என் மலர்
நீங்கள் தேடியது "Pregnancy"
- சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
- சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புபடி கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
* பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வது, பணி நிமித்தம் காரணமாக குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, 35 வயதை எட்டிய பிறகு கருத்தரிப்பது போன்றவை சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
* உடல் பருமனும் சிசேரியன் பிரசவத்திற்கு வழிவகுக்கிறது. பி.எம்.ஐ. அளவு 25-க்கு மேல் இருந்தால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாகிவிடும்.
* சில பெண்கள் பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்துக்கொள்வதற்கு விரும்புகிறார்கள்.
* பிரசவ அறையில் அதிக நேரம் செலவிடும் சூழலும் சிசேரியனை தேர்ந்தெடுக்க காரணமாகிவிடுகிறது. குழந்தை பிறப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை கடந்தும் பிரசவ வலி ஏற்படாதபோது, தாய்-சேய் இருவரது உடல் நலனை பாதுகாக்கும் பொருட்டு சிசேரியனை தேர்ந்தெடுக்க நேரிடுகிறது.
சுகப் பிரசவத்திற்கு வழிமுறைகள்
* சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது. பிரசவம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும், ஆபத்துக்களையும் குறைக்கும்.
* நீண்ட தூர ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகுவதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் (ஸ்டெமினா) தேவைப்படும். பிரசவமும் அது போன்றதுதான். மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகுவதுபோல 10 மாத கர்ப்ப காலத்தையும் கருத வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
* தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இயற்கையாகவே சுக பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனினும் மருத்துவரின் ஆலோசனை பெற்று உடல் நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமானது.
* 'ஸ்குவாட்' எனப்படும் குனிந்து நிமிரும் உடற்பயிற்சியை செய்வது பிரசவத்தை எளிதாக்கும். கால்களை நேர் நிலையில் வைத்துக்கொண்டு மூட்டுகளை நன்றாக மடக்கியபடி குனிந்து நிமிரும்போது இடுப்பு பகுதிகள் விரிவடையும். கருவில் இருக்கும் குழந்தை எளிதாக பிரசவ நிலைக்கு வருவதற்கு வழிவகுக்கும். இந்த பயிற்சியை மருத்துவ ஆலோசனை பெற்று உடற்பயிற்சியாளரின் அறிவுரையின்படி மேற்கொள்ள வேண்டும்.
* பிரசவ காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும் மையங்கள் இருக்கின்றன. அங்கு பயிற்சி பெறுவது பிரசவத்தை எளிதாக்கும்.
* கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. உடலுக்கு போதுமான புரதம் மற்றும் ஆற்றலை வழங்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் கருப்பையை வலுவாக்க முடியும்.
- மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும்.
- முதன்முதலாக இங்கிலாந்தில் தான் 1978-ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது.
முதன்முதலாக இங்கிலாந்தில் தான் 1978-ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது. இந்த முறையில் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 80 லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பதாக செயற்கை கருவூட்டலுக்கான இந்திய சங்கம் கூறுகிறது.
2017-ம் ஆண்டு அறிக்கையின்படி இந்திய சந்தையில் இந்த சிகிச்சைக்கான மருந்துகள், கட்டணங்கள் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,832 கோடி வரை சந்தைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது படிப்படியாக உயர்ந்து 2023-ல் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரித்து இருப்பதாக மருத்துவ பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்றைய நவீன தொழில்நுட்பம் மூலம் 90 சதவீத குழந்தையில்லா பெண்களை கருத்தரிக்க வைக்க முடியும். மாத்திரைகள், ஊசிகள், IUI மூலம் குழந்தை கிடைக்காமல் போனால் IVF (டெஸ்ட் டியூப்) அல்லது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் ICSI எனப்படும் சிகிச்சை மூலம் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. உயிரணுக்கள் எண்ணிக்கை 1 மில்லியன் அணுக்கள் இருந்தாலே இந்த சிகிச்சை மூலம் அணுக்களை கரு முட்டைக்குள் செலுத்தி கருத்தரிக்க செய்ய முடியும்.
