என் மலர்
நீங்கள் தேடியது "Police arrested"
- சிறுமிக்கு திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற கிர்த்திக் (வயது 23) அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.
- பாலியல் தொந்தரவு செய்த அந்த வாலிபர் போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகளான 16 வயது சிறுமி கடந்த மாத இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுமிக்கு திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற ஆத்தூர் நாவலூர் பகுதியைச் சேர்ந்த கிர்த்திக் (வயது 23) என்றும் அவர் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.இதனைடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வாழப்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது மற்றும் புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நேற்று நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு பகுதிகளில் மதுவிற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்
தேனி :
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி பகுதியில் தென்கரை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பொது கழிப்பறை அருகே மது விற்ற முத்துக்குமார் (வயது28) என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அதே பகுதியில் மது விற்ற முத்துப்பாண்டி (33) என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கம்பம் வடக்கு போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றபோது அங்கு மது விற்ற அம்மாவாசி (42) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கம்பம் தெற்கு போலீசார் இ.பி. சாலையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் மது விற்ற காளியப்பன் (43) என்பவரை கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆண்டிபட்டி போலீசார் ஏத்தகோவில் ரெங்கராம்பட்டி அருகே உள்ள பாறைக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ராமராஜ் (48) என்பவரை கைது செய்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் ெசய்தனர்.
க.விலக்கு போலீசார் ரோந்து சென்றபோது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிைல பொருட்கள் விற்ற மகாராஜன் (48) என்பவரை கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய ரவுடிகளை போலீசார் வேட்டையாடி கைது செய்து வருகிறார்கள்.
சென்னையிலும் ஓட்டுப்பதிவின் போது அசம்பாவிதங்களை தடுக்கவும், வன்முறை சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் தினகரன், மகேஸ் குமார் அகர்வால் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதன்படி பழைய குற்றவாளிகள், ரவுடிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டவர்களை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் 10-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அந்த வகையில் தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்கும் பணியுடன் ரவுடிகள் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.
இதில் 1555 ரவுடிகள் இதுவரை பிடிபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசிடம் சிக்கியுள்ள இவர்களிடம் அந்தந்த பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், இனி தவறு செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கி உள்ளனர்.
இதனை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 1000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்படி போலீஸ் பிடியில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருந்த 1315 பழைய குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு போலீசார் ரவுடிகளை தேடிப்பிடித்து கைது செய்து வரும் அதே வேளையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வருகிற 16-ந்தேதியுடன் பிரசாரம் ஓயும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையில் இதுவரையில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக 629 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பறக்கும் படை சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டுமே தீவிரமாக நடைபெற்ற இந்த சோதனை கடந்த 2 நாட்களாக புறநகர் பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. #LokSabhaElections2019
திருவண்ணாமலை ரமணா நகர் எம்.கே.வி. தெருவில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. நிர்வாகியாக நந்தகுமார், மேலாளராக அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது30) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த காப்பகத்தில் 17 வயதுக்கு உட்பட்ட 15 சிறுமிகள் உள்ளனர்.

நேற்று இரவு கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சிறுமிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
குழந்தைகள் பாதுகாப்பு நல குழும அலுவலர் கோகிலா மற்றும் போலீசார் விரைந்து சென்று காப்பகத்தில் சோதனை நடத்தினர். அப்போது காப்பகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்-டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதனை சோதனை செய்ததில் 100-க்கணக்கான ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், எதிர்த்து கேள்வி கேட்கும் சிறுமிகளை சாப்பாடு வழங்காமல் பட்டினி போட்டு கொடுமை செய்ததாகவும் கதறி அழுதபடி கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து காப்பகத்தில் இருந்து கம்ப்யூட்டர், லேப்-டாப் உட்பட முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், காப்பகத்துக்கு பூட்டு போட்டனர். திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிந்து வினோத்குமாரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள காப்பகத்தின் நிர்வாகி நந்தகுமாரை தேடி வருகின்றனர். இரவு காவலர், சமையலர் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 15 சிறுமிகளும் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதேபோல், திருவண்ணாமலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். #ChildrenHome #TiruvannamalaiCollector #GirlsRescued
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவுப்படி நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சன்னாநல்லூர் பகுதியில் நன்னிலம் சப்-இன்ஸ் பெக்டர் சுகன்யா, தலைமை ஏட்டு மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் திருப்புகலூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 38) என்பவர் வேகமாக வந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் வழி மறித்து நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் ஏட்டு மணிகண்டனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து சப்-இனஸ்பெக்டர் சுகன்யா நன்னிலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலசுப்பிரமணியனை கைது செய்தார்.
சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்தனர். அங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று மாலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர்.
இன்று மாலை 5 மணியளவில் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை கோவில் பகுதியில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் அவ்வழியாக ஒரு பெண் பத்திரிகையாளர் வந்த காரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்ததுடன் அவர் வந்த காரின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதேபோல் சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால் நிலமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. #Sabarimalaverdict #SCverdict
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும் ஐயப்பப் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க கேரள அரசு மறுத்து விட்டது.
மாறாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்டு அரசு அறிவித்தது. மேலும் சபரிமலைக்கு கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.
கேரள அரசின் முடிவை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். சபரிமலை கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம், ஐயப்ப சேவா சங்கம் உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
கேரள மாநிலம் முழுவதும் நடந்த இப்போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் இப்பிரச்சினை குறித்து நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தியது.
பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகள், தந்திரிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.
அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டும், கேரள அரசும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினர். இதை ஏற்க தேவசம் போர்டு மறுத்தது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்தனர். அங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று மாலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கருதிய போராட்டக்காரர்கள், அவர்களை சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர்.
சென்னையில் இருந்து பஞ்சவர்ணம் (வயது 40), என்ற பெண் அவரது கணவர் பழனி (45)யுடன் சபரிமலை செல்லும் பஸ்சில் இருந்தார். அவரை போராட்டக்காரர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சென்னை தம்பதிகளை மீட்டு அழைத்து சென்றனர்.
சென்னை தம்பதியை போல் சில பெண்கள் கருப்பு உடை அணிந்து அந்த வழியாக சென்றனர். அவர்களும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் சபரிமலை செல்லும் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையிலும் தடியடி நடத்தப்பட்டது.

அதன்படி, நிலக்கல்லில் போராட்டம் நடத்த போடப்பட்டிருந்த பந்தல் போலீசாரால் அகற்றப்பட் டது. மேலும் பெண் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதில், பெண் போலீசாரும் இருந்தனர்.
சபரிமலை விவகாரம் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று நடத்திய சமரச பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தேவசம் போர்டின் கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 19-ந்தேதி இக்கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது மீண்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்தார். #Sabarimala #SabarimalaTemple
டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர், ‘பிரதமர் நரேந்திர மோடி மீது ரசாயன தாக்குதல் நடத்துவேன்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதைக்கேட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில், மிரட்டல் விடுத்த ஆசாமி மும்பையில் இருந்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியது கண்டறியப்பட்டது.
இதுபற்றி தேசிய பாதுகாப்பு படையினர் மும்பை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் செல்போன் எண் அலைவரிசை மூலம் மர்மஆசாமி இருக்கும் இடத்தை ஆராய்ந்தனர். இதில், அவர் மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று குறிப்பிட்ட அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவரது பெயர் காசிநாத் மண்டல் (வயது22) என்பதும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர், மும்பை வால்கேஸ்வர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Modi #Threatening #ChemicalAttack
சென்னை செங்குன்றம் கரிகாலன் நகர் மூவேந்தர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் தனக்கு சொந்தமான லாரிகளை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். கடந்த 2-ந்தேதி இரவு கணேசன் வீட்டிற்கு 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தார்.
