என் மலர்
நீங்கள் தேடியது "mini bus driver"
- வேல்முருகன் தூத்துக்குடியில் இருந்து தாளமுத்துநகர் செல்லும் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
- பஸ்சில் ஏறிய 3 பேரும் வேல்முருகன் மற்றும் அய்யப்பனை சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மேல அழகாபுரியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 23). இவர் தூத்துக்குடியில் இருந்து தாளமுத்துநகர் செல்லும் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பஸ்சில் அவரது தம்பி அய்யப்பன் (19) நடத்துனராக இருந்து வருகிறார்.
இவர்கள் தூத்துக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளமுத்து நகர் வரும் வழியில் உள்ள ஜாகிர் உசேன்நகர் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயனிகளை இறக்கி விடும்போது அங்கே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த 3 பேர் எழுந்து வந்து வேல்முருகனிடம் பஸ்சை இங்கு நிறுத்தக்கூடாது என்று சத்தமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கு வேல்முருகன் இப்போது நிறுத்திவிட்டேன். பயணிகளை இறக்கி விட்டு செல்கிறேன். இனிமேல் நிறுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த அவர்கள் 3 பேரும் பஸ்சில் ஏறி வேல்முருகன் மற்றும் அய்யப்பனை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்து உள்ளனர். காயம்பட்ட இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் தாக்குதலில் ஈடுபட்டது கணபதி நகரச் சேர்ந்த ஜார்ஜ் (29), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஜார்ஜை உடனடியாக கைது செய்த போலீசார் மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் சிவா (26) பயணிகள் கண்முன்னரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் பயணிகள் காத்திருக்க டீ குடித்துவிட்டு பேருந்தை இயக்க ஓட்டுனர் சிவா சென்றுள்ளார்.
அப்போது, முகமூடி அணிந்து வந்த கும்பம் ஓட்டுனர் சிவாவை பயணிகள் கண் எதிரே வெட்டிக் கொலை செய்துள்ளது.
முகமூடி அணிந்து வந்த கும்பல் ஓட்டுநர் சிவாவை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது. இதைதொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டுனர் சிவாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் தஞ்சை கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டியைச் சேர்ந்தவர் அம்பேத் சந்திரன் (வயது 38). இவர் வாடிப்பட்டியில் இருந்து பூச்சம்பட்டிக்கு மினிபஸ் ஓட்டி வருகிறார்.
நேற்றும் வழக்கம் போல பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அம்பேத் சந்திரன் கச்சைகட்டியில் உள்ள பெருமாள் கோவில் முன்பு மினிபஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன் (28) என்பவருக்கும், அம்பேத் சந்திரனுக்கும் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கோபால கிருஷ்ணன், அவரது நண்பர் பாலமுருகனும் சேர்ந்து அம்பேத் சந்திரனை தாக்கினர்.
மேலும் அம்பேத் சந்திரன், அவரது நண்பர்கள் கோபிராஜ், செந்தில் ஆகியோர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், பாலமுருகன், கோபிராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான அம்பேத் சந்திரன், செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்கள்.