என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro Rail"

    • பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
    • ரெயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    சென்னை மெட்ரோ ரெயிலில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 63,246 கோடி மதிப்பில், மூன்று வழிதடங்களில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்க்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.

    மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 4-ம் வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கிலோமீட்டர் தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் இன்று முதன் முறையாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையில் 2.5 கிலோமீட்டர் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

    அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரெயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சென்னை போரூர் - பூந்தமல்லி இடையே 2.5 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று மாலை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் தாமதம் என தகவல் வெளியானது.

    தொடர்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் சோதனை ஓட்டம் இன்று நடப்பதில் சிக்கல் எனக் கூறப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அடுத்த 3 மணி நேரத்திற்குள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை நேற்று 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
    • மெட்ரோ ஊழியர்களின் விரைவான நடவடிக்கை காரணமாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நேற்று வழக்கம்போல சென்னையில் இயங்கி கொண்டு இருந்தன.

    இந்நிலையில், கோயம்பேடு - பரங்கிமலை மார்க்கத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் திடீரென நிறுத்தப்பட்டன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் வரை 5 நிமிடத்துக்கு ஒருமுறை என இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில்கள், நேற்று இரவு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது.

    மழைக்காலங்களில் மின்சார ரெயில் நிலையங்களில் காத்திருப்பதை போல, மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர்.

    மெட்ரோ ஊழியர்களின் விரைவான நடவடிக்கை காரணமாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் இரவு 8.30 மணிக்கு மேல் கோயம்பேடு - பரங்கிமலை இடையில் வழக்கம்போல மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

    • பஸ் நிலையம் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட உள்ளது.
    • மெட்ரோ ரெயில் இணைப்பு பயணிகளுக்கு சிறந்த பயணத்தை வழங்க உதவும்.

    சென்னை:

    சென்னையை அடுத்த திருமழிசை அருகேயுள்ள குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பஸ் நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, பெங்களூர் போன்ற மேற்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 70 அரசு பஸ்களும், 30 தனியார் பஸ்களும், 36 மாநகர பஸ்களும் நிறுத்தும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1600-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 200 கார்கள், நிறுத்தும் வகையில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் எக்கலேட்டர்கள் குடிநீர் வசதிகள், கழிவுநீர் ஆலை, சி.சி.டி.வி. கேமராக்கள் போன்ற வசதிகளம் உருவாக்கப்படுகின்றன. மேலும் இங்கு மெட்ரோ ரெயில் சேவையும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இந்த பஸ் நிலையத்தில் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன. இங்கிருந்து பல பஸ்கள் பெங்களூருக்கு இயக்கப்படுவதால் ஐ.டி. ஊழியர்களிடம் இருந்து நல்ல ஆதரவை எதிர் பார்க்கிறோம்.

    பலர் வேலை நிமித்தமாக வந்து செல்ல வாய்ப்புள்ளது. இரவு நேர பஸ்களுக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே அவர்களுக்கு விருப்பமான உணவு மற்றும் பானங்களை வழங்கும் வகையில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

    சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களும் விரும்பும் வகையில் இந்த உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

    மேலும் இந்த பஸ் நிலையம் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட இது விமான நிலையம் போல இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வைஃபை வசதியுடன் பயணிகள் குளிரூட்டப்பட்ட வளாகத்தில் ஓய்வெடுக்கலாம். மேலும் தேவைப்பட்டால் பயணிகள் தங்கள் லேப்டாப்பில் அங்கிருந்த படியே வேலையும் செய்யலாம்.

    இந்த பஸ் நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை வசதியும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. பூந்தமல்லிக்கு மெட்ரோ ரெயில் இணைப்பு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வந்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் குழுவினர் கடந்த வாரம் குத்தம்பாக்கம் பஸ் நிலையத்தை பார்வையிட்டனர்.

    எதிர்காலத்தில் பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் நீட்டிக்கப்படும்போது அது குத்தம்பாக்கம் பஸ் நிலையம் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் இணைப்பு பயணிகளுக்கு சிறந்த பயணத்தை வழங்க உதவும். மேற்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களுக்கு பயணிகளின் ஆதரவு நன்றாக இருக்கும் என்பதால் போக்குவரத்து சேவையும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 13ந்தேதி மட்டும் அதிகபட்கமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464பேர் பயணம் செய்துள்ளனர்.
    • 4 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்த 316 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்ச மாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 21,731 பேரும், கிண்டியில் 14,649 பேரும் திருமங்கலத்தில் 13,607 பேரும், விமான நிலையத்தில் 12,909 பேரும் பயணித்தனர்.

