என் மலர்
நீங்கள் தேடியது "national highway"
- சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன.
- திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நாளை விழுப்புரம் வி.சாலையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டையொட்டி, சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களுக்கு பாதை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், வி.சாலை நெடுஞ்சாலையில் சாதாரணமாகவே லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மாநாடு முன்னிட்டு கூடுதலாக 3 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மாநாட்டு மேடை பகுதி முக்கிய சாலையை ஒட்டி அமைந்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், மாநாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜீரோ டிராபிக் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஜீரோ டிராபிக் என்றால் வெளி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தவெக மாநாட்டிற்கு தொடர்புடைய வாகனங்களுக்கு மட்டுமே அனுமது வழங்கப்படும்.
மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை- திருச்சி செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றிவிடப்படுகின்றன.
திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன. போக்குவரத்து மாற்றம் காரணமாக 15 முதல் 20 கி.மீ தூரம் வரை பயண நேரம் அதிகமாகலாம் எனவும் கூறப்படுகிறது.
- செயற்கைக்கோள் கண்காணிப்புடன், தேசிய நெடுஞ்சாலைகளில் பயண தூரத்துக்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.
- நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 7 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகமான சுங்க கட்டணம் வசூலிப்பதும், தரமற்ற சாலைகளும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தி ஏற்படுத்தி இருப்பதாக நிதின் கட்காரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரே மாதிரியான சுங்க கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வாகன ஓட்டிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு அது தீர்வாக அமையும்.
முதலில், செயற்கைக்கோள் கண்காணிப்புடன், தேசிய நெடுஞ்சாலைகளில் பயண தூரத்துக்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம். அத்திட்டப்படி, சுங்கச்சாவடிகளுக்கு வேலை இருக்காது.
சமூக வலைத்தளங்களில் வாகன ஓட்டிகள் தெரிவிக்கும் புகார்களை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் மொத்த போக்குவரத்தில் தனியார் கார்களின் பங்கு 60 சதவீதம் ஆகும். ஆனால் அவற்றின் மூலம் கிடைக்கும் சுங்க வருவாய் 20 முதல் 26 சதவீதம் மட்டுமே ஆகும்.
கடந்த 2020-2021 நிதியாண்டில், நாள் ஒன்றுக்கு 37 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை அமைத்து நெடுஞ்சாலை அமைச்சகம் சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டில் அந்த சாதனை முறியடிக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 7 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. வழக்கமாக, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நெடுஞ்சாலைகள் போடப்படும் வேகம் அதிகமாக இருக்கும்.
நடப்பு நிதியாண்டில், 13 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். 'பாரத்மாலா' திட்டத்தின்கீழ், ரூ.1,000 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் பெற வேண்டி இருக்கிறது.
ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை மந்திரிசபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். ஒப்புதல் கிடைத்தவுடன், அப்பணிகளை தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி நிறுத்தப்பட்டுள்ளது.
- 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக ரூ.8 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் காலத்தின் உயரம் அதிகமாக வேண்டும் என்று அப்போதே கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட அரசு பிறகு சுமார் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் உயரம் மீண்டும் குறைந்த அளவே கட்டப்படுவதால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத நிலைமை உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் நடைபெற்று வந்த வேலையை நிறுத்தி சுமார் 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் சமூக ஆர்வலரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பாலம் கட்டும் உரிமையாளரிடம் பேசி 15 அடி உயரத்திற்கு பாலத்தை கட்ட ஏற்பாடு செய்வதாக கூறி சமூக தீர்வை ஏற்படுத்தி பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.
