என் மலர்
நீங்கள் தேடியது "Minister"
- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 5,59,909 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
- 14758 உறுப்பினர்களுக்கு 29.29 கோடி கடன் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கையில் உள்ளது.
பல்லடம் :
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி ஸ்ரீ மணிவேல் மஹாலில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 5,59,909 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். திருப்பூர் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் மக்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 31.03.2021-60 நிலுவையிருந்த நகைக்கடன்களில் 38453 நபர்களுக்கு ரூ.158.68 கோடி அளவிற்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கி நகைகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. 31.03.2021-ல் நிலுவையிருந்த 1638 சுய உதவிக்குழுக்களை சார்ந்த 14758 உறுப்பினர்களுக்கு 29.29 கோடி கடன் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கையில் உள்ளது.
2022-23-ம் ஆண்டிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ.561 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நாளது தேதி வரை 23697 உறுப்பினர்களுக்கு 252 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 345 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.1 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 3020 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.27 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
2022-23-ம் நிதியாண்டில்உதவிக்குழுக்களுக்குகூட்டுறவுசங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.48 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 606 நபர்களுக்கு ரூ.9.86 கோடி வீட்டு வசதிக்கடன் மற்றும் வீட்டு அடமானக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
2021-22ல் ரூ.16.13 கோடி அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு 1.98 லட்சம் நோயுற்ற மக்களுக்கு மட்டும் ரூ.1 கோடி தள்ளுபடியாக வழங்கப்பட்டுள்ளது.சிறுவணிகர்களின் நலன்காக்க சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் திருப்பூர் மண்டலத்தில் 537 பயனாளிகளுக்கு ரூ.1.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ரூ.395.00 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் 1855 பயனாளிகளுக்கு ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் பயிர்கடனுதவிகளும், 52 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக்குழுக்கடன்களும், 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடனுதவிகளும், 11 நபர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சிறுவணிக்கடன் உதவிகளும், 69 நபர்களுக்கு ரூ.1லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடனுதவிகளும், 14 நபர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவிகளும், 1 நபருக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுவசதி கடனுதவிகளும் என மொத்தம் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
விழாவில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் -மேலாண்மை இயக்குநர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் பழனிச்சாமி, மணி, கதிரவன், திரு.துரைராஜ், முருகேசன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றதாக அமைச்சர் கூறினார்.
- மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன.
மதுரை
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஒருங்கிணைந்து, "உலக மரபு வார விழாவை" முன்னிட்டு நடத்திய 'தமிழக நடுகல் மரபு' கண்காட்சி நடந்தது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன. அவை சென்னையில் உள்ள இந்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத்துறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் கல்வெட்டு மைபடிகளை பாதுகாப்பதற்கோ, ஆய்வு கள் மேற்கொள்வதற்கோ, மைபடிகள் குறித்து வடிவ ங்களை உருவாக்குவதற்கோ இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொல்லியல் அளவீட்டுத்துறைக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். இது வரலாற்றில் புதிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது.
1919-ம் ஆண்டு வரைதான் தென் இந்தியாவில் இருந்து மைல்படிகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் தொல்லியல் துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று கல்வெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 50 சதவீத கல்வெட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. மீதமுள்ள 50 சதவீத கல்வெட்டுக்களும் கிடைத்து விட்டால் அவற்றின் மூலம் நாம் பல்வேறு வரலாற்று செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. கீழடியில் 1200-க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றில் என்னென்ன பொருட்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்? என்றும், காட்சிப்படுத்தும் பொருள் குறித்து குறிப்புகள் இடம் பெற வேண்டும், பொருட்களை எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும்? என்று திட்டமிடப்பட்டு 2 மாத காலங்களுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று முதலமைச்சரால் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் கலெக்டர்அனீஷ் சேகர் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன், யாக்கை மரபு அறக்கட்டளை குமரவேல் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மலைவாழ் கிராமங்களில் பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.
- மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.
