என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister"

    • சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • லால்குடியில் அமைக்கப்பட்ட மெய்நிகர் நூலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
    • நூலக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    திருவெறும்பூர் அருகே உள்ள பாரத மிகுமின் தொழிற்சாலையில் மையத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் தொழில்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார்.

    அப்போது பேசிய அவர் தொழில் கல்வி என்பது ஒருவரை நாடி நாம் செல்ல தேவையில்லை என்றும், நமக்கு நாமே முதலாளி என்றும் கூறினார். ஆகையால் இந்த தொழில் கல்வியில் கவனம் செலுத்தி ஒவ்வொரு மாணவர்களும் முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக தமிழகத்தில் முதன் முதலாக லால்குடியில் அமைக்கப்பட்ட மெய்நிகர் நூலகம் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்த வைத்தார். அப்போது பேசிய அவர் தமிழகம் முழுவதும் 76 நூலகங்களுக்கு ஒரு நூலகத்திற்கு 2 மெய்நிகர் கருவிகள் விதம் 152 மெய்நிகர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இக்கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளில் உள்ள நூலகங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    • வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    • 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வீரசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாமினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களும், மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ் 18,70 லட்சம் பயனாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் 1298 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சக்திவேல் பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணி நவம்பர் 11-ந் தேதி தொடங்குகிறது.
    • 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    கரூரில் வருகிற 11-ந் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி வழங்கியிருந்தது. சட்டபேரவையில வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்திருந்து காத்திருந்தனர்.

    அதில் முதல் ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகள் அரவகுறிச்சியில் உள்ள தடாகம் பகுதியில் நவம்பர் 11-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    மேலும் கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
    • முதுகுளத்தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மேல்நிலைப்பள்ளி, நீராவி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமசாமி பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    அமைச்சர் ராஜ கன்ணப்பன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிராமப்பகுதிகளி குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும். கிராமங்கள் தோறும் பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும். அதற்கான பணிகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டுள்ளார். தமிழுக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடுமையாக திராவிட இயக்கம் எதிர்க்கும்.

    திராவிட தலைவர்களில் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பிறகு மு.க.ஸ்டாலின் மட்டுமே உள்ளார். தமிழ்மக்களில் 88 சதவீதம் பேர் திராவிட இயக்கத்தில் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. மந்திரி, எம்.எல்.ஏ. பதவி வரும்-போகும். எந்த பதவியில் இருந்தாலும் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

    முதுகுளத்தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கமுதியில் மில் தொடங்கப்பட உள்ளது. நான் படிக்கும் காலத்தில் கிராமங்களுக்கு பஸ் வராது. 8 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்வோம். இப்போது அப்படி இல்லை. கிராமங்களுக்கே பஸ் வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், பெருநாழி போஸ், முதுகுளத்தூர் பூபதி மணி, கடலாடி ஆறுமுகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு நடத்தினார்.
    • கூடுதலாக இந்த பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 386 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 19 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

    கூடுதலாக இந்த பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    பள்ளி மைதானம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

    • புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.
    • தாராபுரம் அமராவதி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதை அமைச்சா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

    தாராபுரம் :

    தாராபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

    தாராபுரம் ஒன்றியம், கொங்கூா் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ஆச்சியூா் முதல் கொங்கூா் சாலை வரை ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்தல், உண்டாரப்பட்டி முதல் கொங்கூா் சாலை வரை ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் சாலை அமைத்தல், கவுண்டச்சிப்புதூா் ஊராட்சியில் கவுண்டச்சிப்புதூா் முதல் பூளவாடி சாலை வரை ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்தல் என ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக, வடகிழக்குப் பருவமழை காரணமாக தாராபுரம் அமராவதி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதை அமைச்சா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.வி.செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் கே.கே.ஜீவானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு பெங்களூருவில் இருந்த செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும்.
    • தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், கடந்த மாதம் 20-ந்தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார்.

    இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடந்த தவறான ஆப்ரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • விளம்பர மோகம் இல்லாமல் மக்களுக்கு முதலமைச்சர் பணியாற்றி வருகிறார்.
    • அண்ணாமலையையும், பாஜகவையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

     குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

    எந்த விளம்பர மோகமும் இல்லாமல் மக்களுக்கு பணியாற்றி வருபவர் நமது முதலமைச்சர். எதை செய்தாலும் எதை பேசினாலும் மக்கள் தன் பக்கம் திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.

    எவ்வளவு உருண்டு புரண்டாலும் தமிழக மக்கள் அண்ணாமலையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவருடைய கட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு நுகர்வோர் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும்.
    • 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

    சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எல்லா இடங்களிலும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

    100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரித்தார்.

    மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • 1 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் காங்கயம் ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 43 ஆயிரத்து 400 பேரும், மக்களை தேடி மருத்துவத்தின் கீழ் 18 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 1 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் 1,298 பேர் பயனடைந்துள்ளனர்.

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பேறுகால முன் கவனிப்பு, பிரசவம் மற்றும் அனைத்து தடுப்பூசிகளும் பெறப்படும் தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம், 5 தவணைகளாக வழங்கப்படுகிறது. ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. 2021- 2022 ம் ஆண்டில் 40 ஆயிரத்து 798 கர்ப்பிணி தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

    2021-2022 -ம் ஆண்டு மற்றும் 2022-2023-ம் ஆண்டில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 மாணவ-மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 7 ஆயிரத்து 286 கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமார், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார், துணை தலைவர் ஜீவிதா ஜவகர், காங்கயம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 5,59,909 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • 14758 உறுப்பினர்களுக்கு 29.29 கோடி கடன் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கையில் உள்ளது.

    பல்லடம் :

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி ஸ்ரீ மணிவேல் மஹாலில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 5,59,909 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். திருப்பூர் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் மக்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 31.03.2021-60 நிலுவையிருந்த நகைக்கடன்களில் 38453 நபர்களுக்கு ரூ.158.68 கோடி அளவிற்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கி நகைகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. 31.03.2021-ல் நிலுவையிருந்த 1638 சுய உதவிக்குழுக்களை சார்ந்த 14758 உறுப்பினர்களுக்கு 29.29 கோடி கடன் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கையில் உள்ளது.

    2022-23-ம் ஆண்டிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ.561 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நாளது தேதி வரை 23697 உறுப்பினர்களுக்கு 252 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 345 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.1 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 3020 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.27 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    2022-23-ம் நிதியாண்டில்உதவிக்குழுக்களுக்குகூட்டுறவுசங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.48 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 606 நபர்களுக்கு ரூ.9.86 கோடி வீட்டு வசதிக்கடன் மற்றும் வீட்டு அடமானக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    2021-22ல் ரூ.16.13 கோடி அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு 1.98 லட்சம் நோயுற்ற மக்களுக்கு மட்டும் ரூ.1 கோடி தள்ளுபடியாக வழங்கப்பட்டுள்ளது.சிறுவணிகர்களின் நலன்காக்க சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் திருப்பூர் மண்டலத்தில் 537 பயனாளிகளுக்கு ரூ.1.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ரூ.395.00 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    நிகழ்ச்சியில் 1855 பயனாளிகளுக்கு ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் பயிர்கடனுதவிகளும், 52 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக்குழுக்கடன்களும், 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடனுதவிகளும், 11 நபர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சிறுவணிக்கடன் உதவிகளும், 69 நபர்களுக்கு ரூ.1லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடனுதவிகளும், 14 நபர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவிகளும், 1 நபருக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுவசதி கடனுதவிகளும் என மொத்தம் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

    விழாவில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் -மேலாண்மை இயக்குநர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் பழனிச்சாமி, மணி, கதிரவன், திரு.துரைராஜ், முருகேசன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×