    14-ந்தேதி போகிப்பண்டிகை அன்று 1 லட்சத்து 62 ஆயிரத்து 525 பேரும், 15-ந்தேதி பொங்கல் நாளில் 1 லட்சத்து 8160 பேரும், 16-ந்தேதி மாட்டு பொங்கலில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 167 பேரும் பயணம் செய்துள்ளனர். 4 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்து 316 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் பகுதி பூந்தமல்லி-கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் இடையே திறக்கப்பட உள்ளது.
    • மொத்தம் 407 தூண்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 70 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ.61,843 கோடி மதிப்பீட்டில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.

    வருகிற 2026-ம் ஆண்டுக்குள் பணிகளை முடித்து மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் பகுதி பூந்தமல்லி-கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் இடையே திறக்கப்பட உள்ளது.

    அதன் கட்டுமான பணிகள் வெவ்வேறு ஒப்பந்ததாரர்களால் 2 பகுதிகளாக நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி-போரூர் இடையே ஒரு பகுதியாகவும், போரூரில் இருந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை மற்றொரு பகுதியாகவும் பணிகள் நடந்து வருகிறது.

    பூந்தமல்லி-போரூர் இடையே கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் போரூர்-பவர் ஹவுஸ் இடையிலான கட்டுமான பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. மொத்தம் 407 தூண்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 70 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    போரூர்-பவர்ஹவுஸ் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் சாலையின் அகலம் குறுகலாக உள்ளது. இதனால் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் போக்குவரத்தை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற வேண்டும்.

    குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள், மின்சார கேபிள்கள், தொலைபேசி கேபிள்கள் செல்வதால் பணிகள் நடைபெறும் முன்பு அவை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    மேலும் மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடம், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடம் ஆகியவற்றின் இணைப்பு பகுதி ஆழ்வார் திருநகர் மற்றும் ஆலப்பாக்கம் இடையே அமைகிறது.

    எனவே இந்த பகுதியில் வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். இதனால் போரூர்-பவர் ஹவுஸ் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • 2 எந்திரங்கள் மூலம் அயனாவரத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
    • துளையிடும் எந்திரத்தால் ஏற்படும் அதிர்வு காரணமாக பழமையான கட்டிடங்கள் சேதம் அடையலாம்.

    சென்னை:

    மாதவரம்-பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 2 துளையிடும் எந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

    இந்த மாத இறுதியில் மேலும் 2 எந்திரங்கள் மூலம் அயனாவரத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    அயனாவரத்தில் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த இடங்கள் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான நீளத்தின் ஒரு பகுதியாகும்.

    அங்கு மொத்தம் 7 துளையிடும் எந்திரங்கள் மூலம் 2 ஆண்டுகளில் 9 கி.மீ. தூரத்துக்கு இரட்டை சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "மாதவரம்-கெல்லீஸ் இடையே மணல் பகுதி, மென்மையான பாறை, கடினமான பாறை ஆகியவை கலந்துள்ளன. அதற்கு ஏற்ப கட்டர்களுடன் கூடிய துளையிடும் எந்திரங்கள் வேகமான கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த எந்திரங்கள் மூலம் ஒரு நாளைக்கு 7 மீட்டர் முதல் 11 மீட்டர் வரை துளையிட முடியும். மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் சுரங்கப்பாதை அமைப்பது சவாலானது. 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைப்பதால் துளையிடும் எந்திரத்தால் ஏற்படும் அதிர்வு காரணமாக பழமையான கட்டிடங்கள் சேதம் அடையலாம். எனவே அதன் கட்டமைப்புகளை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    மாதவரம்-கெல்லீஸ் இடையே 207 குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    மாதவரம் பால்பண்ணை, முராரி மருத்துவமனை, அயனாவரம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஆகிய ரெயில் நிலையங்களில் உள்நுழைவு, வெளியேறும் கட்டமைப்புகள் அமைக்கப்படும்" என்றனர்.

    • மாநில நெடுஞ்சாலைத் துறைக்கான இந்த பாலங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமே கட்டிக் கொடுக்க உள்ளது.
    • 5 இடங்களில் மேம்பாலங்களும் அதன் மேல் உயர்மட்ட மெட்ரோ ரெயில் பாதையும் அமைக்கப்படுகிறது.

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.

    மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி, சிப்காட், பூந்த மல்லி-கலங்கரை விளக்கம் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 2026-ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் சென்னை வடபழனி 100 அடி சாலையில் மேம்பாலத்துக்கு மேலே உயர்மட்ட ரெயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மேல்தளத்தில் மெட்ரோ ரெயிலும், கீழ் தளத்தில் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களும் செல்கிறது. தரையில் உள்ள சாலையில் வாகனங்கள் செல்கின்றன.

    இதேபோன்ற வகையில் தற்போது நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் முக்கியமான சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 இடங்களில் மேம்பாலங்களும் அதன் மேல் உயர்மட்ட மெட்ரோ ரெயில் பாதையும் அமைக்கப்படுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பயணத்தை எளிதாக்கும்.

    மாநில நெடுஞ்சாலைத் துறைக்கான இந்த பாலங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமே கட்டிக் கொடுக்க உள்ளது. மியாட் மருத்துவமனை அருகில், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் இந்த மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.

    இதில் மியாட் மருத்துவமனை அருகே அமையும் மேம்பாலம் 3.14 கி.மீ. நீளம் கொண்டது. இது சென்னை நகரத்தின் மிக நீளமான மேம்பாலங்களில் ஒன்றாக இருக்கும். 2026-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முடிவடையும் போது இந்த பாலப் பணிகளும் முடிந்து போக்குவரத்துக்கு தயாராகிவிடும்.

    இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மேம்பாலம் அமையும் 5 இடங்களிலும் முதலில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணியை முடிப்போம். இதன் தூண்களை மெட்ரோ ரெயில் பாதை மட்டத்துக்கு உயர்த்தி கட்டுவோம். அதைத் தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து மேம்பாலங்கள் கட்டுவோம்.

    மியாட் மருத்துவமனை பகுதியில் அமையும் மேம்பாலம் முகலிவாக்கம், ராமாபுரம் பகுதிகளை இணைக்கும். துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் அமையும் மேம்பாலத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும். இது ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

    இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு கீழ்த்தளத்தில் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும். மேல் தளத்தில் மெட்ரோ ரெயில் செல்லும். தரையில் உள்ள சாலையில் அனைத்து வாகனங்களும் செல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.
    • கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை.

    சென்னை:

    சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக இன்று காலை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.

    பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டபிள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

    கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, டேங்க் பண்ட் சாலை, சந்திரயோகி சமாதி தெரு மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    அல்லது கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர் சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, ஒட்டேரி சந்திப்பு, குக்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    அல்லது கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, போர்சுகீஸ் சாலை, கான்ஸ் டபிள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை வழியாக செல்லலாம்.

    கான்ஸ்டபிள் சாலையில் பில்கிங்டன் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல கூடிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

    கனரக வாகனங்கள் கான்ஸ்டபிள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டபிள் சாலை, போர் சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

    கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது மக்கள் போலீசாரை சந்தித்து அகலமான தெருக்கள் வழியாக போக்குவரத்தை திருப்பிவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி மாற்று வழிகளையும் பரிந்துரைத்தனர்.
    • மாநகர பஸ்கள் வோல்டாஸ் காலனி 100 அடி சாலை வழிக்கு பதிலாக, அய்யப்பன் நகர், மின்வாரிய அலுவலகம், வேலன் தியேட்டர், நங்கநல்லூர் 6-வது தெரு மெயின்ரோடு வழியே செல்ல முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை நங்கநல்லூர் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் கடந்த வாரம் போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்தனர்.

    மேடவாக்கம் மெயின் ரோடு, நங்கநல்லூர், வேளச்சேரி என்.ஆர்.டி.எஸ். சாலை மற்றும் பிற சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதில் சில சாலைகள் குறுகலாக இருந்ததாலும், வாகனம் திரும்பும் பகுதியில் இடவசதி இல்லாததாலும் மாநகர பஸ்கள் இந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டன.

    இதையடுத்து போக்குவரத்தை மாற்றி அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்திசையில் லாரி அல்லது கார் வரும்போது மற்ற வாகனங்கள் செல்வதற்காக பஸ் டிரைவர் பின்னால் செல்ல வேண்டியநிலை இருந்து வருகிறது.

    இது தொடர்பாக பொது மக்கள் போலீசாரை சந்தித்து அகலமான தெருக்கள் வழியாக போக்குவரத்தை திருப்பிவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி மாற்று வழிகளையும் பரிந்துரைத்தனர்.

