என் மலர்
நீங்கள் தேடியது "Pat Cummins"
- இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள்.
- நிச்சயம், ஒரு சார்பாக இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும்.
கொல்கத்தா:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போடடிக்கு தகுதி பெற்றது.
நேற்று கொல்கத்தாவில் நடந்த 2-வது அரை இறுதியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 212 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது:-
இந்த போட்டியில் வெளியே அமர்ந்திருந்ததை விட மைதானத்தில் பேட்டிங் செய்தது எளிதாக இருந்தது என நினைக்கிறேன். தொடக்கத்தில் 2 மணி நேரம் கடினமாக இருந்தது. ஆனால் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கை நோக்கி சிறப்பாக சென்றோம். ஆடுகளம் நிச்சயம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணித்து இருந்தோம்.
ஆனால் கொஞ்சம் மேக மூட்டம் இருந்ததால் முதலில் பந்து வீசுவதில் ஏமாற்றம் அடையவில்லை. எங்கள் பீல்டிங்கை பற்றி அதிகம் பேசினோம். இந்த தொடரில் ஆரம்பத்தில் எங்களது பீல்டிங் தரமானதாக இல்லை. ஆனால் இந்த போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்தோம். குறிப்பாக 37 வயதான டேவிட் வார்னர் சிறப்பாக செயல்பட்டார்.
டிராவிஸ் ஹெட், மிடில் ஓவர்களில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார். ஜாஸ் இங்கிலீஷ் சிறப்பாக பேட்டிங் செய்தார். இரண்டு தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கட்டுப்பாட்டுடன் விளையாடினார்.
இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறோம். எங்களில் சிலர் இதற்கு முன்பு இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறோம். சில வீரர்கள் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள்.
இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள். நிச்சயம், ஒரு சார்பாக இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும். ஆனால் அதை சந்தித்து தான் ஆக வேண்டும். அது சவாலாக இருக்கும்.
2015-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் நான் விளையாடியது என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான ஒன்று. இந்தியாவில் மற்றொரு இறுதிப் போட்டியில் விளையாடுவதில் ஒரு குழுவாக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவுடன் மோதுவதில் காத்திருக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் அச்சுறுத்தலாக இருப்பார்.
- இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை (நவம்பர் 19) மதியம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். அதன் படி, இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார், இறுதிப் போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், "இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், தொடரின் சில போட்டிகளில் களமிறங்காமல் அதன் பிறகு சிறப்பாக செயல்பட்ட வீரர் முகமது ஷமி. வலது மற்றும் இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அவர் சவாலாக விளங்குகிறார். இதே நிலையை இறுதிப் போட்டியிலும் அவர் தொடர்வார், ஆனால் எங்களது வீரர்கள் இந்த களத்தில் அதிகம் விளையாடி உள்ளனர். இதனால் பந்துவீச்சாளர்களை எங்களது பேட்டர்களும் தக்க போட்டியை வழங்கலாம்."
"அவர்களிடம் ஒவ்வொரு போட்டியிலும் பத்து ஓவர்கள் வரை பந்துவீசக்கூடிய ஐந்து பேர் உள்ளனர். அவர்களது சுழற்பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா எங்களுக்கு கடுமையான சவாலாக இருப்பர். ஆனால், அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று இருப்பதால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்"
"பிட்ச்-ஐ பொருத்தவரை அது இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியே இருக்கும். சொந்த நாட்டில், உங்களின் விக்கெட்டில் விளையாடுவதில் சில சாதகமான விஷயங்கள் உள்ளன. ஆனால், நாங்கள் இங்கு அதிக கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
- உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
- 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டிலும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் போட்டிகள், அரையிறுதி என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று (நவம்பர் 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டுள்ளது.
முன்னதாக 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பயன் பட்டத்தை வென்று அசத்தியது.

2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இறுதிப் போட்டி நடைபெற்ற தினம், மைதானத்தை சுற்றி மேகமூட்டமாக காணப்பட்டதால், முதலில் பந்துவீசி எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி, போட்டியில் வெற்றி பெறலாம் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி திட்டமிட்டிருந்தார்.
எனினும், மைதானத்தின் சூழல் யாரும் எதிர்பாராத வகையில் மாறிப் போக முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 350-க்கும் அதிக ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 250-க்கும் குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கோப்பையை வெல்லும் கனவை பறிக்கொடுத்தது.

