என் மலர்
நீங்கள் தேடியது "People"
- குமார் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்தார்.
- தீபாவளிபண்டிகைக்கு முன்பு, குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம்,பாரதிநகர் பகுதியை 200-க்கும் மேற்பட்டவர்கள் புதூர் பிரிவில் மளிகைகடை வைத்து நடத்தி வந்த குமார் என்பவரிடம் பலகாரசீட்டுக்கு பணம் செலுத்தி வந்துள்ளனர். அவர் கடந்த 15 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்தார். இதனால் நம்பிக்கையின் அடிப்படையில் அவரிடம் பணம் செலுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது முதிர்வு தொகையை அவர் கொடுக்க வேண்டும். ஆனால் தீபாவளிபண்டிகைக்கு முன்பு, குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து தங்களிடம் மோசடி செய்து தலைமறைவான குமாரை கைது செய்து எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து நேற்று மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை குமாரின் வீட்டு முன்பு முற்றுகையிட்டனர். மேலும் தங்களது பணத்தை போலீசார் மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோசங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வாய்க்காலில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்
கரூர்:
கரூரில் இருந்து கோவை மற்றும் ஈரோடு செல்லும் சாலையில் திருக்காம் மியூர் பிரதான வாய்க்கால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இதில் அதிகளவு கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவு நீர் தேக்கத்தால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
- மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது.
- பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக அமைந்துள்ள மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் மணிக்கூண்டு மற்றும் பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
- இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஏற்காடு:
வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில் ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
ஏற்காட்டில் அதிகப்படி யாக காப்பி விவசாயம் செய்யப்படுகிறது. இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காப்பி விவ சாயிகள் வேத னையடைந்து உள்ளனர். மேலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் காப்பி தோட்ட பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் இயக்கப்படுகிறது.
மேலும் கடுமையான குளிரும் காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் கூட ஸ்வட்டர், ஜர்க்கின் உள்ளிட்டவை அணியாமல் வெளியில் வரமுடியாது நிலை உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர் மழையால், இப்பகுதியில் ஏராளமானோர் சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்காட்டில் இடைவிடாத சாரல் மழை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- கடன் நிலுவை வசூல் என்ற பேரில் மிரட்டி அதிரடி வசூல்.
- வீடுகளை பூட்டி மழைக்காலத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜகம்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பைனான்ஸ்
நிறுவனங்களால் நடக்கக்கூடிய ஒரு சில நிறுவனங்கள் கடன் நிலுவை வசூல் என்ற அடிப்படையில் மிரட்டி அதிரடி வசூலில் ஈடுபடுகின்றனர்.
இதனால் ஏழைமற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தை குறிவைத்து கோர்ட் உத்தரவுகளை பெற்று வீடுகளை பூட்டி மழைக்கா லத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜக போக்கை கண்டித்து ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எம்.மோகன் தலைமையில் ஒத்தக்கடை என்ற பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத அறப்போ ராட்டத்தை தொட ங்கினார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
- அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்புச்சி கோவில் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் தொழில், கல்வி, போன்றவற்றிற்காக பல்லடம் மற்றும் திருப்பூர் செல்வதற்கு இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியே அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை என்றும், அறிவிப்பில்லாமல் திடீரென நிறுத்தப்படுவ தாகவும் கூறி, அங்குள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துக்குமார், மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக பஸ் வருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
- மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
- தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்தாலும்
திருச்சி:
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். எவ்வளவு மழை பெய்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது.
சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கால்வாய்கள் வெட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நடவுப் பணிகள் முடியும் தருவாயில் யூரியா தட்டுப்பாடு இருப்பதாக சொன்னார்கள்.
இது தொடர்பாக துறை அமைச்சரிடம் பேசி இருக்கின்றேன். விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு கடன் தர கூட்டுறவுத்துறை அமைச்சரிடமும் பேசி இருக்கின்றேன். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சம்மட்டி வைத்து அடித்து விட்டதால் காவிரி பாலத்தின் பேரிங் உட்கார்ந்து விட்டது.