    அதன் அடிப்படையில் போக்குவரத்தை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். இதில் நடந்த கலந்துரையாடலுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கீழ்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை மற்றும் ஆதம்பாக்கம் செல்லும் மாநகர பஸ்கள் வோல்டாஸ் காலனி 100 அடி சாலை வழிக்கு பதிலாக, அய்யப்பன் நகர், மின்வாரிய அலுவலகம், வேலன் தியேட்டர், நங்கநல்லூர் 6-வது தெரு மெயின்ரோடு வழியே செல்ல முடிவு செய்யப்பட்டது.

    இன்று தொடங்கி 3 நாட்கள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.
    • 2.5 நிமிட இடைவெளியில் ரெயில்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    சென்னையில் சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையிலும் அதேபோல் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தொடக்கத்தில் கட்டணம் சற்று அதிகமாக இருந்ததால் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. ஆனால் விரைவான பயணம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி டென்சனாக பயணிக்க வேண்டியதில்லை என்பதால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் மெட்ரோ ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள்.

    இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    எனவே கூடுதலான பெட்டிகளை இணைக்க வேண்டும். முதல் வகுப்பு பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    தற்போது 4 பெட்டிகள் கொண்ட 42 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இனி 6 பெட்டிகள் கொண்ட 52 ரெயில்களை இயக்குவதற்கு ஆய்வு நடக்கிறது. மேலும் 2.5 நிமிட இடைவெளியில் ரெயில்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    முதல்வகுப்பு பெட்டிகளை பொறுத்தவரை கட்டணம் இருமடங்கு. எனவே பயணிகளிடம் வரவேற்பு குறைவாகவே இருந்தது. கொரோனா காலத்துக்கு பிறகு முதல் வகுப்பு பெட்டிகள் பெண்கள் பெட்டிகளாக மாற்றப்பட்டுவிட்டது.

    • மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்.
    • சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும் நல்லது என்றார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோரெயில் திட்டம் கொண்டு வந்தது நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று சமூக ஆர்வலரும், பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவருமான சண்முகசுந்தரம் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியாவிற்கே வழிகாட்டு கிற கலங்கரை விளக்கமாக அமைந்தி ருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான மாநில அரசு நிதி பற்றாக்குறையை ரூ.62கோடியில் இருந்து ரூ.30கோடியாக குறைத்தி ருப்பது மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமைக்கும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நிதி மேலாண்மைக்கும் சான்றாக அமைந்துள்ளது.

    மதுரை மாநகரை சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும், அதன் முதல்கட்டமாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருப்பதும் மதுரை மக்களிடம் கோடை மழையை போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோன்று ஏழை, எளிய மக்கள் நிலம் வாங்குவதற்கு ஏதுவாக பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்திருப்பதன் மூலமாக ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற கனவு நனவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வருவதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • பயணிகள் வசதிக்காக மேலும் 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக நிறுவப்படும் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னையில் தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    விரைவான மற்றும் சொகுசு பயணம் என்பதால் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 2 லட்சம் முதல் 2.45 லட்சம் பேர் வரை பயணம் செய்கிறார்கள்.

    இந்த 2 ரெயில் வழித்தடங்களும் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் ரெயில் நிலையங்களை சந்திக்கும் இடங்களாக உள்ளது. சென்ட்ரலில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் பயணிகள் அதிக அளவு வருவதால் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும்.

    இதேபோல் விம்கோ நகர் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் நடை மேடை 3, 4-ல் வந்து செல்கின்றன. பரங்கிமலையில் இருந்து செனட்ரல் வரும் ரெயில்கள் 1,2-வது நடைமேடைகளில் வந்தடைகின்றன. நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வருவதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்கள் வெளியே செல்வதற்கு சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் சென்ட்ரலில் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் பயணச்சீட்டு வழங்கும் தளத்தில் இருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்று வர அமைக்கப்பட்டது. தற்போது இது பயன்பாட்டுக்கு வந்து உள்ளது. இதனால் பயணிகள் சிரமமின்றி சென்று வருகிறார்கள்.

    இதேபோல் பயணிகள் வசதிக்காக மேலும் 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக நிறுவப்படும் என்று தெரிகிறது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இதில் சின்ன மலை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டுகளும் கிண்டி, நங்கநல்லூர் உள்ளிட் ட 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தலா 2 நகரும் படிக்கட்டுகளும், அண்ணா நகர் கோபுரம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி, மீனம்பாக்கத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும், திருமங்கலத்தில் 5 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×