கருப்பையில் கணவனின் விந்தணுவை செயற்கையாக ஊசி மூலம் செலுத்துதல், சோதனைகுழாய் மூலம் கருத்தரித்தல், சோதனைக் குழாயில் கருவூட்டிய கருவை தாயின் கருப்பையில் பொருத்துதல் போன்ற சிகிச்சை முறைகளுக்கு காப்பீடு பெறும் வசதி இல்லை.
கடின சிகிச்சை முறை, பணச்சுமை, உடல்நல பாதிப்பு போன்ற அம்சங்களால் அந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள பலரும் தயங்குகின்றனர். எனவே அவற்றுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும். அது கருத்தரித்தல் சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
- கர்ப்பிணிகள் பயம், பதற்றம் நீங்கி மன நிலையைச் சீராக வைத்துக்கொள்வதற்கு கர்ப்பகால யோகா பயிற்சிகள் உதவுகிறது.
- ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும்.
பிள்ளைப்பேறு, பெண்களுக்கு மறுபிறவி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கர்ப்ப காலத்தில் பலருக்கு பயம், குழப்பம், பதற்றம், கோபம், எரிச்சல் போன்ற உணர்வு மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை கையாள்வதற்கு யோகா எந்த வகையில் உதவும் என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஜெயபிரபா.
கர்ப்ப காலத்தில் எந்த மாதத்தில் இருந்து யோகா பயிற்சி தொடங்கலாம்?
கருவுற்று இருக்கும் பெண்கள் மூன்று மாதம் முடிந்து, 4-வது மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பயிற்சிக்குத் தயாராக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று காலை, மாலை இரண்டு வேளையும் உடலை வருத்தாமல் எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகளை, பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்யலாம். ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும்.
கர்ப்பிணிகள் என்னென்ன யோகாசனங்களை செய்யலாம்?
தடாசனம், பத்தகோணாசனம், வஜ்ராசனம், யோகா நமஸ்காரம், ஆனந்த சயனாசனம், பாலாசனம், சவாசனம், மகாமுத்திரா மற்றும் மூச்சுப் பயிற்சி என மொத்தம் எட்டு ஆசனங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இவை கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவத்தை உடல் மற்றும் மனரீதியாக எதிர்கொள்ளும் வகையில் அவர்களைத் தயார்படுத்துகிறது. இவற்றை பயிற்சியாளரின் துணையுடன் செய்வதே பாதுகாப்பானது.
எத்தனை மாதங்கள் இந்தப் பயிற்சிகளை செய்ய வேண்டும்?
பிரசவம் வரை இந்தப் பயிற்சிகளை செய்யலாம். 8-வது மாதத்தில் பயிற்சி செய்யும்போது லேசாக மூச்சு வாங்கும். மூச்சுப் பயிற்சிகளை ஆரம்பத்தில் இருந்து செய்யும்போது இந்த சிரமம் ஏற்படாது. குழந்தையின் எடை கூடும்போது உட்கார்ந்து எழும் பயிற்சிகள் செய்வது சற்று சிரமமாக இருக்கும். மற்ற பயிற்சிகளை சற்று இடைவெளி விட்டு ஓய்வெடுத்து செய்யலாம்.
கர்ப்பகால யோகா பயிற்சிகள் செய்வதன் நன்மைகள் என்ன?
கர்ப்பிணிகள் பயம், பதற்றம் நீங்கி மன நிலையைச் சீராக வைத்துக்கொள்வதற்கு கர்ப்பகால யோகா பயிற்சிகள் உதவுகிறது. கர்ப்பிணிகள் தன்னைப்போல, பல கர்ப்பிணிகளுடன் ஒன்றாக சேர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்யும்போது தனிமை பயம் நீங்கும். ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதால் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் தாயின் உடல்நிலை சீராக இருக்கும். தேவையில்லாத எதிர்மறை சிந்தனைகள் குறையும். வயிற்றில் இருக்கும் கருவைத் தாங்குவதற்கும், எளிதாக பிரசவிப்பதற்கும், எலும்புகள், தசை மற்றும் தசை நார்களை உறுதியாக்குவதற்கும், உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதற்கும் இந்தப் பயிற்சிகள் உதவும்.
- யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
- உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு.