அதனை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த மாதிரியான தொழில்நுட்ப பணிகளை வேகமாக முன்னெடுக்க இயலாது. அதனால் தான் தாமதம் ஏற்படுகிறது. இன்னும் இரண்டு மாத காலத்தில் காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி அடிப்படை பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதற்கு எதிர்ப்புகள் வந்துள்ளதால் பழைய முறைப்படி பணி நியமனம் செய்ய தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார் அவர் கூறினார்.
- மகா ப்ரத்யங்கிரா ஹோமம் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- 12 ராசி 27 நட்சத்திர ஹோமம் நடக்கிறது.
தாராபுரம் :
ஆல் இந்தியா தமிழ் அன்னை அறக்கட்டளை சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் நஞ்சியம்பாளையம் கிராமத்தில் உலக மக்கள் நலன் வேண்டியும் அனைத்து ஜீவராசிகளின் நலம் வேண்டியும் மகா அதர்வண பத்ரகாளி, மகா ப்ரத்யங்கிரா ஹோமம் நாளை 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி நாளை 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6மணிக்கு மங்கள இசை, மகா கணபதி பூஜை, அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், வாஞ்சாகல்ப மகா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை , கோ பூஜை நடக்கிறது. காலை 10-30மணிக்கு மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சூலினி துர்கா ஹோமம், 12 ராசி 27 நட்சத்திர ஹோமம் நடக்கிறது.
மாலை 5மணிக்கு சதுஷ்டி யோகினி பலி பூஜை, பைரவ பலி, சரபேஷ்வர ஹோமம், 27 நட்சத்திர ஹோமம், 12 ராசி ேஹாமம், மகா சனீஸ்வர ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், ஆயுள் தேவதா ஹோமம், சித்ரகுப்த ஹோமம், சூலினி துர்காஹோமம், இரவு 9மணிக்கு மகா பூர்ணாஹூதி , தீபாராதனை நடக்கிறது.
22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7மணிக்கு கணபதி பூஜை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், கோபூஜை , காலை 10மணிக்கு காரிய சித்தி கணபதி ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மகா சனீஸ்வர ேஹாமம், ஆயுள் தேவதா ஹோமம், யமதர்மராஜா ஹோமம், சித்ர குப்த ஹோமம், 12ராசி 27 நட்சத்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
மாலை 5மணிக்கு ஸ்ரீகணபதி பூஜை, புண்யாஹவாசனம், வேதிகா அர்ச்சனை, கணபதி ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மகா சனீஸ்வர ஹோமம், ஆயுள் தேவதா ஹோமம், எமதர்மராஜா ஹோமம், சித்ரகுப்த ஹோமம், சரபேஸ்வர ஹோமம், 12 ராசி, 27 நட்சத்திரங்கள் ஹோமம் நடக்கிறது. இரவு 9மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
23-ந்தேதி (புதன்கிழமை) காலை 6மணிக்கு மங்கள இசை, 7மணிக்கு கணபதி பூஜை, வருண பூஜை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், கோ பூஜை , வேதிகா அர்ச்சனை நடக்கிறது. 10மணிக்கு சங்கடஹர மகா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், 12 ராசி 27 நட்சத்திரங்கள் ஹோமம், அஷ்ட பைரவ ஹோமம், மகா ப்ரத்யங்கிரா ஹோமம், சரபேஸ்வர ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மகா சனீஸ்வர ஹோமம், எமதர்மராஜ ஹோமம், சித்ரகுப்த ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், சுதர்சன ஹோமம், குபேர மகாலட்சுமி ஹோமம், வஸோர்தாரா ஹோமம், இரவு 9மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
- ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்
- தவறான முறையில் மின்விநியோகம் இருக்கக் கூடாது
அரியலூர்:
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா நடைபெற்றது, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி வரவேற்று பேசினார், திருமாவளவன்எ எம்.பி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்துள்ளார். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, நாங்கள் தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்ற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக அ.தி.மு.க.விலேயே விமர்சனங்கள் எழுகின்ற நிலையில், இந்த சந்திப்பை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி இருப்பதாக நினைக்கிறேன்.
