என் மலர்
நீங்கள் தேடியது "Masi festival"
- ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடை வீதி மாரியம்மன் கோவில் அருகில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், காமாட்சியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் வேடசந்தூர், ஆயக்குடி, காலப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இரவு 11 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் பூசாரி தங்கவேல் (70) அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.
திருமண தடை, குழந்தைப்பேறு, கடன் பிரச்சினை, தொழிலில் நஷ்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக பூசாரியிடம் பக்தர்கள் அருள்வாக்கு பெற்றுச் சென்றனர்.
இந்த கோவிலில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது. இதற்காக கோவில் வளாகத்திலேயே மிகப்பெரிய வானலி வைக்கப்பட்டு பூரி தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் அந்த பூரி படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
- நாளை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி பெருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி இன்று காலையில் கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மேலும் காப்பு கட்டுதல், சக்தி கரக ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 2-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
அதாவது சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி பார்வதிதேவி ஆங்கார உருவம் கொண்டு பிரம்மனின் தலையை மயானத்தில் மிதித்து சிவனுக்கு சாப விமோசனம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மயானக் கொள்ளை விழா நடை பெறுகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் கோவில் சார்பில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமாக மயானத்துக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதன் பின்னர் அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
நாளை இரவு வழக்கமாக அமாவாசை அன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்மலையனூர்அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி பெரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஷே க் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
- காலை 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி பெரும் திருவிழா விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான மாசி பெரும் திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி யேற்றத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதியுலா நடக்கிறது. நாளை (3-ந்தேதி) கொடியேற்றம் நடக்கிறது.
இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
2-ம் திருவிழாவான 4-ந்தேதி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரானை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
3,4,5,6-ம் திருவிழா நாட்களில் கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வருபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.
5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு மேல் குடைவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
6-ம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. அன்று இரவு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் எந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
7-ம்திருவிழாவான 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்கிறது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 4.20 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.
8,10,11,12-ம் ஆகிய திருவிழா நாட்களில் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது
8-ம் திருவிழாவான 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் கோவிலில் சேர்க்கையை பொறுத்து பூஜை நேரங்கள் மாறுபடும்.
10-ம்திருவிழாவான 12-ந்தேதி காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம் திருவிழாவான 14-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி நடக்கிறது.
- கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் கொடி பட்டம் வீதியுலா நடைபெற்றது. இன்று காலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30-க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், நடைபெற்றது. காலை 5.20 மணிக்கு கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, திருவாவடுதுறை ஆதீனம் சங்கரலிங்கம் தம்பிரான் சுவாமிகள், ஏரல் சேர்மன் சுவாமி கோவில் தக்கார் கருத்தபாண்டி நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, கவுன்சிலர் ரேவதி கோமதிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
5-ம் திருவிழா 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு குடை வருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழாவான 9-ந்தேதி காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்கிறார்.
அங்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர், சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருவிழா 12-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம் திருவிழாவான 14-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
- புற்றுதான் அம்மனாக இருக்கிறது.
- சந்தனத்தால் அழகான முகம் செய்யப்பட்டு அதுவே பகவதி அம்மனாக காட்சி தருகிறது.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் என்றால், ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியர், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலை அய்யனை தரிசிக்க வரலாம் என்ற கட்டுப்பாடு உண்டு.
சபரிமலை ஐயப்பனை மாலை அணிந்து விரதம் இருந்து தரிசிக்கச் செல்பவர்கள், இருமுடி கட்டி மலை ஏறிச் சென்று ஐயப்பனை வணங்கி வருவார்கள்.
அதே போல் பெண்கள் மட்டுமே இருமுடி கட்டி விரதம் இருந்து செல்லும் ஆலயங்களில் ஒன்றுதான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாதம் நடைபெறும் விழாவின்போது, பெண்கள் -அதுவும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் விரதம் இருந்து, தலையில் இருமுடி கட்டி வந்து, பொங்கல் வைத்து வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள், கேரளாவில் உள்ள ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கில் செல்வதுபோல, அங்குள்ள பெண்கள் பலரும் தமிழகத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்க, மாசி மாதம் இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாவின்போது வருகை தருவார்கள்.
