என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lic"

    • எல்.ஐ.சி. 1956-ம் ஆண்டு ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது.
    • தற்போது ரூ.42 லட்சத்து 30 ஆயிரத்து 616 கோடி சொத்துமதிப்பை கொண்டுள்ளது.

    சென்னை :

    எல்.ஐ.சி. நிறுவனம் 67-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எல்.ஐ.சி. 1956-ம் ஆண்டு ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. தற்போது ரூ.42 லட்சத்து 30 ஆயிரத்து 616 கோடி சொத்துமதிப்பை கொண்டுள்ளது. 2021-2022-ம் ஆண்டில் (மார்ச் 31-ந்தேதி வரை) 2.17 கோடி புதிய பாலிசிகளை பெற்று முதல் பிரீமிய வருவாயாக ரூ.1.98 லட்சம் கோடிகளை ஈட்டி உள்ளது. இதன்மூலம் 7.92 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    நடப்பு ஆண்டிலும் எல்.ஐ.சி. முதல் பிரீமிய வருவாய் அடிப்படையில் 64.96 சதவீதம் சந்தை பங்களிப்பை பெற்றுள்ளது. 2021-2022-ம் ஆண்டில் எல்.ஐ.சி. 267.23 லட்சம் உரிமங்களுக்காக ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 568 கோடிகளை அளித்துள்ளது.

    31.3.2022 அன்றைய நிலவரப்படி எல்.ஐ.சி.யில் தனி நபர் வணிகத்தின் கீழ் பல்வேறு விதமான மக்களின் தேவைகளுக்காக 33 விதமான திட்டங்கள் விற்பனைக்கு உள்ளன. பீமா ரத்னா, தன் சன்சய் என 2 புதிய திட்டங்களை எல்.ஐ.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.

    மாறிவரும் காலத்துக்கு ஏற்ப பாலிசிகளை திறம்பட சேவை செய்வதற்காக நவீன தொழில்நுட்பங்களை எல்.ஐ.சி. அறிமுகம் செய்து வருகிறது. பாலிசிதாரர்கள் தங்களது பிரீமியத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம். பென்ஷன் பாலிசிதாரர்களுக்கான டிஜிட்டல் இருப்பு சான்றிதழை சமர்ப்பிக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் 'ஜீவன் சாக்‌ஷயா' என்ற செல்போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    எல்.ஐ.சி.யின் பொன்விழா பவுண்டேஷன் என்.ஜி.ஓ.க்கள் மூலமாக 646 திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது. வாடிக்கையாளர் சேவை, உரிமத்தீர்வு, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வணிகம் போன்றவற்றின் அடிப்படையில் பல விருதுகளை எல்.ஐ.சி. பெற்றுள்ளது.

    இந்த 66-வது ஆண்டு நிறைவு விழாவில், எங்கள் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கைக்காக பாலிசிதாரர்கள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உங்களது நலனே எங்களது பொறுப்பு என்பதற்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
    • அமேசான் 2-வது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி :

    பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை அவற்றின் மொத்த வருவாய் அடிப்படையில் 'பார்ச்சுன்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தி வருகிறது. அதுபோல், கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்த நிதிஆண்டில், உலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 500 நிறுவனங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.

    அதில், கடந்த நிதிஆண்டில் முதல்முறையாக பங்குச்சந்தையில் நுழைந்த எல்.ஐ.சி. நிறுவனம், 98-வது இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 19 ஆண்டுகளாக இப்பட்டியலில் இருக்கிறது. இந்த ஆண்டு 51 இடங்கள் முன்னேறி, 104-வது இடத்தை பிடித்துள்ளது.

    பட்டியலில் 9 இந்திய நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 5 பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும். இந்திய எண்ணெய் கழகம் (142-வது இடம்), ஓ.என்.ஜி.சி. (190-வது இடம்), பாரத ஸ்டேட் வங்கி (236-வது இடம்), பாரத் பெட்ரோலியம் (295-வது இடம்) ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

    தனியார் துறையில் டாடா குழுமத்தின் 2 நிறுவனங்களும், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனமும் இடம்பெற்றுள்ளன.

    இந்த பட்டியலில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அமேசான் 2-வது இடத்திலும், அடுத்த 3 இடங்களை சீன நிறுவனங்களும் பிடித்துள்ளன.

    • மதுரையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாடு நடந்தது.
    • எல்.ஐ.சி. பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் 66வது ஆண்டு பொது மாநாடு மற்றும் பேரணி திருநகரில் நடந்தது. கோட்டத்தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். துணை மேயர் நாகராஜன் வரவேற்றார்.

    கவுன்சிலர் விஜயா பேரணியை தொடங்கி வைத்தார். மதுரை கோட்டத்தின் 6 மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் இருந்து எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தலைவர் வேணுகோபால், தென்மண்டல கூட்டமைப்பின் துணைத்தலைவர் சுவாமிநாதன், சங்கத்தலைவர்கள் முத்துக்குமாரசாமி, சந்திரசேகரன், நிர்மலா, ஜோசப் சுரேஷ்ராஜ்குமார், பாண்டியராஜன் ஆகியோர் பேசினர். எல்.ஐ.சி. பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுச் செயலாளர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

    ×