தவறான முறையில் மின்விநியோகம் இருக்கக் கூடாது. அனைவருக்கும் மின்விநியோகம் வழங்க வேண்டும் என்ற முயற்சியின் காரணமாகவே ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எதிர்பார்த்த ஒன்றுதான். ஜல்லிக்கட்டை மீட்டெடுக்கும் வகையில் மக்கள் போராட்டம் தொடரும். தமிழக அரசின் சட்ட போராட்டத்தின் மூலம், நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்ற எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 151 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
- பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். மாரிமுத்து எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 151 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
முத்தூட் குழும சமூக பொறுப்பு திட்ட மேலாளர் ஜெயக்குமார் நலத்திட்டம் குறித்து பேசும்போது:-
முத்தூட் குழுமம் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, டயாலிசிஸ், கல்வி உதவி, விதவைகளின் பெண்கள் திருமண உதவி, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார உதவி மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட திருப்பாலி, சோலைக்குளம், நெய் குன்னம், நல்ல நாயகிபுரம் கிராமங்களில் கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.2.13 லட்சம் மதிப்பில் தார்பாய் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதில், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சுந்தர், மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகணபதி, முத்தூட் தஞ்சாவூர் கிளை மேலாளர் வினோத் ரமேஷ், கிளை மேலாளர் அகல்யா, கவுன்சிலர் வசந்த் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பாலம் திட்ட அலுவலர் பரந்தாமன் நன்றி கூறினார்.
- மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழக ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்
- புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சர்புதீன் மரைக்காயர் இல்லத் திருமணம் நாகூரில் நடைபெற்றது.
அதில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுத்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நாராயணசாமிக்கு, ஷாநவாஸ் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்று பேசியதாவது:-
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை எதிர்த்து அன்று நாராயணசாமி குரல் எழுப்பினார்.
அதையே இன்றைய முதலமைச்சர் ரங்கசாமியும் செய்து வருகிறார். ஆளுநரால் புதுச்சேரிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பிரச்சனை தான். 20- க்கும் மேற்பட்ட மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
இதையெல்லாம் எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அங்கு மாற்றம் நிகழும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் பிரமுகர்கள் நவ்ஷாத், ரபீக், விடுதலை சிறுத்தை கட்சி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன.
- நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காலியிடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன மாநகராட்சிக்கு பல்வேறு இனங்களில் வரி செலுத்துகின்றன. இவை தவிர மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் ஏலம், குத்தகை அடிப்படையில் உரிமம் பெற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது. காலியிட வரியில் ரூ. 7.97 கோடி, தொழில் வரி ரூ.3.30 கோடி,குடிநீர் கட்டணம்ரூ. 18.81 கோடி, குத்தகை இனத்தில் ரூ. 15.05 கோடி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் ரூ. 13.61 கோடி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ. 1.81 கோடி நிலுவை உள்ளது. மொத்தம் 143.89 கோடி ரூபாய் வரியினங்கள் நிலுவையில் உள்ளது. பல கோடி ரூபாய் வரிகள் செலுத்தப்படாமல் உள்ளன. நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகள்,குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, அலுவலக பராமரிப்பு மற்றும் ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், ரோடுகள் பராமரிப்பு, கடன்களுக்கான வட்டி, தவணை செலுத்துதல் என மாநகராட்சி நிர்வாகம் கடுமையாகத் தள்ளாடிக் கொண்டுள்ளது.
எனவே மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய வகையில் பொதுமக்கள் செலுத்தி சீரான நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கமிஷனர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வரி செலுத்துவோர் வசதிக்காக மைய அலுவலகம், வரி வசூல் மையங்கள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை5 மணி வரை செலுத்தலாம். மேலும் ஆன்லைன் வாயிலாகhttps://tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.