என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People's Court"

    • அரியலூரில் வருகிற 12-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது
    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 12-ம் தேதி தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஆணைப்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

    மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்து தரப்படும், வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது, வழக்குகள் தீர்வு கண்டதும் உத்தரவு நகல் உடனே வழங்கப்படும், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது,

    நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு விதமான சட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றம் விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும், அதனால் பொதுமக்கள் வழக்காடிகள் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரச வழிகள் மூலம் சமரசமாக நிரந்தர தீர்வு காணலாம் எனவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

    • மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாக விரைவாக முடித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி இழப்பீட்டுத் தொகைக்கான ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்திரவின்படி விழுப்புரம் மாவட்ட சட்டப் பணி ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வி. பூர்ணிமா தலைமையில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம்சிறப்பாக நடைபெற்றது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாக விரைவாக முடித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் திண்டிவனம் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை செஞ்சி சங்கராபுரம் திருக்கோவிலூர் வானூர் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய நீதிமன்றங்களில் 16 அமர்வுகள் கொண்டு நீதிபதிகள் வழக்குகளை சமரசமாக விசாரணை செய்தனர். விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விபத்துக்கள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் மேலும் முதல்முறையாக வழக்குகளும் எடுத்துக் கொண்டு தீர்வு காணப்பட்டது. இங்கு நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண செய்யப்பட்டிருந்தது.

    மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணும் வழக்குகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றால் முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப பெரும் வாய்ப்பு, வழக்குகள் தீர்வு கண்டதும் அதற்கான தீர்ப்பு நகல் உத்தரவு உடனே வழங்கப்படும், மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற வேறுபாடு இருக்காது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளர்களுக்கு செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் சிறப்பாக முதல்முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது அதில் ஒரு வழக்கு சமரச முறையில் தீர்வும் காணப்பட்டது மற்றும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய வழக்கறிஞர் குடும்பத்திற்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு இந்த மாபெரும் மக்கள் நீதி மன்றத்தின் மூலம் அவர்களுக்கு உடனடியாக விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி இழப்பீட்டுத் தொகைக்கான ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. மக்கள் நீதி மன்றத்தில் 4980 மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 2700 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு சுமார் ரூபாய் 25 கோடிக்கு மேல் தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தின் ஏற்பாடுகளை நிர்வாக உதவியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வத் தொண்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்ற அமர்வு நடைபெற்றது.
    • மொத்தம் 4 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்ற அமர்வு நடைபெற்றது.

    மாவட்ட நுகர்வோர் நீதிபதி தீபா, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் அமர்வு நீதிபதிகளாக பங்கேற்றனர். கட்டுமானம் சம்பந்தமான ஒப்பந்த வழக்கு, மருத்துவ காப்பீடு கோருதல் சம்பந்தமான வழக்கு, வாகன கடன் சம்பந்தமான வழக்கு உள்பட மொத்தம் 4 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் வாகன கடன் தொடர்பான வழக்கில் மனுதாரர் தரப்பில் எதிர்மனுதாரருக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டு நிலுவையில்லா சான்றிதழ் வழங்கி சமரச தீர்வு காணப்பட்டது. இதில் நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
    • வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல்,மற்றும் வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம், பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 154 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 95 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு தொகையாக ரூ.2,31,98,192 வழங்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக காசோலை வழக்கில் ரூ.90,49,351வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல்,மற்றும் வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 372 வழக்கு கோப்புகள் சமாதான முறையில் தீர்வுகாண எடுக்கப்பட்டது.
    • ரூ.1 கோடியே 23 லட்சத்து 84 ஆயிரத்து 815-க்கு தீர்வு தொகை அளித்து முடிக்கப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி அவிநாசி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் அவிநாசி சார்பு நீதிமன்றத்தில்தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத் ) நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.வடிவேல், குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.எஸ்.சபீனா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. தரணீதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது 372 வழக்கு கோப்புகள் சமாதான முறையில் தீர்வுகாண எடுக்கப்பட்டது. இதில் 272 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 23 லட்சத்து 84 ஆயிரத்து 815-க்கு தீர்வு தொகை அளித்து முடிக்கப்பட்டது.

    • தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணை க்குழு சார்பில் மே 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெறுகிறது.
    • பொது மக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணை க்குழு சார்பில் மே 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெறுகிறது.

    தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, உத்தம பாளையம் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு குறித்த வழக்குகள், சொத்து, பணம் சம்மந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், ஜீவானாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழி லாளர் நலன் இழப்பீடு வழக்குகள், குடும்ப வன்முறை தடுப்புச்சட்ட வழக்குகள், காசோலை நுகர்வோர் வழக்குகள், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள், இதர பொதுப்பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    பொது மக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரை வாகவும், சுமூகமாகவும் முடித்து கொள்ளலாம் என்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய்பாபா அறிவித்துள்ளார்.

    • பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் சிறப்பு முன் அமா்வாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • 11 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன.

    பல்லடம் :

    திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின்படி பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சிறப்பு முன் அமா்வாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சாா்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவா் சந்தான கிருஷ்ணசாமி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில் பண மோசடி வழக்கு, இந்து திருமண சட்ட வழக்குகள், சொத்து வழக்குகள் ஆகிய வழக்குகள் எடுக்கப்பட்டு இதில் 11 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கில் தீா்வு காணப்பட்டு கணவன், மனைவி இருவரும் இணைந்து வாழ அறிவுரை வழங்கப்பட்டது. அதனை ஏற்று பிரிந்த தம்பதி சோ்ந்து வாழ்வதாக உறுதி கூறிச் சென்றனா்.

