என் மலர்
நீங்கள் தேடியது "police searching"
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தவசீலன். இவரது மனைவி வெற்றிச்செல்வி (வயது 46).
இவருக்கும், தவசீலனின் தம்பி சதாசிவத்துக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வெற்றிச் செல்வி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதாசிவம், வெற்றிச்செல்வியை ஆபாசமாக திட்டினார்.
சதாசிவத்திடம் ஏன் என்னை திட்டுகிறீர்கள்? என்று வெற்றி செல்வி கேட்டார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதாசிவம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெற்றிச்செல்வியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த வெற்றி செல்வி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சதாசிவம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அக்கம் பக்கத்தினர் வெற்றி செல்வியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வெற்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் வெற்றிச்செல்வியின் மகன் கிருபாநிதி புகார் செய்தார். அதன் பேரில் சதாசிவம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் குற்றவாளியை பிடிக்க காட்டு மன்னார்கோவில் இன்ஸ் பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சதா சிவத்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுவை அருகே தமிழக பகுதியான பெரியமுதலியார்சாவடி, சின்னமுதலியார்சாவடி, ஆரோவில் பகுதியில் ஏராளமான கடற்கரை விடுதிகள் உள்ளன. இங்கு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து தங்கியிருந்து, புதுவையின் பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிட்டு செல்கின்றனர்.
நேற்று முன்தினம் மதியம் சின்னமுதலியார்சாவடி கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரும், இளம் பெண்ணும் வந்தனர். அவர்கள் தங்கள் உடைமைகளை கடற்கரையில் வைத்துவிட்டு கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை அவர்களை இழுத்துச்சென்றது.
இதை பார்த்து அங்கிருந்த மீனவர்கள் மற்றும் மற்ற சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கிய அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து வந்து படகில் சென்று அவர்களை தேடினார்கள். ஆனால் அவர்கள் இருவரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
அவர்கள் கொண்டு வந்த பை கடற்கரையில் இருந்தது. அதனை போலீசார் சோதித்து பார்த்தபோது அடையாள அட்டைகள், செல்போன்கள் இருந்தன. அந்த வாலிபர் டெல்லியை சேர்ந்த அன்சுன் அவாஸ்கி (வயது 21) என்பதும், அந்த பெண் எனாத்சி வாலியா (21) என்பதும் அடையாள அட்டை மூலம் தெரியவந்தது. எனாத்சி வாலியா ஓய்வுபெற்ற விமான அதிகாரியின் மகள் ஆனார்.
இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர். இவரும் காதலர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தீபாவளி பண்டிகை விடுமுறையை கொண்டாட இருவரும் கடந்த 4-ந் தேதி புதுவைக்கு வந்தனர். புதுவையின் பல்வேறு சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் புதுவையில் வாடகைக்கு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சின்ன முதலியார்சாவடி கடற்கரைக்கு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அவர்களின் கை பையில் இருந்த செல்போனை சோதனை செய்தபோது, கடைசியாக இருவரும் கடற்கரையில் இருந்து செல்பி எடுத்துள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களை டெல்லியில் உள்ள உறவினர்களுக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கிய அன்சுன் அவஸ்கி, எனாத்சி வாலியா ஆகியோரை தேடும் பணியில் போலீசார் மற்றும் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். #Bangalorelovers
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பானையங்கால் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கும் சித்தலூர் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து (28) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது.
அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ஆசைவார்த்தை கூறி அந்த சிறுமியுடன் பச்சமுத்து பலமுறை உல்லாசமாக இருந்தார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமிக்கு நேற்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.
இதுப்பற்றி தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதனை அறிந்த பச்சமுத்து தலைமறைவாகி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் பச்சமுத்து மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
பாகூர்:
புதுவை கரிக்கலாம் பாக்கம் மாஞ்சோலை ரோட்டை சேர்ந்த அசோக் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 25). நேற்று காட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. எனவே கொலையாளிகளை கண்டுபிடிக்க சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் தனிப்படையும், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன் தலைமையில் மேலும் 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முதலில் அவரது கணவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்து பார்த்தனர். ஆனால் அவர் கொலை செய்ததற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எனவே வேறு கோணத்தில் இப்போது விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மற்றும் விபூதி, குங்குமம் சிதறி கிடந்தது.
