என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moon"

    • நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
    • இத்திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல சுவாரஸ்ய தகவல்கள் கண்டறியப்படலாம் என இஸ்ரோ தெரிவித்தது.

    டேராடூன்:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரகாண்டின் டேராடூனில் ஆகாஷ் தத்வா மாநாடு நடந்தது. இதில் அலகாபாத் சார்பு இயற்பியல் ஆய்வக இயக்குனர் அனில் பரத்வாஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டத்தின்படி, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    சூரிய வெளிச்சமே இல்லாத நிரந்தர இருளைக் கொண்ட நிலவின் மறுபக்கத்தைக் குறித்து ஆய்வு செய்ய இந்த திட்டம் உதவும்.

    இந்த திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கண்டறியப்படலாம் என தெரிவித்தார்.

    • பவுர்ணமி அன்று சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கி கொண்டிருக்கிறது.
    • மூலவர் போற்றிகளை பாராயணம் செய்ய ஸ்ரீ காங்கேய சித்தர் பீட வழிபாட்டு குழு ஏற்பாடு செய்திருந்தார்.

    நாகப்பட்டினம்:

    மார்கழி திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்த நாளான நேற்று நாகூரில் உள்ள காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் பவுர்ணமி யாகம் சிறப்பாக நடைபெற்றது.

    இந்நாளில் சித்தர்கள் பீடத்தில் யாகம் செய்து வழிபடுபவர்களுக்கு உடல், மனம், ஆன்மாவால் செய்த பாவங்கள் சித்தர்கள் அருளால் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். பவுர்ணமி அன்று சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கி கொண்டிருக்கிறது.

    மாதம்தோறும் பௌர்ணமியாகத்தை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார், பழனிவேல் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் சிவபுராணம் மற்றும் 108 மூலவர் போற்றிகளை பாராயணம் செய்ய ஸ்ரீ காங்கேய சித்தர் பீட வழிபாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆசிரியர் சசிகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

    • நிலாவில் நீர் வினியோகத்தின் பரந்த பகுதிக்கான வரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • மேற்பரப்பில் நீர் எவ்வாறு நகர்கிறது என்பது பற்றியும், தெளிவான, அடையாளம் காணக்கூடிய நிலாவின் அம்சங்களும் உள்ளது.

    நிலாவில் தண்ணீர் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. நிலாவில் தண்ணீர் இருந்தது என்பதை உறுதி செய்யும் விதமாக நிலாவிலேயே தண்ணீர் உருவானதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் அமெரிக்காவும், ஜெர்மனியும் இணைந்து இயக்கும் அகச்சிவப்பு வானியல் (சோபியா) விண் கலத்திற்கான ஸ்ட்ராடோஸ்பெரிக் அப்சர்வெட்டரியின் தரவு மூலம் நிலாவில் நீர் வினியோகத்தின் பரந்த பகுதிக்கான வரைப்படம் உருவாக் கப்பட்டுள்ளது. அதில் நிலாவின் மேற்பரப்பில் நீர் எவ்வாறு நகர்கிறது என்பது பற்றியும், தெளிவான, அடையாளம் காணக்கூடிய நிலாவின் அம்சங்களும் உள்ளது. குறிப்பாக ஆர்ட்டெமிஸ் பயணங்கள் சந்திரனில் தென் துருவத்தை இலக்காக கொண்டு நீண்ட இருப்பை உருவாக்குவதற்கும், நீண்ட கால பணிகளுக்கான ஆயத்த தலங்களை உருவாக்கு வதற்கும் இருக்கும்.

    • சுக்கிரன், சந்திரனுக்கு அருகில் காணப்பட்ட அற்புதமான காட்சியை நாசா டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது.
    • உலகெங்கிலும் உள்ள வானத்தை நோக்குபவர்களை மகிழ்வித்தது.

    வானில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் சூரிய குடும்பத்தில் பிரகாசமான கிரகமான வெள்ளி கிரகம், சந்திரனுக்கு அருகில் மின்னிய அற்புதமான காட்சியை நாசா டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது. மிகவும் அரிய வான நிகழ்வுகளில் ஒன்றான இந்த காட்சி உலகெங்கிலும் உள்ள வானத்தை நோக்கு பவர்களை மகிழ்வித்தது.

