என் மலர்
நீங்கள் தேடியது "LS poll"
- கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களை தாண்டும் என கணிப்பு.
- கருத்து கணிப்பிற்கு நேர் எதிராக முடிவுகள் இருக்கும் என காங்கிரஸ் நம்பிக்கை.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு நடத்திய அனைத்து நிறுவனங்களும் கணித்துள்ளன. இதனால் பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
அதேவேளையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் கருத்துக் கணிப்பு முற்றிலும் நேர் எதிராக தேர்தல் முடிவுகள் இருக்கும். நாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இதனால் காங்கிரஸ் கட்சி தலைவரும், தொண்டர்களும் வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
#WATCH | Preparations are underway at the AICC headquarters in Delhi ahead of the counting of votes for #LokSabhaElections2024 tomorrow, 4th June pic.twitter.com/LIL3uxhWH7
— ANI (@ANI) June 3, 2024
வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் கூடுவார்கள். மேலும், தலைவர்கள் தலைமை அலுவலகத்தில் பேட்டியளிப்பார்கள்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
- பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை இழக்கும் நிலையில் உள்ளது.
- பா.ஜனாதா கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரை இழுக்க இந்தியா கூட்டணி முடிவு.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கூறிய நிலையில், கருத்துக் கணிப்பை மீறி இந்தியா கூட்டணி 230 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
பாஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடையும்போது சுமார் 240 இடங்களை தாண்டினால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படும். இதற்கு முக்கிய காரணம் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி (272) கிடைக்கவில்லை.
பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ் குமார் (14) ஆகியோரிடம் 30 இடங்கள் உள்ளது. இந்த 30 இடங்களை பாஜகவிடம் இருந்து இழுத்துவிட்டால் பாஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த கணக்கை மனதில் வைத்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை பிடித்துள்ளது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள சரத் பவார் டெலிபோன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நிதிஷ் குமாரிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது துணை பிரதமர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை இழுக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.
- கருத்துக் கணிப்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
- ஆனால், மம்தா பானர்ஜியின் கட்சி 29 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு பா.ஜனதாவை தனியாக எதிர்த்து நின்றார் மம்தா பானர்ஜி. சந்தேஷ்காளி உள்ளிட்ட பல்வேறு விசயங்களை கையில் எடுத்து பா.ஜனதா மம்தா பானர்ஜி கட்சியை ஓரம் கட்ட பார்த்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 22 இடங்களை பிடிக்கும் என தகவல் வெளியானது. அப்போது மம்தா பானர்ஜி கருத்து கணிப்பு பொய்யாகும் என உறுதியாக கூறினார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் முன்னணி வகித்தது. நேரம் செல்ல செல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.
தற்போது 29 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 12 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த முறை 18 இடங்களை பிடித்த பாஜக, தற்போது 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மம்தாவின் 29 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
- பா.ஜனதா தனியாக 240 இடங்கள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் ஜே.பி. நட்டா அமித் ஷாவுடன் ஆலோசனை.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பா.ஜனதா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான 272 என தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான் கட்சி ஆகியவற்றின் ஆதரவு ஆட்சி அமைக்க தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டா வீட்டிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah arrives at the residence of BJP chief JP Nadda. pic.twitter.com/GK7get69uR
— ANI (@ANI) June 4, 2024
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து விரிவான ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பு ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
#WATCH | Delhi: Defence Minister and BJP leader Rajnath Singh arrives at the residence of party chief JP Nadda. pic.twitter.com/3uL2cUkzUs
— ANI (@ANI) June 4, 2024
இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 தேர்தலில் பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 240 இடங்களில்தான் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சந்திர சேகர் பெம்மசானி 5,705 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
- 2-வதாக பாஜக எம்.பி. விஷ்வேஷ்வர் ரெட்டி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 4568 கோடி ரூபாய் ஆகும்.
பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
பாஜக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 542 பேர் தேர்தல் களத்தில் வெற்றி பெற்றுள்ளனர். சூரத்தில பாஜக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
543 பேர் விரைவில் எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளனர். இந்த 543 எம்.பி.க்களில் 92 சதவீதம் பேர் அதாவது 504 எம்.பி.க்கள் கோடீஸ்வரர்கள் என தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
5,705 கோடி ரூபாய்
இதில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சந்திர சேகர் பெம்மசானி 5,705 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இவர் ஆந்திர பிரதேச மாநலிம் குண்டூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2-வதாக பாஜக எம்.பி. விஷ்வேஷ்வர் ரெட்டி உள்ளார். இவர் தெலுங்கானா மாநிலம் செவல்லா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 4568 கோடி ரூபாய் ஆகும்.
3-வதாக பாஜக எம்.பி. நவீன் ஜிண்டால் உள்ளார். இவர் அரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1241 கோடி ரூபாய் ஆகும்.
