என் மலர்
நீங்கள் தேடியது "NIA"
- மலப்புரம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் வீடுகளிலும், அலுவலகத்திலும் இன்று என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர்.
- ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள், வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
திருவனந்தபுரம்:
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்காணித்து வருகிறார்கள்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் நாடு முழுவதும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த அமைப்புகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
குறிப்பாக தென்கன்னட பகுதியில் மங்களூரு மற்றும் புதூர், பெல்டங்காடி, உப்பினங்காடி, வெனுர், பன்டேவால் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள், அலுவலகங்கள் ஆகியவற்றிலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த ஆஸ்பத்திரிகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோல கேரளா மாநிலத்தில் மலப்புரம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் வீடுகளிலும், அலுவலகத்திலும் இன்று என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். அங்குள்ள ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள், வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
இதுபோல பீகார் மாநிலத்திலும் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பீகார், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த இச்சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.
- பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர்.
- கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இதில் டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். மேலும் ஷாருக் ஷைபியை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண் டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அதே ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தாவை சேர்ந்த புஷன்ஜித் சித்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்ணூரில் நேற்று நடந்த சம்பவத்திற்கும், ஏற்கனவே 3 பயணிகள் தீவைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே அவர்கள் இந்த 2 சம்பவத்தையும் இணைத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இதற்காக கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். மேலும் இதுதொடர்பான தகவல்களையும் சேகரிக்க உள்ளனர். சமீபத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வட மாநிலங்களில் சந்தேகப்படும் நபர்கள் வீடுகள், அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
இதற்காக 3 பயணிகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான ஷாருக் ஷைபியின் காவல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 5 பேர் மீது நேற்று சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
- பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
கோவை:
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஐ.எஸ்.அமைப்பின் ஆதரவாளரான ஜமேஷா முபீன்(வயது 28) என்பவர் பலியானார்.
விசாரணையில் கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதும், இதற்கு ஜமேஷா முபீன் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் மீது ஏற்கனவே பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மீதமுள்ள உமர் பாரூக், பெரோஸ்கான், முகமது தவுபீக், ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது நேற்று சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முகமது அசாருதீன், உமர் பாரூக், ஷேக் இதாயத்துல்லா சனோபர் அலி ஆகியோருடன் இணைந்து ஜமேஷா முபீன் கோவையில் தொடர் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டது வழக்கை விசாரித்த என். ஐ.ஏ. தனிப்படையினருக்கு தெரிய வந்தது.
தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ மூலம் இது தெரியவந்தது. பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது:-
அசாருதீன், அப்சர் ஆகியோர் ஜமேஷா முபீன் வெடி பொருட்களை கொள்முதல் செய்யவும், கலக்கவும் உதவி செய்து உள்ளனர். முகமது தல்கா கார் கொடுத்து உதவி செய்தார்.
பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் கியாஸ் சிலிண்டரை காரில் ஏற்ற உதவி செய்தனர். இந்த சதி திட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீட்டப்பட்டது. இந்த சதி திட்டத்தில் நீலகிரி குன்னூரை சேர்ந்த உமர் பாரூக்கை தலைவனாக தேர்வு செய்துள்ளனர். அவன் தலைவனாக இருந்து மற்றவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார்.
முகமது தவுபீக்கிடம் ஜமேஷா முபீன் குண்டு தயார் செய்வதற்கான வரைபடங்கள், கையால் எழுதப்பட்ட விவரங்கள் கொண்ட நோட்டு புத்தகங்கள், பயங்கரவாத சிந்தனையை தூண்டும் புத்தகங்கள் ஆகியவற்றை கொடுத்து உள்ளார். இதனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற உமர் பாரூக்கும், ஜமேஷா முபீனும் நிதி வசூலித்துள்ளனர்.
சனோபர் அலியும் நிதி உதவி அளித்துள்ளார். பெரோஸ்கான் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை செய்தார்.
மேலும் இவர்கள் அரசின் பொதுநிர்வாகம், போலீஸ், நீதித்துறை ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அரசுக்கு எதிராக போர் தொடுப்பதே இந்த சதி திட்டத்தின் நோக்கம் என கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- ஆசிப் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஒரு மாதமாக தொட்டம்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொச்சினில் வைத்து ஆசிப்பிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் தங்கி இருந்த கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆசிப் (36) என்பவரையும் அவருடன் தங்கி இருந்த அவரது நண்பரையும் நேற்று மதியம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்காக கேரளா மாநிலம் கொச்சினுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பரபரப்பான புதிய தகவல் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
கேரளா மாநிலத்தில் சமீபகாலமாக ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. இதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. இவ்வாறாக திருடப்பட்ட பணம் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கண்டுபிடித்தது.