*இயற்கை வழி பிரசவமாக (சுகப்பிரசவம்) இருந்தால் குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குப் பிறகும், அறுவை சிகிச்சையாக (C - section) இருந்தால் ஆறு மாதத்திற்குப் பின்பும் உடற்பயிற்சிகள் தொடங்கலாம்.
*ஆரம்ப நிலை உடற்பயிற்சி முதல் படிப்படியாக அதிகரித்து கடினமான உடற்பயிற்சிகள் வரை செய்யலாம்.
*இயன்முறை மருத்துவர் உங்களை முழுவதும் பரிசோதித்து பின் எந்தெந்த தசைகளுக்கு வலிமை பயிற்சிகள், இலகுவாக்குவதற்கான பயிற்சிகள், தாங்கும் ஆற்றலுக்கான பயிற்சிகள் (Cardiac Endurance), எடை குறைய உதவும் பயிற்சிகள் எனத் தனித்தனியாகப் பிரித்து கற்றுக்கொடுப்பர்.
*ஒவ்வொரு பயிற்சியும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், இதனை செய்தால் போதும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
*மேலும் குழந்தையை அதிக நேரம் தூக்க வேண்டும் என்பதால் கைகள், தோள்பட்டைக்கான பயிற்சிகள் வழங்குவார்கள். கூடவே,எப்படி, எவ்வாறு குழந்தையை தூக்குவது, எந்த முறையில் பால் கொடுப்பது போன்ற யுக்திகளையும் கற்றுக் கொடுப்பர். இதனால் உடல் வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.
கவனிக்க வேண்டியவை...
* யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், சில பயிற்சிகளை குழந்தை பிறந்த பின்பு செய்யக் கூடாது. அதேபோல சில பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
* அதேநேரம், உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு. தாய்ப்பால் உற்பத்தி செய்ய நிறைய சக்தி தேவைப்படும். கூடவே கால்சியம், இரும்பு, வைட்டமின் பி12, டி போன்ற ஊட்டச்சத்துகள் சராசரியாக மற்றவர்களுக்கு தேவைப்படுவதை விட ஒரு பங்கு அதிகமாக தேவைப்படும் என்பதால், அளவைக் குறைப்பது புத்திசாலித்தனம் இல்லை.
*போதிய அளவு உறக்கம் என்பது புது தாய்மார்களுக்கு கிடைக்காது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், தூக்கம் சரியாக இல்லை எனில் மாவுச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள் மீது நாட்டம் (Sugar Cravings) வரும். இதனால் நொறுக்குத் தீனி, சாப்பாடு அதிகம் சாப்பிடுவது, இனிப்பு வகைகள் உண்பது என உடல் எடை அதிகரிக்குமே தவிர தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. எனவே, கட்டாயமாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.
*பிஸ்கட், சிப்ஸ், கேக் போன்ற நொறுக்குத் தீனிகள் தின்பதற்கு பதில் பழங்கள், காய்கறிகள் நிறைந்த சாலட்கள், வேகவைத்த பயிறு, கடலை வகைகளை தாராளமாக உண்ணலாம். இதனால் எடையும் ஏறாது, ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
*சரிவிகித உணவு முறையை (Balanced diet) கட்டாயம் தொடர வேண்டும். பேலியோ, நீர், கீட்டோ டயட் போன்றவற்றை கடைபிடிப்பதில் முழு பலன் இருக்காது.
*சினிமா நடிகைகள், இணையதள பிரபலங்கள் மட்டும் குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் எடையை குறைக்கிறார்களே என்று சிலருக்கு தோன்றலாம். ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்து மாறுபடும் என்பதால், நமக்கானதைத் தேடி, அறிந்து அதன் வழி மாற்றிக்கொள்வது நல்ல பலன்களை தரும்.
*தாங்களாகவே நடைப்பயிற்சி, ரன்னிங், நடனம், வெறும் உணவு வழியாக எடையை குறைப்பது போன்றவை செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என நினைத்தால் செய்யலாம். ஆனால், சில வகையான தசை வலிமை பயிற்சிகள், தசை இலகுவாக இருக்க பயிற்சிகள் எனக் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் முதுகு வலி, முன் வயிற்றில் தசை பிரிவதை தடுப்பது போன்ற பல பேறுக்காலத்திற்குப் பின் வரும் சிக்கல்களை தவிர்க்க முடியும்.
