என் மலர்
நீங்கள் தேடியது "monsoon session"
- புதிய வருமான வரி மசோதா 2025 பாராளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
- வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
புதுடெல்லி:
புதிய வருமான வரி மசோதா 2025 பாராளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பேசியதாவது:
புதிய வருமான வரி மசோதா பாராளுமன்றத்தின் அடுத்த மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நிதி மசோதா 2025, வரி செலுத்துவோரை கவுரவிப்பதற்காக முன்னெப்போதும் இல்லாத வரி நிவாரணத்தை வழங்குகிறது.
சர்வதேச பொருளாதார நிலையில் உள்ள நிச்சயமற்ற தன்மையை நிவர்த்தி செய்ய ஆன்லைன் விளம்பரங்கள் மீதான சமன்படுத்தல் வரி ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.
- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறும்
- கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், 2023 ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை தொடரும். மழைக்காலக் கூட்டத்தொடரின் போது சட்டமன்ற அலுவல் மற்றும் பிற விஷயங்கள் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பங்களிக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் வலியுறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இக்கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மணிப்பூர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
- இன்று வெளியான வீடியோ இதன் நோக்கத்தை இன்னும் அதிகரித்துள்ளது
இந்திய பாராளுமன்றம் பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆயத்தம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் நின்று மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்படும் காட்சி இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குள்ளாகி வரும் நிலையில், பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பல்வேறு கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம.பி. எலராமன் கரீம், காங்கிரஸ் எம்பி. இம்ரான் பிரதாப்கார்கி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
- 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசுகிறார்
- பிரதமர் மோடி இரு அவைகளிலும் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வியாழக்கிழமை (20-ந்தேதி) தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அலுவல் பணி ஏதும் நடைபெறாமல் இன்று காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையிலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இன்று காலை பாராளுமன்றம் தொடங்கியதும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இதன்காரணமாக மதியம் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை பாராளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அமளியில் ஈடுபடுவது ஏன்? என்பது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் ''நாங்கள் விவாதத்திற்கு தயார், ஆனால் 140 கோடி மக்களின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பேசிய நிலையில், அந்த மக்களின் பிரதிநிதிகள் அமர்ந்து இருக்கும் பாராளுமன்றத்திற்குள் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும்'' என்றார்.
- கடந்த மூன்று அலுவல் நாட்களில் மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைப்பு
- இன்று காலையிலும் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தால் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் பாதிக்கப்பட்டன. பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 2 நாட்களாக முடக்கப்பட்டது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாராளுமன்றம் இன்று 4-வது நாளாக முடங்கியது. பாராளுமன்றம் மக்களவை காலை 11 மணிக்கு கூடியது. அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் பிரச்சினையை கிளப்பினார்கள்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. சபை கூச்சல்-குழப்பம் நிறைந்து காணப்பட்டது. இதனால் மக்களவையை பிற்பகல் 2 மணி வரை சபா நாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார்.
மேல் சபையிலும் மணிப்பூர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைக்காக அமளி நிலவியது. ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி அந்த கட்சி நோட்டீஸ் கொடுத்தது.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். தொடர்ந்து கூச்சல்-குழப்பம் நிலவியதால் அவை தலைவர் ஜெகதீப் தன்கர் 12 மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.
மணிப்பூர் விவகாரத்தில் பாராளுமன்ற இரு அவைகளும் இன்று 4-வது நாளாக முடங்கியது.
- பாராளுமன்ற இரு அவைகளும் 4-வது நாட்களாக முடங்கியுள்ளன
- மோடியை அவையில் பேசவைக்க இது சிறந்த வழி என நினைக்கும் எதிர்க்கட்சிகள்
I.N.D.I.A. கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிரான சம்பவம் குறித்து பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் தனது கண்டனத்தை தெரிவித்தார். ஆனால், மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் இதுகுறித்து அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் பேச வைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும் என்பதால், எதிர்க்கட்சிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். மாநிலங்களைவிலும் இதுபோன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.
- மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
- சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுடெல்லி:
மணிப்பூர் கலவர சம்பவத்தால் பாராளுமன்றம் இன்று 4-வது நாளாக முடக்கப்பட்டது. மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்தினார். சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
- பிரதமர் மோடி பதில் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விரிவான அறிக்கையை இரு அவைகளிலும் சமர்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் என மத்திய மந்திரிகள் தெரிவித்து வருகிறார்கள்.
என்றாலும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் 4-வது நாளாக அவைகளை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ''மணிப்பூர் விவகாரம் குறித்து அமித் ஷா பேச இருக்கிறார். அதேபோல் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து விவாதிக்க விரும்புகிறோம்'' என்றார்.
இதற்கிடையே மக்களவையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் பிரதமர் மோடி மக்களவையில் பேசியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பேசவைக்க எதிர்க்கட்சிகள் இந்த முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தால், அதன்பின் ஆறு மாதங்களுக்கு இதுபோன்று தீர்மானம் கொண்டு வர முடியாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள போதுமான எம்.பி.க்கள் எண்ணிக்கை பா.ஜனதாவிடம் உள்ளது.
- பிரதமர் மோடியை பேச வைக்க இது ஒன்றே வழி என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த முடிவு
- மக்களவையில் இரண்டு கட்சிகளின் எம்.பி.க்கள் கடிதம் கொடுத்துள்ளனர்
பா. ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதற்கான அனைத்து வேலைகளும் நேற்றே முடிவந்து விட்டன. இன்று அவை தொடங்கியதும் அதற்கான நகர்வுகளை காங்கிரஸ் தலைவர் எடுத்துச் செல்வார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.
- காங்கிரஸ் எம்.பி. முன்மொழிய எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் ஆதரவு
- அனைத்துக்கட்சி தலைவர்களிடம் ஆலோசித்த பிறகு தேதி அறிவிக்கப்படும் என்றார் சபாநாயகர்
பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர முடிவு செய்தன. அதன்படி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை இன்று காலை வழங்கினர்.
இன்று காலை மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் 12 மணிக்கு அவை கூடியதும், நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அனைத்துக் கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.
முன்னதாக,
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாத அளவுக்கு மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பாகவும், 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் குறித்தும், பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது. மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, உள்துறை மந்திரி அமித் ஷா மூலம் பதில் அளிக்கும் என்று கூறுகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை. பிரதமர்தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் கடந்த 20, 21, 24, 25-ந்தேதிகளில் 4 நாட்கள் பாராளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் சுமூக நிலை ஏற்படுத்துவதற்காக சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்துழைப்பு அளிக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கடிதம் அனுப்பினார். மணிப்பூரில் வன்முறை ஏன் ஏற்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமித் ஷாவின் கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன.
இதற்கிடையே பிரதமர் மோடியை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க செய்யும் வகையில் எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் தலைவர் கார்கே ஆலோசனை நடத்தினார். அப்போது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சட்ட விதிகளின்படி பிரதமர் விளக்கம் அளித்தே தீர வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து நேற்று காலை மற்ற கட்சித் தலைவர்களுடன் கார்கே விவாதித்தார். இதன் தொடர்ச்சியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்தெந்த வகையில் நெருக்கடி கொடுக்க முடியும் என்பது பற்றியும் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று மதியம் வரை நீண்ட நேரம் ஆய்வு செய்தனர்.
பல்வேறு வழிமுறைகளை ஆலோசித்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முடிவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருமனதாக மேற்கொண்டனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆவணங்கள் தயாரிக்கும் பணியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மேற்கொண்டனர்.
பாராளுமன்றத்தில் எந்த ஒரு எம்.பி.யும் 198-வது பிரிவின் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும். ஆனால் அந்த தீர்மானத்துக்கு குறைந்த பட்சம் 50 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டிருக்க வேண்டும். மேலும் மக்களவை தொடங்குவதற்கு முன்பு காலை 10 மணிக்குள் அந்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும். அதை சபாநாயகர் ஆய்வு செய்வார். அதில் கையெழுத்து போட்டுள்ள 50 எம்.பி.க்கள் பற்றி கணக்கிடுவார். அதன் பிறகுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு தேதியை அறிவிப்பார்.