உடுமலை :
மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆவணம் வழங்கும் நிகழ்ச்சி உடுமலை அருகே உள்ள குழிப்பட்டி செட்டில்மெண்டில் நடைபெற்றது. 389 மலைவாழ் மக்களின் விவசாய நிலங்களுக்கு நில உரிமை ஆவணங்களை (பட்டா) தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ முகாம், நியாய விலைக்கடைகள், கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது :- ஆதி திராவிடா்கள், பழங்குடியினரின் பொருளாதார நிலையை மேம்படுத்த தாட்கோ மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2005 வன உரிமை சட்டத்தின்படி விவசாய நிலங்களுக்கு வன உரிமை ஆவணம் வழங்கப்படுகிறது என்றாா்.விழாவில் மலைவாழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை, மாவட்ட அலுவலா் ரவிசந்திரன், மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
- வெளிநாடுகளில் இருந்தும் 186 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
- 17 வது பறவைகள் சரணாலயமாக கடந்த ஏப்ரல் 11 ந் தேதி நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூா் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் நிருபர்களிடம் கூறியதாவது :- திருப்பூா் மாநகரில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் 125 ஹெக்டா் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது எஸ்.பெரியபாளையம் மற்றும் நெருப்பெரிச்சல் கிராமங்களுக்கு இடையில் உள்ளது. இந்தக் குளத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 186 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குளிா் காலங்களில் வெளிநாட்டுப் பறவைகளின் வாழ்விடமாகவும் உள்ளது.
தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயமாக கடந்த ஏப்ரல் 11 ந் தேதி நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயம் அமைப்பதற்காக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பணிகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கையும் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த குளத்தை மேம்படுத்துவதற்காக திருப்பூரில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் நிதி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா். இந்தக் குளம் சுற்றுச்சுழல் மையமாகவும், உதகையைப் போல தாவரவியல் பூங்கா அமைத்து சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மாற்றி அமைக்கப்படும். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
நஞ்சராயன் குளத்துக்குச் சொந்தமான இடம் கடந்த ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் செல்வராஜ், கோவை மண்டல வனப் பாதுகாவலா் ராமசுப்பிரணியம், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையாளா் கிராந்திகுமாா் பாடி, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- 1981 ம் ஆண்டு 6040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்டது.
- கிராமத்தில் தொடங்கி 60 கி.மீ பயணித்து அமராவதி ஆற்றில் கலக்கிறது.
குண்டடம் :
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது :- குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வடசின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கம் 1981 ம் ஆண்டு 6040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்டது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 268.04 மில்லியன் கன அடியாகும்.
வட்டமலைக்கரை ஓடையானது அமராவதி ஆற்றின் கிளை ஆறு ஆகும். இந்தஓடை பல்லடம் பொள்ளாச்சி சாலையில், அனுப்பட்டி கிராமத்தில் தொடங்கி 60 கி.மீ பயணித்து அமராவதி ஆற்றில் கலக்கிறது.
இத்தடுப்பணையானது 50 மீட்டர் நீளத்திலும், 1.5 மீட்டர் உயரத்திலும், சுமார் ஒரு நிரப்புக்கு 0.50 மில்லியன் கனஅடி வீதம் மொத்தம் 3 நிரப்புகளுக்கு 1.50 மில்லியன் கனஅடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்கும் வகையில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணை கட்டப்படுவதால் மேற்படி சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 704 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசனம் பெறும். மேலும் இத்தடுப்பணையின் 1 கி.மீ சுற்றளவில் உள்ள 56 கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். இதனால் விவசாய உற்பத்தி மற்றும் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 540 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.
- ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும் என்றார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.
இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி கல்வி சார் இயக்குநர் கோபால்சாமி வரவேற்றார். முதல்வர் சுந்தரராஜ் விழாவை தொடங்கி வைத்தார். டீன் மாரிச்சாமி வரவேற்றார்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 540 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒவ்வொரு துறையிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பதக்கம், சான்றி தழ்களையும் வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமத்தில் இருந்து ஏழை, எளிய மாணவ, மாணவிகள், பயன்பெறும் வகையில் மூத்த தகப்பனாராக இருந்து தாளாளர் சோலைசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி கலை அறிவியல் துறையிலும் சிறந்து விளங்க முடியும். மனதிற்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகமாக மாறி வருவதால் மாணவ-மாணவிகள் அதை கவனத்தில் கொண்டு சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
அரசு வேலை மட்டுமின்றி தொழில் முனைவோ ராகவும் மாணவர்கள் மாற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும்.