இவ்வாலயத்தில் புற்று வடிவத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் அருள்பாலிக்கிறாள். நெடு நெடுவென வளர்ந்து நிற்கும் புற்றுதான் அம்மனாக இருக்கிறது. வெறும் புற்றை பகவதி அம்மனாக எல்லோராலும் மானசீகமாக முகத்திற்கு நேராக கொண்டு வந்து வணங்குதல் இயலாது என்பதால், அந்த புற்றின் மேல் பகுதியில் சந்தனத்தால் அழகான முகம் செய்யப்பட்டு அதுவே பகவதி அம்மனாக காட்சி தருகிறது.
அந்த முகத்துக்கு கீழே உள்ள பகுதி சிவப்பு ஆடையால் மறைக்கப்பட்டு அதற்கு முன்னதாக ராணி சேதுலட்சுமிபாய் கொடுத்த வெள்ளி அங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் பிரமாண்டமாய் அம்மன் உருவம் தெரியும். அதற்கும் சற்று கீழே உற்சவ தேவி விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது.

தலவரலாறு
முற்காலத்தில் இது ஆடு- மாடுகள் மேயும் மந்தையாக இருந்தது. காட்டுப்பகுதியாக இருந்ததால் 'மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி 'மண்டைக்காடு' என்றானதாக சொல்கிறார்கள்.
மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலத்தில் ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் ராஜராஜேஸ்வரி குடியிருப்பதாக சொல்லப்படும் ஸ்ரீசக்கரத்தை கையில் வைத்திருப்பார். தினமும் இந்த இடத்திற்கு வந்து ஸ்ரீசக்கரத்தை கீழே வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்துவிடுவார்.
மாலை வரை தியானத்தில் இருக்கும் அவர், எழுவதற்குள் அவர் மேல் புற்று பரவிவிடும். அப்பகுதியில் ஆடு- மாடு மேய்க்கும் சிறுவர்கள் மாலையானதும் புற்றை கலைத்து அவரை எழுப்பி விடுவார்கள். அவரும் ஸ்ரீசக்கரத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவார். இது வாடிக்கை.
ஆனால் ஒருநாள் சீடரால் தரையில் வைத்த ஸ்ரீசக்கரத்தை எடுக்க முடியவில்லை. இவர் தியானத்தில் ஆழ்ந்து என்னவென்று ஆராய 'நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்' என்று அவருக்கு அம்மனிடம் இருந்து உத்தரவு வந்தது.
அதனால் அந்த சீடரும் இங்கேயே இருந்துவிட முடிவு செய்து தியானத்தில் ஈடுபட்டார். வழக்கமாக அவரை தியானத்தில் இருந்து எழுப்பும் சிறுவர்களை 'இனி எழுப்ப வேண்டாம்' என்று சொல்லிவிட்டு அப்படியே ஜீவ சமாதியாகி விட்டார்.
அவர் மேல் புற்றும் வளர்ந்தது. அதுதான் இன்றுவரை வளர்ந்து வளர்ந்து மேருவாக ஆகி இருக்கிறது. ஸ்ரீசக்கரத்தில் இருந்த அம்மன்தான் இங்கே இப்போது பகவதி அம்மனாக காட்சி தருகிறார்.
காலங்கள் சென்றபின்னர் அப்பகுதியில் ஆடு -மேய்க்கும் சிறுவர்கள், பனை மரத்தின் காயை வைத்து பந்தாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் அடித்த பனங்காய் புற்றின்மேல் பட்டு புற்று சிறிது சேதமடைந்தது.
