என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neem"

    • பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர்.
    • அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர்.

    "ஆடி" என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஓர் அசுரனின் பெயர்.

    நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உருவத்தைப் பெறும் ஆற்றல் கொண்டவன்.

    சிவபெருமான், தம் நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை அழித்தார்.

    சிவனையடையும் பக்தி ஞானம் அவனுக்கிருந்த காரணத்தால் அன்னை உமாதேவி மனமிரங்கி அவன் நினைவாக மாதங்களில் ஒன்றை "ஆடி" என்று அழைத்தாள்.

    அதுவே அன்னைக்கு ஆராதனை செய்யும் மாதமாக அமைந்தது.

    வழிபடுவது எப்படி?

    உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு எம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற,

    ஆடி மாதம் பிறந்ததும் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை பிடித்து அவித்து அம்மனுக்கு படைப்பார்கள்.

    அம்மன் கோவில்கள் எங்கும் கூழ்காய்ச்சி ஊற்றுவார்கள்.

    காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த முத்துமாரி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர்.

    வேப்பிலைமாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் காலகாலமாய் நடைபெற்று வரும் வழக்கமாகும்.

    எலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அம்மனை குளிரச்செய்வர்.

    பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர்.

    அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர்.

    தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகள படையல் இட்டு அன்னபூரணி எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து,

    பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபாடாற்றுவர்.

    • முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
    • வீட்டில் உள்ள தொட்டிகளில் சிறிய தொட்டிகளில் பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி 36-வது வார்டில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தெரு பகுதியில் டெங்கு தடுப்பு பணி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர் முத்துக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    முகாமில் மாநகராட்சி கவுன்சிலர் கண்ணுக்கினியாள், துப்புரவு ஆய்வாளர் ஜோசப் சேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாஸ்டிக் கப், தேங்காய் சிரட்டை, டயர், உடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் அகற்றப்பட்டது.

    மேலும் வீட்டில் உள்ள தொட்டிகளில் சிறிய தொட்டிகளில் பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், கொசுப்புழு உற்பத்தி ஆகாத வண்ணம் தொட்டியை மூடி வைக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • போலீசாக பணியில் இருந்து வரும் ரூபன் பதி கடந்த 3-ந் தேதி இரவு ஜெயமாலா வீட்டிற்கு வந்துள்ளார்.
    • அந்தப் பகுதியில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம் சேலம் மெயின் ரோடு புதுநகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 5ஆண்டுகளுக்குமுன்இறந்துவிட்டார். இவரது மனைவி ஜெயமாலா (40) செங்கல்சூளையி ல்கூலிதொழிலாளி. இவர்களுக்கு ஜெகன் பிரியா, சத்யபிரியா ஆகிய2மகள், கிரி என்கிறஒரு மகன் உள்ளனர். மூத்தமகள்ஜெகன் பிரியாவை கடந்த 4வருடங்களுக்கு முன்புதிருமணம் செய்து கொடுத்தனர். இந்த நிலையில் மூத்த மகள் ஜெகன் பிரியாவின் கணவருடைய தம்பி ரூபன் பதி ஜெயமாலா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். உளுந்தூர்பேட்டையில் போலீசாக பணியில் இருந்து வரும் ரூபன் பதி கடந்த 3-ந் தேதி இரவு ஜெயமாலா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் இரவு முழுவதும் அங்கிருந்த ரூபன் பதி மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். ரூபன் பதி வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில் வீட்டு தோட்டத்தில் உள்ள வேப்பமரம் ஒன்றில் துப்பட்டா துணியால் சத்திய பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் சத்யபிரியாவின் தம்பி கிரி புகார் கொடுத்தார் . அதில் தனது அக்காள் சத்யபிரியாவின் சாவில் சந்தேகம் உள்ளது என கூறியிருந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சத்திய பிரியா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூரில் இருந்து தடஅறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் தடயங்களைசேகரித்தனர்.தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலை மையிலான போலீசார் அந்தப் பகுதியில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர். விசாரணையில் தாயாரும், தாயாரின்கள்ளக்காதலன் ரூபன் பதியும் சத்திய பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதுதெரியவந்தது. இவர்களது தொல்லையால் தான் இளம் பெண் சத்திய பிரியா தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதனைதொடர்ந்து தற்கொலை வழக்கைதற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்குபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
    • ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைகிறது.

