என் மலர்
நீங்கள் தேடியது "nirmala Sitharaman"
- தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைக்க, மத்திய அரசு கட்டுப்பட்டுள்ளது.
- தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?
சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,
தமிழகத்தில் இருந்து வரிப்பணம் அதிகம் தருகிறோம். ஒரு ரூபாய் தந்தால், 7 பைசா தான் திரும்புகிறது என்கின்றனர். மற்ற சலுகைகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது. அனைத்துக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறோம். ஜனரஞ்சகமாக இவர்கள் விவாதிப்பதே தப்பு என்று கூறி உள்ளார்.
இதற்கு பதிலடியாக தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை.
- தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் ஆதாயம தேடுவதற்காக தி.மு.க. மக்களின் உணர்வுகளை தூண்டி விடும் செயல்களில் இறங்கி உள்ளது. பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டு பின்பு கையெழுத்து போட மாட்டோம் என்கிறார்கள். தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை.
தாய் வழிக்கல்வியை தான் அது ஊக்குவிக்கிறது. அமித்ஷா கூட, மருத்துவ, என்ஜினீயரிங் படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்த விவகாரத்தை தி.மு.க. வணிக நோக்கத்தில் அணுகுகிறது. உண்மையில் அவர்களுக்கு தமிழ் மொழி மீது அக்கறை இல்லை.
இவர்கள் மொழி பிரச்சனையை கிளப்புவதற்கு மற்றொரு காரணம், இந்தியா கூட்டணி உடைந்து விட்டது. உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையை ஏற்கவில்லை. கேரளாவும், காங்கிரசை தோற்கடிக்க கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறது.
பி.எம். ஸ்ரீ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அதனை ஏற்று கொண்டு விட்டார்கள். தமிழகம் மட்டும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து விட்டது. டெல்லி நிர்பயா, மேற்கு வங்காளத்தில் ஒரு மருத்துவ மாணவி கொலை ஆகியவை இந்தியா முழுவதும் பேசப்பட்டது. ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம், இங்கேயே அடக்கப்பட்டு, வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்? உங்கள் கட்சியை சேர்ந்தவர் தானா என்பதனை சொல்ல வேண்டும். போதை பொருளில் முக்கிய நபர் சிக்கி உள்ளார். அதேபோல் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்து உள்ளது. நிச்சயம் நான் சொல்கிறேன், தமிழகத்தில் மத்திய ஏஜென்சிகள் நடத்தும் வழக்குகளில் நிச்சயம் நடவடிக்கை இருக்கும்.
இப்போது தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பிரதமர் மோடி யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்துவிட்டார். ஆனால் இவர்கள் வேண்டும் என்றே, பிரச்சனையை கிளப்புகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கும், வடமாநிலங்கள் பலன் அடைய தானே செய்யும் என்று கேட்கிறீர்கள்.
மக்கள்தொகை மட்டும் அடிப்படை இல்லை என்பதனை தெளிவாக சொல்கிறேன். அப்படி செய்தால் லடாக் போன்று சிறு சிறு பகுதிகளுக்கு எம்..பி.க்கள். இருக்காது. தொகுதி மறுசீரமைப்புக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்பின் ஒரு தன்னதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதன்பின்தான் தொகுதி வரையறையை மேற்கொள்வார்கள். 2026-ம் ஆண்டுக்கு இந்த பணி முடிய சாத்தியமில்லை. எனவே 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காலக்கெடு முடிந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது.
ஏற்கனவே ராகுல்காந்தி, மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதி பிரிக்கப்படும் என்று பிரசாரம் செய்தார். இப்போது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது வெடகக்கேடானது. இங்கு வந்திருக்கும் கேரள முதல்-மந்திரியிடம் முல்லைப்பெரியாறு நீர் குறித்து கேட்கலாம் அல்லவா? கர்நாடக துணை முதல்-மந்திரியிடம் காவிரி நீர் கேட்கலாம் அல்லவா? அதேபோல் எல்லோரிடமும் நீங்கள் கல்விக்கொள்கையை ஏற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம்.
இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. வங்கிகளில் தங்க கடனை திருப்பி விட்டு, பின்பு மீண்டும் தான் வைக்க வேண்டும் என்ற திட்டத்தால் பலரும் பாதிக்கப்படுவதாக கேட்கிறீர்கள்?. இது வங்கிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம். எனவே விரைவில் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன.
- வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும்.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி சலுகை அளித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி மாற்றங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். பழைய மற்றும் புதிய வரி விதிகளில் ஒன்றை தேர்வு செய்வது வரி செலுத்துவோரின் தனிப்பட்ட பொறுப்பாக இருந்தாலும் புதிய வரிமுறையை ஊக்குவிப்பதற்காக ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை என்பது உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
2 முறையின் கீழும் வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் வரி செலுத்துவோர் தங்கள் வங்கி கணக்கு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மேலும் சேமிப்பு கணக்குகளில் ஈட்டப்படும் வட்டியையும் குறிப்பிட வேண்டும். செயலற்ற வங்கி கணக்குகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பணத்தை திரும்ப பெறுவதற்கு முதன்மை கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதேபோல் ஷேர்மார்க் கெட்டின் பங்குகள் கூட்டாண்மை சொத்துகள் மற்றும் கடன்கள் வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானம் ஏதேனும் இருந்தால் அவற்றையும் வெளியிட வேண்டும்.