    சந்திரனின் இருண்ட விளிம்புக்கு பின்னால் வெள்ளி மெதுவாக மறைந்ததால் இரண்டும் ஒரே பார்வையில் தோன்றின. ஒன்றாக இணைந்தன. இந்த காட்சி டுவிட்டரில் வெளியாகி வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து பயனாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி இரவு சந்திரன் உள்பட 5 கிரகங்கள் வானில் தெரியும் என கூறப்பட்டுள்ளது. இந்த 5 கிரகங்களும் நேர்கோட்டில் இல்லாமல் ஆர்ச் போல காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வருகிற 28-ந்தேதி சூரியன் மறைவுக்கு பிறகு நீங்கள் பார்க்கக்கூடிய கிரகங்களில் செவ்வாய், வீனஸ், வியாழன், புதன் மற்றும் யுரேனஸ் ஆகியவை அடங்கும். வியாழன் புதனை விட பிரகாசமாக காணப்படும். அதே சமயம் வீனஸ் அனைத்து கிரகங்களையும் விட பிரகாசமான கிரகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    அதாவது வியாழன் மற்றும் புதனின் மேல் இடது புறத்தில் வீனஸ் பிரகாசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எல்லா வற்றிலும் மிகவும் திகைப்பூட்டும் வீனஸ் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் ஹக்குடோ விண்ணில் ஏவப்பட்டது.
    • விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோ யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்படுகிறது.

    ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஐஸ்பேஸ் நிறுவனம் தனது விண்கலத்தை நிலவில் தரையிறங்க செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஐஸ்பேஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில் நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை பெற்றுவிடும்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் ஹக்குடோ விண்ணில் ஏவப்பட்டது. கடந்த மாதம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்த ஹக்குடோ விண்கலம் தற்போது 100 கிலோமீட்டர் உயரத்தில் நிலவை சுற்றி வருகிறது.

    இன்றிரவு 10.10 மணிக்கு ஹக்குடோ விண்கலம் நிலவில் தரையிறங்க இருக்கிறது. விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோ ஐஸ்பேஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட இருக்கிறது. ஹக்குடோ விண்கலம் 2.3 மீட்டர் உயரமும், 2.6 மீட்டர்கள் அகலமாகவும் உள்ளது. இதில் உள்ள எரிபொருள் உள்பட விண்கலத்தின் மொத்த எடை 1000 கிலோ ஆகும். 

    • சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
    • நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச’ யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

    குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும். 1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குருமங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம். அவற்றை பற்றிய விளக்கம்:

    1) கஜகேசரி யோகம்: குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் ``கஜகேசரி யோகம்'' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.

    2) குருச்சந்திரயோகம் : சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்களில் காணப்பட்டால் `குருச்சந்திரயோகம்' உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

    3) குரு மங்களயோகம் : குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் `குரு மங்கள யோகம்' ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.

    4) ஹம்சயோகம் : சந்தினுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச' யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

    5) சகடயோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், ``சகடயோகம்'' ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும். பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும். குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.

    சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும். குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

    "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

    நிலையாய் தந்திட நேரினில் வருக!''

    "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்". 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
    • இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.

    சென்னை:

    நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும்.

    மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சந்திரன், வியாழன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களை கண்களால் பார்க்க முடியும்.

    சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.

    இதனை தொலைநோக்கிகள் போன்ற உபகரணங்களை கொண்டு பார்க்க முடியும். கிண்டியில் உள்ள ஸ்பேஸ் ஆர்கேடில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு தொலைநோக்கிகள் மூலம் வானில் தோன்றும் கிரகங்களின் இணைப்பு நிகழ்வை பார்க்க முடியும் என அதன் தலைமை செயல் அதிகாரி நீரஜ்லடியா கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், முன்பு விண்வெளி ஆய்வு ஒரு முக்கிய பொழுது போக்காக இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொருவரும் நமது சூரிய குடும்பத்தை பற்றி மேலும் அறியவும், தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.

    இன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை 3 கிரகங்கள் நேர்கோட்டில் சந்திப்பதை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.
    • துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர்.

    வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் 'பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை 'மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும்.

    சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.

    இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். தை அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

    பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

    புண்ணிய நதியில் நீராடல்

    முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம்.

    அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும்போது பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

    சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெற முடியும்.

    திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதா நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும் ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது.

    பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால் வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும். சிரத்தையுடன் அதாவது, அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர்.

    இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக்கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச் சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.

    சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு செல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனித வாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது, இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.

    கொடிய பாவங்கள் நீங்கும்

    மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாக பிறந்தால்தான் இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும் இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

    ஆக இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.

    அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்குச் தர்ப்பணம் செய்து வரலாம். சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகாணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நாமதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

    இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து நிவர்த்தி பெற்று வரலாம்.

    பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையாளம்.

    • இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும்
    • இதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு 2037-ல் நடைபெறும்

    எப்போதாவது மட்டுமே தோன்றக்கூடிய ஒரு அபூர்வ நிகழ்வு, இன்று வானில் நடைபெற போகிறது.

    சூப்பர் மூன் எனப்படும் இந்த நிகழ்வில் வழக்கமான முழு அளவை விட நிலவு சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.

    நிலவோ அல்லது ஒரு செயற்கைகோளோ அதனுடைய சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வருகின்றபோது அது பெரிஜி என அழைக்கப்படும். அவ்வாறு நிலவு வரும்போது அதன் அளவு பெரியதாகவும், அதிக ஒளியுடன் பிரகாசமாகவும் தெரியும்.

    இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும். அதனால் பூமியின் மீது அதிக ஒளி வீசப்படும்.

    வானியலில் பெரிஜி-சிஜிஜி (perigee-syzygy) என இந்த நிகழ்வு அழைக்கப்பட்டாலும், பார்க்க மிக அழகாக வசீகரிக்கும் விதத்தில் நிலவு தென்படுவதால், இது வழக்கத்தில் "சூப்பர் மூன்" என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன், ஜூலை மாதம் தோன்றியது.

    2023-ம் ஆண்டின் 4-வது மற்றும் கடைசி சூப்பர் மூன் செப்டம்பர் மாதத்தில் நிகழும்.

    ஆகஸ்ட் மாதம் 2 சூப்பர் மூன் தோன்றும் நிகழ்வு, இதற்கு முன்பு கடைசியாக 2018-ல் நடந்தது.

    இதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு 2037-ல் நடைபெறும்.

    ஆகஸ்ட் 1-ம் தேதி சூப்பர் மூன் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தென்கிழக்கு அடிவானத்திற்கு மேலே எழும்போது முழுமையானதாகவும் பிரகாசமாகவும் தோன்றும். ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவு 12.02 மணிக்கு இந்தியாவில் இதனை காண முடியும்.

    இந்த மாதத்தின் 2-வது சூப்பர் மூன் ஆகஸ்ட் 31 அன்று நடக்கும். ஆனால், அது காலை 7.05 மணிக்கு உச்சம் அடையும் என்பதால் இந்தியாவில் அது தெரிய வாய்ப்பில்லை.

    • பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும்
    • சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது

    உலகின் முன்னணி நாடுகள், நிலவில் உள்ள வளங்களை கண்டறிவது உட்பட பல காரணங்களுக்காக நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை செய்கின்றன.

    1959லிருந்து 1976 வரை ரஷியா நிலவிற்கு ரோபோ விண்கலங்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்தது. இவற்றில் 15 வெற்றிகரமாக நடந்தது. ரஷியாவின் லூனா எனும் இத்திட்டம், மேற்கத்திய நாடுகளால் லுனிக் என அழைக்கப்படுகிறது.

    சுமார் அரை நூற்றாண்டு கழித்து மீண்டும் நிலவிற்கு ரஷியா ஒரு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, தனது நாட்டின் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தை ரஷியா ஆகஸ்ட் 11 அன்று காலி செய்ய இருக்கிறது.

    1976க்கு பிறகு ரஷியா நிலவிற்கு அனுப்பவிருக்கும் இந்த லூனா-25 எனப்படும் லேண்டர் விண்கலம், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் எனும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என்று அந்நாட்டின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லூனா-25 லேண்டர் விண்கலத்தை சோயுஸ்-2 ஃப்ரிகாட் எனும் ராக்கெட் பூஸ்டர் சுமந்து செல்லும். விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட்டிலிருந்து பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், ஏவுதளத்திற்கு தென்கிழக்கே ரஷியாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஷக்டின்ஸ்கி எனப்படும் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகஸ்ட் 11 அன்று அதிகாலை வெளியேற்றப்படுவார்கள்.

    நிலவின் தென் துருவம் நோக்கி செல்லும் ரஷியாவின் முதல் விண்கலம் இது.

    ஒரு வருட காலம் நிலவில் தங்கி, நிலவில் நீர்நிலைகளின் சாத்தியக்கூறுகள் குறித்தும், வளங்கள் மற்றும் கட்டமைப்பு குறித்தும் தகவல்களை வழங்கும்.

    இந்தியாவிலிருந்து இஸ்ரோவால், ஜூலை 14 அன்று வானில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்முயற்சி வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு எனும் புகழை இந்தியா பெறும்.

    • கடந்த 5-ந் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 பயணிக்கத் தொடங்கியது.
    • நிலவை நெருங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலம் அடுத்தடுத்து லேண்டர் மூலம் தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

    அதன் பின்னா், புவி வட்டப் பாதையில் வலம் வந்த விண்கலம், கடந்த 1-ந் தேதி புவி ஈா்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி பயணம் செய்யும் பாதைக்கு மாற்றப் பட்டது.