இதனை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏ.டி.எம் கார்டுகளை கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆசிப் (35) என்பவர் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 3 மாதமாக ஆசிப் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பவானிசாகர் போலீசார் உதவியுடன் தொட்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ஆசிப் மற்றும் அவருடன் தங்கி இருந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து கேரளா மாநிலம் கொச்சினுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
ஆசிப் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஒரு மாதமாக தொட்டம்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஆனால் ஆசிப் கடந்த சில மாதங்களாகவே பவானிசாகர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது.
ஆசிப் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் பேசுவது கிடையாது. ஆசிப்பை பார்க்க அவ்வப்போது சிலர் வந்து சென்றுள்ளனர். ஆசிப்புக்கு பயங்கரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து இருக்கலாம் என்ற அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சினில் வைத்து ஆசிப்பிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் அவர் எந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற உண்மையான தகவல் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ். நடவடிக்கைகளை ஊக்குவிக்க நிதி திரட்டி உள்ளனர்.
- திருச்சூரில் 3 இடங்களிலும், பாலக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.,
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்தது. மேலும் ஏ.டி.எம். கார்டுகளை திருடி அதன் மூலமும் பணத்தை அபகரிக்கும் சம்பவங்களும் அதிகளவில் நடந்தன.
இவ்வாறு திருடப்படும் பணத்தை, அதனை திருடும் நபர்கள் இந்தியாவுக்கு எதிரான சதி செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது. இதையடுத்து அவ்வாறு செயல்படும் நபர்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது ஏ.டி.எம். கார்டுகள் திருட்டில் தொடர்புடைய ஆசிப் (வயது 35) என்பவரை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் பிடித்தனர். கேரள மாநிலம் திருச்சூர் படூரைச் சேர்ந்த அவருக்கு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதினர்.
அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஆசிப்பை கைது செய்து கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ஆசிப்பும், மேலும் சிலரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் ஐ.எஸ். அமைப்பை ஊக்குவிப்பதற்கு பணம் வசூலில் அவர்கள் ஈடுபட்டதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கேரளாவில் பல சதித்திட்டங்களில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆசிப் கூறிய இந்த தகவல்களை கேட்டு அதிர்ச்சியடைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவரது கூட்டாளிகள் தொடர்பான தகவல்களை சேகரித்தனர். அதன்படி திருச்சூரை சேர்ந்த சையத் நபீல் அகமது, ஷியாஸ், பாலக்காட்டை சேர்ந்த ரயீஸ் ஆகிய 3 பேரை என்.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
பின்பு அவர்கள் 3 பேரையும் தங்களது அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். ஆசிப், சையத் நபீல் அகமது, ஷியாஸ், ரயீஸ் ஆகிய 4 பேரிடமும் என்.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் திருச்சூர் மற்றும் பாலக்காட்டில் உள்ள கைது செய்யப்பட்ட 4 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
அதில், பயங்கரவாதம் தொடர்பான முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கின. அவற்றை அவர்கள் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அப்போது கேரளாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும், சமூக தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டம் தீட்டியது தெரிய வந்தது. பயங்கர சதித்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டிருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதால் கேரளாவில் அவர்கள் நடத்த இருந்த பயங்கர செயலை முறியடித்து உள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவை தளமாக கொண்டு உளவுப்பணிகளை மேற்கொண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்த ஐ.எஸ். அமைப்பினர் திட்டத்தை முறியடித்து உள்ளோம். தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஐ.எஸ். நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும், கொள்ளை மற்றும் பிற குற்ற செயல்களை செய்வதன் மூலம் பயங்கர தாக்குதல்களை மேற்கொள்வதற்காகவும் நிதி திரட்டி வந்துள்ளனர்.
நம்பகமான தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத எதிர்ப்பு படையுடன் உளவுத்துறை தலைமையில் கேரள என்.ஐ. கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு சதித்திட்டம் தீட்டியவர்களை பிடித்துள்ளது. மேலும் திருச்சூரில் 3 இடங்களிலும், பாலக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ். நடவடிக்கைகளை ஊக்குவிக்க நிதி திரட்டி உள்ளனர். மேலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதி செய்து கொண்டிருந்தனர். மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் மற்றும் சில சமூக தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் சிக்கி விட்டனர். அவர்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிப் உள்பட 4 பேரிடம் தொடர்பில் இருந்த மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை என்.ஐ. அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
- புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது.
