என் மலர்
நீங்கள் தேடியது "omar abdullah"
- கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார்.
- 2002 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனது முதல் சட்டசபை தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாரமுல்லா எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் லட்சாதிபதியான உமர் அப்துல்லாவுக்கு சொந்தமாக வீடு, நிலம், வணிக கட்டிடம், கார் அல்லது வேறு எந்த அசையா சொத்துக்களும் இல்லை என்பது அவர் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் எம்.பி.யாகவும் இருந்து வரும் ஓய்வூதியம் மட்டுமே அவரது வருமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009-14 வரை ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக பணியாற்றிய உமர் அப்துல்லாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ.54.45 லட்சமாகும். அவரிடம் ரூ. 95 ஆயிரம் ரொக்கம் இருந்தது. வங்கிகளில் ரூ.23.48 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள விவாகரத்து முடிவால் மனைவியை பிரிந்திருப்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது வருமானம் 2019-20-ல் ரூ.7.92 லட்சம் 2020-21-ல் ரூ.11.73 லட்சம், 2021-22 ல் ரூ.10 லட்சம், 2022-23-ல் ரூ.19.39 லட்சம் மற்றும் 2023-24-ல் ரூ.13. 20 லட்சம் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். அவர் முதன்முதலில் 1998-ல் ஸ்ரீநகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 1999-ல் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனது முதல் சட்டசபை தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் தோல்வி அடைந்தார். 2008-ல் சோனாவர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் மந்திரியானார். 2014-ல், 2 இடங்களில் போட்டியிட்டு சோனாவர் தொகுதியில் தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தார், ஆனால் மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள பீர்வா தொகுதியில் வெற்றி பெற்றார்.
- 5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ந் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளன.
5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய வி.ஜ.பி. வேட்பாளர்களும் அடங்குவர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் 5-ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 264 பேரும், மிக குறைவாக லடாக்கில் 3 பேரும் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், ஸ்மிரிதி இரானி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோரும் முக்கியமானவர்கள்.
ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோ மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதியை சேர்ந்த ரவிதாஸ் மெஹ்ரோத்ரா போட்டியிடுகிறார்.
பிஹாரின் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஷிவ் சந்திர ராம் களத்தில் உள்ளார். பிஹாரின் சரன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் ரோகிணி ஆச்சார்யா களமிறங்கி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் உள்ள 174 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 13-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும், கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
வாட்டர் கூலர்கள், மின்விசிறிகள், கூடாரங்கள் போன்றவற்றை பொருத்தி வாக்காளர்களை கடும் வெப்பம் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட வக்குச்சாவடிகளில் 60 ஆயிரத்துக்கும் க்கும் மேற்பட்ட மத்தியப் படை வீரர்களையும், 30 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதை தொடர்ந்து வருகிற 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலும் நடைபெறுகின்றன. 7 கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
- உமர் அப்துல்லாவை விட அப்துல் ரஷீத் 1,80,478 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
- அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் தோல்வியை ஏற்பதாக முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
வெற்றி பெற போகும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத்க்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உமர் அப்துல்லாவை விட அப்துல் ரஷீத் 1,80,478 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
எஞ்சினியர் ரஷீத் என அழைக்கப்படும் அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
- பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால், இந்த அரசு 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்" என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களில் ஒருவர் கூட பாராளுமன்ற தேர்தலில் வென்று எம்.பி.யாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை.
- போட்டிக்கு செல்லாமல் இருப்பது பிசிசிஐயின் சொந்த முடிவு.
ஸ்ரீநகர்:
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தினமும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே 2025 ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-க்கு பிசிசிஐ வலியுறுத்தும் என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை என ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
இதில் புதிதாக என்ன இருக்கிறது? இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை, போட்டிக்கு செல்லாமல் இருப்பது பிசிசிஐயின் சொந்த முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை.