சிறுவர்கள் வந்து பார்த்தபோது புற்றின் சேதமான பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டவாறே இருந்தது. சிறுவர்கள் ஊருக்குள் ஓடிப்போய் பெரியவர்களை அழைத்து வந்தார்கள். அப்போது அருள் வந்து ஆடிய ஒருவர், "இந்த புற்றுதான் தேவி பகவதி. அவள் இங்கே வெகு காலமாக இருக்கிறாள். புற்றில் இருந்து வரும் ரத்தத்தை நிறுத்த அங்கே சந்தனத்தை அரைத்து பூசவேண்டும்" என்று அருள் வாக்கு கூறினார்.
புற்று இருந்த இடத்தின் உரிமையாளரும் அவ்வாறே செய்ய ரத்தம் நின்றுவிட்டது. அந்த இடத்தில் ஒரு ஓலைக்குடிசை போட்டு புற்றை அம்மனாக வழிபட ஆரம்பித்தார்கள். அம்மனை வந்து வழிபட்டவர்கள் நினைத்ததெல்லாம் நடக்க ஆரம்பிக்க பக்தர்கள் கூட்டம் பெருகியது.

கேரள வழக்கப்படி பெண் தெய்வம் என்றால் அது பகவதிதான். அப்படித்தான் மண்டைக்காடு பகவதியாக மக்கள் வழிபடத் தொடங் கினர்.
இவ்வாலயத்தின் கொடை விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற உள்ளது. கொடை விழாவின் இறுதிநாளில் நடைபெறும் 'வலிய படுக்கை' என்னும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கூடை கூடையாய் பூக்கள், பழங்கள், பலகாரம், வடை, அப்பம், திரளி ஆகியவற்றை, பக்தர்கள் தங்களின் வாயை மூடியபடி ஊர்வலமாக பாத்திரங்களில் எடுத்து வந்து அம்மன் சன்னிதி முன்பாக படைத்து வழிபடுவார்கள்.
மேலும் இந்த படைப்புக்குரிய சாதம் ஒரே நாளில் தயாரிக்கப்பட்ட புழுங்கல் அரிசியில் சமைக்கப்படுவது என்பது கூடுதல் விசேஷம். வலிய படுக்கை என்ற ஒடுக்கு பூஜையின்போது கோவில் நிசப்தமாக இருக்கும்.
மாசி மாத திருவிழாவின்போது மட்டுமின்றி, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பவுர்ணமி நாட்களிலும் இவ்வாலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர் கோவிலில் இருந்து சுமார், 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, மண்டைக்காடு திருத்தலம்.
- கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இன்று மாலை சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.
7-ம்திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார்.
அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைக்கு பிறகு மாலை 4.20 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம்திருவிழாவான நாளை(திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
12-ம்திருவிழாவான 14-ந்தேதி மாலையில் சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது.
- இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 5-ம்திரு விழாவில் குடைவருவாயில் தீபாராதனையும், 7-ம்திரு விழாவான நேற்று காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.
8-ம்திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 7மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது .
11-ம்திருவிழாவான (13-ந் தேதி) தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கி றார்.
12-ம்திருவிழாவான (14-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 8-ம் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 5-ம்திருவிழாவில் குடைவருவாயில் தீபாராதனையும், 7-ம்திருவிழாவான நேற்று காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.
8-ம்திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது. மதியம் 12மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்ச மாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 7மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது .
(13-ந்தேதி) தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
(14-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவுபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி பச்சை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு 10-ம் திருநாள் தேரோட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) 11-ம் திருநாள் இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

வெள்ளை மற்றும் பச்சை சாத்தி வீதிஉலா:
நாளை 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோவில் வந்து அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்.
18-ந் தேதி 9-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 19-ந் தேதி 10-ம் திருவிழா அன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கும் தேரோட்டம் நடக்கிறது. 20-ந் தேதி 11-ம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.
21-ந் தேதி 12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.
5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது.
இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அந்த வாயிலின் முன்பு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் இரவு 7.35 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலின் பிரதான வாயில் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
அப்போது கீழ ரத வீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எட்டு வீதிகளிலும் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
6-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 8 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
4-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மாலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் புஷ்ப காவடி, பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
5-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.