நம் உடலிற்கு எது பொருந்துமோ அதன் வழியை பின்பற்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்து நடப்பதே என்றென்றைக்கும் சிறந்தது.
- முதல் குழந்தைக்கு மட்டுமல்ல, அடுத்தடுத்த குழந்தையாக இருந்தாலும் இந்தத் திட்டமிடல் அவசியம்.
- முந்தைய பிரசவம் சிசேரியனாக இருந்தால் இன்னும் அதிக காலம் தேவைப்படலாம்.
திருமண வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக இருப்பது மகப்பேறு. எந்த ஒரு செயலாயினும் அதனைச் செய்வதற்கு முன்பு திட்டமிட வேண்டும் என்பது கர்ப்பம் தரிப்பதற்கும் பொருந்தும். குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்த பிறகு அது சார்ந்து திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தை பெற்றுக்கொள்வதென முடிவெடுத்து விட்டால், மூன்று மாதங்களுக்கு முன்பே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஏதேனும் உடற்பிரச்சனைக்காக மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், கர்ப்பம் தரிக்கும்போது அந்த மருந்தானது குழந்தையை பாதிக்குமா என்று பார்த்து, அப்படி பாதிக்குமெனில் அதற்கு மாற்று மருந்து பரிந்துரைக்கப்படும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் மிகவும் முக்கியமானது. உணவு வழியே கிடைப்பது மட்டும் போதாது என்பதால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் வழங்கப்படும்.
ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படும். ஒருவேளை கர்ப்பச் சர்க்கரை (pregnancy diabetic) ஏற்படும் வாய்ப்பு இருப்பின், அது ஏற்படாதபடி உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவை பரிந்துரைக்கப்படும்.
முதல் குழந்தைக்கு மட்டுமல்ல, அடுத்தடுத்த குழந்தையாக இருந்தாலும் இந்தத் திட்டமிடல் அவசியம். ஒரு குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தைக்குத் திட்டமிடுவதென்றால், குறைந்தபட்சம் 18 மாதங்கள் இடைவெளி தேவை. அப்போதுதான் அடுத்த குழந்தைக்கு அவர்களது உடல் தயாராகும். இதுதவிர, முந்தைய குழந்தைக்கான பாலூட்டுதல், அதனைப் பராமரிப்பதற்கான காலமும் கிடைக்கும்.
இதுவே முந்தைய பிரசவம் சிசேரியனாக இருந்தால் இன்னும் அதிக காலம் தேவைப்படலாம். பொதுவாக குழந்தை பிறகு அடுத்த ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் உற்பத்தி நடப்பதால் கருமுட்டை உற்பத்தி இருக்காது. மேலும், முறையற்ற மாதவிடாய் ஏற்படும் என்பதால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைவு. விதிவிலக்குகளும் உண்டும். மேலும், அந்தக் காலம் முடிந்தவுடனேயே அடுத்த குழந்தைக்குத் திட்டமிடக்கூடாது. பெண்ணின் உடல்நிலையை பரிசோதித்து ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்கும் அளவுக்கு அவர்களது உடலைத் தயார் செய்த பின்புதான் கர்ப்பம் தரிக்க வேண்டும்.
ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையே மூன்று ஆண்டுகள் இடைவெளி இருப்பது தாய்க்கு மட்டுமல்ல அக்குழந்தைக்கும் நல்லது. சரியான காலத்தில் இரண்டாவது குழந்தையைத் திட்டமிடலாம். உடல் நலம் மற்றும் வயது ஆகிய இரண்டையும் கணக்கில் கொண்டுதான் கருவுறுதலைத் திட்டமிட வேண்டும்.
- தனது கணவர் மற்றும் 10 வயது மகனை அமர வைத்து அவர்கள் முன்பு ஒரு பெட்டியை வைக்கிறார்.
- இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக பிரார்த்தனை செய்ததாக அந்த பெண் கூறுவது போல காட்சிகள் உள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதை தனது கணவர் மற்றும் 10 வயது மகனிடம் வெளிப்படுத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில், அந்த பெண் தான் கர்ப்பமான செய்தியை வெளிப்படுத்த தனது கணவர் மற்றும் 10 வயது மகனை அமர வைத்து அவர்கள் முன்பு ஒரு பெட்டியை வைக்கிறார்.
