என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor"

    • ஆக்கி போட்டியில் உலக சாதனை படைத்த சிவகாசி மாணவிக்கு மேயர் பாராட்டு தெரிவித்தார்.
    • சிறு வயது முதலே ஆக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவி

    சிவகாசி

    சிவகாசியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் ஜியாஸ்ரீ (வயது 9). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சிறு வயது முதலே ஆக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் மாணவி ஜியாஸ்ரீ, சிவகாசி பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து சாட்சியாபுரம் பஸ் நிறுத்தம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஆக்கி விளையாடிக் கொண்டே சென்று 39 நிமிடம் 30 வினாடியில் சென்று சாதனை படைத்தார். அவரது பெயர் முதன்முறையாக நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

    இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், உறுப்பினர்கள் ராஜேஷ், வெயில்ராஜ் மற்றும் ரேணு நித்திலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • 5 புதிய மின் விளக்குகளை அமைத்து அமைத்துக்கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.

    துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தரமான உயிரி உரம் உற்பத்தி தொடர்பான மாநகராட்சிக்கான அடையாளச் சின்னம் வெளியிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாநகரப் பகுதிகளில் விளம்பர பதாகைகள் அமைப்பது குறித்தான ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக பேனர் அமைக்கும் நிறுவனங்கள்,திருமண மண்டப உரிமையாளர்கள், அலுவலர்கள் கலந்து கொள்ளும் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

    இதில் மாநகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுஇடங்களில் விபத்து ஏற்படும் வகையிலும் உள்ள விளம்பர பேனர்கள், பதாகைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் மாநகரின் 36-வது வார்டு போல்டன்புரம் பகுதியில் பல வருடங்களாக இருள் சூழ்ந்து காணப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகிலும், சுப்பையா வித்யாலயம் பள்ளி மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் பாதைகளிலும் 5 புதிய மின் விளக்குகளை அமைத்து அமைத்துக்கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

    • 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    திருப்பூர் :

    75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவைக் கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் பேசியதாவது:-

    இந்தியா முழுவதும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து வீடுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். ஆகவே, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • மாநகருக்குள் ஆறு, ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மாநகருக்குள் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் திட்டமிட்டு உயர்மட்ட பாலங்கள் தேவைப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அதன்படி திருப்பூர் ஈஸ்வரன் கோவில் செல்லும் நொய்யல் ஆற்றின் மேல் உயர்மட்ட பாலம், ஜம்மனை ஓடை மேல் தந்தை பெரியார் நகரில் உயர்மட்ட பாலம், சங்கிலிப்பள்ளம் ஓடை மேல் செல்லாண்டியம்மன் துறை அருகே சொர்ணபுரி லே-அவுட்டில் உயர்மட்ட பாலம் மற்றும் நடராஜா தியேட்டர் முன்புறம் பாலம் விரிவாக்கம் ஆகிய பணிகள் என மொத்தம் ரூ.36 கோடியே 36 லட்சத்தில் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது கனரக வாகனங்கள் எளிதில் சென்று வரவும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்மட்ட பாலங்களுக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    • பணிகளை விரைவாக முடிக்கும் படி மேயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • கட்டிட பணிகளை மேயர் பார்வையிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான திட்டங்கள் மற்றும் பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்து வருகிறார். மேலும், பணிகளை விரைவாக முடிக்கும் படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் டவுன்ஹால், பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட கட்டிட பணிகளை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டார் ஆய்வு செய்தார். மேலும், கட்டிட பணிகளையும் பார்வையி–ட்டார். இந்த நிகழ்ச்சியில் 3 வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, பகுதி கழக செயலாளர் மு.கே.உசேன், கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, கண்ணப்பன், திவாகரன் மற்றும் உதவி ஆணையர்கள் வாசுகுமார், கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • மாநகரில் 55 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் விரைவில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணைமேயர் கே.ஆர்.ராஜு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் சரவணன் பேசியதாவது:-

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    மேலும் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளார். முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சீறிய நடவடிக்கையால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள 33 அரசு பள்ளிகளில் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    மாநகரில் 55 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் விரைவில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று குறைகளை தீர்க்கும் வகையில் மக்களை தேடி மேயர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள புதிதாக 300 பேர் நியமனம் செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசும் போது, மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    மேலும் தி.மு.க. கவுன்சி லர்கள் பழையபேட்டை வாகன முைனயம் அருகில் உள்ள ஆடு அறுக்கும் நிலையத்தை மறுடெண்டர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து பேசிய 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் வழக்கம் போல் இந்தாண்டும் அரசு விதிகளை பின்பற்றியே டெண்டர் விடப்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை கவுன்சிலர்களின் தலையீடு அதிகம் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

    • திருப்பூர் நாஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி இன்று நடைபெற்றது.
    • போட்டியில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருப்பூர் நாஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில் 40 அரசு பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ போட்டியில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.

    • தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பவத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
    • இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் நேற்று பெய்த மழையினால் டி.எம்.எப் மருத்துவமனை அருகே உள்ள சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பவத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது தண்ணீரை உறிஞ்சும் மோட்டார் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து மோட்டாரை சரி செய்ய உத்தரவிட்டார். மேலும் கூடுதலாக ஒரு புதிய மோட்டார் ஒன்றை பொருத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி போக்குவரத்து செல்லும் வரை சரி செய்தனர்.பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் இந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு என்ன வழிமுறைகள் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    • சேலம் மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சேலம் மாநகராட்சியில் மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கல்வி நிலைக்குழு மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

    சேலம் மாநகராட்சியில் 51 துவக்கப்பள்ளிகள், 29 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகள், 7 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இப்பள்ளிகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டுதல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், கணினி உபகரணங்கள் வாங்குதல், ஆய்வகங்கள் வசதி ஏற்படுத்துதல், தளவாட சாமான்கள் வாங்குதல், பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிப்பிட வசதி, நூலகங்கள் ஏற்படுத்துதல், விளையாட்டு மைதானங்கள், சுற்றுசுவர் போன்ற கல்வி மேம்பாட்டு பணிகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது குறித்து ஆலோசிக்கபப்ட்டது,

    மேலும் மேற்குறிப்பிட்ட மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி நிதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு, சமூக பொறுப்பு நிதி, நமக்கு நாமே திட்டம் மற்றும் அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றில் இருந்து மேற்கொள்ளுவது குறித்தும், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர கோருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது:

    மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்வது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

    அனைத்து பள்ளிகளிலும் மாணவமாணவியர்களுக்கு கழிப்பிட வசதியும், நூலக வசதியும் சுற்றுசுவர் அமைத்தலும் மிக முக்கியமானதாகும். மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் மாணவமாணவியர்களுக்கு கல்வியை கற்று தருகிறார்கள்.

    அந்த பள்ளிகளுக்கு மிக முக்கிய தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதை நோக்கமாக கொண்டு புது பொலிவுடன் கூடிய மாநகராட்சி பள்ளியாக மாற்றி அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    கல்வி நிலைக்குழு உறுப்பினர்கள் மாநகராட்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்து கூறியுள்ளிர்கள். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் நிறைவேற்றி தரப்படும்.

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் .

    பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் திருப்பூர் மாநகரை தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    பள்ளி மாணவிகளுக்கு மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்கும் வகையில் குப்பை பாக்சை செல்வராஜ் எம்.எல்.ஏ., தினேஷ்குமார் அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    • 4வது குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக குடிநீர் சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது.
    • குப்பை அகற்றும் பணிக்கு புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் வாங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்டம் அரங்கில் நடந்தது.

    கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    மாநகராட்சிக்கு 497 பேட்டரி வாகனங்கள் வாங்கியதாக ஆவணங்கள் உள்ளது. இதில், தற்போது 202 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. வாகனங்கள் சப்ளை செய்த நிறுவனம், அதை பெற்று கொண்ட அதிகாரிகள், பயன்படுத்த வழங்கிய அலுவலர்கள் அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    குடிநீர் பிரச்னையில் 4வது குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது. பயன்பாட்டில் இல்லாத மேல்நிலைத் தொட்டிகள் கணக்கெடுக்கப்பட்டு–ள்ளன. அவை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.குழாய் பதிப்பு பணிக்குப்பின் சாலை முறையாகப் பராமரிக்காவிட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணி நடைபெறும் இடங்களில் உரிய விவரங்களுடன் தகவல் பலகை வைக்கப்படும்.விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர திட்டமதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது.

    விடுபட்ட பகுதிகள் குறித்து கவுன்சிலர்கள் தகவல் அளிக்கலாம். குப்பை அகற்றும் பணிக்கு புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் வாங்கப்படும்.ஊட்டச்சத்து துறை மூலம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். மாநக ராட்சியில் மக்கள் குறை கேட்புக்காக 155304 என்ற டோல் பிரீ எண் பெறப்பட்டுள்ளது. இதனால், வசதிகள் உள்ளிட்ட எந்த துறை குறித்த புகார்களும் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • கடலூர் மாநகராட்சியில் 150 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் மேயர் சுந்தரி ராஜா அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடலூர்:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், செயற்பொறியாளர், புண்ணியமூர்த்தி , நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி முழுவதும் 150 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வீடுகள் தோறும் நேரில் சென்று தடுப்பூசி போடும் பணியிலும் பணியாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×