- என்.ஐ.ஏ. அலுவலகத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
- சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் சோதனை
- பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை
கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்த இவர் காரில் வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்து கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த திட்டம் நிறைவேறாமல் தான் தீட்டிய சதியில் தானே சிக்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான முபினுடன் நெருங்கி பழகியவர்கள், கார் வாங்கி கொடுத்தவர்கள், வெடிபொருட்கள் வாங்கி கொடுத்தவர்கள், சதி திட்டம் தீட்டியவர்கள் என இதுவரை 13 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 13-வது நபராக கோவை உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாரூதின் (36) என்பவர் கைதானார்.
கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஒரு ஆண்டு நெருங்க உள்ள நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனையும், விசாரணையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை அவர்கள் தமிழகம் முழுவதும் பலமுறை 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தநிலையில் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இன்று தமிழகத்தில் ஒரே நேரத்தில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். குண்டுவெ டிப்பில் பலியான ஜமேஷா முபின், கோவையில் உள்ள ஒரு அரபிக்கல்லூரியில் பயின்றுள்ளார். அந்த சமயம் அவருடன் சேர்ந்து படித்த நபர்கள் யார், ஜமேஷா முபினை போல் அவர்களில் யாருக்காவது தீவிரவாத எண்ணம் இருந்ததா? என என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடந்தது. ஜமேஷா முபினுடன் படித்ததாக கூறப்படும் நபர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் இன்று சோதனை நடத்தப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் அதிரடியாக இறங்கினர். கோவை, சென்னை, கேரள மாநிலம் கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்திருந்தனர்.
ஒவ்வொரு வீடுகளிலும் 4 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக 2 உள்ளூர் போலீசார் சென்று இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் அதிகாரிகள் அறை, அறையாகச் சென்று சல்லடை போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை, வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
கோவையில் உக்கடம், குனியமுத்தூர், கரும்புக்கடை, ஜி.எம். நகர், ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. கோவை மாநகராட்சி 82-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், வரிவிதிப்புக்குழு தலைவருமான முபஷீரா என்பவர் வீடு கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதியில் உள்ளது. முபஷீராவின் வீட்டிலும் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். முபஷீராவின் கணவர் ஆரிப், அரபிக்கல்லூரியில் படித்துள்ளார். அதன்பேரிலேயே கவுன்சிலர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
86-வது வார்டு தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருப்பவர் தமிமுன்அன்சாரி. உக்கடம் பிலால் எஸ்டேட்டில் உள்ள இந்த வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. ஜமேஷா முபின் படித்த அரபிக்கல்லூரியிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல கோவை மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நீடித்தது.
சில இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு நின்றனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
சோதனையின்போது சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. அந்த ஆவணங்கள் மூலம் அடுத்தக்கட்ட விசாரணை யில் இறங்க உள்ளனர். கோவையில் ஜமேஷாமுபின் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இரசாலிபுரத்தைச் சேர்ந்தவர் முகமது இத்ரீஸ் (வயது 25). இவர் என்ஜி னீயரிங் படித்துள்ளார். இவரது வீட்டுக்கு இன்று காலை 2 கார்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 6 பேர் வந்தனர். அவர்கள் முகமது இத்ரீஸ் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். முகமது இத்ரீசுரின் செல்போனுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களிடம் இருந்து அடிக்கடி தகவல்கள் சென்றதாக கூறப்படுகிறது. அந்த புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னையில் 3 இடங்களில் சோதனை நடந்தது. திரு.வி.க. நகரில் உள்ள முஜிபீர் ரகுமான், நீலாங்கரையில் புகாரி என்பவர் வீடு மற்றும் அயனாவரம் முகமது உக்கரியா ஆகியோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிவடைந்த நிலையில், அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், சோதனையின் போது பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள், தரவுகள், பிராந்திய மற்றும் அரபு மொழி புத்தகங்கள், ரூ. 60 லட்சம் ரொக்கம், 18 ஆயிரத்து 200 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளில் இருந்து தரவுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
- மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது.
- மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அந்த அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.
புதுடெல்லி:
மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது.