- விழுப்புரம் நகராட்சி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சியில், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் சார்பில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும்பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இது நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமமின்றி பணியை விரைந்து முடித்து, சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்கள் விரைந்து பணியினை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் விழுப்புரம் 4 வழிச்சாலை பகுதியிலிருந்து வரக்கூடிய மழைநீர் ஆங்காங்கே தேங்கி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்குவதை கண்டறிந்து அதை சீர் செய்திடும் வகையில் விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் (ம) பராமரிப்புத்துறையின் மூலம் 2021-2022-ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் மற்றும் பாக்ஸ் கல்வெட்டு புதிதாக கட்டுதல் என ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, தற்பொழுது புதிய பஸ் நிலையம் அருகே, புதிய பாலம் கட்டப்படுகின்றன. அதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் 2 பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணி முடிவுற்றவுடன், மழைநீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் சென்று விடுகின்ற வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிவசேனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் தன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஷோபனா, உதவி பொறியாளர்கள் வசந்தபிரியா, அய்யனார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- தேசிய நெடுஞ்சாலை இடையே சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 11, 12, 14 ஆகிய வார்டுகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வார்டுகளில் உள்ளவர்கள் விவசாய நிலங்களுக்கு மூலப்பொருள் எடுத்து செல்லவும், விளை பொருட்களை கொண்டு வரவும் சோழங்குறிச்சி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சோழங்குறிச்சி, அழிசுகுடி, பருக்கல், வாத்திகுடிகாடு, காக்காபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக உடையார்பாளையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு அணுகுசாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சோழங்குறிச்சி சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் 11, 12, 14 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சோழங்குறிச்சி சாலை அருகே உள்ள மயானத்திற்கு, இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல அருகே உள்ள தெருக்கள் வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உடையார்பாளையத்தில் இருந்து சோழங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் வருகிற 25-ந் தேதியன்று உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்

வேலூர்:
வேலூர் பகுதிக்குட்பட்ட சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லிப்ட் கேட்பதுபோல் இரவு முதல் விடியற்காலை வரை கொள்ளை கும்பல் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக வேலூரில் இருந்து பள்ளிகொண்டா டோல்கேட் இடைப்பட்ட பகுதியில் வாகன ஓட்டிகளை மறித்து செல்போன், நகை, பணம் உள்பட உடமைகளை பறிக்கின்றனர். வழிப்பறியின் போது, வாகன ஓட்டிகளை தாக்குகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பெங்களூருவில் இருந்து தோல் மூலப்பொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை, வேலூர் அடுத்த பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் 3 பேர் கும்பல் வழிமறித்தனர்.
லாரி டிரைவரை தாக்கி அங்கேயே கட்டிப்போட்டு விட்டு லாரியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து, விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்பாடி பகுதியில் அந்த லாரியை மீட்கப்பட்டது.
லாரியை விட்டுவிட்டு கடத்தல் கும்பல் தப்பிஓடி விட்டனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் வேலூர் மார்க்கமாக வந்து செல்லும் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை-சேலம் இடையே போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் புதிதாக 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த சாலை 277 கி.மீ தூரம் கிராமங்கள், காடுகள், வயல்கள் வழியே அமைக்கப்படுகிறது.
இதேபோல் சென்னை- பெங்களூர் இடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் சாலையில் வாகன நெருக்கடி உள்ளது. நீண்ட தூரம் சுற்றிச்செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க புதிதாக சென்னை-பெங்களூர் இடையே 6 வழி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க சில வருடங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. முதலில் இதன் தூரம் 240 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிலப் பிரச்சனை காரணமாக கர்நாடகத்தில் சில இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டு 265 கி.மீ ஆக இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலைப்பணியை துரிதப்படுத்தவும் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் ஒசகோட்டையில் இருந்து தொடங்கும் இந்த சாலை கர்நாடகத்தின் கோலார், ஆந்திராவின் சித்தூர், தமிழகத்தின் வேலூர், வாலாஜாபேட்டை வழியாக ஸ்ரீபெரும்புதூரில் இணைகிறது. இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் வாகனங்கள் ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி என சுற்றிச் செல்வது தவிர்க்கப்பட்டு நேரடியாக சித்தூர், கோலார் வழியாக பெங்களூர் சென்றடையலாம்.
இந்தச்சாலைக்கான நிலம் எடுப்பு பணி கர்நாடகத்தில் தொடங்கிய போது எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தப்பட்டது. தற்போது நிலம் எடுப்பு பணி மீண்டும் தொடங்கி உள்ளது.
இந்த சாலைக்காக தமிழகத்தில் வேலுர் மாவட்டம் ஆற்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட மகி மண்டலம் வனப்பகுதியில் 5.42 ஹெக்டேர் நிலம் எடுக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் அனுமதி கிடைத்ததும் நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கும்.