கடந்தமுறை போன்றே, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் மாலை பொழுதில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசினால் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிடலாம் என கணித்திருக்கிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சூழலில் சவுரவ் கங்குலியின் கணிப்பு தவறியதை போன்றே, பேட் கம்மின்ஸ்-இன் இன்றைய கணிப்பும் தவறி, இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார்.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.
அகமதாபாத்:
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை கைப்பற்றியது.
இந்த உலகக் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே உலகக் கோப்பை வென்ற 4-வது கேப்டன் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றினார்.

அதுபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்றார்.

அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் 2018-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திருமணம் செய்து 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்றார்.

இந்த வரிசையில் பேட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். இவர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

கிரிக்கெட்டில் இதுபோன்ற சுவாரஸ்மான விஷயங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.
- ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
- மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை காலுக்கு கீழ் வைத்து புகைப்படம் எடுத்தார்.
13-வது உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயகம் திரும்பினார். அவர் விமான நிலையத்தில் இருந்து எந்தவித வரவேற்பும் இன்றி நடந்து சென்றார். உலகக் கோப்பையை வென்ற கேப்டன் வரும் போது எந்தவித வரவேற்பும் இன்றி சென்றது இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஒரு பக்கம் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை காலுக்கு கீழ் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மறுபக்கம் பேட் கம்மின்ஸ் எந்தவித ஆரவாரமின்றி செல்கிறார். கோப்பையை வென்றதை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என இந்திய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த கோப்பை இந்திய அணி வென்றிருந்தால் ரசிகர்கள் அதை கொண்டாடிருப்பார்கள். கேப்டனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்திருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும் அந்த மாநிலத்தில் கவுரவம் வழங்கப்பட்டிருக்கும் என்பது மிகையாகாது.
سوچو یہ اگر پاکستان جیتا ہوتا تو سرکاری چھٹی اور جشن کیسا ہونا تھا ?????#PatCummins #Australia #AUSvIND pic.twitter.com/f6ShxKDfwp
— Qadir Khawaja (@iamqadirkhawaja) November 22, 2023
- ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்சை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
- ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இத்தொடரில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.
ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
இங்கிலாந்தின் சாம் கர்ரன் 18.50 கோடி ரூபாய்க்கு கடந்த தொடரில் ஏலம் போனார் என்பதே மிகவும் அதிகமாகும்.
- ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.
- இந்தியாவின் ஹர்ஷல் படேல் 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் அதிகம் விலை போன வீரர்களின் விவரம் வருமாறு:
மிட்செல் ஸ்டார்க்: ரூ.24.75 கோடி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்)
பாட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
டேரில் மிட்செல்: ரூ.14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
ஹர்ஷல் படேல்: ரூ.11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
அல்ஜாரி ஜோசப்: ரூ.11.50 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
- பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.
பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 187 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அலேக்ஸ் கோரி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்கள் சபீக் 4 ரன்னிலும் இமாம் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் மசூத்- பாபர் அசாம் ஜோடி நிதானமாக விளையாடினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மசூத் 60 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து பாபர் அசாம் 41 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சகீல் 24, ரிஸ்வான் 35, சல்மான் 50, ஜமால் 0, அஃப்ரிடி 0, ஹம்சா 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
- பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் பேட் கம்மின்ஸ் அதிக தொகைக்கு ஏலம் போனார். ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இவர் இவ்வளவு தொகைக்கு தகுதி ஆனவரா என்பது குறித்து கருத்து சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் அவர் அந்த தொகைக்கு தகுதியானவர் என்பது போல அவரது பல சாதனைகளை இந்த ஆண்டு படைத்துள்ளார். ஆஸ்திரேலிய கேப்டனான பேட் கம்மின்ஸ் தலைமையில் தொடர்ச்சிய ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்துள்ளது.