    அதன் தொடா்ச்சியாக கடந்த 5-ந் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 பயணிக்கத் தொடங்கியது. இதையடுத்து நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை படிப்படியாகக் குறைத்து விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனா்.

    அதன்படி சந்திரயான்-3 விண்கலம் பயணித்து வரும் சுற்றுப் பாதை தூரம் நிலவின் ஈா்ப்பு விசைக்குள் 2-வது முறையாக நேற்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணிக்கு குறைக்கப்பட்டது. அப்போது, உந்து கலனில் உள்ள திரவ எரிவாயு கருவி இயக்கப்பட்டு விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

    தற்போது குறைந்தபட்சம் 174 கி.மீ. தூரம், அதிகபட்சம் 1,437 கி.மீ. தூரம் கொண்ட நிலவின் வட்டப் பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. இதே நுட்பத்தில் நிலவுக்கும் விண்கலத்துக்குமான தூரம் மேலும் இரு முறை குறைக்கப்பட்டு, அதன் சுற்றுப்பாதை மாற்றப்படும்.

    இதன்மூலம் நிலவின் தரைப்பகுதிக்கும், விண்கலத்துக்குமான உயரம் குறைக்கப்படும். அதைத் தொடா்ந்து உந்து கலனில் இருந்து லேண்டா் சாதனம் வருகிற 14-ந் தேதி விடு விக்கப்பட்டு, திட்டமிட்டபடி வருகிற 23-ந் தேதி நிலவில் மெதுவாக விண்கலம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இன்று சந்திரயான்-3 விண்கலம் நிலவின் புதிய படங்களை அனுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது. பூமியையும் சந்திரயான்-3 படம் பிடித்து உள்ளது. லேண்டர் கருவியில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கேமிரா மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    நிலவின் மேற்பரப்பில் உள்ள கடல் போன்ற பகுதியை சந்திரயான்-3 விண்கலம் அனுப்பியுள்ள படங்கள் காட்டி உள்ளன. அந்த பகுதி நிலவின் வடக்கு, தென்கிழக்கு பகுதி யில் 2500 கி.மீ. பரப்பளவுக்கு பரவி உள்ளது.

    நிலவை நெருங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலம் அடுத்தடுத்து லேண்டர் மூலம் தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். வரும் நாட்களில் நிலவுக்கு மிக அருகில் சென்று படம்பிடிக்கும். இதன் மூலம் சந்திரயானில் இருந்து பிரியும் விக்ரம் கருவியை மிக எளிதாக நிலவில் தரை இறக்குவதற்கு வழிவகை செய்யப்படும்.

    • திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக மனைவிக்கு வாக்குறுதி.
    • லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 10 ஆயிரத்திற்கு வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளார். மேலும் திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக சஞ்சய் தனது மனைவியிடம் வாக்குறுதி அளித்து இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

    இதுபோன்ற பரிசை வாங்க வேண்டும் என்ற ஆசை, இந்தியா நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் தான் வந்தது என்று சஞ்சய் மேலும் தெரிவித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற பிறகு, தன்னால் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

     

    நானும், எனது மனைவியும் நீண்ட காலம் காதலித்து, கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்து கொண்டோம். நான் அவரிடம் நிலவை கொண்டுவருவதாக தெரிவித்து இருந்தேன். ஆனால், என்னால் அப்படி செய்ய முடியவில்லை. தற்போது எங்களது திருமணத்திற்கு பிறகு வந்த அவளின் முதல் பிறந்தநாளில், நான் அவருக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளிக்க வேண்டும் என நினைத்தேன்," என்று சஞ்சய் மஹாட்டோ தெரிவித்து உள்ளார்.

    தனது நண்பர் உதவியுடன், லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியதாக சஞ்சய் தெரிவித்தார். இதற்கான வழிமுறைகள் நடைபெற்று முடிய ஒரு ஆண்டுகாலம் ஆனதாக அவர் மேலும் தெரிவித்தார். நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றையும் சஞ்சய் மஹோட்டா தன்னிடம் வைத்திருக்கிறார்.

    முன்னதாக 2020 ஆண்டு வாக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரை சேர்ந்த நபர் தர்மேந்திர அனிஜா, தனது மனைவிக்கு நிலவில் மூன்று ஏக்கர் நிலத்தை பரிசாக கொடுத்தார். தனது எட்டாது திருமண நாளை கொண்டாடும் வகையில், மனைவிக்கு நிலவில் நிலத்தை பரிசளித்ததாக அவர் தெரிவித்து இருந்தார்.

    ×