    தலை முடி என்றாலே அனைவருக்கும் அது அழகு சேர்க்கும். ஆண்கள் என்றாலும் பெண்கள் என்றாலும் முடி மிக முக்கியமான ஒன்றாக கருதுவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றே. முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கு அது மன வருத்தத்தை ஏற்படுத்தும்.

    குறிப்பாக பெண்களை காட்டிலும் இன்றளவு ஆண்களுக்கே முடியை பற்றி கவலைப்படும் பிரச்சினை இருக்கிறது. ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால் அவர்களின் முடிகள் தூசுகள் பட்டு மிகவும் பாதிப்படைந்து விடுகிறது. இதற்கு தீர்வாக எண்ணற்ற மருந்துகளையெல்லாம் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி அந்த கவலை வேண்டாம்.

    அந்த காலத்தில் முனிவர்கள் பின்பற்றிய பல்வேறு ஆயுர்வேத முறைகள் முடி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் அற்புதமான தீர்வு தருகிறது. பொதுவாக ஆயர்வேதம் என்றாலே முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களாகவே அதில் நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் இந்த பதிவில் ஆயர்வேத முறையை எவ்வாறு வழுக்கை பிரச்சினைக்கு பயன்படுத்தலாம் என்பதை இனி பார்ப்போம்.

     1. கரிசலாங்கண்ணி (பிரிங்கராஜ்)

    `மூலிகைகளின் அரசன்' என்றே அழைக்கப்படும் இந்த பிரிங்கராஜ் பல மருத்துவ குணங்களை கொண்டது. வெறும் பெயரில் மட்டும் இது ராஜாவாக இல்லை. வழுக்கை பிரச்சினையை தீர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வழுக்கை தலையில் முடி வளர, 5 டேபிள்ஸ்பூன் பிரிங்கராஜ் பவ்டருடன் 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாற்றை கலந்து தலையில் தடவுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசினால் சொட்டை இருந்த இடத்தில் முடி வளரும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.

     2. அஸ்வகந்தா

    பல நன்மைகளை தனக்குள்ளே வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை இந்த அஸ்வகந்தா. ஹார்மோன் பிரச்சினையினால் முடி உதிரும் பலருக்கும் இது நல்ல நண்பன் போல உதவும். 3 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 3 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை எடுத்து, தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் வழுக்கை தலை, முடிகளுடன் காணப்படும்.

     3. வெந்தயம்

    நம்ம வீட்டு அஞ்சறை பெட்டியில் இருக்கும் இந்த சிறிய விதைகள்தான் உங்கள் சொட்டை தலைக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இதில் அதிகம் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். அத்துடன் ஹார்மோன்களை சமநிலையில் வைத்து முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும். 3 டீஸ்பூன் வெந்தய பொடியை எடுத்து கொண்டு அதனுடன் பாலை கலக்கவும். இந்த கலவையை தலையில் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தடவினாலே சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும்.

     4. பிராமி

    முடியின் வளர்ச்சிக்கு வேரில் இருந்து நல்ல ஆரோக்கியத்தை இந்த மூலிகைகள் தருகிறது. முடியின் போஷாக்கை அதிகரிக்கவும், பொடுகு தொல்லையை நீக்கவும் இது நன்கு பயன்படும். 2 டீஸ்பூன் பிராமி பவுடர், 2 டீஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், 1/2 கப் யோகர்ட் ஆகியவற்றை நன்றாக கலந்து முடியின் அடி வேரில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று, வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

     5. சிகைக்காய்

    தலை முடிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க கூடியது இந்த சிகைக்காய். இன்று நாம் பயன்படுத்தும் ஷாம்பூக்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இனி சிகைக்காய் பயன்படுத்தி பாருங்கள். எந்தவித முடி சார்ந்த பிரச்சினைகளும் உங்களுக்கு வராது. 6 டீஸ்பூன் சிகைக்காய் பவ்டருடன் 2 கப் நீர் சேர்த்து தலையில் தடவுங்கள். பின் 10 நிமிடம் கழித்து தலையை அலசவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும். மேலும் சிகைக்காயை நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களுடனும் சேர்த்து தடவலாம்.