அவர், தன்னை சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் என்றும், மணல் கடத்தல் பற்றி விசாரிக்கும் தனிப்படையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். உங்கள் லாரிகளில் மணலை திருட்டுத்தனமாக கடத்துவதாக புகார் வந்துள்ளது. எனவே உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கணேசனிடம் கூறினார்.
பின்னர், ஒரு காரில் கணேசனை அழைத்துச்சென்றனர். அப்போது கணேசன் வாக்குவாதம் செய்தார். உடனே அவரை, 4 பேரும் சேர்ந்து, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். சத்தம் போடாமல் எங்களோடு வா, இல்லாவிட்டால் உன்னை தீர்த்துக்கட்டிவிடுவோம் என்று எச்சரித்து காரில் கடத்தி சென்றனர்.
காரின் சீட்டில் அவரை உட்கார வைக்காமல், சீட்டுக்கு அடியில் படுக்க வைத்தனர். கணேசன் வீடு திரும்பாததால், அவரது மனைவி மாலா, தம்பி ராமச்சந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினர் பயந்தார்கள். கணேசனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று பயந்த கணேசனின் தம்பி ராமச்சந்திரன், செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், கணேசனை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து, முதலில் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் (3-ந்தேதி) காலை வரை கணேசனை பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்தநிலையில் கணேசன் வீட்டிற்கு போனில் பேசிய மர்மநபர், “கணேசனை நாங்கள் கடத்தி வந்துள்ளோம். உடனடியாக ரூ.25 லட்சத்தை நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து தர வேண்டும். போலீசில் புகார் கொடுத்தால், கணேசனின் தலையை துண்டித்து வீட்டு வாசலில் வீசுவோம்” என்று தெரிவித்தார்..
இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடத்தல் கும்பலை பிடித்து, கணேசனை பத்திரமாக மீட்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி கணேசனை மீட்க 3 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த 3 தனிப்படையினரும் அதிரடியாக செயல்பட்டு, கடந்த 3-ந்தேதி இரவு வண்டலூர் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியில் வைத்து, துப்பாக்கி முனையில் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட கணேசன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் 4 பேரை வண்டலூர் மேம்பாலத்திற்கு கீழே வைத்து கைது செய்தனர். மொத்தம் 8 பேர் கைதானார்கள். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். கைது செய்யப்பட்ட 8 பேரும் செங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. லாரி அதிபர் கணேசன், அவரது குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
குற்றவாளிகள் பெயர் விவரம்
கைதான குற்றவாளிகள் பெயர் விவரம் வருமாறு:-
1. வடகரை சக்தி (49), இவர் செங்குன்றம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர். இவர் தான் முக்கிய குற்றவாளி. 2. சிவா (39) இவர் செங்குன்றத்தை சேர்ந்தவர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர். 3. சுமன் (39) சென்னையை அடுத்த திருப்போரூரை சேர்ந்தவர். இவர் கடத்தலுக்கு தளபதி போல் செயல்பட்டவர். 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தான், சப்-இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து வந்தவர்.
4.மதன்குமார் (27). எண்ணூரை சேர்ந்த இவர் கூலிப்படை ஆசாமி. 5.கணேஷ் (27). ஆந்திர மாநிலம் நாயுடுப்பேட்டையை சேர்ந்தவர். கூலிப்படை ஆசாமி. 6. அசோக் (35) சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர், இவருக்கு சொந்தமான காரில் தான் லாரி அதிபர் கணேசனை கடத்தினார்கள். 7.ராஜேஷ் (21) செங்குன்றத்தை சேர்ந்த இவர் கூலிப்படையை சேர்ந்தவர். 8.சதீஷ்குமார் (25) செங்குன்றத்தை சேர்ந்த கூலிப்படை நபர். போலீஸ் கையில் சிக்காமல் தப்பி ஓடிய கூலிப்படை நபரின் பெயர் கந்தன் என்பதாகும். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
