என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nehru"

    • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
    • நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பீகாரில் பிரசாரம் செய்வேன் என்றார்.

    பாட்னா:

    இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே பீகார் மாநிலத்தின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று முதல் மந்திரி நிதிஷ்குமாரைச் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர் சந்திப்பில் ராம்தாஸ் அதவாலே பேசியதாவது:

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். நிதிஷ்ஜி ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுஜியை விட நிச்சயமாக ஆரோக்கியமானவர். நான் இருவருடனும் நண்பர்களாக இருந்திருக்கிறேன்.

    நிதிஷ்ஜி இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு இருப்பார் என நினைக்கிறேன். பீகாரில் எனது கட்சி வலுவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரசாரம் செய்வேன்.

    பிரதமர் நரேந்திர மோடி ஜவகர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார்.

    ஊழல் இல்லாத அரசாங்கத்தை நடத்தி வரும் நரேந்திர மோடி தலைமையிலான குழுவில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

    அவரது ஆட்சிக் காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறோம்.

    தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு திரும்பியதன் மூலம் மோடி ஏற்கனவே நேருவின் சாதனையை சமன் செய்துள்ளார். அவர் நேருவின் சாதனையை முறியடித்து நான்காவது முறையாக ஆட்சியை அனுபவிப்பார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • ராஜபாளையத்தில் நேருவின் 135-வது பிறந்த நாள் விழா நடந்தது.
    • என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் 135-வது பிறந்த நாள் விழாவை யொட்டி அவரது சிலைக்கு பராமரிப்பு குழு சார்பில் கொண்டாடப்பட்டது. நேரு சிலைக்கு பராமரிப்பு குழுவின் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் நாகராஜன், வருவாய் அலுவலர் முத்துசெல்வம், அனைத்துமகளிர் காவல் ஆய் வாளர் மாரியம்மாள், போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் கார்த்திகேயன், என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி உதவி தலை மையாசிரியர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். இந்த விழாவில் சிலை பராமரிப்புக் குழுவை சேர்ந்த ரகு, வாசுதேவராஜா, என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் ராஜா, என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை உறுப்பினர் ராம்விஷ்ணு ராஜா, ராம் வெங்கட்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறி னார். நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினவிழாவில் என்.ஏ. ராமச்சந்திர ராஜா குருகுலத் தொடக்கப் பள்ளி, முருகன் நடுநிலைப்பள்ளி, என்.ஏ.பாப்புராஜா நடுநிலைப்பள்ளி, என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

    • கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர்.
    • இன்னும் எத்தனை நாட்கள் காங்கிரசை விமர்சனம் செய்வீர்கள் என்றார் பிரியங்கா.

    டேராடூன்:

    உத்தரகான்ட் மாநிலம் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இங்குள்ள ராம் நகருடன் எங்கள் குடும்பத்துக்கு நீண்ட தொடர்பு உள்ளது.

    காங்கிரசை இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் விமர்சனம் செய்வீர்கள்? கடந்த 10 ஆண்டாக காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லை.

    10 ஆண்டாக முழு பெரும்பான்மையுடன் உள்ள பா.ஜ.க. இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறுகிறது.

    கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர். அப்படி எதுவும் செய்யவில்லை என்றால் ஐஐடி, ஐஐஎம் மற்றும் எய்ம்ஸ் ஆகியவை எப்படி வந்து இருக்கும்? சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கி சாதனை படைத்துள்ளது.

    முதல் பிரதமர் நேரு கட்டமைக்கவில்லை என்றால் இது எப்படி சாத்தியம் ஆகியிருக்கும்?

    இமாசலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி தேவ பூமி என வர்ணித்தார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, சில மாதங்களுக்குப் பிறகு ஒரு பேரழிவு ஏற்பட்டபோது, மாநில மக்களுக்கு நிவாரணமாக ஒரு பைசா கூட மோடி அரசு வழங்கவில்லை. அனைத்து நிவாரணங்களும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியது என தெரிவித்தார்.

    • காந்தி’ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.
    • 14 முறை அமேதி பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

    அமேதி பாராளுமன்றத் தொகுதி 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது தொடங்கி 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் வரை காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த தொகுதியில் போட்டியிடுவது வழக்கமாக இருந்தது.

    அமேதியில் கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட ஸ்மிருதி இரானி (மத்திய மந்திரி) 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்தார்.

    தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்ட ராகுல் காந்தி தற்போது ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட உள்ளார்.

    இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதி பாராளுமன்றத் தொகுதியில் `காந்தி' குடும்பத்தை (ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி) சேர்ந்த ஒருவர் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 1998-ம் ஆண்டு அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்துக்கு மாற்றாக அவர்களின் சார்பில் சதீஷ் சர்மா நிறுத்தப்பட்டார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் சிங்கிடம் தோல்வியைத் தழுவினார். ஆனால் மீண்டும் 1999-ல் நடைபெற்ற தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சய் சிங்கை வீழ்த்தி சோனியா காந்தி வெற்றிபெற்றார்.

    இந்த முறை காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் போட்டியிட்டு பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தி வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முதல் அமேதி தொகுதியை ராகுல் காந்திக்கு விட்டுக்கொடுத்து விட்டு சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடத் தொடங்கினார். இந்நிலையில் 2004, 2009, 2014 என தொடர்ந்து மூன்றுமுறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி வாகை சூடி இறுதியாக 2019 தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் வீழ்ந்தார்.

    காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் 1967-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வித்யா தர் பாஜ்பாய் வெற்றிபெற்று 1971 தேர்தலிலும் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.

    1977 தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை வீழ்த்தி ஜனதா கட்சியைச் சேர்ந்த ரவீந்திர பிரதாப் சிங் வெற்றிபெற்றார். மீண்டும் 1980-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ரவீந்திர சிங்கை சஞ்சய் காந்தி தோற்கடித்தார்.

    வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தார். இதனால் அமேதி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    இதில் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி போட்டியிட்டு 84.18 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார்.

    இதன்பிறகு தொடர்ச்சியாக 3 முறை அமேதி தொகுதி எம்பியாக ராஜீவ் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1991-ம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அமேதி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மா வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு தேர்தலிலும் அமேதியில் இருந்து அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1998-ம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். அப்போது காங்கிரசுக்கு 31.1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது அமேதியில் அந்த கட்சி சந்தித்த மோசமான தோல்வி ஆகும்.

    இதன்பிறகு கடந்த 1999-ம் ஆண்டு அமேதி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி 67.12  சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டில் அவர் ரேபரேலி பாராளுமன்றத் தொகுதிக்கு மாறினார்.

    அந்த ஆண்டில் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009, 2014-ம் ஆண்டு அதேதொகுதியில் இருந்து அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம், ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.

    இதுவரை 14 முறை அமேதி பாராளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. 1977, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.

    தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மீண்டும் அமேதியில் களமிறங்கி உள்ளார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டு உள்ளார். இதன் காரணமாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் தேர்தல் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மீது பாஜக இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறது
    • காங்கிரஸ் மற்றும் அதன் சித்தாந்தம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்டது

    மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு வடமாநிலங்களில் பலமான தாக்கத்தை ஏற்படுதியுள்ளது. பாஜக தலைவர்கள் காங்கிரஸ் மீது தொடங்கத்திலிருந்தே கடுமையான விமர்சனங்களை முனைவைத்து வருகின்றனர்.

    தற்போதைய காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் இல்லாமல் சுதந்திரத்துக்குக்குப் பின்னால் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் மீதும் இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்கள் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபடத்தையும் புகழ்ந்து பேசும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மோகன் பகவத் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அவர், காங்கிரஸ் மற்றும் அதன் சித்தாந்தம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு சுதந்திரத்துக்கு பாதை அமைத்தது என்றும் நாட்டுக்காக தங்களை அர்பணித்துக்கொண்ட ஏராளமான தலைவர்களை காங்கிரஸ் உருவாக்கி அளித்து, இன்றளவும் நமக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனாக உள்ளது.

     

    ஒவ்வொரு இந்தியனையும் காங்கிரஸ் இயக்கம் சுதந்திரத்துக்காகப் போராடத் தூண்டியது என்று பேசியுள்ளார். கடந்த மே 22 ஆம் தேதி பேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்ததில் இருந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது. மோகன் பகவத் பேசிய வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே இது என்பது குறிப்பிடத்தக்கது

    • தனியார்மயமாக்கல் மூலம், இந்த அரசு இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயல்கிறது.
    • இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது பங்கு ஒருபோதும் மறைக்க முடியாதது.

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்றைய மக்களவை கூட்டத்தில் அரசியலைப்பு மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றிய நிலையில் அவரைத் தொடர்ந்து வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

    தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம் கண்ட பிரியங்கா வயநாடு இடைத்தேர்தலில் வென்று முதல் முறையாக மக்களவையில் ஆற்றும் கன்னி உரை இது.