சமீபத்தில் வனத்துறை சம்பந்தமான உயர் அதிகாரிகளும் நிபுணர்களும் இந்தப் பகுதியை பார்வையிட்டனர். அப்போது அடர்ந்த வனங்களில் மரங்களை அழிக்காமல் வனப்பகுதியையொட்டி மாற்று வழியில் சாலையை அமைக்க ஒப்புதல் அளித்தனர்.
திண்டிவனம்- கிருஷ்ணகிரி இடையே திருவண்ணாமலை, செங்கம் வழியாக 182 கி.மீ. தூர சாலையை 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசின் தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது.
கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி இதற்கான பணிகள் தொடங்கியது. மத்திய அரசு இந்த திட்டத்துக்குரூ.612 கோடி நிதி ஒதுக்கியது. சாலை போடும் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு திடீர் என்று கிடப்பில் போடப்பட்டது.
சாலைகள் ஆங்காங்கே விரிவாக்கம் செய்யப்பட்டும், ஒரு சில இடங்களில் குறுகலாவும், குண்டும் குழியுமாகவும் இருந்த நிலையில் அப்படியே பாதியில் நிற்கிறது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
திண்டிவனம், விழுப்புரம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலைவரை மட்டும் பணிகள் ஓரளவுக்கு முடிந்து வாகனங்கள் சீராக செல்கின்றன. அதன் பிறகு 4 வழிச்சாலைப்பணிகள் நிறைவடையாமல் உள்ளது.
நிதிப்பற்றாக்குறை மற்றும் சாலை போடுவதற்கு தேவையான மூலப் பொருட்களான மண், கற்கள் போன்றவைகளை குவாரிகளில் இருந்து பெறுவதில் இடையூறு ஏற்பட்டது. மாநில அரசும் மூலப் பொருட்கள் கிடைப்பதற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் திட்டம் பாதியில் கிடப்பில் போடப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது புத்துயிரூட்டி ரூ.268 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 4 வழிச்சாலைப் பணியை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பாதியில் நிற்கும் சாலைகளையும், சாலைகள் இணைப்பு பணிகளையும் தேசிய நெடுஞ்சாலைதுறை தொடங்கியுள்ளது.
12 மாதங்களில் குறிப்பிட்ட காலத்தில் திண்டிவனம்-கிருஷ்ணகிரி 4 வழிச்சாலைப் பணி முடிவடைந்து விடும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 4 வழிச்சாலை திண்டிவனத்தில் தொடங்கி, விழுப்புரம், கீழ்பெண்ணாத்தூர், செஞ்சி, திருவண்ணாமலை. செங்கம், ஊத்தங்கரை வழியாக கிருஷ்ண கிரியுடன் இணைக்கிறது. இந்த 4 வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்தால் இந்தப் பாதையில் போக்குவரத்து சீரடைவதுடன் பயண நேரமும் குறையும்.
பெங்களூர்- புதுச்சேரி இடையே துரித சாலை போக்குவரத்து மேம்படும்.
இதே போல் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச் சாலையும், திருச்சி, சிதம்பரம் 4 வழிச்சாலைப் பணியும் ரூ.7600 கோடியில் நிறைவேற்றப்படுகிறது.
தொழில் வளர்ச்சிக்கு தேவையான துரித சரக்கு போக்குவரத்தை துரிதப்படுத்தும் மத்திய அரசின் ‘பாரத்மாலா பிரயோஜனா’ திட்டத்தின் கீழ் இந்த 4 வழிச் சாலைப் பணி விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்காணிப்புக்குழுத் தலைவர் கே.அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் 6 வழிச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தடுக்க விபத்து நடைபெறும் இடங்களில் சாலையை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள், உயர்மட்ட நடைபாதைகள், மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் உள்ள 191.20 கிலோ மீட்டர் சாலையில் விபத்துகள் ஏற்படாத வகையில் மேம்பாலங்கள், உயர் மின்கோபுரங்கள், சர்வீஸ் சாலைகளில் வேகத்தடைகள் போன்ற பணிகள் விரைந்து மத்திய அரசின் அனுமதி பெற்று செய்து தரப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர்கள் சிவாஜி, நாராயணன், ரிலையன்ஸ் மேலாளர் முத்துகுமார், மண்டல போக்குவரத்து ஆணையர் செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், செந்தில்வேலவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன் (கிருஷ்ணகிரி), சங்கர் (தேன்கனிக்கோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.