     6. நெல்லிக்காய்

    ஆயர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் மிக முதன்மையான இடத்தில் உள்ளது. இது உடலில் உள்ள பலவித நோய்களுக்கும் நல்ல தீர்வை தர வல்லது. 5 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரை நீரில் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். பிறகு அதனை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் முடிகள் மீண்டும் வளர செய்யும். அத்துடன் தலையில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி முடி உதிர்வை தடுக்கும்.

     7. வேப்பிலை

    மூலிகைகளில் அதிக வீரியம் கொண்டது இந்த வேப்பிலைதான். இது ஒரு நல்ல கிருமி நாசினியும்கூட. அடிக்கடி இதனை தலையில் தடவி வந்தால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடியின் வளர்ச்சியும் கூடும். தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவற்றை நீக்கும் சக்தி இந்த வேப்பிலைக்கு உள்ளது. கை நிறைய வேப்பிலையை எடுத்து கொண்டு அதனை 2 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு 15 நிமிடம் கழித்து இறக்கவும். பிறகு குளிர வைத்து வடிகட்டி கொண்டு அதனை தலைக்கு அலசினால் நல்ல பலனை தரும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை தீர்ந்து, வழுக்கை இன்றி இருக்கலாம்.

     8. ஆயுர்வேத எண்ணெய்

    தேங்காய் எண்ணெய், பிரிக்கராஜ் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு டீஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு குளிர வைத்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இந்த ஆயர்வேத முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி கொட்டும் பிரச்சினை குறைந்து, வழுக்கையில் முடி வளரும்.

    இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

    • நூல்கோல் காய்கறியில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
    • நூல்கோலில் கலோரிகள் மிகமிகக் குறைவு.

    நூல்கோல் காய்கறியில் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. ஆனால் இதனை உணவில் அதிகமாக யாரும் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் இதில் தான் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் உள்ளது. இதில் இருக்கக்கூடிய வேர் மற்றும் இலை இரண்டையும் உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதனை பல பேர் உணவில் ஒதுக்கி வைக்கிறார்கள். இதில் உள்ள நன்மைகள் தெரிந்தால் இனிமேல் யாரும் ஒதுக்கி வைக்கமாட்டீர்கள். இந்த நூல்கோல் காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் என்னென்ன நோய்களை சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    நூல்கோல் மண்ணுக்குள் விளையும் காய் வகையாகும். நூக்கல், நூற்கோல் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நூல்கோலில் கலோரிகள் மிகமிகக் குறைவு. ஆனால் மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் மிக அதிகம்.

    நூல்கோலில் வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும் மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. நூல்கோல் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் உறுதியாகவும் பயன்படும்.

    செரிமானத்தைத் தூண்டும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது. பருவ கால மாற்றங்கள் ஏற்படும் போது முதலில் நம்மை பாதிப்பது மூச்சு தொடர்பான பிரச்னைகள்தான்.

    குறிப்பாக, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் பனிக் காலத்தில் கூடுதலாக ஏற்படும். நுரையீரலில் தேங்கும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு நூல்கோல் மிக நல்ல தீர்வைக் கொடுக்கும். நூல்கோலின் மேல் உள்ள தண்டும் அதன் மேல் உள்ள கீரையிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகின்றது.

    நூல்கோலில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று. இதில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கும். உடல் கழிவுகளை வெளியேற்றி, எடையை குறைக்கவும் உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட இந்த நூல்கோல் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதோடு பெருங்குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

    சருமத்தில் உள்ள தோல் பகுதிகள், சுருக்கம், கோடுகள் இருப்பவர்கள் உணவில் அதிகமாக நூல்கோலை சேர்க்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம் சம்பந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நூல்கோலை உணவில் அடிக்கடி சேர்த்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    நூல்கோலின் இலையில் அதிக அளவில் ஃபோலேட் சத்தும் உள்ளதால் இதயத்தை பாதுகாக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள வீக்கங்கள், வலிகளைக் குறைக்கும் ஆற்றல் உடையது. ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    பொட்டாசியம் சத்து நூல்கோலில் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் ரத்த அழுத்தம் குறைவதற்கு அதிகமாக வாய்ப்புள்ளது. குறிப்பாக ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் அளவுடன் எடுத்துக்கொண்டால் நல்லது.

    ×