என் மலர்
நீங்கள் தேடியது "madurai"
- மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார்.
- பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். இதுவரை எனக்கு பள்ளி சீருடை அளவெடுக்க யாரும் வந்ததில்லை.
சம்பவத்தன்று பள்ளியில் சீருடை அளவெடுக்க ஒரு ஆண் உள்பட 2 பேர் வந்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இது தொடர்பாக எனது வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஆண் டெய்லர் உள்பட 2 பேர் என்னிடம் அத்துமீறி அளவெடுத்தனர். அப்போது உடல் பாகங்களை தொட்டனர். எனவே அவர்கள் மீதும், உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தி ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.
- ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஹூசைனி சிகிச்சை பெற்று வந்தார்.
1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார்.
இந்நிலையில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹூசைனி நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஷிஹான் ஹூசைனியின் உடல் மதுரை காஜிமார் தெருவில் உள்ள பெரிய பள்ளியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
- அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கதவை ஆயுதங்களால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
- நாகமலை புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ளது ராம்கோ நகர் பகுதி. வளர்ந்து வரும் இப்பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம், திருமண மண்டபம், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது.
திண்டுக்கல்-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியாக உள்ள ராம்கோ நகரில் 100-க்கும் மேற்பட்ட தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பொது மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் தனித்தனியே இருப்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு நேரத்தில் ராம்கோ நகர் பகுதியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனியாக உள்ள வீடுகளை நோட்ட மிட்டனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கதவை ஆயுதங்களால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து மற்றொரு வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி திறக்க முயற்சித்தனர். சத்தம் கேட்டு எழுந்த அந்த வீட்டின் உரிமையாளர் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் பார்த்தபோது முகமூடி அணிந்த 2 பேர் கதவை உடைப்பது தெரியவந்தது.
உடனே அவர் நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். போலீசார் சிறிதும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் வருவதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது டவுசர் அணிந்த 2 மர்ம நபர்கள் தலையில் குரங்கு குல்லாவுடன் கதவை ஆயுதங்களால் உடைப்பது பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். குற்றப்பிரிவு போலீசார் துணையுடன் சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் பதிவான செல்போன் அழைப்பு உள்ளிட்ட விவரங்களை வைத்து கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து இதில் தொடர்புடையதாக ஈரோடு மாவட்டம் பனையம்பள்ளியை சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா (வயது 39), சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை சேர்ந்த முனியன் மகன் மருதுபாண்டி (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
- 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரை:
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வீ.கே.குருசாமி. மதுரை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் மண்டல தலைவரான இவருக்கும், அவரது உறவினரும் அ.தி.மு.க. பிரமுகருமான ராஜபாண்டி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட விரோதம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
இந்த பிரச்சினையில் தற்போதுவரை இருதரப்பை சேர்ந்த 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அரசியிலில் உச்சத்தில் இருந்த வீ.கே.குருசாமி தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அங்கும் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.
இந்தநிலையில் வீ.கே.குருசாமியின் ஆதரவாளரும், பிரபல ரவுடியுமான காளீஸ்வரன் என்பவர் இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதுபற்றிய விபரம் வரு மாறு:-
மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 37). இவர் மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெண்கலமூர்த்தி தெருவில் தனது இரண்டா வது மனைவி மீனாட்சி என்பவரது வீட்டில் ஒரு மாதமாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்தவர் இன்று அதிகாலை சுமார் 12.40 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் தனக்கன்குளம் பகுதியில் வைத்து காளீஸ்வரனை வழிமறித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத காளீஸ்வரன் அவர்களது பிடியில் இருந்து தப்ப முயன்ற அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அந்த கும்பல் யார் என்று தெரியவில்லை.
இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த காளீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இறந்த காளீஸ்வரன் மீது ஏற்கனவே தெப்பக்குளம், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வி.கே.குருசாமி தரப்பினருக்கும், வெள்ளைக்காளி தரப்பினருக்கும் ஏற்கனவே பழிவாங்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரனை வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் உடலை கைப்பற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து உடைக்க முயன்றனர்.
பின்னர் வேகமாக சென்ற அந்த வாகனம் அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது. அங்கு காளீஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு பதட்ட மான சூழல் நிலவுவதால் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குருசாமி தரப்பில் 10 பேர், ராஜபாண்டி தரப்பில் 7 பேர் என 20 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். வி.கே.குருசாமி, ராஜ பாண்டி, வெள்ளைக்காளி ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வெள்ளைக்காளி ஒரு வருடத்திற்கு முன்பாக கரிமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார். சிறையில் இருந்து கொண்டே அவர் இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக தெரிகிறது.
வெள்ளைக்காளி தனது அண்ணனை வீ.கே.குருசாமியின் ஆட்கள் கொலை செய்ததால் அவரது குடும்பம் முழுவதையும் அழிக்கப்போவதாக சபதம் செய்து, அதன் தொடர்ச்சியாக குருசாமி ஆதரவாளர்களை கொலை செய்து வந்தார்.