கிருஷ்ணவேணி தலையில் பூ வைத்து சிவப்பு சேலை கட்டி மங்களகரமாக இருந்தார். அந்த இடத்தில் 2 சாக்குகள் விரிக்கப்பட்ட நிலையில் இருந்தன. அதில் பலர் அமர்ந்திருந்தது போன்ற அடையாளங்களும் இருந்தன.
எனவே கொலை நடந்த இடத்தில் ஏதோ பூஜை நடந்திருக்க வேண்டும். பின்னர் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கொலை நடந்த இடத்தின் அருகே கோவில் ஒன்று உள்ளது. எனவே கோவிலை மையமாக வைத்து இந்த பூஜை நடந்ததிருப்பதாக கருதப்படுகிறது.
எனவே பூஜையில் ஈடுபட்டவர்களே கிருஷ்ணவேணியை கொலை செய்து விட்டு அவருடைய நகைகளை பறித்து சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கிருஷ்ணவேணிக்கு சாமியார்கள் மீது அதிக நம்பிக்கை உண்டு. அடிக்கடி சாமியார்களை வீட்டிற்கு அழைத்து வந்து பூஜை செய்வது, மாந்திரீகம் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்.
எனவே அன்று இரவு ஏதோ ஒரு சாமியார் காட்டுக்குள் வைத்து பூஜை செய்யலாம் என அழைத்து பின்னர் கொலை செய்து நகையை பறித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
கிருஷ்ணவேணி வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாயமாகி இருக்கிறது. அவற்றையும் கிருஷ்ணவேணி எடுத்து சென்று சாமியாரிடம் கொடுத்து பூஜை செய்திருக்கலாம். அதையும் கொலை நடந்ததற்கு பிறகு சாமியார் பறித்து சென்றிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
2 வாரத்துக்கு முன்பு வீட்டில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானது. அந்த பணத்தையும் கிருஷ்ணவேணி, சாமியாரிடம் கொடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.
கிருஷ்ணவேணி வீட்டுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. அவரை தேடி ஒரு படையினர் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர்.
கிருஷ்ணவேணியின் செல்போன் மூலம் துப்பு துலக்க முயற்சித்து வருகின்றனர். அவர் கடைசியாக யார், யாரிடம் பேசினார். அடிக்கடி யாரிடம் பேசியுள்ளார் போன்ற விவரங்களை சேரித்து குற்றவாளியை பிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் ஸ்ரீநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (35). திருப்பூர் 28-வது வார்டு அ.தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருந்தார். சின்ன பொம்ம நாயக்கன் பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்தார். மேலும் இரு சக்கர வாகனம் வாங்க பைனான்ஸ் செய்தும் வந்தார். நேற்று முன்தினம் மாலை இளங்கோ தனது நண்பர் காளியப்பன் என்பவரை அழைத்து கொண்டு திரு நீலகண்டபுரம் வடக்கு பகுதிக்கு சென்றார்.
அங்கு பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக 3 பேரிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் இளங்கோவும், காளியப்பனும் தனித் தனி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டனர்.
அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் திருநீலகண்டபுரம் மகாகாளியம்மன் கோவில் அருகே இளங்கோவையும், காளியப்பனையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டது.இதில் காளியப்பன் லேசான காயம் அடைந்தார். இளங்கோ பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலே இளங்கோ பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிச்சையா விசாரணை நடத்தி வந்தார். அப்போது இளங்கோவை கொலை செய்தது திருநீலகண்டபுரம் பகுதியை சேர்ந்த கோபி, தாமோதரன், செந்தமிழன் என்பது தெரியவந்தது. இவர்களில் கோபி, செந்தமிழன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தாமோதரன் தப்பி ஓடி விட்டார்.
அவரை பிடிக்க வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தாமோதரன் ஊட்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தனிப்படையினர் ஊட்டி விரைந்துள்ளது.
தாமோதரன் போலீசில் சிக்கினால் தான் அ.தி.மு.க. பிரமுகர் கொலைக்கான முழு விவரம் தெரிய வரும் என போலீசார் கூறினார்கள்.
புதுச்சேரி:
புதுவை திப்புராயப்பேட்டை ராஜீவ்காந்தி நகர் நாய்பட்டி சந்து பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் வேல்முருகன் (வயது 17).
