என் மலர்
நீங்கள் தேடியது "old man died"
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவிநாசி பாளையம் சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
- ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
- சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள ஜே. கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 83). சம்பவத்தன்று இவர் திருப்பூரை சேர்ந்த தங்கராஜ் (36) என்பவரது காரில் முன்னால் அமர்ந்து சென்றார். கார் பல்லடம் - உடுமலை ரோட்டில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் சுல்தான் பேட்டை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி கிடந்தார்
- பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்
ஆண்டிபட்டி:
திருப்பூரை சேர்ந்தவர் மைக்கேல்ராசு (வயது60). இவர் மதுபோதைக்கு அடிமையானதால் தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி கிடந்தார். இது குறித்து அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து மைக்கேல்ராசை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ைமக்கேல்ராசு எற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 17-ந்தேதி குலதெய்வ கோவில் செல்வதற்காக பேட்டையில் இருந்து கடையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
- இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரமசிவம் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
முக்கூடல்:
நெல்லையை அடுத்த பேட்டை காந்திமதி நகரை சேர்ந்த பரமசிவம் (வயது 81) என்பவருடைய மகன் சுப்பிரமணியன் (40).
கார் கவிழ்நது விபத்து
இவர் தனது மனைவி பேச்சியம்மாள் (36), மகள் பவித்ரா (13), மகன் மாதேஸ்வரன் (11) மற்றும் தந்தையுடன் கடந்த 17-ந்தேதி குலதெய்வ கோவில் செல்வதற்காக பேட்டையில் இருந்து கடையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
காரை பரமசிவம் ஓட்டினார். பாப்பாக்குடி அருகே செங்குளம்- இடைகால் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓடைப்பாலம் அருகில் சென்ற போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சாலை யோரத்தில் உள்ள பனை மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்ததும் மேல் சிகிச்சைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பிறந்தநாளில் பலி
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரமசிவம் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரமசிவனுக்கு இன்று பிறந்த நாள் ஆகும். பிறந்த நாளன்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- திடீரென மூச்சு விடுவதில் தியாகராஜனுக்கு சிரமம் ஏற்பட்டது.
- சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி கோவலன் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (61). இவருக்கு கடந்த 6 மாத காலமாக மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்காக அவர் மருந்து, மாத்திரை எடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று திடீரென மூச்சு விடுவதில் தியாகராஜனுக்கு சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் மருத்துவர் மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
இந்நிலையில் இரவு மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.அவரை மீண்டும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தியாகராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 மாதங்களுக்கு முன்பு சுடலைமுத்துக்கும், பலவேசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- தோட்டாக்குடி குளத்தில் முதியவர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆழ்வாநேரி, புதுக்குறிச்சியை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 55). இவருக்கு பலவேசம் என்ற மனைவியும், இந்து என்ற மகளும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுடலைமுத்துக்கும், அவரது மனைவி பலவேசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பலவேசம், கணவரை பிரிந்து, தனது மகன், மகளு டன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங் குறிச்சிக்கு சென்று விட்டார். மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்று விட்டதால் சுடலை முத்து மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதற்கிடையே கடந்த 19-ந் தேதி சுடலைமுத்து மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர்.
இந்நிலையில் மூன்றடைப்பு அருகே உள்ள தோட்டாக்குடி குளத்தில் முதியவர் சடலம் கிடப்ப தாக மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் மாயமான சுடலைமுத்து என்பதும், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
- சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் மரணம் அடைந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கொரோனா 2-வது அலையில் ஈரோடு மாவட்ட த்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆயிரக்க ணக்கா னோர் பாதிக்கப்பட்டனர். ஆக்சிஜன் கட்டுப்பாடு ஏற்பட்டது.
மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. முதிய வர்கள் கொரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்த ப்பட்டது.
முககவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை கடுமையாக கடைபிடிக்க ப்பட்டது.
இது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரண மாக மாவட்டத்தில் கொரோ னா தாக்கம் குறைய தொடங்கியது. கடைசியாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்தது. அதன் பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் இழப்பு ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 8 பேர் முதல் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் இதுவரை கொரோ னாவால் பாதித்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட முழுவதும் கொரோனா பாதிப்புடன் 59 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோ னா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 735 ஆக உயர்ந்துள்ளது.
89 வயதான அந்த முதியவர் கடந்த 20-ந் தேதி சளி, காய்ச்சல், மூச்சு திணறல் பாதிப்புடன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக வந்தார்.
அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 21-ந் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த முதியவர் கொரோனா தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
இறந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு டன் சில இணை நோய்களும் இருந்துள்ளன.
- மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதியவர் மீது மோதிவிட்டு தப்பி சென்று விட்டார்.
- போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம்:
காங்கேயம் அருகேயுள்ள நத்தக்காடையூர் கோவை - காங்கேயம் ரோட்டில் சம்பவத்தன்று இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதியவர் மீது மோதிவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற நபரை பிடிக்க அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி. கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- பலத்த காற்று வீசியதால் தூக்கிவீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார்.
- பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
தேனி:
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி(65). சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் தூக்கிவீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார்.
மின்சாரம் தாக்கி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட அவரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அழகர்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பழைய கரூர் சாலை செல்லமந்தாடி, ஜி.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது70). இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகளும் உள்ளனர். பாண்டித்துரைக்கு காது சரிவர கேட்காது.
இந்நிலையில் உறவினர்களை பார்க்க செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடிப்பார்த்தபோது முள்ளிப்பாடி அருகே ரயில் மோதி இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- க.விலக்கு பிரிவு பகுதியில் வந்தபோது சரக்குவாகனம் பைக் மீது மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்.
- ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் சிவாஜி(62). தற்போது சுருளிபட்டியில் வசித்து வந்தார். இவர் தனது சகோதரர்உடன் 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சுருளிபட்டி- சுருளிதீர்த்தம் சாலையில் உள்ள க.விலக்கு பிரிவு பகுதியில் வந்தபோது சரக்குவாகனம் அதிவேகமாக வந்து பைக் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சிவாஜியை அக்கம்பக்கத்தி னர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே சிவாஜி இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்ட ர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ராயப்ப ன்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
திருப்பூர்:
திருப்பூர் -வஞ்சிபாளையம் இடையே சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.