நகரம் மற்றும் கிராமத்தில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு வித்தியாசம் உள்ளது. நகரத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பட்டம் பெறுவதை தமிழக அரசின் சார்பில் பாராட்டுகிறேன். கல்லூரி படிப்புடன் நிறுத்தி விடாமல் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அதிலும் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை புரிந்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், சாத்தூர் கடற்கரை ராஜ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி நிர்வாகத்தினர் ஒருங்கி ணைப்பாளர்கள் சிவகுமார், பிரேம்குமார், ஜெயபாலன் மற்றும் பேராசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று அதிகாலை 3 மணியளவில் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:-
மாண்டஸ் புயல் பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு குடும்பத்தினருக்கு தலா ரூ4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன,மீனவர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை.
புயலால் 40 இயந்திர படகுகள்,160 வலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.694 மரங்கள் சாய்ந்துள்ளன. புயலால் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. 216 இடங்களில் நிவாரண மையம் அமைக்கப்பட்டிருந்தன. 10,743 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சிங்கம்புணரி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
- ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றி யங்களில் வேலைவாய்ப்பு முகாம், பள்ளி மற்றும் மயான பகுதிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், நியாயவிலைக் கடை திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தனியார் கல்வி நிறுவனமான எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஒன்றிய, நகர தி.மு.க. ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான ஆணையை முகாமில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பாக ரூ.19 லட்சம், அரசு நிதியில் இருந்து ரூ.38 லட்சம் என மொத்தம் ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு மேல்நி லைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடந்தது.
மேலும் முஸ்லிம்களின் மயான பகுதிக்கு சுற்றுச்சுவர் கட்ட அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சம், அரசு நிதி ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் சார்பில் முறையூர், அரளிப்பட்டி, கிருங்கா கோட்டை, சூரக்குடி, காளாப்பூர், சிங்கம்புணரி போன்ற பகுதிகளில் உள்ள 91 பயனாளிகளுக்கு ரூ.27.01 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன், புதிய வாகனம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு மற்றும் பிரான்மலை ஊராட்சி போன்ற பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கையான முழுநேர புதிய நியாய விலை கடைகளை அமைச்சர் திறந்து வைத்து அந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் மகளிர் சுயநிதி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கோ.ஜினு, துணைப் பதிவாளர் குழந்தை வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல்,ஆவின் பால்வளத் தலைவர் சேங்கை மாறன், பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ஜான் முகமது, கவுன்சிலர் செந்தில் கிருஷ்ணன், 2-வது வார்டு கவுன்சிலர் முகமது நிஷா ஷேக் அப்துல்லா, பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. அரசின் ஒரே சாதனை உதயநிதி அமைச்சராவது தான் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
- விலைவாசி உயர்வினால், மக்களின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிட்டது.
மதுரை
தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் விலைவாசிஉயர்வை கண்டித்து, உசிலம்பட்டியில் அதி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
கடுமையான 150 சதவீத சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலைவாசி உயர்வினால், மக்களின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிட்டது. மக்களை வாழவைக்க, பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரை மாவட்டத்தில் 18 கால மாத கால ஆட்சியில் செய்த ஒரு மகத்தான சாதனை என்றால், ஸ்டாலின் தனது தந்தை பெயரில் நூலகம் அமைத்தது தான். எந்த திட்டங்களும் மதுரைக்கு செய்யவில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில் பல கோடி ரூபாயை நூலகத்திற்காக காட்டும் அக்கறை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
சொத்து வரி உயர்வை கேட்டால், இன்றைக்கு சொத்தை விற்றுதான் கட்ட முடியும். அந்த அளவில் சொத்துவரி கட்டணம் உள்ளது. தமிழகத்தில் லஞ்சம் ஊழல் அதிகரித்துள்ளது. கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் துறைதோறும் விருதுகளை பெற்று சாதனை படைத்தோம்.ஆனால் இன்றைக்கு துறைதோறும் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு நிர்வாகம் ஸ்த ம்பித்துள்ளது.