இந்நிலையில், இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வரும் 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்பட 6 மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஐ.இ.டி. வகை குண்டு நாச வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கேரள போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் டிபன் பாக்ஸ் குண்டு வெடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்களும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த வகை குண்டை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் கேரளாவில் பயங்கரவாதிகள் நாச வேலையில் ஈடுபட வேண்டும் என்கிற சதி திட்டத்துடன் அங்கு முன்கூட்டியே முகாமிட்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் டிபன்பாக்ஸ் குண்டை வெடிக்க செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து இதற்கு முன்பு நடைபெற்ற டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐ.இ.டி. வகை குண்டு நாச வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வகை குண்டுகள் வீட்டிலேயே தயாரிக்கப்படுபவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குண்டு வைத்தவர்கள் கேரளாவில் முகாமிட்டு அங்கேயே வெடிகுண்டை தயாரித்தார்களா? இல்லை வேறு பகுதியில் வெடிகுண்டை தயாரித்து அதனை கேரளாவுக்கு எடுத்துச் சென்று வெடிக்க செய்தார்களா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் கேரள போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே அது எந்த வகை குண்டு என்பதை கண்டறிந்துள்ள அதிகாரிகள் சதி திட்டத்தில் ஈடுபட்டவர்களை கூண்டோடு பிடிக்க வலை விரித்துள்ளனர்.
- டோமினிக் மார்ட்டின் கொச்சியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி உள்ளார்.
- ஜாம்ரா சர்வதேச அரங்கில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த வளாகத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகவேகமாக வெளியேறியது.
கொச்சி:
கேரள மாநிலம் கொச்சி அருகே ஜாம்ரா சர்வதேச மாநாட்டு அரங்கம் உள்ளது.
அந்த மாநாட்டு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் யெகோவாவின் சாட்சிகள் என்னும் கிறிஸ்தவ மத பிரிவின் 3 நாள் பிரார்த்தனை கூட்டம் நடந்து வந்தது.
இறுதி நாளான நேற்று காலை பிரார்த்தனை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். மாநாட்டு அரங்குக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த நிலையில் வெளியிலும் சுமார் ஆயிரம் பேர் இருந்தனர். பிரார்த்தனை தொடங்கிய சிறிது நேரத்தில் அரங்கின் மையப்பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.
அதில் ஏராளமானோர் காயமடைந்து அலறினார்கள். அடுத்த சில நிமிடங்களில் அரங்கின் இரு பக்கங்களிலும் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
மாநாட்டு அரங்கில் குண்டு வெடித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு பெண் நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து இருந்தது.
இந்தநிலையில் இன்று அதிகாலை 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கேரள குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
அவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களை காப்பாற்ற கூடுதல் டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க நிபுணர்களை கொண்ட போலீஸ் சிறப்பு குழுவை கேரள மாநில அரசு அமைத்துள்ளது. அவர்கள் விசாரணை தொடங்கிய நிலையில் டோமினிக் மார்ட்டின் என்பவர் தாமாக முன் வந்து போலீசில் சரணடைந்து உள்ளார்.
கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் குண்டுகள் வைத்தது நான் தான் என்று அவர் பொறுப்பேற்று இருக்கிறார். போலீசாரிடம் நேற்று அவர் பரபரப்பு வாக்குமூலமும் அளித்து உள்ளார். அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே டோமினிக் மார்ட்டினிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சிறப்பு குழு அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் கொச்சியில் சில இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டோமினிக் மார்ட்டின் கொச்சியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி உள்ளார். அந்த இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணை முடிந்த நிலையில் என்.எஸ்.ஜி. அதிகாரிகள் இன்று டோமினிக் மார்ட்டினிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கொச்சியில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அது பற்றிய தகவல்களை வெளியிட என்.ஐ.ஏ. அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
சரணடைந்த டோமினிக் மார்ட்டினுக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று விசாரணை குழுவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கிறிஸ்தவ ஜெப கூட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 2 பேரை கேரள போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் யார்? என்ற விவரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். அவர்கள் இருவரும் திருச்சூர் போலீஸ் அகாடமியில் பலத்த பாதுகாப்புடன் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
விசாரணை முடிந்த பிறகு இறுதி தகவல்களை வெளியிடுவோம் என்று கேரள மாநில போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான மர்மம் நீடித்தபடி உள்ளது.
ஜாம்ரா சர்வதேச அரங்கில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த வளாகத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகவேகமாக வெளியேறியது. அந்த காரில் சென்றவர்கள் யார் என்பது மர்மமாக உள்ளது. அவர்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அந்த நீல நிற காரின் பதிவு எண்ணை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த கார் எண் போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த நீல நிற கார் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
அந்த காரில் தான் டிபன் பாக்சில் ஐஇடி வெடிகுண்டுகள் எடுத்துக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த வெடிகுண்டுகளை டோமினிக் மார்ட்டினிடம் கொடுத்த பிறகு காரில் வந்தவர்கள் வேகமாக தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் பினராயி விஜயன் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
- பிரார்த்தனையில் பங்கேற்றிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
- டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து 29 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக்கூட்டம் கடந்த 27-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.
