என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahayuti"

    • மகாராஷ்டிராவில் பா.ஜனதா, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் கூட்டணி
    • மெகா கூட்டணி என தங்களை அழைக்கும் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் அதிக இடங்களை பிடிக்க திட்டம்

    2024 பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜனதாவும் தங்களது கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதாக கூறி வருகிறது.

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இந்த 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை பிடிப்பதுதான் எங்களின் மெகா கூட்டணியின் இலக்கு என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை பிரித்து அக்கட்சியை தனதாக்கிய ஷிண்டே, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியமைத்தார். இந்த கூட்டணியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி, தனி கோஷ்டியாக திகழும் அஜித் பவார் இணைந்துள்ளார். அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார்.

    2019 தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. பா.ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன குறிப்பிடத்தக்கது.

    • பாஜக கூட்டணி 9 வேட்பாளர்களை நிறுத்தியது.
    • 11 இடங்களுக்கான தேர்தலில் பாஜக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    மகாராஷ்டிர மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தம் 11 இடங்களுக்கு 12 பேர் போட்டியிட்டனர். இதனால் பலத்த போட்டி நிலவியது. கட்சி மாறி வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு கட்சிகளும் தெரிவித்தன.

    இருந்த போதிலும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மாறி வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாயுதி (பாஜக, ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி 9 வேட்பாளர்களை நிறுத்தியது. 9 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்ரேயின் சிவசேனாவின் மகா விகாஸ் கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    ஒவ்வொரு வேட்பாளர்களும் வெற்றி பெற 22.76 வாக்குகள் தேவை. பாஜக வேட்பாளர்கள் பங்கஜ முண்டே, யோகேஷ் திலகர், பரினாய் புகே, அமித் கோர்கே ஆகியோர் தலா 26 வாக்குகளை பெற்றனர். ஜெயந்த் பாட்டில் 8 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் ஷிவராஜ்ராவ் கார்ஜே 24 வாக்குகள் பெற்றார்.

    பாஜக வேட்பாளர்களான பங்கஜ முண்டே, யோகேஷ் திலகர், பரினாய் புகே, அமித் கோர்கே, சதாபாயு கோட் ஆகியோரும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் விடேகார், ஷிவராஜ் ராவ் கார்ஜே ஆகுியோரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவின் குருபால் துமானே, பவனா கவாலி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    காங்கிரஸ் கட்சியின் பிரத்ன்யா ராஜீவ் சதேவ், மிலிந்த் நர்வேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.
    • மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன. மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

    மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

    தற்போது முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தால், தேர்தலுக்குப்பின் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இரண்டு கூட்டணியும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துதான் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பட்நாவிஸ், அஜித் பவார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மகாயுதி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பட்நாவிஸ் "முதல் மந்திரி இங்கே அமர்ந்து இருக்கிறார். உங்களுடைய முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று எதிர்க்கட்சிகளிடம் கேளுங்கள். முதலில் உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவிக்கவும். உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவியுங்கள் என சரத் பவாரிடம் வலியுறுத்துகிறேன்" என்றார்.

    ஏக்நாத் ஷிண்டே "உயர்ந்த பதவியை பெறுவதற்கு யாரும் ஆசைப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் அரசாங்கம் செய்த பணிகள் எங்கள் முகம்" என்றார்.

    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன.

    மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

    மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து விசிக போட்டியிடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

    இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பிற தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    கங்காபூர், பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர், அவுரங்காபாத் (மையம்), முள்ளன்ட் ( மும்பை), கன்னட் ஆகிய 10 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

    பிவாண்டி, மலேகோன், வாசிம், அவுரங்காபாத் (மேற்கு), அவுரங்காபாத் (கிழக்கு), புலம்பிரி, மும்பை மலாட், தாராவி, போக்கர்டன் ஜல்னா, துலே ஆகிய 10 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிடுகிறது

    • மகாயுதி 175 இடங்களை பெறுவார்கள் என்ற நான் நினைக்கவில்லை.
    • தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாயுதி கூட்டணி கட்சிகள் (பா.ஜ.க., சிவசேனா (ஏக் நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)), மகா விகாஸ் அகாடி கட்சிகள் (காங்கிரஸ், சிவசேனா (UBT-உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் ((சரத்சந்திரா பவார்)- சரத் பவார்) தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

