search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lowers"

    • புதுவை காவல்துறையில் தலைமை அலுவலக சூப்பிரண்டு பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஐ.ஆர்.சி.மோகன். கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வுபெற்ற மோகன்.
    • தனது ஓய்வுக்கு பிறகு அண்ணாநகரில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை காவல்துறையில் தலைமை அலுவலக சூப்பிரண்டு பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஐ.ஆர்.சி.மோகன். கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வுபெற்ற மோகன்.

    தனது ஓய்வுக்கு பிறகு அண்ணாநகரில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தார். இதில் கீரை, தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், பச்சை பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளையும், திராட்சை, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளையும், மலர் செடிகளையும் அமைத்துள்ளார்.

    சொட்டு நீர் பாசனம் மூலம் இதை பயிரிட்டார். இந்த தோட்டம் அவர் வீட்டுக்கு மட்டுமின்றி, உறவினர்கள், சுற்றுப்புறத்தை சேர்ந்த வர்களுக்கும் உதவிகரமாக உள்ளது. ஓய்வுகாலத்தில் நேரத்தை செடி, கொடிகளில் செலவிடுவது மன நிம்மதியையும், நிறைவையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆர்வம் காட்டுவதால் அரசின் விவசாய துறையும் மாடி தோட்டம் அமைக்க உறுதுணையாக இருப்பதாக ஐ.ஆர்.சி. மோகன் தெரிவித்தார்.

    ×