search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சிவகாசி மாணவிக்கு மேயர் பாராட்டு
    X

    சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த உலக சாதனை ஆக்கி போட்டியை தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    சிவகாசி மாணவிக்கு மேயர் பாராட்டு

    • ஆக்கி போட்டியில் உலக சாதனை படைத்த சிவகாசி மாணவிக்கு மேயர் பாராட்டு தெரிவித்தார்.
    • சிறு வயது முதலே ஆக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவி

    சிவகாசி

    சிவகாசியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் ஜியாஸ்ரீ (வயது 9). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சிறு வயது முதலே ஆக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் மாணவி ஜியாஸ்ரீ, சிவகாசி பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து சாட்சியாபுரம் பஸ் நிறுத்தம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஆக்கி விளையாடிக் கொண்டே சென்று 39 நிமிடம் 30 வினாடியில் சென்று சாதனை படைத்தார். அவரது பெயர் முதன்முறையாக நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

    இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், உறுப்பினர்கள் ராஜேஷ், வெயில்ராஜ் மற்றும் ரேணு நித்திலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

    Next Story
    ×