இந்த நடைமுறைகளை எடுத்து வைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் ஆவணத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சோனியா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.
இதையடுத்து பாராளுமன்ற காங்கிரஸ் துணை தலைவரும், அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகாய் மக்களவை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் மக்களவை செயலாளரிடம் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கடிதங்களை ஒப்படைத்தார்.
- பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் (No-Confidence Motion) கொண்டு வரலாம்.
- வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் இந்த தீர்மானம் வெற்றியாக கருதப்படும்.
ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு ஏற்பதாக மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்கட்சியோ அல்லது எதிர்கட்சி கூட்டணியோ நம்பிக்கை இல்லா தீர்மானம் (No-Confidence Motion) கொண்டு வரலாம்.
ஆளும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கெதிராகவோ அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராகவோ செயல்படுவதாக கருதும்போது இதனை கொண்டு வந்து ஆளும் அரசாங்கத்தின் வழிமுறைகளை எதிர்கட்சிகள் தீர்மானிக்க முடியும்.
எனவே, தேவைப்படும்போது ஒரு ஆயுதமாக இதனை பயன்படுத்தும் நோக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த வழிமுறை அமைகிறது.
மக்களவையின் உறுப்பினர்களில் யார் வேண்டுமென்றாலும் இதனை கொண்டு வரலாம். தீர்மானம் கொண்டு வருவது குறித்த தகவல்களை எழுத்துபூர்வமாக காலை 10 மணிக்குள் சபாநாயகருக்கு அளிக்க வேண்டும். ஆனால் அதற்கு குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும்.
சபாநாயகர் இதனை விவாதத்திற்கு எடுத்து கொள்ளலாமா? வேண்டாமா? என தீர்மானிப்பார். அனுமதிக்கும் பட்சத்தில் அதற்கான தேதியும் நேரமும் தெரிவிப்பார். மக்களவையின் 198 விதிகளின் கீழ், சபாநாயகர் அழைப்பு விடுத்த பின்னரே இதனை அறிமுகப்படுத்தி விவாதிக்க முடியும்.
இந்த தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர் முதலில் பேச, ஆளும் கட்சி தரப்பு இதற்கு ஒரு விளக்கமளித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்கும். எதிர்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் இதன் மீது கேள்வி எழுப்பி கருத்துக்களை கூறுவார்கள்.
நீண்ட, முழுமையான விவாதத்திற்கு பிறகு மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் இந்த தீர்மானம் வெற்றியாக கருதப்படும். அவ்வாறு நடந்தால் ஆளும் அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.
மாறாக தீர்மானத்திற்கு போதிய பெரும்பான்மை கிடைக்காமல் போனால், ஆளும் அரசு வெற்றி பெற்றதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்படும்.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து மக்களவையில் 27 முறை இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
தற்போது காங்கிரஸ் கட்சி, பல கட்சிகளின் உதவியுடன் புதிதாக அமைத்துள்ள கூட்டணியின் ஒரு பகுதியாக, தெலுங்கானாவின் பாரதிய ராஷ்டிர சமிதி (BRS) உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்களவையில் 2 தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்தது.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் 2018-ம் ஆண்டு நரேந்திர மோடி வரை பல தலைவர்கள் இந்த தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர்.
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக கூட்டணி அரசு கடந்த 2018-ம் ஆண்டு சந்தித்த நம்பிக்கையில்லா தீர்மானம் 199 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற இருக்கிறது
- தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதாக புகார்
தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில் அலுவல் பணிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நோட்டீஸில் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதாக டி.ஆர். பாலு அதில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதை ஏற்றுள்ள சபாநாயகர், விவாதம் நடத்துவதற்கான நேரம் தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கிடையே இது குறித்து விவாதிக்க அனுமதிப்பாரா என்பது கேள்விக்குறியே.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், அரசுக்கும் இடையே பல்வேறு விசயங்கள் தொடர்பாக மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.