என் மலர்
நீங்கள் தேடியது "Para Olympics"
- பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது.
- படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது. அதிலும் முக்கியமாக விளையாட்டு வீரர்களின் தன்னபிக்கையூட்டும் கதைகள் சினிமா மூலம் சொல்லப்பட்டு வருகிறது. தங்கல், எம்.எஸ் தோனி உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த எடுக்காட்டாகும். அந்த வகையில் இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப் பதக்க ம்வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

கபீர் கான் இயக்கும் இப்படத்தில் முரளிகாந்த் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் கர்த்திக் ஆர்யன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர், "சந்து சாம்பியன் கதை எந்த அளவுக்கு மக்களுக்கு ஊக்கமளிப்பதோ அதற்க்கு சற்றும் குறையாத வகையில் இந்த படத்துக்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பும் ஒருவருக்கு ஊக்கமளிக்கக் கூடியது ஆகும். ஒன்றை வருடங்களுக்கு முன் நான் கார்த்திக்கிடம், இது ஒரு உலக சாம்பியனை பற்றிய கதை என்பதால் சர்வதேச விளையாட்டு வீரரின் உடற்கட்டு உங்களுக்கு வர வேண்டும் என்று தெரிவித்திருந்தேன், அதற்கு அவர் சிரித்தபடியே சரி என்று கூறினார்.
அதன்படி ஒன்றரை வருட காலத்துக்குள் எந்த விதமான ஸ்டிராய்டுகளும் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் கொழுப்பை 32 சதவீதம் வரை குறைத்து 18 கிலோ எடை குறைந்துள்ளார். அவரை நினைத்து பெருமைப் படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். சந்து சாம்பியன் படம் தொடர்பான கார்த்திக் ஆர்யனின் ட்ரான்ஸ்பர்மேசன் போஸ்டர் கார்த்திக் ஆர்யனின் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் கமிட்மென்டை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். சந்து சாம்பியன் படத்தின் டிரைலர் நாளை (மே 18) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தேர்வாகியுள்ளார்.
- கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை உதயநிதி வழங்கினார்.
பாரீஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் 2024 – ல் மகளிருக்கான 67 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ள கஸ்தூரி ராஜாமணியை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்,
இது குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக தேர்வாகியுள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் விமானப் பயணச் செலவு – தங்குமிடம் – உணவு – பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கினோம்.
தங்கை கஸ்தூரி ராஜாமணி சர்வதேச அரங்கில் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
- இந்த ஒலிம்பிக் திருவிழாவில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாரீஸ்:
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. வருகிற 8-ந்தேதி வரை நடைபெறும் இந்த ஒலிம்பிக் திருவிழாவில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று முதல் போட்டிகள் நடக்க உள்ளன.
போட்டியை பார்க்க இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பதாகவும், கடைசி நாள் வரை டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.
- பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- இந்தியா சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் SL3 பெண்கள் பிரிவில் இந்தியாவின் மந்தீப் கவுர், நைஜீரியாவின் மரியன் எனியோலா போலாஜியுடன் மோதினார்.
சுமார் 29 நிமிடங்களில் முடிந்த இந்தப் போட்டியில் மந்தீப் கவுர் 8-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மந்தீப் கவுர் அடுத்து ஆஸ்திரேலிய வீராங்கனை செலின் வினோட்டுடன் மோத உள்ளார்.
- துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி இரு பதக்கங்களைப் பெற்றது.
- அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் பெற்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர்.
பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் அவனி லெகரா தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தனது பதக்க கனவை தொடங்கி உள்ளது. ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் உலக அளவில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது
பாரீஸ்:
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது
இந்நிலையில், தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரீத்தி பால் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியா இன்று ஒரே நாளில் 3 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஓட்டப் பந்தயத்தில் சீனா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றது.
ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்திய அணி 2 பதக்கம் பெற்றது.
- ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர் மொத்தம் 234.9 புள்ளிகள் எடுத்து 2வது இடம் பிடித்தார்.
கொரியா தங்கப் பதக்கமும், சீனா வெண்கலமும் வென்றது.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே. துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர்.
- இந்திய அணி இன்று மொத்தம் 4 பதக்கக்களை வென்றுள்ளது.
- இதில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி 3 பதக்கங்கள் பெற்றது.
பாரீஸ்:
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று துப்பாக்கிச் சுடுதலில் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தேவரட்டி ராமகிருஷ்ணா பங்கேற்றார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட ராமகிருஷ்ணா, ஒரு புள்ளியில் பதக்க வாய்ப்பை தவறவிட்டுள்ளார். தேவரட்டி ராமகிருஷ்ணா 6 சுற்றில் மொத்தம் 630.7 புள்ளிகளுடன் 9வது இடம் பிடித்தார்.
முதல் 8 இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே பதக்க வாய்ப்புக்கு தகுதி பெறுவார்கள். நியூசிலாந்தின் ஜான்சன் மைக்கேல் 630.8 புள்ளிகள் பெற்று எட்டாவது இடம்பிடித்து பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.
இதன்மூலம் ஒரு புள்ளியில் பதக்க வாய்ப்பை இந்திய வீரர் தேவரட்டி ராமகிருஷ்ணா தவறவிட்டுள்ளார்.
- பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது.
- பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். தடகளத்தின் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், துப்பாக்கிச் சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அவனி லேகராவுக்கு வாழ்த்துகள். மேலும், பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் படைத்துள்ளார். அவனி லேகராவின் அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமைப்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட மற்றொரு பதிவில், வெண்கலப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு வாழ்த்துகள். மோனா அகர்வாலின் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. மோனாவால் இந்தியா பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற மணீஷ் நர்வாலுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
- ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து 2 வாரங்களுக்குப் பிறகு பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.
பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரா ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு 'பாரா ஒலிம்பிக்' என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?
பாரா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் அருகில் அல்லது அடுத்தது என்று பொருள் ஆகும். ஒலிம்பி போட்டிகளுக்கு அடுத்ததாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் இதனை பாரா ஒலிம்பிக் என்று அழைக்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து 2 வாரங்களுக்குப் பிறகு பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளி வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ஸ்வரூப் உன்ஹல்கர் 613.4 புள்ளிகள் எடுத்து 14-வது இடம் பிடித்ததால் பதக்க வாய்ப்பு பெறும் பட்டியலில் இடம்பெறவில்லை.
- பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர்.
ஆண்கள் பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளி வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் 7-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று மாலை இறுதிப்போட்டி நடைபெறுகிறது.