என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minorities"

    • குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிக்கிறது
    • அது குருதுவாராவாக, மசூதியாக, இந்து கோவிலாக எதுவாக இருந்தாலும் ஒன்றுதான்

    மதத் தளங்களை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அசாம்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் உடனுக்குடன் புல்டோசர்களால் இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

    இதுதொடர்பான வழக்குகள் குறித்த விசாரணையில் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதின்மன்றதால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி வீடுகளை இடித்த அசாம் பாஜக அரசுக்கு நேற்றைய தினம் நீதிமன்ற அவமதிப்பு நோட்ஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில் புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்குகள் மீண்டும் இன்று நீதிபதிபர் பி ஆர். காவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசுகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா, இடிக்கப்படும் வீடுகள் மட்டும் கட்டடங்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே நோடீஸ் வழங்கப்பட்டது என்று வாதிட்டார். மேலும் குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு, எங்களது [நீதிபதிகளது] பேச்சு மதம் மற்றும் சமுதாயங்களுக்கு அப்பாற்பட்டது. மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால் சாலைகளிலும், நடைபாதைகளிலும், நீர்நிலைப் பகுதிகளிலும், ரயில்வே லைன் பகுதிகளிலும் உள்ளவற்றை இடித்து அகற்றலாம் என்று ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.

    நடு ரோட்டில் ஒரு மதத் தளம் இருக்குமாயின், அது குருதுவாரா [சீக்கியர்களின் புனித கோவில்] ஆக இருந்தாலும் மசூதியாகி இருந்தாலும், இந்து கோவிலாக இருந்தாலும் அது மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பது கூடாது. சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான், அது மதம் சார்ந்தோ தனிநபர் நம்பிக்கை சார்த்தோ இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

    • சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என குற்றம்சாட்டி இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
    • தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்ற வாதிடப்பட்டது.

    இஸ்லாமிய மத பள்ளிகளான மதரஸாக்களை மூடி அங்கு பயிலும் மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலங்களுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மதரஸா பள்ளி மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இது சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என குற்றம்சாட்டி இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நடத்தும் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்ற வாதிடப்பட்டது.

    இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், உ.பி., திரிபுரா அரசுகளின் உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டனர். மேலும் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்கனவே செயல்படுத்திய உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். 

    • இந்து மத தலைவர் மீதான கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது.
    • இந்த நிகழ்வுகளை ஊடகங்களின் மிகைப்படுத்தல் என ஒதுக்கிவிட முடியாது.

    புதுடெல்லி:

    வங்கதேசத்தில் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்ற நிலையில், அங்குள்ள சிறுபான்மை மக்கள்மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே, வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாகக் கூறி அந்நாட்டில் உள்ள இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து வங்கதேசத்தில் உள்ள இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வங்கதேசத்தில் இந்து மத தலைவர் மீதான கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது. அந்நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வங்கதேச இடைக்கால அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. வங்கதேச இடைக்கால அரசாங்கம் அங்குள்ள அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

    வங்கதேசத்தில் பயங்கரவாத சொற்பொழிவுகள், வன்முறை சம்பவங்கள் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

    இந்த நிகழ்வுகளை ஊடகங்களின் மிகைப்படுத்தல் என ஒதுக்கிவிட முடியாது. சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வங்கதேசத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.

    இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட வழக்கில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதை இந்தியா கவனித்து வருகிறது.

    இந்த வழக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் கையாளப்படும். சம்பந்தப்பட்ட அனைவரின் சட்ட உரிமைகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

    • இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
    • மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது

    வங்கதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இந்து மத சாமியாரும் இஸ்கான் தலைவருமான சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

     

    இந்நிலையில் வங்கதேசத்தில் 2 இந்து மத சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ண தாஸ்க்கு உணவு, மருத்துப்பொருட்கள் மற்றும் பணத்தை கொடுக்கச் சென்ற ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் ஆகிய இரு இஸ்கான் இளம் சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த கைது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத வங்கதேச போலீஸ் வழக்குகள் சந்தேகத்தின் பேரில் கொத்வாலி காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே சின்மோய் கிருஷ்ண தாஸ் கைதை எதிர்த்து போராட்டங்களும் நடந்து வருகிறது. சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

     

    முன்னதாக மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க கோரி வங்கதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உலகளாவிய அமைப்புக்கு தடை விதிப்பது சடத்தியமில்லை என நீதிமன்றம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

    • அவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள்.
    • ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

    சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வலுத்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் மோதல் தீவிரமடைந்துள்ளது. சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் நேற்று வன்முறை வெடித்தது. அங்குள்ள மூன்று கிராமங்களில் ஆயுதமேந்திய ஆசாத் ஆதரவு குழுவினரை அரசு ஆதரவு படைகள் வெளியேற்ற முயன்றனர். அப்போது நடந்த மோதலில் 70 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

    இந்நிலையில் சிரிய அரசு ஆதரவு படையினரும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் கடந்த இரண்டு நாட்களில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றனர் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    அவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக அதிகாரி ராமி அப்துல் ரஹ்மான் இன்று (சனிக்கிழமை) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.  

    • ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்திலும், உயர் பதவிகளிலும் இருந்து வந்தார்கள்.
    • பெண்கள் நிர்வாணமாகத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) இன் இடைக்கால அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளுக்கும் முன்னாள் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

    கடந்த வியாழன் முதல் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அந்நாட்டின் சிறுபான்மையினரான அலாவைட்  பிரிவை பின்பற்றுபவர்கள் பலரை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

    ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்திலும், உயர் பதவிகளிலும் இருந்து வந்தார்கள்.

    எனவே மூன்று மாதங்களுக்கு ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அலாவைட்டுகள் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில்தான் சிரியாவின் அலாவைட்கள் அதிகம் இருக்கும் கடலோர மாகாணமான லடாகியாவில் தற்போது வன்முறை வெறியாட்டங்கள் வருகின்றன.

     

    பிரிட்டனைச் சேர்ந்த சிரிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பொது மக்களில் 745 பேரும், அரசு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 125 பேர் மற்றும் முன்னாள் ஆசாத்-இன் ஆதரவு கொண்ட ஆயுதப் படையைச் சேர்ந்த 148 பேரும் இந்த உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் அலாவைட் சிறுபான்மையினர் என்று கூறப்படுகிறது.

    வன்முறையைக் கட்டுப்படுத்த, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளைப் பாதுகாப்புப் படையினர் மூடிவிட்டனர். கண்ணில் படுபவர்களை அரசு படைகள் மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக்கொல்வதாகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    எங்கும் சடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகிறது என்றும் வன்முறையின் போது நடந்த கொடூரமான சம்பவங்கள் குறித்தும் அங்கிருந்தவர்கள் அசோசியேட்டட் பிரஸ் (AP) ஊடகத்திடம் விவரித்துள்ளனர்.

    அங்கு பெண்கள் நிர்வாணமாகத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதாக அசோசியேட் பிரஸ் பேட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று பனியாஸ். இங்கு சாலைகளிலும் கட்டிடங்களின் கூரைகளிலும் இறந்த உடல்கள் கிடந்தன. துப்பாக்கி ஏந்தியவர்கள் அங்கிருந்தவர்களை உடலை புதைப்பதைத் தடுத்தனர் என்று பேட்டியளித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அலாவைட் கிராமங்களில் வசிப்பவர்கள், தங்கள் சமூகத்தில் பலரின் வீடுகள் சூறையாடப்பட்டு, பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அசோசியேட் பிரஸ் அறிக்கை தெரிவிகிறது.

    மக்கள் தங்கள் வீடுகளும் கார்களும் எரிவதைக் கண்டதும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் சிலர் உயிர் பிழைக்க முடிந்தது, பலர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர் என்று பேட்டியளித்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

    • தனியார் பள்ளியில் படிக்கும் சிறுபான்மையினர் உதவித்தொகைக்கு விண்ணபிப்பது 31-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு ள்ளது.

    தகுதியான சிறுபான்மை யின மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தி ற்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் உதவித்தொகைக்கு விண்ண ப்பிக்கலாம்.

    இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
    • மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட சிறுபான்மை நலத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:-

    தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள சிறுபான்மையின சமூகத்தினா் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2 பயனாளிக்கு தலா ரூ.1.90 லட்சம் என ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, முஸ்ஸிம் மகளிா் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம், உலமா மற்றும் இதர பணியாளா்களுக்கு நல வாரியம் சாா்பில் மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம்,

    தேசிய கல்வி உதவித் தொகை (என்.எஸ்.வி), மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கிறிஸ்தவ தேவாலயம் புனரமைக்கும் திட்டம், டாம்கோ திட்டம் மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் ஆகியன சிறுபான்மையினா் நலத் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.ஆகவே, சிறுபான்மையினருக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் வாசுகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், மகளிா் திட்ட இயக்குநா் மதுமிதா, மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • 2022-23 ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த சிறுபான்மையினருக்கு சுமாா் ரூ.1.55 கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் சிறுபான்மையினா் கடன் பெற வரும் வருகிற 18-ந் தேதி முதல் ஜூலை 22ந்தேதி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் 2022- 23 ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த சிறுபான்மையினருக்கு சுமாா் ரூ.1.55 கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த முகாமானது திருப்பூா் வடக்கு வட்டத்தில், திருப்பூா் நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 ந் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரையும், திருப்பூா் தெற்கு வட்டத்தில், திருப்பூா் நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 ந் தேதி பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையிலும், அவிநாசி வட்டத்தில், பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜூலை 19 ந் தேதி காலையிலும், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜூலை 19 ந்தேதி பிற்பகலிலும் முகாம் நடைபெறுகிறது.

    பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் காங்கயம் கிளை, தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் ஜூலை 20ந்தேதி காலையில் முகாம் நடைபெறுகிறது. உடுமலை வட்டத்தில், உடுமலை நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 22 ந் தேதி காலையில் முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 -ந்தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆ லோசனை நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள்கூட்டம் திருப்பூரில் உள்ளஅலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டதலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் அப்துல் ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 -ந்தேதி திருச்சியில் நடக்கும்மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும், 15வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில்இயங்கி வரும் பள்ளிவாசலை மூட முயற்சிக்கும் காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டிப்பதுடன், சிறுபான்மையினரின் வழிபாட்டுஉரிமையை தமிழக அரசுபாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப் பதிலடி கொடுத்துள்ளார். #ImransRemarks #MohammadKaif
    புதுடெல்லி:

    சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்பதை மோடி அரசுக்கு காட்டுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பேசினார். அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத நாடு சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்று இந்தியாவுக்கு இப்போது பாடம் நடத்துகிறது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார். பாகிஸ்தானை டெரரிஸ்தான் (பயங்கரவாத நாடு) என பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் விமர்சித்தார்.

    அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப்பும் இம்ரான் கான் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிறுபான்மையின மக்களை எப்படி நடத்தவேண்டும்? என வேறெந்த நாட்டிற்கும் உபதேசம் செய்யும் தகுதி படைத்த கடைசி நாடு பாகிஸ்தான்.


    பாகிஸ்தானை தனியாக பிரித்தபோது அங்கு 20 சதவீத சிறுபான்மையின மக்கள் இருந்தனர். இப்போது 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். அதேசமயம், இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு சிறுபான்மையின மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அலகாபாத்தைச் சேர்ந்த கயிப் (வயது 38), இந்தியாவுக்காக 125 ஒருநாள் போட்டிகளிலும், 13 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். #ImransRemarks #MohammadKaif
    நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan #Minorities
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 10-ந்தேதி ‘தேசம் காப்போம்’ மாநாடு நடத்தப்படும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் மு.முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி நடைபெற்றிருக்க வேண்டிய இவ்விழா, தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடைபெறுகிறது. ஆகஸ்டு 17-ந் தேதி தமிழகம் தழுவிய அளவில் ‘ஒரு லட்சம் பனை விதைகள்’ ஊன்றுவது என்னும் செயல்திட்டத்தை அறிவித்தோம். அதனை மிகுந்த ஆர்வத்தோடு நமது தோழர்கள் நடைமுறைப்படுத்தி சாதனை படைத்ததற்காக பாராட்டுகிறேன்.

    தற்போது நாடு முழுவதும் சனாதன பயங்கரவாதம் தலைதூக்கி உள்ளது. ஜனநாயகத்துக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்ட பூர்வீகக் குடிகளுக்கும், இதர விளிம்புநிலை மக்களுக்கும் பாதுகாப்பில்லை. தபோல்கர், பன்சாரே, கல்புர்க்கி, கவுரிலங்கேஷ் போன்ற கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகளை குறிவைத்து படுகொலை செய்த கொடூரமான போக்கு தலைவிரித்தாடுகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் நடந்தேறி வருகின்றன.


    இதற்கெல்லாம் காரணம் சங்பரிவார் அமைப்புகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த அமைப்புகளின் அடிப்படை நோக்கம் இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரமாக’ பிரகடனம் செய்ய வேண்டும் என்பது தான். இது மிகவும் தீங்கான வலதுசாரி பயங்கரவாத அரசியலாகும். இதில் சனாதன் சன்ஸ்தா எனும் பயங்கரவாத அமைப்பு இந்திய அளவில் 34 பேரை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமாரும் ஒருவர் என அவர்களின் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகத்திலும் அது தலைதூக்கி உள்ளது. அண்மையில் தென்காசி, செங்கோட்டை, வந்தவாசி, வேலூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அறிவோம்.

    தமிழ்நாடு உள்பட இந்திய தேசத்தை சூழ்ந்துள்ள வலதுசாரி பயங்கரவாத தீங்குகளில் இருந்து மக்களை பாதுகாப்பது நமது கடமையாகும். ஆகவே, சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து ‘தேசம் காப்போம்’ என்ற மாநாட்டை நமது கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி நடத்த உள்ளோம்.

    தேர்தலுக்காக அல்லாமல் தேசத்துக்காக மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் மதசார்பற்ற சக்திகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். #Thirumavalavan #Dalit #Minorities
    ×