அதில் ஒரு அழகான பொம்மை மற்றும் கர்ப்ப பரிசோதனை குழாய் இருந்தது. கணவர் அதை திறந்து பார்த்ததும், தனது மனைவி கர்ப்பமானதை அறிந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். மகனுக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆனது. அப்போது சிறுவனிடம் அவரது தந்தை, அம்மா கர்ப்பமாக இருக்கிறாள் பாபி என கூறுகிறார்.
அதைக்கேட்டு அந்த மகனும் மகிழ்ச்சி அடைகிறார். இந்த தருணத்திற்காக பல ஆண்டுகளாக பிரார்த்தனை செய்ததாக அந்த பெண் கூறுவது போல காட்சிகள் உள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
- குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
- கர்ப்ப காலத்தின் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு பரிசோதனை அவசியம்.
தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.
*Gestational Diabetes Mellitus (GDM)
குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.
*Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes
ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.
கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
இதற்கு முக்கியமான காரணிகள்...
* குடும்பப் பின்னணியில் நீரிழிவு
* 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்
* திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை
* சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்
* பருமன், அதிக எடை
* முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்
* நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை
* அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு
* பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்
* முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.
இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.
முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்...
கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.
இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.
பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்
*கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.
*நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.
*குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு
*சிசேரியன் செய்ய வேண்டிய நிலை
*எடை கூடுதல்
*உயர் ரத்த அழுத்தம்
*கரு கலைதல்
*மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்
*டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்
*வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்
*ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்
*நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்
*கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்
*கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.
கருவில் ஏற்படும் பிரச்னைகள்
*பிறப்புநிலைக் கோளாறுகள்
*பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு
*மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.
*மஞ்சள் காமாலை
*ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)
*பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்
*குறைப் பிரசவம்
*Hyaline membrane எனும் நுரையீரல் நோய்
*மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).
கட்டுப்படுத்துவது எப்படி?
மேலே கண்ட பிரச்னைகள் மிரட்டுவதாகத் தோன்றினாலும், குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவையும் அதன் கோளாறு களையும் நிச்சயம் சமாளிக்க முடியும்... வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.
ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலும் பிரச்னைதான். ஹைப்போகிளைசமிக் என்கிற தாழ்நிலை சர்க்கரையானது, அதீத சர்க்கரை அளவைப் போலவே தாயையும் சேயையும் பாதிக்கும்.
தயக்கம் வேண்டாம்!
குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.
* மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.
* குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக
அறிவுறுத்தப்படும்.
* கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும்
விளக்கப்படும்.
*வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.
* அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.
* பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.
* எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.
- 14 வயது சிறுமி கர்ப்பமடைந்தார்.
- போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரவீனை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி நாரணாபுரம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே தெருவை சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே மாதம் பிரவீன் வீட்டிற்கு சிறுமி சென்றார். அப்போது சிறுமிக்கு தாலி கட்டி உள்ளார். பின்னர் பிரவீன் வீட்டிலும், சிறுமியின் வீட்டிலும் பலமுறை இருவரும் தனிமையில் சந்தித்தனர்.
இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல் கொடுத்தது. போலீசார் சிவகாசி பஞ்சாயத்து யூனியன் அலுவலர் இதயகுமாரியிடம் தெரிவித்தனர். அவர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சிறுமியிடம் விசாரித்தபோது மேற்கண்ட விபரங்கள் தெரியவந்தது.
இதையடுத்து சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதயகுமாரி புகார் கொடுத்தார். போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரவீனை தேடி வருகின்றனர்.
- பிளஸ்-2 மாணவி கர்ப்பமானார்.