பழைய வரிமுறையின் கீழ் பல்வேறு விலக்குகள் மற்றும் கழிவுகள் இருப்பதால் வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும். முதலீடுகள், சுகாதார காப்பீடு, கல்விக்கடன், நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
புதிய வரிவிதிப்பு குறைந்த வரிவிகிதங்களை வழங்குகிறது. ஆனால் பெரும்பாலான விலக்கு களை அனுமதிக்காது. அடிப்படை வருமான வெளிப்படுத்துதல் மட்டுமே தேவைப்படுகிறது. வீட்டு வாடகை, பயணப்படி போன்ற விலக்குகளுக்கான சலுகைகள் பொருந்தாததால் இது எளிமையானது என்றார்.
வரி செலுத்துவோர் பழைய வரி முறையை விரும்பினால் வீட்டு வாடகை கொடுப்பதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் புதிய வரிமுறையில் இந்த விலக்கு கிடைக்காது. வாடகை ரசீது இதில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் வீட்டு உரிமையாளரின் பெயர், வாடகை தொகை, பணம் செலுத்தும் தேதி மற்றும் முகவரி ஆகியவை இருக்க வேண்டும்.
- பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?
- மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
நேற்று மாநிலங்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், "திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்து த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?
குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! பெரியார் போற்றுதும் பெரியார் சிந்தனை போற்றுதும்" என்று பதிவிட்டுள்ளார்.
- டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் பினராயி விஜயனை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
- இந்த சந்திப்பின்போது கேரள மாநில ஆளுநர் உடனிருந்தார்.
டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து பேசினார்.
கேரளா அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் சுமூகமான உறவு கிடையாது. வயநாடு நிலச்சரிவு மறுசீரமைப்பிற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என பினராயி அரசு தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது கேரள மாநில அரசுக்கு போதுமான நிதியை ஒதுக்க பினராயி விஜயன் வலியுறுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான உரையாடல் சிறப்பானதாக அமைந்தது என பினராயி விஜய் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது கேரள மாநில ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள மாநில அரசின் டெல்லிக்கான பிரதிநிதி கே.வி. தாமஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கேரளாவில் அடுத்த வருடம் தேர்தல் வரவிருக்கும் நிலையில் எல்.டி.எஃப்., பாஜக இடையே மறைமுக புரிதல் இருப்பதாக கேரள மாநில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
- தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்திற்கு மாலை போடுகிறீர்கள் என நிர்மலா சீதாராமன் பேச்சு
- நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பின்தங்கியுள்ளது. 3 ஆம் வகுப்பு மாணவர்களால் 1 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை.
திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று கொளத்தூர் மணி அவர்கள் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "தந்தை தன் மகனையோ, மகளையோ பார்த்து, தறுதலை என்று பேசுவது அவன் தறுதலையாகப் போகவேண்டும் என்ற விருப்பத்தில் அல்ல. உன்னை மாற்றிக் கொள் என்பதற்காக. பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதுகூட, தமிழ் அறிவியல் இல்லாத வெறும் மதமும் காதலும் மட்டுமே கொண்ட மொழியாக இருக்கிறது, அறிவியல் இல்லை என்ற கோபத்தால் வந்ததாக புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் பெரியார் கூட சொன்னார்... 'யாராவது அறிவியல் சார்ந்த, மக்கள் முன்னேற்றம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வந்தால் என் செலவில் அச்சிட்டு உங்களுக்கு சன்மானமும் கொடுக்க தயாராக இருக்கின்றேன்' என்று அறிவித்தவர் பெரியார்" என்று தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள்.
- தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல.
தமிழ்மொழி விஷயத்தில் தி.மு.க. நாடகமாடுவதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-
அவர்கள் (பா.ஜ.க.) தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள். அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டும். தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல. அவர்கள் (பா.ஜ.க.) நயவஞ்சகர்கள்.
இவ்வாறு வைகோ கூறினார்.
- தொழில்நுட்பம் மிகப்பெரிய கருவியாக மாறி இருக்கிறது.
- மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது நல்லாட்சியில் மிக முக்கியமானது.
விசாகப்பட்டினம் :
மத்திய அரசின் மானியங்கள் இப்போது நேரடி பண பரிமாற்றம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால் பலன்கள் உரியவர்களுக்கு நேரடியாக போய்ச்சேருகிறது.
இதுவரையில் மத்திய பா.ஜ.க. அரசு ரூ.25 லட்சம் கோடியை நேரடி பண பரிமாற்றம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நேரடி பண பரிமாற்றத்தின் பயன் குறித்து ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில், காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் என்.டி.ராமாராவ் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறபோது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் மானியங்கள் இப்போது நேரடி பண பரிமாற்றம் திட்டத்தின்கீழ் பொதுமக்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால் கசிவுக்கு (கமிஷன், இடைத்தரகர்கள்) வழியில்லாமல் போகிறது.