    மே 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதால் நீதிமன்றத்தில் நிலவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட சட்டப் பணிகள் ஆணக்குழு தெரிவித்துள்ளது. 

    • வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
    • மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு மேல் முறையீடு கிடையாது.

    நாமக்கல்:

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி சார்பு நீதிமன்றம், சேந்தமங்கலம் கோர்ட் மற்றும் குமாரபா ளையம் கோர்ட் ஆகிய இடங்களில், வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடிய சிவில் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரி வினை, வாடகை விவ காரங்கள்) விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் இந்த நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும்.

    மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு மேல் முறையீடு கிடையாது. மக்கள் நீதின்றம் மூலமாக முடித்துகொள் ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமைமாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் யாருக்காவது கோர்ட்டு களில், வழக்குகள் நிலுவையில் இருந்து, அவர்கள் மக்கள் நீதி மன்றத்தை அணுகினால் வழக்குகளுக்கு சட்ட ரீதியா கவும், சமரச முறையிலும் தீர்வு காணப்ப டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி யும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் தெரிவித்துள்ளார்.

    • குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2, ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • குடும்ப நல வழக்குகள் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்ப ணிகள் ஆணைக்குழு உத்தரவு மற்றும் அறிவுறு த்தலின் படி தேசிய அளவி லான மக்கள் நீதிமன்றம், கடலூர் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணை க்குழுவின், தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் தலைமையில் நடை பெற்றது. எஸ்.சி, எஸ்.டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 2 நீதிபதி பிரகாஷ், கடலூர் மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) பிரபாகர், கூடுதல் சார்பு நீதிபதி எண் -2 அன்வர் சதாத், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2, ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் துரை பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் வனராசு, செயலாளர் சிவசிதம்பரம், வக்கீல்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்துக்கொண்டனர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவணாம்ச வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ,நெய்வேலி, திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோயில், நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் 13 அமர்வுகள் மூலம் சுமார் 5,327 வழக்குகள் விசார ணைக்கு எடுத்து க்கெள்ள ப்பட்டு 1845 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூபாய் 17 கோடி 50 லட்சத்து 18 ஆயிரத்து 201 தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

    • சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 192 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில்144 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வழ க்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு ) மேகலா மைதிலி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 192 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில்144 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    தீர்வு தொகையாக ரூ.2,34,08,632 வழங்கப்பட்டது. இதில் வழ க்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்கள் நீதி மன்றம் நேற்று நடைபெற்றது.
    • 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6.57 கோடி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் மக்கள் நீதி மன்றம் நேற்று நடைபெற்றது. இதில் 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6.57 கோடி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், நீதிபதிகள் முனு சாமி, கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலை யில் வழக்கு விசாரணை நடைபெற்றது. தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி, மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலா ளர் விஜய்கார்த்திக் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.இதில் விபத்து இழப்பீடு வழக்குகள், செக்மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்கு கள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகளுக்கும் சமரச முறையில் தீர்வுகாணப்பட்டது.

    நாமக்கல்லை அடுத்த செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் இன்ஜினியர் சரவணன் (வயது 34). இவர் ஹைட்ராலிக் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2021- பிப்ரவரி 17-ந் தேதி நாமக்கல் போஸ்டல் நகரில் ஒரு லாரியை பழுது பார்த்து கொண்டிருந்த போது, லாரியின் பின்பகுதி திடீரென அவர் மீது இறங்கியது. இதில் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல்லை அடுத்த போடி நாயக்கன்பட்டி ராசாபுதூரை சேர்ந்தவர் கார்த்திக் (36) கார் டிரைவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அலங்கா நத்தம் பிரிவு நோக்கி பைக்கில் சென்ற போது, கார் மோதி படுகாயம் அடைந்தார். இந்த இரண்டு வழக்கு களையும் மூத்த வழக்கறிஞர் வடிவேல் நீதிமன்றத்தில் நடத்தி வந்தார். நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் உயிரிழந்த என்ஜினி யர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.48.18 லட்சம், படுகாயம் அடைந்த கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தது.

    இதையடுத்து இந்த வழக்கு களில் சமரசம் ஏற்பட்டு, இழப்பீடு பெறு வதற்கான உத்தரவினை இருவரின் குடும்பத்தின ரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழங்கினார். மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 2399 வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

    இதில், 1797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.6.57 கோடி செலுத்தி பைசல் செய்து வைக்கப்பட்டது.

    • ரூ. 2 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரத்து 402 க்கு தீர்வு காணப்பட்டது.
    • மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 4 அமர்வுகளாக நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலையில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் எண்.1 செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 4 அமர்வுகளாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார்.அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே. எம்.2 மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    அதன்படி சிறு குற்றத்திற்குரிய வழக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 600 க்கும், காசோலை மோசடி வழக்குகள் ரூ.24 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், வங்கி வராக்கடன் வழக்குகள் ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்து 492 க்கும்,மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ.1 கோடியே 21 லட்சத்து 26 ஆயிரத்து 950 க்கும், ஜீவனாம்ச வழக்குகள் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும், இதர சிவில் வழக்குகள் ரூ.28 லட்சத்து 42 ஆயிரத்து 360 க்கும் என மொத்தம் 416 வழக்குகள் எடுக்கப்பட்டு 236 வழக்குகளுக்கு ரூ. 2 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரத்து 402 க்கு தீர்வு காணப்பட்டது. இதில் அரசு வக்கீல் சி.பி.ரவிச்சந்திரன், வக்கீல் சங்க செயலாளர் கே.எம்.ராஜேந்திரன்,வக்கீல்கள் பசீர்அகமது,பிரபாகரன் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×