    அதன்படி மக்களவையில் பிரியங்கா காந்தி தனது முதல் உரையில்,

    நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் கவசம், நீதி, ஒற்றுமை, பேச்சு சுதந்திரம் உரிமை ஆகியவற்றின் கவசம். ஆனால் 10 ஆண்டுகளில், ஆளும் தரப்பு இந்த கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது வருத்தமளிக்கிறது.

    அரசியல் சட்டம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை உறுதியளிக்கிறது. குறுக்கு வழியில் நுழைவது, தனியார்மயமாக்கல் மூலம், இந்த அரசு இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயல்கிறது.

    தேர்தல் முடிவு வேறு மாதிரி இருந்திருந்தால் அரசியல் சட்டத்தை மாற்றும் பணியை அவர்கள் தொடங்கியிருப்பார்கள். நாட்டின் அரசியலமைப்பை இந்த நாட்டு மக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்பதை இந்தத் தேர்தல்களில் அறிந்து கொண்டதால்தான் அவர்கள் அரசியல் சாசனத்தைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள் என்பதே உண்மை. 

     கிட்டத்தட்ட தோல்வியடைந்த நிலையில், இந்த தேர்தல்களில் வெற்றி பெற்றதால்தான் அரசியலமைப்பை மாற்றுவது பற்றிய விவாதங்கள் இந்த நாட்டில் வேலை செய்யாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

    எவருடைய பெயரை [நேரு] நீங்கள் பேசத் தயங்குகிறீர்களோ, அவர் ஏற்படுத்திய HAL, BHEL, SAIL, GAIL, ONGC, NTPC, ரயில்வே, ஐஐடி, ஐஐஎம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை புத்தகங்களில் இருந்து துடைக்க முடியும், ஆனால் இந்த தேசத்தின் சுதந்திரத்தில், இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது பங்கு ஒருபோதும் மறைக்க முடியாதது.

    எல்லாப் பழியையும் நேரு மீது சொல்லும் நீங்கள் ஏன் நிகழ்காலத்தைப் பற்றி பேசவில்லை? விவசாயச் சட்டங்கள் அதிகாரம் படைத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. அரசு அதானிக்கு சாதகமாக உள்ளது.

    அரசியல் சட்டம் தங்களை பாதுகாக்கும் என்று மக்கள் நம்பினர், ஆனால் தற்போது அந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஒரு நபரைக் [அதானியை] காப்பாற்ற 1.4 பில்லியன்[ 140 கோடி] மக்கள் புறக்கணிக்கப்படுவதை நாடு கவனித்து வருகிறது. 

    • நட்டா கையைத் தடவிக் கொண்டிருந்தார், ஆனால் மோடி ஜி அவரைப் பார்த்தவுடன், கவனமாகக் கேட்பது போல் பாவனை செய்யத் தொடங்கினார்.
    • அமித் ஷாவும் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார். பியூஷ் கோயல் ஜி தூங்கியே விட்டார்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் மக்களவையில் அரசியலமைப்பு மீதான சிறப்புரைகள் இடம்பெற்றன.

    அரசியலமைப்பை ஏற்று 75 வருடம் ஆகியுள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் இந்த உரைகள் இடம்பெற்றன. இதில் நேற்று கடைசியாகப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    நேரு தொடங்கி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என வரிசையாக மோடி தனது உரையில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ரத்த ருசி கண்ட காங்கிரஸ் அரசியலமைப்பை மீண்டும் மீண்டும் காயப்படுத்தியுள்ளது என்று அவர் தெரிந்தார்.

    இந்நிலையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவையில் மோடி ஆற்றிய 110 நிமிட உரையை பள்ளியின் இரண்டு கணித வகுப்புகளில் தொடர்ந்து இருப்பதுபோன்று சலிப்பூட்டுவதாக இருந்தது என தெரிந்தார் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, பிரதமர் புதியதாக ஒன்றும் பேசவில்லை, அவர் எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினார். இது என்னை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்துச் சென்றது. நான் அந்தக்காலத்தில் [பள்ளியில்] இரண்டு கணித வகுப்புகளில் அமர்ந்திருப்பதைப் போல உணர்ந்தேன்.

    நட்டா ஜியும் கையைத் தடவிக் கொண்டிருந்தார், ஆனால் மோடி ஜி அவரைப் பார்த்தவுடன், அவர் கவனமாகக் கேட்பது போல் பாவனை செய்யத் தொடங்கினார்.

    அமித் ஷாவும் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார். பியூஷ் கோயல் ஜி தூங்கியே விட்டார். இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பிரதமர் புதிதாக ஏதாவது சொல்வார் என்று நான் நினைத்தேன் என்று பிரியங்கா தெரிவித்தார். 

    • பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில் பேசினார்.
    • இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

    ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசி இளைஞர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில், ஜவகர்லால் நேருவையும், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியையும் தொடர்புபடுத்தியும், காந்தி Father of the nation என்றும் நேரு daddy of the nation என்றும் பேசியுள்ளார்.

    மேலும் பல இடங்களில் நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

    இதன் வீடியோவானது இணையத்தில் பரவிய நிலையில் பாலாஜியின் தரக்குறைவான பேச்சுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

    • நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார்.
    • புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது.

    ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசி இளைஞர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில், ஜவகர்லால் நேருவையும், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியையும் தொடர்புபடுத்தியும், காந்தி Father of the nation என்றும் நேரு daddy of the nation என்றும் பேசியுள்ளார். மேலும் பல இடங்களில் நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

    இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியறுத்தி வருகின்றனர்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது.

    கண்ணியக்குறைவான இவரின் பேச்சு காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கியுள்ளது. வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    • ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் பரத் பாலாஜி என்பவர் நேரு குறித்து அவதூறாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.
    • பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை கண்டிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசி இளைஞர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில், ஜவஹர்லால் நேருவையும், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியையும் தொடர்புப்படுத்தியும், காந்தி Father of the nation என்றும் நேரு daddy of the nation என்றும் பேசியுள்ளார். மேலும் பல இடங்களில் நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

    இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியறுத்தி வருகின்றனர்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது.

    கண்ணியக்குறைவான இவரின் பேச்சு காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கியுள்ளது. வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், நேரு குறித்து அவதூறாக பேசியதற்காக நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக ஸ்டாண்ட் அப் காமெடியன் பரத் பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார். 

    • 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1 கோடி பேர் பயனடைவார்கள்
    • அன்றைக்கு அப்படித்தான் இருந்தது, அதனால்தான் இன்று இதை விளக்குகிறேன்.

     டெல்லியில் வரும் புதன்கிழமை [பிப்ரவரி 5] சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இன்றுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    இதற்கிடையே நேற்று முன் தினம் பாராளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பாதிப்போர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று கூறப்பட்டது. இந்த அறிவிப்பால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1 கோடி பேர் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லி ஆர்.கே. புரம் தொகுதியில் நேற்று நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "நேரு ஜி காலத்தில், நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், உங்கள் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கை அரசாங்கம் வரியாக எடுத்துக் கொள்ளும்.

    இதுவே இந்திரா ஜியின் ஆட்சிக்காலமாக இருந்தால், ரூ.12 லட்சத்தில் கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் வரியாகப் போகும் என்பதைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். அன்றைக்கு அப்படித்தான் இருந்தது, அதனால்தான் இன்று இதை விளக்குகிறேன்" என்று தெரிவித்தார்.

     

    மேலும் 10 -12 ஆண்டுகளுக்கு முன்பு கூட காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் வருமானத்துக்கு ரூ. 2.6 லட்சத்தை வரியாகச் செலுத்தவேண்டியிருக்கும், ஆனால் தனது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பட்ஜெட் அதே வருமானத்திற்குப் பூஜ்ஜிய வரியை உறுதி செய்கிறது என்று மோடி கூறினார்.

    இந்திரா காந்தி, நேரு ஆட்சி நடந்த காலாக்கட்டம் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பாகும். அப்போதைய சூழலில் ரூ.12 லட்சம் என்பது இன்றைய மதிப்புக்கு பல கோடிகள் ஆகும். எனவே மோடியின் இந்த ஒப்பீடு மக்களை முற்றிலும் தவறாக வழிநடத்துவது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
    • புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- புதுவையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் அரசிடம் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் அரசிடம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, புதுவை மக்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணாததாலும், வாகனங்கள் நிறுத்த இட வசதி ஏற்படுத்தப்படாததாலும் வார இறுதி நாட்களில் புதுவை மக்கள் நடமாட முடியவில்லை.

    நகரில் வாகனங்களை நிறுத்த இட வசதியில்லையே என்ற ஒரு காரணத்திற்காகவே பலர் விடுமுறை தினத்தில் வீட்டில் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நேரு வீதியில் உள்ள பழைய சிறைச்சாலையில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளனர். இது மேலும் மக்களின் போக்குவரத்திற்கும், வாகனங்கள் நிறுத்து வதற்கும் பிரச்சனை களையே உருவாக்கும்.

    ஏற்கனவே முதல்- அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டபடியே குறைந்த பட்சம் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை கட்டி புதுவை நேரு வீதியில் வாகனங்கள் நிறுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×