இந்த இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவது நம் நாட்டின் பொறுப்பு மட்டுமல்ல, நல்லுறவு ஏற்பட வேண்டுமானால் பாகிஸ்தானின் பொறுப்பும் கூட என்று நான் இப்போதும் கூறி வருகிறேன்.
இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கக்கூடாது, அப்படியொரு சூழல் இருக்கக்கூடாது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படும் வகையில் பாகிஸ்தானும் பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.
#WATCH | Srinagar: On Indian cricket team unlikely to go to Pakistan for ICC Champions Trophy, Jammu and Kashmir National Conference leader Omar Abdullah says, "What is new in this? Both countries have not played bilateral series for many years, it is BCCI's own decision not to… pic.twitter.com/MGnDXCeLsA
— ANI (@ANI) July 11, 2024
- உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி.
- 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பாக அவரது மனைவி பாயல் அப்துல்லாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரிந்து சென்ற மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீது 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அப்துல்லா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால் அவர்களது திருமணம் முறிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திருமணங்களை கலைக்க கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை அவர் கோரினார்.
உமர் மற்றும் பாயல் அப்துல்லா செப்டம்பர் 1, 1994 இல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் 2009 முதல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் இரு மகன்களின் பாதுகாப்பில் உள்ளனர்.
முன்னதாக, மேலும் அவரது மனைவிக்கு மாதம் 1.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அவரது இரு மகன்களுக்கும் தலா 60,000 ரூபாய் வழங்கவும் தேசிய மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தை கையில் எடுத்துள்ளது
- நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
சிறப்பு அந்தஸ்து ரத்து
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
இது காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் உரிமையைத் துணை நிலை ஆளுநருக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததையும் பார்க்க வேண்டி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீருக்கு முதல் முறையாகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அரசியல் களம்
இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கம் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.

தீர்மானம்
தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா பேசுகையில், தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- பாஜக 90 தொகுதிகளில் 44-க்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
- சிறிது நேரத்தில் அதை திரும்பப் பெற்று 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே நேற்று தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. ஐந்து இடங்களில் தனித்தனியாக களம் இறங்குகின்றன.
அதேவேளையில் பாஜக நேற்று காலை 44 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. உடனடியாக அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது. பின்னர் முதற்கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
பாஜக அலுவலகத்தில் நேற்று பர்னிச்சர்கள் உடைக்கப்பட்டன. அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது. ஆனால், இதில் ஆச்சர்யம் படுவதற்கு ஏதுமில்லை. நீங்கள் திடீரென மூத்த வீரர்கள் அனைவரையும் நீக்கும்போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும்.
பாஜக கட்சி மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. இதனால் சங்கடத்தை பாருங்கள். ஒரு கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு 10 நிமிடத்திற்குள் அதை திரும்பப்பெற்ற பின், மீண்டும் அதில் இருந்து குறைந்த அளவிலான எண்ணிக்கை கொண்ட பட்டியலை வெளியிட்டதை இதுவரை நான் பார்த்ததே இல்லை.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும், 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது.
- ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
- முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் 90 இடங்களுக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. 5 இடங்களில் தனித்தனியாக களமிறங்குகின்றன.
இதற்கிடையே, முதல் கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், தேசிய மாநாடு கட்சி சார்பில் 32 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. இதில் உமர் அப்துல்லா கண்டர்பால் தொகுதியிலும், தன்வீர் சாதிக் ஜடிபால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற இருக்கிறது.
- செப்டம்பர் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஸ்ரீநகர்:
மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.
இந்நிலையில், கண்டர்பால் தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் உமர் அப்துல்லா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இல்லை.