கூட்டத்தின் 3-ம் நாளான நேற்று முன்தினம் நடந்தது. அதில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது மாநாட்டு மைய அரங்கில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் பிரார்த்தனை நடந்த மையத்தில் தீப்பிடித்து எரிந்தது.
பிரார்த்தனையில் பங்கேற்றிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த குண்டு வெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் களமச்சேரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி(53) என்ற பெண்ணும், லிபினா என்ற 12 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.
குண்டுவெடிப்பு நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே, குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையில் ஊழியராக பணிபுரிந்ததாகவும், அந்த சபையின் நடவடிக்கை பிடிக்காததால் அதிலிருந்து வெளியே வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் அந்த சபையின் செயல்பாட்டை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தும் அவர்கள் தங்களது நடவடிக்கையை தொடர்ந்ததால், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் திட்டமிட்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்ததாகவும் அவர் கூறினார்.
வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கான வெடிமருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை கொச்சியில் பல இடங்களில் வாங்கியதாகவும், பின்பு யூ-டியூப்பை பார்த்து எலெக்ட்ரிக் டெட்டனெட்டர் தயாரிப்பை தெரிந்துகொண்டு வெடிகுண்டுகளை தனது வீட்டின் மாடியில் வைத்து தயாரித்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் தயாரித்த வெடிகுண்டுகளை நேற்றுமுன்தினம் காலை பிரார்த்தனை நடந்த இடத்திற்கு கொண்டு சென்று வைத்து, திட்டமிட்டபடி குண்டுகளை வெடிக்கச் செய்ததாக தெரிவித்திருக்கிறார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் டொமினிக் மார்ட்டினை கைது செய்தனர்.
அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் என்ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
ஆனால், தான் மட்டுமே இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அவர் வெடிபொருட்கள் வாங்கிய இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து 29 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டொமினிக் மார்ட்டின் வெளிநாட்டில் அதிக நாட்கள் இருந்திருப்பதால், அவருடனான வெளிநாட்டு தொடர்ப்பு பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர் யார் யாருடன் பழகி வந்தார்? வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு யாருடன் தொடர்பில் இருந்தார்? பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 21 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அந்த 16 பேரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக டொமினிக் மார்ட்டின் கொச்சி பகுதியில் 50 பட்டாசுகள் மற்றும் 8 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவைகளை வாங்கி இருக்கிறார்.
- குண்டுவெடிப்பு நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் டொமினிக் மார்ட்டினின் மாமியார் கலந்து கொண்டிருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியாகினர். குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் போலீசில் சரண் அடைந்தார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 29 மணி நேரம் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில் குண்டு வெடிப்பு சதி திட்டத்திற்கு திட்டமிட்டது, அதன் செயல்படுத்தியது, குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிபொருட்களை வாங்கி தயாரித்தது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் விசாரணையில் டொமினிக் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து தீப்பிடித்து எரிந்த காட்சிகள் உள்ளிட்டவைகளையும் விசாரணையின்போது காண்பித்துள்ளார். விசாரணையின்போது தெரிவித்த தகவல்கள் மற்றும் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குண்டு வெடிப்பு சதியை நிறைவேற்றியது டொமினிக் மார்ட்டின் என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்தனர்.
வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக அவர் கொச்சி பகுதியில் 50 பட்டாசுகள் மற்றும் 8 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவைகளை வாங்கி இருக்கிறார். மேலும் யூடிப்பை பார்த்து சிம்பிள் சர்க்கியூட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய ரிமோட் தயார் செய்திருக்கிறார்.
அந்த ரிமோட்டை பயன்படுத்தியே வெடி குண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறார். ரிமோட்டை பயன்படுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்த வீடியோவையும் டொமினிக் மார்ட்டின் தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அதனையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் டொமினிக் மார்ட்டினின் மாமியார் கலந்து கொண்டிருக்கிறார். அவர் பங்கேற்கும் தகவல் அறிந்த டொமினிக் மார்ட்டின், அவரை பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவர் டொமினிக் மார்ட்டின் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அவரது மாமியார் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார். இருந்த போதிலும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்காமல் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.