பள்ளிக்கூடத்துக்கு செல்லாத இவர், பெற்றோருக்கு கட்டுப்படாமல் சுற்றி திரிந்ததால் வேல் முருகனை அவரது பெற்றோர் உப்பளத்தில் ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.
ஆனால், வேல்முருகன் காப்பகத்தில் இருந்து அடிக்கடி வெளியேறி பின்னர் காப்பகத்துக்கு திரும்புவது வழக்கம்.
அதுபோல் கடந்த சில நாட் களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்து வெளியே சென்ற வேல்முருகன் அதன் பிறகு காப்பகத்துக்கு திரும்பவில்லை. அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விசாரித்த போது அங்கு வேல்முருகன் செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து காப்பக நிர்வாகி லில்லிபுஷ்பம் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான வேல்முருகனை தேடி வருகிறார்கள்.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் முகமது இக்பால் (வயது 55).
இவர் கடந்த 21-ந்தேதி இரவு கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்று விட்டனர். மேலும் அருகில் உள்ள ஹசியார், பக்ரீதின் ஆகியோர் நடத்தி வரும் 2 மளிகை கடைகளில் பூட்டை உடைத்து ஹசியார் கடையில் ரூ.20 ஆயிரத்தையும், பக்ருதீன் கடையில் ரூ.3 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடி விட்டு கடையை திறக்க வந்த முகமது இக்பால் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் ரூ. 10 லட்சத்தை எடுத்து சென்று விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதே போல் 2 மளிகை கடைகாரர்களும் தங்களது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து திடுக்கிட்டனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 3 வியாபாரிகளும் பேராவூரணி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் டி.எஸ்.பி. செங்கமல கண்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைத போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர்க்ள யார் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொள்ளை நடந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்து மர்ம நபர் கொள்ளையடிப்பது பதிவாகி இருப்பது தெரியவந்தது. அதன் மூலம் துப்பு துலக்கி வருகின்றனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராசு, பேராவூரணி வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேந்திரன், நகர மாணவர் அணி செயலாளர் கோவி. இளங்கோ ஆகியோர் கொள்ளை நடந்த கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் கொள்ளை நடந்தது பற்றி கேட்டறிந்தனர்.
கன்னிவாடி:
திண்டுக்கல் அருகே கன்னிவாடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்ராஜா (வயது 24). கோவை 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி ஏஞ்சல் புளோரி (24) இவர்களுக்கு மேனிஷா (4) என்ற என்ற பெண் குழந்தை உள்ளது.
கோவையில் வேலை பார்த்து வந்த வேல்ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது ஏஞ்சல் புளோரியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதை அவர் மறைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வேல்ராஜா ஏஞ்சல் புளோரியின் செல்போனை சோதனை செய்துள்ளார். அதில் அவர் பல ஆண்களுடன் பேசியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த வேல்ராஜா தனது மனைவியை கண்டித்துள்ளார்.
கோபத்தில் வேல்ராஜா வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். வீடு திரும்பிய போது அங்கு ஏஞ்சல் புளோரி குழந்தையை தவிக்க விட்டு விட்டு மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கன்னிவாடி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கோபி:
கோபி மொடச்சூர் பெரியார்நகர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் சரண் (வயது 14). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதி நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர்கோபாலகிருஷ்ணன்.இவரது மகன் ஸ்ரீராம் (14) இவனும் அதே பள்ளியில் படித்து வருகிறான். இரு மாணவர்களும் நண்பர்கள்.
கடந்த 11-ந் தேதி நண்பர்கள் இருவரும் பள்ளிக் கூடம் சென்றனர். ஆனால் மாலை வீடு திரும்பி வர வில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.
மேலும் நண்பர்கள் வீடு உறவினர் வீடுகளில் தேடியும் மாணவர்கள் கிடைக்க வில்லை. இதனால் பதட்டம் அடைந்த சரணின் தந்தை வெள்ளியங்கிரி இதுகுறித்து கோபி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 மாணவர்களையும் தேடி வருகிறார்கள்.
பாடம் படிக்க கஷ்டமாக இருந்ததால் வீட்டை விட்டு வெளியேறினார்களா? வேறு என்ன காரணத்துக்காக மாயமானார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாயமான மாணவர்களை தேடி வருகிறார்கள்.