    பாராமதி தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவரை எதிர்த்து சரத் பவார் பேரன் யுகேந்திர பவார் களம் இறக்கப்பட்டுள்ளார். தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் யுகேந்திர பவார், மகா விகாஸ் அகாடி 175 முதல் 180 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுகேந்திர பவார் கூறுகையில் "மகாயுதி 175 இடங்களை பெறுவார்கள் என்ற நான் நினைக்கவில்லை. மகா விகாஸ் அகாடி 175 இடங்கள் முதல் 180 இடங்களை பிடிக்கலாம்.

    நவம்பர் 23-ந்தேதி சரியாக எத்தனை இடங்கள் என்பதை நம்மால் பார்க்க முடியும். வெற்றி நமதே. தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, குற்றம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது. இவைகள் அனைத்தும் மிகப்பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகாணும் வகையில் நாங்கள் பணியாற்றுவோம். பொதுவாக இந்தியா எப்போதும் மிகப்பெரிய மதச்சார்பற்ற நாடாக இருந்து வருகிறது.

    இவ்வாறு யுகேந்திர பவார் தெரிவித்தார்.

    • முதல்வர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
    • பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்பார். இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனத் தகவல்

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.

    முதல்வர் யார் என்பதில் கூட்டணிக்குள் இழுபறி நீடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேதான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் பாஜக 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதால் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவரும், ஏற்கனவே துணை முதல்வராக இருந்தவருமான அஜித் பவார், தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பட்நாவிஸ் இன்று மாலை முதல்வராக பதவி ஏற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்பாரா? என்பது தெரியவில்லை.

    முதல்வராக இருந்த நிலையில், துணை முதல்வராக பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இன்று மாலை பட்நாவிஸ் பதவி ஏற்கும்போதுதான் யாரெல்லாம் மந்திரி சபையில் இடம் பிடிக்கிறார்கள் என்பது தெரியவரும்.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் புதிய அரசின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

    ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், சிவசேனா கட்சி அரசின் எந்தவொரு பொறுப்பையில் ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிவித்துள்ளார். அவர் துணை முதல்வராக வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்றார்.

    இதற்கிடையே பட்நாவிஸ் உடன் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்பார்கள் என பா.ஜ.க. தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது.
    • தற்போது அவர் துணை முதல்வராக பதவி ஏற்பார் என சிவசேனா தலைவர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.

    முதல்வர் யார் என்பதில் கூட்டணிக்குள் இழுபறி நீடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேதான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் பாஜக 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதால் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவரும், ஏற்கனவே துணை முதல்வராக இருந்தவருமான அஜித் பவார், தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பட்நாவிஸ் இன்று மாலை முதல்வராக பதவி ஏற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது.

    ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் புதிய அரசின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் உதய் சமந்த் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக் கொள்வார் என உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் கூட்டணிக்குள் நிலவி வந்த முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவி தொடர்பான குழப்பம் தீர்வுக்கு வந்துள்ளது.

    • மந்திரி சபையில் 43 பேர் இடம் பெற வாய்ப்பு.
    • பா.ஜ.க. 22 மந்திரிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல்.

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சி கூட்டணிகளான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.-வை சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகியோர் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளனர்.

    பதவி ஏற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இலாகாக்களும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

    முதல்வரான பட்நாவிஸிடம் நிதியமைச்சர் இலாகா இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் அஜித் பவார் நிதி இலாகாவை குறிவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.எல்.சி.-யுமான மிட்கரி "அஜித் பவாருக்கு மட்டுமே நிதித்துறையை கையாளும் திறன் உள்ளது. 10 முறை பட்ஜெட் தாக்குதல் செய்துள்ள அவருக்கு, நிதியை ஒவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பது தெரியும்.

    அஜித் பவாரை நிதியமைச்சராக ஆக்கவில்லை என்றால், இந்த அரசுக்கு (மகாயுதி) பயனுள்ளதாக இருக்காது" என்றார்.

    14-ந்தேதி (நாளைமறுநாள்) கேபினட் விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக முதல்வருடன் சேர்த்து 43 மந்திரிகள் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும், பா.ஜ.க. 21 முதல் 22 இடங்களை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×