பிரதமர் மோடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பண கசிவு செயல்முறையை கட்டுப்படுத்தி உள்ளார். பண கசிவுக்கு வழி இல்லை. இலக்கு வைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு பணம் போய்ச்சேருகிறது.
தொழில்நுட்பம் மிகப்பெரிய கருவியாக மாறி இருக்கிறது. இதனால் மனித முட்டாள் தனமும், சபலமும் கட்டுபடுத்தப்பட்டுள்ளன.
இன்றைக்கு நாம் பின்பற்றி வருகிற தொழில்நுட்பம், பொதுமக்களுக்கு போய்ச்சேர வேண்டிய பலன்கள் நேரடியாக போய்ச்சேருவதை உறுதி செய்கிறது. இதனால் நல்லாட்சியின் குறிக்கோள் நிறைவேறுகிறது.
புத்திசாலித்தனம் சில அம்சங்களை கொண்டிருக்கும். அதிலும் மக்கள் இடையே புகுந்துகொள்ள தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரை, எந்தவிதமான திருட்டுத்தனமும் செய்துவிடாமல், யார் எதை பெற வேண்டுமோ, அதை அவர்கள் பெற முடிவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்லாட்சி என்பது நோக்கங்களை செயல்படுத்தக்கூடிய கருவிகளை தேடுவதாகும்.
குறைவான பணியாளர்கள், நிறைவான நிர்வாகம் என்பதுதான் அரசின் தாரக மந்திரம் ஆகும். எங்கு தேவைப்படுகிறதோ அங்கு அரசின் இருப்பு போதுமான அளவில் இருக்கிறது. மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது நல்லாட்சியில் மிக முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரியங்கா காந்தியை வரவேற்க காத்திருந்தவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.
- பெண்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதால் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாக தகவல்.
சிம்லா:
இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவுடைந்தது. இந்நிலையில் கடைசிநாள் பிரச்சாரத்திற்காக அம்மாநிலத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயாலாளர் பிரியங்கா காந்தியை வரவேற்க தலைநகர் சிம்லாவில் உள்ள மால் சாலையில் காங்கிரஸ் மகளிர் அணியினர் காத்திருந்தனர்.
அப்போது அந்த வழியாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காரில் சென்றார். அவரை கண்ட காங்கிரஸ் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் கை அசைத்தனர். இதை கண்ட நிதி மந்திரி, காரை நிறுத்தி சொல்லி கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதை சமூக வளைதளங்களில் அவர்கள் பகிர்ந்தனர். நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதால் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாக இமாச்சல் பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
- பொருளாதார வளர்ச்சி அடைந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.
- இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
டெல்லி:
அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
தற்போதைய உலகப் பொருளாதார வளர்ச்சி நிலை சவாலானதாகவே உள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் தனிமைப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதையின் முக்கிய அங்கமாக வெளிநாட்டு மூலதனத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
இதற்காக முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். வெளிநாட்டு முதலீட்டாளருக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், மொத்த வெளிநாட்டு முதலீட்டு வரம்பு அதிகரிப்பு, பொதுவான விண்ணப்பப் படிவத்தை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகளின் வெற்றி, இந்தியாவில் தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது, அண்மையில் இங்கிலாந்தை தாண்டி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் உலகின் பொருளாதார வளர்ச்சி அடைந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது.
- பாராமதிக்கு நிர்மலா சீத்தாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மும்பை :
புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊர் ஆகும். இந்த பகுதி தேசியவாத காங்கிரசின் கோட்டையாக உள்ளது. தற்போது பாராமதி எம்.பி.யாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளார்.
இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாராமதியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் பா.ஜனதா உள்ளது.
எனவே பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் பாராமதிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்தநிலையில் நிர்மலா சீதாராமன் பாராமதியில் கவனம் செலுத்துவதைவிட்டு விட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடு கிராஸ்டோ கூறியதாவது:-
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராமதி மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் பொருளாதாரத்தை மறந்துவிட்டார். பாராமதியில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க அவர் மீண்டும் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பாராமதியில் சுப்ரியா சுலேயை பா.ஜனதா தோற்கடிக்கும் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை செய்யும் முயற்சியில் நிர்மலா சீதாராமன் அவர் மத்திய நிதி மந்திரி என்பதை மறந்துவிட்டார். எனவே அவர் பாராமதியைவிட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநிலங்களின் கருத்துக்களை பரிசீலிப்பதாக மத்திய நிதியமைச்சர் தகவல்
- கடன் உச்ச வரம்பை உயர்த்தியதற்காக மத்திய அரசுக்கு, மாநிலங்கள் நன்றி.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றனர். நிதித்துறையை கையாளும் முதலமைச்சர்களும், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரும் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டியவை குறித்த பல்வேறு ஆலோசனைகள் மாநிலங்கள் சார்பில் வழங்கப்பட்டன. அவற்றை பரிசீலிப்பதாக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக கடன் பெறுவதற்கான உச்ச வரம்பை உயர்த்தியதற்காக பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.