- வாலிபர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் மாணவியை சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு பரிசோதனை நடத்தியதில் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவியின் பெற்றோர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அங்கும் மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மாணவியின் தாய் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
சிவகாசி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சுடலைமணி என்பவரும், மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுடலைமணி மாணவியிடம் நெருங்கி பழகி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுடலைமணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காட்வின் மைக்கேல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
- தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை:
கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலாஜி கார்டனை சேர்ந்த டிரைவர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். ஆனால் காட்வின் மைக்கேல் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
கடந்த 1-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து சென்றார். காட்வின் மைக்கேலும், மாணவியும் சேர்ந்து சென்றபோது மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் 2 பேரையும் கண்டித்து போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி விடுவதாக கூறி எச்சரித்தார்.
இதனால் பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காட்வின் மைக்கேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- முதலில் ரூ.799 வைப்புத்தொகை செலுத்தி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- கர்ப்பமாகாவிட்டாலும் ஆறுதல் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பாட்னா:
சமீப காலமாக நாடு முழுவதும் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பலின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.
டிஜிட்டல் முறையில் பணம் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மருத்துவதுறை ரீதியாக ஆசை வார்த்தைகளை கூறி நூதன மோசடியை அரங்கேற்றும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் பீகார் மாநிலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்களை கருத்தரிக்க வைக்கும் ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-
பீகார் மாநிலம் நவாடா பகுதியில் 'பிரக்னண்ட் ஜாப் ஏஜென்சி' என்ற பெயரிலான நிறுவனத்தில் பணி புரிய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளும் நபர்கள், குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களை கர்ப்பமாக்கலாம்.
இதற்காக முதலில் ரூ.799 வைப்புத்தொகை செலுத்தி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் பெண்களின் புகைப்படங்கள் வழங்கப்படும்.
அவ்வாறு வழங்கப்படும் பெண்களின் அழகை பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வைப்புத்தொகை செலுத்தினால் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். அந்த பெண் கர்ப்பம் அடைந்தால் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை தொகை வழங்கப்படும்.
அவ்வாறு கர்ப்பமாகாவிட்டாலும் ஆறுதல் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த சில வாலிபர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணத்தை செலுத்த தொடங்கி உள்ளனர். ஆனால் நாட்கள் பல சென்ற பின்னரும் கடைசி வரை பெண்களின் புகைப்படங்களை அனுப்பவில்லை. அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட வாலிபர்களுக்கு தாங்கள் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் பீகார் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து நவாடா பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தி மோசடி கும்பலை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.
மேலும் அலுவலகத்தில் இருந்து செல்போன்கள், பிரிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முன்னாகுமார் என்பவர் இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. தலைமறைவான அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா?
- ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்கள்.
வருடத்துக்கு ஒருமுறை ஆயுத பூஜை என்கிற பெயரில் மெஷின்களுக்குக் கூட பூரண ஓய்வு அளிக்கிறோம். இன்னும் வீட்டில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்துக்குமே அன்றொரு நாள் உழைப்பில் இருந்து ஓய்வு கொடுத்து மரியாதை செய்கிறோம். ஆனால், ரத்தமும் சதையுமாக உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்கிற உயிருக்கு, குறிப்பாக பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா? பெண்கள் ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களை பற்றி பார்ப்போம்.

மாதவிலக்கு:
இந்த நாட்களில் பெண்களுக்குப் பூரண ஓய்வு அவசியம் என்பதால்தான் அந்தக் காலத்தில் 3 நாட்களுக்கு அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள். அந்த 3 நாட்களில் எந்த வேலையும் செய்யாமல் அவர்களுக்கு மனமும் உடலும் முழு ஓய்வைப் பெறும். அடுத்தடுத்த நாட்களுக்கான புத்துணர்வுடன் ஓடவும் தயார்ப்படுத்தும். இந்தக் காலத்தில் அப்படி ஒதுங்கி உட்காரத் தேவையில்லை என்றாலும் ஓய்வெடுப்பது என்பது மிக முக்கியம்.
மாதவிலக்கு நாட்களில் சில பெண்களுக்கு ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் என சொல்லக்கூடிய பிரச்சினை வரலாம். ஹோர்மோன் மாறுதல் காரணமாகவே இது ஏற்படும். மன அழுத்தம், சோர்வு, கோபம், சோகம், அழுகை என இதன் அறிகுறிகள் எப்படியும் இருக்கலாம். இதற்கும் ஓய்வுதான் தீர்வு.

