என் மலர்
நீங்கள் தேடியது "Neet exam"
- மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார்.
- பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தங்கம் தென்னரசு மேலும் கூறியிருப்பதாவது:-
மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.
டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!
பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாணவர் கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: மாணவர் கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...!
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தர்ஷினி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தர்ஷினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்களை பெற முடியாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.
இந்த முறையாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தர்ஷினி பயின்று வந்தார்.
நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தம்மால் போதிய மதிப்பெண் பெற முடியாதோ? என்ற அச்சத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளாகியும் தற்கொலைகள் தொடர்வது பெரும் கவலையளிக்கிறது.
நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 8 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து உறுதியாகிறது.
இதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசு செவிமடுக்கவில்லை.
தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவச் செல்வங்களைக் காக்க நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவி தர்ஷினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
- மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?
செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி
அக் 2021- அனு, கீர்த்திவாசன்
நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்
ஜூன் 2022- தனுஷ்
ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி
ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ
செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி
மார்ச் 2023- சந்துரு
ஏப்ரல் 2023- நிஷா
ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்
டிசம்பர் 2023- ஆகாஷ்
அக்டோபர் 2024- புனிதா
மார்ச் 2025-இந்து, தர்ஷினி
இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?
உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?
தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் மு.க.ஸ்டாலின்!
மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!
#நீட்ரகசியம்_திமுக_சதுரங்கவேட்டை என கூறியுள்ளார்.
- 2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா?
- பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன்!
2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா?
பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா? அப்படியானால் அதன் விவரங்கள்?
ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்.
அதற்கு மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.
" தேசிய தேர்வு முகமை (NTA) என்னும் சிறப்பு அமைப்பானது உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான நுழைவு தேர்வை நடத்துகிறது. பிப்ரவரி 9 2024 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போலவே மே 5 2024 அன்று நீட் தேர்வு நடைபெற்றது.
2019ஆம் ஆண்டிலிருந்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய கல்வி முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நடந்த பின்னர் தேர்வில் வழக்கத்துக்கு மாறான முறைகேடுகள்/ ஏமாற்றும் நடவடிக்கைகள் ஆகியவை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இத்தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், சதித்திட்டம், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை கண்டறிந்திடும் வகையில் விரிவான விசாரணையை நடத்திட சிபிஐ யை ஒன்றிய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது.
ஆகத்து 2, 2024 மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பு wp (civil) 335/2024 பத்தி 84ல் " முறையான முறைகேடுகள் நடந்ததை குறிக்கும் போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இப்போதைக்கு இல்லை. இத்தேர்வின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு முறைகேடுகள் பரவலாக நடந்தது என்னும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இல்லை." இதே வழக்கில் 23 ஜூலை 2024 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி 26 ஜூலை 2024ல் சரிபார்க்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
22.11.2024 அன்று 2024 நீட் தேர்வில் கேள்வித்தாள் திருட்டு குறித்த வழக்கில் மொத்தம் 45 குற்றவாளிகளுக்கு எதிராக 5 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. இந்த நீட் தேர்வு தாள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பயனாளிகள் பெயர்களையும், கேள்வித்தாளுக்கு விடையளித்த மருத்துவ மாணவர்களின் பெயர்களையும், தேர்வில் ஆள்மாறட்டம் செய்தவர்களின் பெயர்களையும் கண்டறிந்து உரிய அமைப்பிடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கொடுத்துள்ளோம்." என மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- அரசு பள்ளிகளில் இதுவரை நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை.
- ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னை:
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவது பெரும் சவாலாக உள்ளது. மிக குறைந்த அளவில் தான் ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெறுகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவ படிப்புகளில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 1500 மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் இலவசமாக நேரடி நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. கொரோனா காரணத்தால் இணைய வழியில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஆனாலும் கடந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது.
இந்த நிலையில் பள்ளிகளில் கடந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
ஆனால் அரசு பள்ளிகளில் இதுவரை நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், நடப்பு கல்வி ஆண்டில் நீட் பயிற்சி குறித்து எந்த அறிவுறுத்தலையும் பள்ளிக்கல்வித்துறை வழங்கவில்லை. பயிற்சி எப்போது தொடங்கப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் தொடர்ந்து கேட்டு வருகின்றனர் என்றனர்.
- மனோநாராயணன் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்துள்ளார்
- கோச்சிங் சென்டரில் மாதம்தோறும் நடைபெறும் மாதிரி பயிற்சி தேர்வில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது
கோவில்பட்டி:
கோவில்பட்டி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் மனோநாராயணன்(வயது 20). இவர் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்துள்ளார்.
