என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monkeys"

    • பொன்னேரி பகுதிகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வீடுகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம், திருவாயர்பாடி, வேம்பட்டு, காந்திநகர், மெதுர், பொன்னேரி ரெயில் நிலையம், பொன்னேரி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள், தங்களின் குட்டிகளுடன் அட்டகாசம் செய்து வருகின்றன.

    பஜாரில் உள்ள கடைகளின் உள்ளே புகுந்து தின்பண்டங்களை எடுத்துக் கொண்டும், பழக்கடைகளில் பழங்களை எடுத்துக் கொண்டும் செல்கின்றன. அந்த குரங்குகளை பொதுமக்கள் விரட்டினால் அவை அவர்களை கடிக்க வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    மேலும் சிறுவர்கள் கையில் வைத்துள்ள தின்பண்டங்களையும் குரங்குகள் பறித்து கொண்டு செல்கின்றன. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியு உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'பொன்னேரி பகுதிகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் தின்பண்டங்களை தொங்கவிட முடிவதில்லை. வீடுகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்கிறது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும்' என்றனர்.

    • பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ராஜ்ண்ணா சிர்சில்லா மாவட்டம், நம்பள்ளி கிராமத்தின் புறநகர் பகுதியில் 30 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து கிடந்த குரங்குகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குரங்குகளை யாராவது விஷம் வைத்து கொன்றார்களா? அல்லது வேறு எதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    போலீசார் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குரங்குகள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

    • வாழைகளின் குருத்துக்களை குரங்குகள் முறித்து போட்டுள்ளன.
    • விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    திருக்குறுங்குடியில் இருந்து வனத்துறை சோதனை சாவடிக்கு செல்லும் சாலையில் செட்டியாபத்து பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த குரங்குகள் 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழைகளின் குருத்துக்களை குரங்குகள் முறித்து போட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாசமான வாழைகள் 3 மாதமே ஆன மட்டி ரக வாழைகள் ஆகும். எனவே நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மலையடிபுதூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
    • இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை குரங்குகள் நாசம் செய்துள்ளன.

    களக்காடு:

    திருக்குறுங்குடியை அடுத்துள்ள மலையடிபுதூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    அங்குள்ள மரங்கள் மற்றும் பொத்தையில் தஞ்சமடைந்துள்ள குரங்குகள் கூட்டம், கூட்டமாக வீடுகளுக்குள் சென்று பொருட்களை நாசம் செய்து வருகின்றன. வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் கொய்யா, மாதுளை போன்ற மரங்களை ஒடித்து விடுகின்றன. தென்னை மரங்களில் தேங்காய்களை பறித்து வீசுகின்றன.

    மலையடிபுதூரில் உள்ள விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழைகளையும் குரங்குகள் நாசம் செய்து வருகின்றன. நடப்பட்டு 1 மாதமே ஆன வாழைக்கன்றுகளின் குருத்துக்களை குரங்குகள் தின்று நாசம் செய்வதால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை குரங்குகள் நாசம் செய்துள்ளன.

    இரவு மற்றும் பகல் நேரங்களிலும் குரங்குகளின் அட்டகாசம் நீடிப்பதால் விவசாயிகள் அவைகளை விரட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

    எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குரங்குகள் நாசம் செய்த வாழைக்கன்றுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாலி பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதை வனத்துறையினர் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    திருவெண்காடு:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுற்றித்திரியும் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    குரங்குகள் நாள்தோறும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து, ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வி திருமாறனை சந்தித்து குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சீர்காழியில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    மரபணு திருத்தப்பட்ட 5 குரங்குகளை குளோனிங் முறையில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை, மறதி நோய் உள்ளிட்ட நோய்களை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.
    பெய்ஜிங்:

    ‘அல்‌ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட பல நோய்கள் மரபணு வழியாக சந்ததிகளுக்கு பரவுகின்றன. எனவே இந்த நோயை தடுக்க விஞ்ஞானிகள் புதுவித முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தாயின் வயிற்றில் வளர்ந்த இரட்டைக்குழந்தைகளின் நோயை மரபணுவிலேயே நீக்கி சீன விஞ்ஞானி சாதனை படைத்தார். அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அனுமதி பெறாமல் இந்த பரிசோதனை மேற்கொண்டதாக விஞ்ஞான உலகம் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த நிலையில் மரபணு கோளாறு நீக்கப்பட்ட 5 குரங்குகளை ‘குளோனிங்’ முறையில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை, மன அழுத்தம் மற்றும் ‘அல்‌ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட நோய்களை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    முதன் முறையாக குளோனிங் முறையில் மரபணு கோளாறு நீக்கப்பட்ட குரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்த 2 ஆய்வு கட்டுரைகள் அறிவியல் இதழில் வெளியாகி உள்ளன.

    ‘குளோனிங்’ குரங்குகள் ஷாங்காயில் உள்ள சீன அறிவியல் அகாடமியில் நரம்பியல் அறிவியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 70 வயது நபரை கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் பக்பட் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #stonedtodeath #stonedtodeathbymonkeys #monkeymenance
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி, மதுரா, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள வீடு, கடைகளுக்குள் கூட்டமாக நுழையும் குரங்குகள் பொருட்களை நாசப்படுத்துவதுடன், திண்பண்டங்களையும் சில வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளையும் தூக்கிச் சென்று விடுவதுண்டு.

    இந்நிலையில், இங்குள்ள பக்பட் மாவட்டத்தை சேர்ந்த 70 வயது முதியவரை செங்கல் மற்றும் அரைக்கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இங்குள்ள டிக்ரி குராமத்தில் கடந்த 17-ம் தேதி விறகு சேகரிக்க சென்ற எனது சகோதரர் தரம்பால்(70) என்பவரை குரங்குகள் சூழ்ந்துகொண்டு கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். எனவே, குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்தாரர் வலியுறுத்தி வருகிறார்.



    ஆனால், இந்த சம்பவத்தை போலீசார் வேறுவிதமாக விவரிக்கின்றனர். உயரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் குவியல் அருகில் தரம்பால் படுத்து தூங்கியுள்ளார். அதன்மீது குரங்குகள் குதித்ததால் செங்கல் சரிந்து அவர்மீது விழுந்ததில் படுகாயமடைந்த தரம்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. #stonedtodeath #stonedtodeathbymonkeys #monkeymenance
    ×