வெள்ளைக் காளியைப் பொறுத்தவரை 40-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொலை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
வி.கே. குருசாமி தற்போது தி.மு.க.வில் இருந்து விலகி தனியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜபாண்டி இறந்து விட்டார். இதனால், வீ.கே.குருசாமியை பழிவாங்கும் நோக்கில் வெள்ளைக்காளி செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
- மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரையிலிருந்து விஜயவாடாவிற்கு பெங்களூரு, ஐதராபாத், சென்னை வழியாக விமானங்களை இயக்கி வரும் தனியார் விமான நிறுவனம், மேற்கண்ட இடங்களில் இறங்கி பின்னர் வேறு விமானத்திற்கு மாறி விஜயவாடா செல்ல வேண்டும். தற்பொழுது வரும் 30-ந் தேதி முதல் மதுரையிலிருந்து பெங்களூரு வழியாக அதே விமானத்தில் இறங்காமல் பெங்களூருவில் 30 நிமிடம் காத்திருந்த பின்னர் விஜயவாடாவிற்கு குறைந்த நேரத்தில் பயணம் செய்ய அந்த தனியார் விமான சேவை வழங்க இருக்கிறது.
அதன்படி மதுரையிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.45 மணிக்கு பெங்களூரு செல்லும். அங்கு அரை மணி நேரத்திற்கு பின்னர் 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 11.55 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.
மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கு அரை மணி நேரம் (30 நிமிடம்) கழித்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எம்.காம் பட்டதாரியான மகேஸ் பாண்டியன், சீனாவில் பணியில் உள்ளார்.
- பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், இன்று மாடுமுட்டி உயிரிழந்தார்.
சீனாவில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர், மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன் (22), எம்.காம் படித்து விட்டு சீனாவில் வேலையில் இருந்துள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார்.
அப்போது மாடு முட்டியதில் நுரையீரலில் பலத்த காயமடைந்த மகேஸ் பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணைமின் நிலையத்தில் உள்ள காடுபட்டி பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை புதூர் மின்பிரிவு மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்தின் தொழிற்பேட்டை பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மூன்றுமாவடியின் ஒரு பகுதி, சர்ச் ரோடு, மாட்டு ஆஸ்பத்திரி, லோட்டஸ்ட் அபார்ட்மெண்ட், ஒய்.டபிள் யூ.சி. ஆஸ்டல், சம்பகுளம் 1 முதல் 5 தெருக்கள், சிவானந்தா தெரு, விவேகானந்தா தெரு, மீனாட்சி அபார்்ட்மெண்ட், கமிசனர் அலுவலகம், இ.பி. காலனி, 120 அடி ரோடு, பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை வண்டியூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை மறுநாள் (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை வண்டியூர், பி.கே.எம்.நகர், சவுராஷ்டிரா புரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர்தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்ளி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி. நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
- காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு
மதுரை:
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
செய்தி அறிந்தவுடன் அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளேன்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.
- டாக்டர் சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
- ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
மதுரை
மதுரையில் உள்ள சரவணா மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பா.சரவணன்-கனிெமாழி தம்பதியரின் மகன் டாக்டர் அம்ரித் குமாருக்கும், தனசேகரன்-விஜயலட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் சாதுர்யா என்கிற அபூர்வஸ்ரீக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அவர்களது திருமணம் மதுரை ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்து வக்கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நாளை (14-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது.இவர்களது திருமணத்தை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடத்தி வைக்கிறார்.
இந்த திருமண விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருமண விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படு கிறது. மேலும் ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
மணமக்கள் டாக்டர் அம்ரித்குமார்-டாக்டர் சாதுர்யா ஆகியோரின் திருமண வரவேற்பு மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. திருமணம் மற்றும் வரவேற்பு விழாவில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகின்றனர்.
- மதுரையில் நாளை அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்-அஞ்சலி செலுத்துகின்றனர்.
- நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
மதுரை
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை யொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (5-ந்தேதி) காலை 9 மணி அளவில் மதுரை கே.கே. நகரில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து வதோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது.
மாலை 4 மணியளவில் மதுரை பெரியார் பஸ் நிலை யத்தில் இருந்து நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக மவுன ஊர்வலமாக சென்று மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர அனைத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் நடக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் அம்மா பேரவை சார்பிலும் டி. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பொது மக்களுக்கு அன்ன தானமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கும்படி வேண்டு கிறேன்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளரான கோபாலகிருஷ்ணன் கூறி யிருப்பதாவது:-
ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 9 மணி அளவில் மதுரை சட்டக்கல்லூரி முன்பிருந்து மவுன ஊர்வலமாக சென்று கே.கே.நகரில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரையில் அனைத்து பகுதிகளிலும் அ.தி.ம.மு.க. சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் எனது தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
- மாநில மகளிர் குத்துச்சண்டை போட்டி நடக்கிறது.
- மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக பொது செயலாளர் டி.என்.செழியன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை குத்துச்சண்டை கழகம் சார்பில் எலைட் பிரிவு பெண்கள் தேர்வு போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 7-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்க உள்ளது.
இதில் மாவட்ட குத்துச்சண்டை கழகத்தில் பதிவு பெற்ற சங்கங்கள் மற்றும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில போட்டியில் கலந்து கொள்ள இயலும்.
மாநில போட்டியில் வெற்றி பெற்றால், மத்தியபிரதேச மாநிலத்தில் இந்த மாதம் நடக்க உள்ள தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க இயலும். எனவே
1982-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும் எலைட் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக பொது செயலாளர் டி.என்.செழியன் தெரிவித்துள்ளார்.
- குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
- மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 27-ந் தேதி (செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டலம்-2 அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.