ஏற்கனவே ஒருமுறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையவில்லை என்பதால் 2-வது முறை தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்துள்ளார். கோச்சிங் சென்டரில் மாதம்தோறும் நடைபெறும் மாதிரி பயிற்சி தேர்வில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மனோ நாராயணன் நேற்று மாலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலன் இல்லாமல் மனோநாராயணன் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
- மாணவர்கள் திறமையுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இதனை மாணவர்கள் திறமையுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது மகிழ்ச்சிக்கும், பணிக்கும் எல்லை இல்லை. திமிங்கலங்கள் இடையூறு செய்தாலும் எனக்கு கவலை இல்லை. நான் தமிழச்சி, தமிழ் குடிமகள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். அதனால்தான் தமிழகத்தில் கருத்து சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது. கருத்து சுதந்திரம் எனக்கும் இருக்கிறது என்பதை அனைத்து கட்சி சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏழு பேர் விடுதலை என்பது நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பு. இது குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.
நீட் தேர்வு, 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற நீதிமன்ற தீர்ப்புகளை தமிழகத்தில் சிலர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தங்களுக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகளை மட்டும் கொண்டாடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு நீட் பயிற்சி மையத்திற்கு 70 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- தமிழகம் முழுவதும் 29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சென்னை:
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனால் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி பெற இயலாத நிலை இருந்தது. அவற்றை போக்கும் வகையில் இலவச பயிற்சி பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் 2 வருடமாக ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு நேரடி பயிற்சி வகுப்பு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இலவச நீட் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடு கடந்த சில நாட்களாக நடந்து வந்தன.
முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தமிழகத்தில் உள்ள 414 பிளாக்குகளில் ஒரு பிளாக்கிற்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நீட் பயிற்சி மையத்திற்கு 70 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் இப்பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டிற்கான பயிற்சி வகுப்பு வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அறிமுக வகுப்பு நேற்று முன்தினம் நடந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது:-
நீட், ஐ.ஐ.டி., ஜே.இ., உள்ளிட்ட போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் 10 மையங்களில் 700 மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 9-மணி முதல் மாலை 4-மணி வரை நீட் பயிற்சி வழங்கப்படும்.
100 முதுகலை ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாட ஆசிரியர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, இதற்கான 'மெட்டிரியல்' அரசு சார்பில் வழக்கப்படும்.
சென்னயில் அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் ஜி.கே.எம். காலனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட அரசு பள்ளிகள் மையங்களாக செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ் - 2 மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
- இது குறித்து தகவல் ஏற்கனவே மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ் - 2 மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதேப்போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 16 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது.
இந்த மையங்களில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் அரையாண்டு தேர்வு நிறைவு என்பதால் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக நேற்று ஒரு நாள் மட்டும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறவில்லை.
இதைத்தொடர்ந்து இன்று முதல் வரும் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் 16 மையங்களில் நடக்கிறது.
காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன .
இது குறித்து தகவல் ஏற்கனவே மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
- போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் அதை மீறி போராட்டம் நடத்த திரண்டனர்.
சென்னை:
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரியும் கவர்னரை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் அதை மீறி போராட்டம் நடத்த திரண்டனர்.
அவர்கள் அனைவரையும் சைதாப்பேட்டை சின்னமலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் தடையை மீறி செல்ல முயன்றனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனே போலீசார் தடுப்பு அமைத்து அவர்களை மேற்கொண்டு செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது ஏராளமான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பெண்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
- நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
- நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.
ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராயப்பட்டது. இந்த குழு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அந்த குழு அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா தமிழக கவர்னரின் ஒப்புதலுக்கு முதலில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதா தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி முதலில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.
இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் அவ்வப்போது கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அதன் பிறகு கடந்த 2022 பிப்ரவரி மாதம் 1-ந்தேதி இந்த மசோதாவில் கையெழுத்திடாமல் அவையின் மறுபரிசீலனைக்கு கவர்னர் அதை திருப்பி அனுப்பினார்.
பின்னர் பிப்ரவரி 8-ந்தேதி தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே கவர்னருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த மசோதா மீது கவர்னர் உடனே கையெழுத்திடவில்லை.
அதன் பிறகும் இந்த மசோதாவில் சில சந்தேகங்களை கேட்டார். அந்த சந்தேகங்களுக்கு சட்ட அமைச்சர் ரகுபதி விரிவான விளக்கம் அளித்திருந்தார்.
அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
இப்போது நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதம் இப்போது தமிழக அரசுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மறுவிளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சட்ட வல்லுனர்களின் கருத்தை பெற்று மீண்டும் மத்திய அரசுக்கு அடுத்த வாரம் பதில் அனுப்ப ஏற்பாடு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
- நீட் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என அறிவிக்க கோரப்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தடை கோரி நீண்ட நாட்களாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை தமிழ்நாடு கவர்னர் ரவி நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்து பின்னர் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனையடுத்து 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும் கவர்னர் தெரிவித்தார்.
நீட் தேர்வு விலக்கு குறித்து ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு அனுப்பிய கடிதத்துக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தந்த நிலையில், மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. அதற்கான விளக்கத்தையும் சட்ட வல்லுநர்களின் துணையுடன் தமிழக அரசு அனுப்பிவைத்தது.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதியதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், நீட் தேர்வு நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் கூட்டாட்சி கொள்கையை இது மீறுவதாக உள்ளது. நீட் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.