பிரசவத்துக்குப் பிறகு:
வளைகாப்பு, சீமந்தம் என்று அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பிரசவத்துக்குப் பிறகு குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு அம்மா வீட்டிலேயே ஓய்வெடுக்கச் செய்வதும் இந்தக் காரணத்துக்காகத்தான். ஆனால், இன்றெல்லாம் அதைப் பத்தாம்பசலித்தனம் என்று சொல்லிக் கொண்டு குழந்தை பெறுகிற நாள் முதல் வேலைக்குப் போய்க்கொண்டும் தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்ப நாட்களிலேயே வேலைக்குத் திரும்புவதும் அதிகரித்து வருகிறது.
கர்ப்ப காலத்தில் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக இயக்கம், சுவாசத்தின் தன்மை என பெண்ணின் ஒட்டு மொத்த உடலியக்கமும் மாறிப்போகும். பிரசவத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும். அதற்கு குறைந்தது 6 வார கால ஓய்வு அவசியம்.
அப்படி கட்டாய ஓய்வெடுக்கிற போதுதான், அந்த பெண்ணால், குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுக்க முடியும். கைக்குழந்தை வைத்திருக்கும் பல பெண்களுக்கு தூக்கம் ஒரு பெரிய பிரச்சினை யாகத்தான் இருக்கும். இதை சமாளிக்க ஒரே வழி, குழந்தை தூங்கும்போது தாயும் தூங்கி ஓய்வெடுப்பது ஒன்றுதான்.
பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மனநோய் வரும் வாய்ப்புள்ள பெண்கள் என்றால் அவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு 'போஸ்ட் பார்ட்டம் ப்ளுஸ்' என்கிற மனநல சிக்கல் தாக்கலாம்.
தான் பெற்ற குழந்தையையே தூக்குவதைத் தவிர்ப்பது, அந்தக் குழந்தையே தன்னுடையதில்லை என்பது, தாய்ப்பால் தர மறுப்பது, சுய சுத்தம் பேண மறுப்பது, தற்கொலை முயற்சி என இது பல பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பு குறித்த பயம் அதிகரிக்கும். எல்லோரிடமும் வன்முறையாக நடந்துகொள்வார்கள்.
சிலருக்குப் பிரச்சினை முற்றி, குழந்தையையே கொலை செய்யும் அளவுக்கும் தீவிரமாகும். இவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லாத காரணத்தால் தாய்ப்பால் சுரப்பு குறையும். எரிச்சல் அதிகரிக்கும். எனவே, பிரசவித்த பெண்ணிடம் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கு உதவுவதே முதல் சிகிச்சை.

மெனோபாஸ்:
மாதவிலக்கு முற்றுப்பெறும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற பெண்களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம், தலைவலி, படபடப்பு, கோபம், மன உளைச்சல், தற்கொலை எண்ணம், அழுகை எனப் பலவிதமான உணர்ச்சிகள் வந்து போகும். மூளையில் உண்டாகிற ஹோர்மோன் மாற்றங்களின் விளைவாகத் தூக்கம் இருக்காது.
எந்த விடயத்திலும் பிடிப்பே இருக்காது. உடல் மற்றும் மனதளவில் உணரும் அறிகுறிகளின் காரணமாக தூக்கம் இருக்காது. அப்படியே தூங்கினாலும் பாதியில் விழித்து எழுவார்கள். பயமும் பதற்றமும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இருக்கும் பெண்கள் மருத்துவரை அணுகி, பதற்றத்தைக் குறைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கூடவே போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.

வயதானவர்கள்:
முதுமையின் காரணமாக உடலை வாட்டும் நோய்கள் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும். இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஓய்வும் தூக்கமும் இல்லாத பெண்களுக்கு பருமன் பிரச்சினையும் சேர்ந்துகொள்ளும். மறதி, குழப்பம், கோபம், தனிமைத் துயரம் என எல்லாம் அதிகரிக்கும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுத்து ஆரோக்கியமான உணவு மற்றும் சூழலை உருவாக்கிக் கொள்வதுதான் இவர்களுக்கான அவசியத் தேவை.