இவர் தலைமையிலான முதலில் டெஸ்ட் சாம்பியன் டிராபியை கைப்பற்றியது. இந்தியா - ஆஸ்திரேலிய மோதிய இறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்களும் இந்தியா 296 ரன்களும் எடுத்தது. அடுத்து 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை சேஸ் செய்த இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை ஆஸ்திரேலியா தட்டிச் சென்றது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.13.2 கோடியும், இந்திய அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடைபெற்றது. முதல் 2 டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் கடைசி 2 டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிரா ஆனது. இதன்மூலம் தொடர் சமனில் முடிந்தது. இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கு மிகவும் நெருக்கடியை கொடுத்ததாக முன்னாள் வீரர்கள் பலரும் அவரை பாராட்டினர்.
இதனையடுத்து நடந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி கடைசி வரை போராடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதிப் போட்டியிலும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இதமட்டுமல்லாமல் தற்போது நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட்டில் அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஒருவர் 10 விக்கெட் எடுப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1989-ம் ஆண்டு சிட்னியில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் ஆலன் பார்டர் 11 விக்கெட் எடுத்திருந்தார். கம்மின்ஸ் இதுவரை 252 விக்கெட் (57 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார். டெஸ்டில் 250-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய 10-வது ஆஸ்திரேலிய பவுலர் ஆவார்.
இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், '2023-ம்ஆண்டு எங்களுக்கு நம்ப முடியாத ஒரு ஆண்டாக அமைந்தது. நிறைய கிரிக்கெட்.... நிறைய வெற்றி (உலகக் கோப்பை உள்பட). திரும்பி பார்க்கும் போது, 2023 சிறப்பு வாய்ந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும். என்றார்.
- டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார்
- சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பாட் கம்மின்ஸ் பெற்றார்.
டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, கேப்டனுக்கு இப்போது முப்பது வயதுதான் ஆகிறது. இன்னும் அவர் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் விளையாட வேண்டும். சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிராட்மேனுக்குப் பிறகு கம்மின்ஸ் இருப்பார். "டான் பிராட்மேனை விட சிறந்தவராக இருப்பார் என நினைக்கவில்லை, ஆனால் டான் பிராட்மேனுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பேட் கம்மின்ஸ் இருப்பார்" என நம்புவதாக தெரிவித்தார்
ஏனென்றால், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவை அதன் 6-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு வழிநடத்தினார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பத்து விக்கெட்டுகள், இரண்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக ஆடினார்.
சமீபத்தில் துபாயில் நடந்த ஐபிஎல் விற்பனையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் ரூ 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு ஐபிஎல் வரலாற்றில் விலைமதிப்பற்ற வீரராக திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் கம்மின்ஸ் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது.
- சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார்.
கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார். அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.இது முதல் முறையாக பேட் கம்மின்ஸ் பெறும் விருது ஆகும்.
மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா சிறந்த வீராங்கனையாக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
- கடந்த முறை சில முக்கியமான போட்டிகளில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சில் குழப்பமாக இருந்தது.
- அவரது வருகையால் கடந்த ஆண்டு கேப்டன்ஷிப்பில் இருந்த குறைபாடு நீங்கும்.
புதுடெல்லி:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. இதற்கான ஏலத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை ரூ. 20½ கோடிக்கு வாங்கியது. இதனால் இந்த சீசனில் ஐதராபாத் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'ஏலத்தில் ஐதராபாத் அணி கம்மின்சை வாங்கியதை புத்திசாலித்தனமான முடிவாக நான் பார்க்கிறேன். அவர் கொஞ்சம் அதிக விலைக்கு வாங்கப்பட்டு இருந்தாலும், அவரது வருகையால் கடந்த ஆண்டு கேப்டன்ஷிப்பில் இருந்த குறைபாடு நீங்கும்.
கடந்த முறை சில முக்கியமான போட்டிகளில் ஐதராபாத் அணியின் பந்து வீச்சில் குழப்பமாக இருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் சில ஆட்டங்களில் தோல்வியை தழுவினர். தற்போது கம்மின்ஸ் ஐதராபாத் அணியில் இணைவதால் அவர் நிச்சயம் கேப்டனாக நியமிக்கப்படுவார். அத்துடன் அவரது வருகை அணியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்' என்றார்.