2019-ம் ஆண்டு 475 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கும்போது கோடீஸ்வரர்களாக இருந்தனர். 2014-ல் 443 பேர் தேர்ந்தெடுக்குமபோது கோடீஸ்வரர்களாக இருந்தனர். 2009-ல் தேர்ந்தெடுக்கப்படும்போது 315 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். இதன் மூலம் தேர்தலுக்கு தேர்தல் தேர்ந்தெடுக்கப்படும் கோடீஸ்வர எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
திமுக எம்.பி.க்கள் 21 பேர்
பாஜக கட்சியை சேர்ந்த 240 எம்.பி.க்களில் 227 பேர் கோடீஸ்வர எம்.பி.க்கள். காங்கிரஸ் கட்சியின் 99 எம்.பி.க்களில் 92 பேர் கோடீஸ்வரர்கள். திமுக-வின் 22 எம்.பி.க்களில் 21 பேர் கோடீஸ்வரர்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 29 எம்.பி.க்களில் 27 பேர் கோடீஸ்வரர்கள்.
சமாஜ்வாதி கட்சியின் 37 எம்.பி.க்களில் 34 பேர் கோடீஸ்வரர்கள். வெற்றி பெற்ற ஆம் ஆத்மி (3), ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் (16) எம்.பி.க்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள்.
- ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள்,
- தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சி தலைவர் பூபேஷ் பாகல், இந்தியாவில் இன்னும் 6 மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் நடைபெறும் என தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பூபேஷ் பாகல் கூறியதாவது:-
கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் வரப்போகிறது. யோகி ஆதித்யநாத்தின் நாற்காலி (உ.பி. முதல்வர் பதவி) ஆடிக்கொண்டிருக்கிறது. பாஜன் லால் சர்மா (ராஜஸ்தான் முதல்வர்) தள்ளாடுகிறார். பட்நாவிஸ் ராஜினாமா கூட செய்ய தயாராகிவிட்டார்.
ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள் (பிரதமர் மோடியை கிண்டல் செய்து) தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது அல்லது என்ன அணிவது என்பது குறித்து அவர்கள் கவலைப்படப்போவதில்லை.
கட்சிகளை உடைத்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சிறைக்கு தள்ளியவர்கள், மிரட்டியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பித்துள்ளனர்.
இவ்வாறு பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பூபேஷ் பாகல் மேற்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் வாக்குப்பதிவு வெகுவாகக் குறையும் என்று கூறி, தேர்தலை ஒத்திவைக்கும்படி அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் சித்திரை திருவிழா அன்று வாக்குப்பதிவு நடப்பதால், மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். எனவே மதுரை தொகுதியில் காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மதுரை தவிர மற்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குப் பதில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #MaduraiConstituency #LSPoll #CEO
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி செய்து வருகிறது. குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
இதற்காக மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
குறிப்பாக, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கடந்த 14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும்,தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடக்கும் ஓட்டலை வந்தடைந்தனர்.
இன்று நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அளிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது 7 மக்களவைத் எம்.பி. தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்தையும் அதிமுக ஒதுக்கி கொடுத்துள்ளது.
முன்னதாக பா.ம.க. கேட்ட சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் தயக்கம் காட்டப்பட்டது. இதையடுத்து பா.ம.க. தலைவர்களில் சிலர் தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். ஆனால், தொகுதிகள் விஷயத்திலும், திமுக விதித்த நிபந்தனைகளாலும் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் பாமக தயக்கம் காட்டிவந்தது.
இதை அறிந்த அ.தி.மு.க-பா.ஜனதா தலைவர்கள் உடனே பா.ம.க.வை கூட்டணிக்குள் இழுக்கும் பணிகளை தொடங்கினர்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை எம்.பி. இடம் மற்றும் 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் பட்டியலையும் அ.தி.மு.க.விடம் பா.ம.க. தலைவர்கள் கொடுத்தனர். அதில் பா.ம.க. மொத்தம் 8 தொகுதிகளை குறிப்பிட்டுள்ளது. அந்த 8 தொகுதிகள் விவரம் வருமாறு:-
1. ஸ்ரீபெரும்புதூர்
2. மத்திய சென்னை
3. கடலூர்
4. அரக்கோணம்
5. கள்ளக்குறிச்சி
6. விழுப்புரம்
7. திருவள்ளூர்
8. காஞ்சீபுரம்
இந்த 8 தொகுதிகளில் இருந்து 7 தொகுதிகளை ஒதுக்கி தர பா.ம.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ள அ.தி.மு.க. அந்த 7 தொகுதிகளில் ஒரு தனி தொகுதியையும் ஒதுக்க முடிவு செய்துள்ளது. அதை பா.ம.க. ஏற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இன்னும் ஓரிரு தினங்களில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது தெரிந்து விடும். #LSPolls #ADMK #PMKConstituencies