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சிரங்காட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி செல்லும் 4 வழிச்சாலை உள்ளது. இதில் கோசு குறிச்சி, ஒத்தக்கடை பாலப் பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் அறிவிப்பு பலகை உள்ளது.

    இதில் இன்று காலை வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அறிவிப்புப் பலகை போர்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தரையில் கால் தொட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டு கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சிரங்காட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவரது புகாரின் பேரில் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தூக்கில் தொங்கிய நபர் வைத்திருந்த ஆதார் அட்டையை எடுத்து பார்த்தனர். அதில் இறந்தவர் ராகேஷ் (வயது 31) என்பதும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்ற விபரம் தெரிய வந்தது.

    இதனையடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்குப் பதிவு செய்து இறந்தவர் எங்கு வேலை செய்தார். எதற்காக இங்கு வந்தார். தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து இங்கு வந்து அவரது உடலை தொங்க விட்டுச் சென்றுள்ளனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜமீன்இளம் பள்ளி, அத்திக் காடு பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதி தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
    • அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45) கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம், பாசூருக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜமீன்இளம் பள்ளி, அத்திக் காடு பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதி தலை யில் அடிபட்டு படு காயம் அடைந்தார். இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை கூலி தொழிலாளி உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது செய்தனர்.
    • சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பாலரெங்கா புரத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிவகார்த்திகேயன் (வயது 19). இவர் முத்துப்பட்டி, பெருமாள் நகரில் உள்ள தோட்டத்திற்கு சென்றார்.

    அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியது. இதற்கு சிவகார்த்திகேயன் மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை, பீர்பாட்டிலால் தாக்கியது. இது குறித்து சிவகார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தர விட்டார். இதன்படி தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த கும்பல் மேலும் ஒரு வாலிபரை கத்தியால் குத்தி விட்டு தப்பியது தெரிய வந்தது.

    முத்துப்பட்டி, விருமாண்டி தெருவை சேர்ந்தவர் செல்வம் (40). கூலித் தொழிலாளி. நேற்று இரவு இவர் வீட்டில் இருந்தார். அங்கு 5 பேர் கும்பல் வந்தது. அவர்கள், 'காசி எங்கே?' என்று கேட்டனர். இதற்கு செல்வம், எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

    ஆத்திரம் அடைந்த கும்பல், செல்வத்தை கத்தி யால் குத்தியது. மேலும் அந்த கும்பல் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பி யது.

    தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முத்துப்பட்டி, வீரமுடையான் தெரு சடேஸ்வரன் மகன் நிதிஷ் (20), பார்த்தசாரதி மகன் மணிகண்டன் (23), பசுமலை, அம்பேத்கர் நகர் குமரேசன் மகன் சரத்குமார் (22), அந்தோணி மகன் சக்திவேல் (22), முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெரு ரஞ்சித்குமார் (25) ஆகியோர் கத்திக்குத்து சம்பவத்தில் தெரிய வந்தது. அவர்களை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம் கரட்டூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகில் ஓடும் சரப்பங்கா நதியில் இன்று காலை 6 மணியளவில் ஆண் உடல் ஒன்று மிதந்தது.
    • இவர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து தனியாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார் என்பதும், இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளதும் தெரியவந்தது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம் கரட்டூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகில் ஓடும் சரப்பங்கா நதியில் இன்று காலை 6 மணியளவில் ஆண் உடல் ஒன்று மிதந்தது.

    இதை கண்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி கயிறு கட்டி உடலை மீட்டனர். தொடர்ந்து அவரது பேண்ட், சட்டையை சோதனை செய்ததில் அவரது பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை கைப்பற்றினர்.

    சேலத்தை சேர்ந்தவர்

    விசாரணையில் அவர், சேலம் எருமாபாளையம், களரம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்ரமணி- வசந்தி தம்பதியரின் மகன் சங்கர் (வயது 38) என்பதும், திருமணம் ஆகாதவர் என்பதும் தெரியவந்தது. இவர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து தனியாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார் என்பதும், இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளதும் தெரியவந்தது.

    சங்கர் பிணமாக மிதந்த இடத்தின் அருகில் அரசு மதுபான கடை உள்ளது. இதனால் சங்கர் மதுகுடிக்க வந்த இடத்தில் போதையில் தவறி ஆற்றில் விழுந்து விட்டாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து ஆற்றில் வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சங்கர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    • தொழிலாளி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது
    • மதிவாணன் வேலைக்காக வெளியில் சென்று விட்டார்

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பார்வதிநகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல்.

    இவருடைய மகன் மதிவாணன்.

    கூலி தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் வீட்டின் உள்ளே சென்ற பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தது.

    பீரோவில் இருந்த 7½ பவுன் நகைகளையும் காணவில்லை.

    வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.

    திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து மதிவாணன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • நேற்று முன்தினம், வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச சென்றவர் ‌இரவு வரை‌ வீடு திரும்பாததால்,
    • சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு, செல்லமுத்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 65). இவர் குப்புச்சிபாளையம் அருகே உள்ள கோவில்காடு ராஜா நகர் பகுதியில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம், வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செல்லமுத்துவை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, அங்குள்ள கிணற்றுக்கு அருகே செல்லமுத்துவின் துண்டு கிடந்துள்ளது.

    இதை பார்த்து செல்லமுத்து கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கிணற்றில் தேடினர்.

    சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு, செல்லமுத்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உரம்பூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.
    • அப்போது நிலை தடுமாறி பாலத்திற்கு கீழ் இருந்த தண்ணீரில் விழுந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 43), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவர் கபிலர்மலையில் இருந்து உரம்பூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி பாலத்திற்கு கீழ் இருந்த தண்ணீரில் விழுந்தார்.

    இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கூலி தொழிலாளி-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் தனபாலகிருஷ்ணன் (45). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் எந்நேரமும் குடித்து விட்டு ஊர் சுற்றினார். இதை மனைவி தட்டி கேட்டார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனபால கிருஷ்ணன், சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை புலிப்பட்டியை சேர்ந்தவர் பூசாரி (வயது 70). இவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்தது. இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நோயின் பாதிப்பு அதிகரித்து வந்ததால் அவர் மனமுடைந்தார். இதைத்தொடர்ந்து பூசாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய புகாரின் பேரில் மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்-கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பூப்பாண்டி அம்மாள் (27). இவர் மதுரை ஐராவதநல்லூர், அந்தோணியார் தெருவை சேர்ந்த வாலிபருடன், திருமணம் செய்யாமல் வாழ்க்கை நடத்தினார். நேற்று அவர் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அங்கு பூப்பாண்டி அம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைக்காரா, வயக்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (41). இவர் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார். அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. சம்பவத்தன்று நள்ளிரவு ஆனந்த் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
    • கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்வர்தீன்(வயது52). திருமணமான இவரது மகள் சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் வேதனையடைந்த அன்வர்தீன் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×