58 கால்வாய் திட்டம் என்பது, 40 ஆண்டு கனவு திட்டம் ஆகும். இந்தப் பகுதியில் தண்ணீரை திறந்து மக்களின் கண்ணீரை நாம் துடைத்தோம். ஆனால் அதற்கு எல்லோரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.இதற்கு உரிமை உள்ளவர்கள் நாங்கள் தான். இன்றைக்கு இந்த நீர் திறக்கவே போராடி திறக்க வேண்டிய நிலையில் உள்ளது.
18 மாத தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை என்றால், தனது மகன் உதயநிதியை அமைச்சராக்குவது தான், வேறு எந்த சாதனை செய்யவில்லை.இன்றைக்கு மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது இது எதிர்த்து போராடும் நிலையில் உள்ளது. ஊர் எங்கும் ஒரே பேச்சு என்றால், எப்போது எடப்பாடியார் தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பேற்பார் என்பதுதான், அந்த நாள் மக்களுக்கு பொன்னாள் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
- சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
வெள்ளகோவில்:
தமிழக ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு, தனியார், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், திருப்பூர் பாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், உடுமலைப்பேட்டை வட்டத்தில் ஆண்டியக்கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் தமிழக அரசின் விருதுகளை பெற்றிருக்கிறது. இந்த விருதுகளைப் பெறக்கூடிய வகையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ம் பயிலும் மாணவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
- டாக்டர் குமரேசனிடம் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
- குரல் மாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு அரிய சிகிச்சை வழங்கப்படும்.
டாக்டர் எம்.குமரேசன், கே.நவீன்பாரத் ஆகியோர் எழுதிய மகரக்கட்டு மருத்துவம், கீச்சுக்குரலுக்கு புதிய எளிய சிகிச்சை என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-

டாக்டர் எம்.குமரேசன் ஆதாரப்பூர்வமாக மருத்துவ சிகிச்சையை மேற் கொண்டு வருகிறார். அவர் 1,010 பேருக்கு குரல் சிகிச்சை அளித்து, அவர்களின் மனநிலையை மாற்றம் செய்து இருக்கிறார். இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இவரிடம் சிகிச்சை பெற்று நலம் பெற்று இருக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையை அவர் 2 பேருக்கு சொல்லி கொடுத்து இருப்பதாக கூறினார்.
அவருடைய ஆற்றலை இன்னமும் பல நூறு பேருக்கு பயிற்றுவித்து இருக்க வேண்டும். டாக்டர் குமரேசன் மூலம் பலர் பயிற்சி பெற வேண்டும். கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற எவ்வளவோ பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் குரல் மாற்றத்தை ஏற்படுத்துகிற இந்த அரிய சிகிச்சை குறித்து விரைவில் முதலமைச்சரிடம் தெரிவித்து, தமிழக மருத்துவ துறையில் சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். டாக்டர் குமரேசன் மூலம் ஏராளமான டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவ அறிவியல் கழகத் தலைவர் டாக்டர் கமலி ஸ்ரீபால், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் ஐ.லியோனி, ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுவின் தலைவர் பி.ஜோதிமணி, டாக்டர்கள் சொக்கலிங்கம், கே.காந்தராஜ், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சென்னைவாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஐ.பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவிப்பது ஆகிய 2 தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்.
- மாவட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் பனகல் கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷாபுண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் முத்துச்செல்வம், ஊராட்சி செயலர் ராதாகிருஷணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷா புண்ணியமூர்த்தி, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிப்பது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஐ.பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவிப்பது ஆகிய 2 தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.