- அவர்கள் அவர்களுடைய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கட்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. இதற்கு அம்மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி கடுமையாக எதிர்த்தது. தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டப் பிறகு முதன்முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சியும் சொல்லி வருகிறது. தேசிய மாநாடு கட்சியும் கூறி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிஃப் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரும் விசயத்தில் நாங்களும் (பாகிஸ்தான்) தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரே பக்கம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவரான உமர் அப்துல்லா பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்பி எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
எங்களோடு பாகிஸ்தானுக்கு என்ன தொடர்பு? நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இல்லை. அவர்களுடைய நாடு குறித்து அவர்கள் அக்கறை கொள்ளட்டும். நம்முடைய தேர்தல் அல்லது நம்முடைய தேர்தல் குறித்து கருத்து தெரிவிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் தலையிட வேண்டும் என நான் நினைக்கவில்லை. அவர்கள் அவர்களுடைய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கட்டும். நாம் நம்முடைய ஜனநாயகத்தில் பங்கேற்று வருகிறோம்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறுகையில் "பாகிஸ்தான் என்ன சொன்னது? என்பது குறித்து எனக்குத் தெரியாது. நான் இந்திய குடிமகன்" என்றார்.
பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாகிஸ்தான் ஆகியவரை சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவதில் ஒரே பக்கமாக இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கவாஜா ஆசிஃப் "உண்மையிலேயே, எங்களுடைய கோரிக்கை கூட அதுதான்... தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 370-ஐ சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவது சாத்தியம். தற்போது தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் மிக முக்கியத்துவம் உள்ளது. இந்த விசயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் உத்வேகம் அடைந்துள்ளனர். தேசிய மாநாடு கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக நான் நம்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை தேர்தல் பிரச்சனையாக ஆக்கிவிட்டார்கள்" எனக் கூறியிருந்தார்.
- நீங்கள் அடைத்து வைத்திருக்கும் சாலைகளை ஏன் திறந்துவிடக் கூடாது.
- ஜம்மு காஷ்மீரில் வந்து பேசும்போது மட்டும் நாங்கள்[என்சிபி] காரணம் என்று கூறுகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் கடந்த 2019 ஆம் பாஜக அரசால் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதற்கு பிறகு தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்குக் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பயங்கரவாதம் - அரசியல்
இந்த தேர்தலில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் [என்சிபி] காங்கிரஸ் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பது, மாநில அந்தஸ்து பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகளுடம் களமிறங்கியுள்ள என்சிபி - காங்கிரஸ் கூட்டணியை தனியாக களம் காணும் பாஜக, பயங்கரவாதம், பாகிஸ்தான் தொடர்பு உள்ளிட்ட விமரிசனங்களால் தாக்கி வருகிறது. காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு என்சிபி தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு உமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரு முடிவுக்கு வாங்க
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு யார் மீது குற்றம் சுமத்துவது என்பது குறித்து அமித்ஷா முதலில் தெளிவான முடிவுக்கு வர வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பேசும்போது காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தான் தான் காரணம் என்று பாஜக பேசி வருகிறது. அதுவே ஜம்மு காஷ்மீரில் வந்து பேசும்போது மட்டும் நாங்கள்[என்சிபி] காரணம் என்று கூறுகிறது.
பயங்கரவாதத்துக்கு நாங்கள் தான் காரணம் என்று பாஜக உண்மையிலேயே நம்பினால் ஏன் பாகிஸ்தானுடன் பேச கூடாது. நீங்கள் அடைத்து வைத்திருக்கும் சாலைகளை ஏன் திறந்துவிடக் கூடாது. ஏனெனில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்குக் காரணம் இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா..
பாஜகவால் காஷ்மீர் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இளைஞர்களை காரணமின்றி கைதி செய்து காஷ்மீருக்கு வெளியில் உள்ள சிறைகளில் பாஜக அடைத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக [ராகுல்] காந்தி குடும்பம், [மெகபூபா] முப்தி குடும்பம், [உமர்] அப்துல்லா குடும்பம் ஆகிய மூவரின் கையில் காஷ்மீர் சிக்கியுள்ளது என்று அமித் ஷா பேசியது குறிப்பிடத்தக்கது.