என் மலர்
நீங்கள் தேடியது "president"
- உலகம் இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
- பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது.
டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதற்கான சிறந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது.
கருணையை வளர்ப்பதுதான் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத் திறவுகோல். பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள் என்ற தங்க விதியே, மனித உரிமைகள் தொடர்பான கருத்தை அழகாக தொகுத்து வழங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, அசாதாரண வானிலையால் உலகம் அதிக எண்ணிக்கையிலான இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவுக்கு ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிக விலை கொடுக்கப் போகிறார்கள். பருவநிலை மாற்றத்தின் சவால் மிகப் பெரியது. அது உரிமைகளை மறுவரையறை செய்ய நம்மைத் தூண்டுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு மனிதர்களைப் போலவே சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன என்று கூறியுள்ளது. இயற்கையை கண்ணியத்துடன் நடத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும், அது தார்மீகக் கடமை மட்டுமல்ல, நம் வாழ்வுக்கும் அவசியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தூய்மையான காற்றை சுவாசிப்பது மனிதனின் அடிப்படை உரிமை.
- சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் மனித உரிமைகளை நாம் பாதுகாக்க முடியும்.
தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், புதுமை கண்டுபிடிப்பு விருதுகள் மற்றும் தேசிய ஓவியப் போட்டிக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் மின்னணு வாகனங்களுக்கு அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்களை கண்டறிய உதவும் ஈவி-யாத்ரா என்ற இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது: தூய்மையானக் காற்றை சுவாசிப்பது மனிதனின் அடிப்படை உரிமை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் பல்வேறு மனித உரிமைகளை நாம் பாதுகாக்க முடியும். எதிர்காலத் தலைமுறையினர் மாசு இல்லாத காற்றை சுவாசிப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்,
அவர்கள் ஆரோக்கியமாக நலமுடன் வாழ்வதே நமது முதன்மையான குறிக்கோள். எரிசக்தி சேமிப்பு என்பது நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்தது. பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள அது உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று 51 ஆண்டுகள் நிறைவு.
- வீரர்களின் இணையற்ற துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது.
1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் (விஜய் திவஸ்) கொண்டாடப்படுகிறது. இந்த போருக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம், சுதந்திர நாடாக மாறியது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1971 ஆண்டு போரின் போது நமது ஆயுத படையினர் வெளிப்படுத்திய வீரத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். வீரர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் தேசத்துக்காக அவர்கள் செய்த ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.
- கிறிஸ்து போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
கிறிஸ்துமஸ் பண்டிகை மொத்த மனிதகுலத்திற்கும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் தியாகத்தின் முக்கியத்துவத்தை நாம் நினைவுகூருவோம். கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவரையொருவர் அன்புடனும், கருணையுடனும் நடத்த வழி காட்டுகிறது.
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உறுதிமொழி எடுப்போம். நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்து அன்பு, பரிவு மற்றும் கருணை ஆகியவற்றின் வழியை நமக்குக் காட்டியுள்ளார். இது நமது வாழ்க்கையை நல்லொழுக்கம் உள்ளதாக்குகிறது. அத்துடன் சமூகத்தில் சகிப்புத்தன்மை, நல்லிணக்கத்தைக் கொண்டு வருகிறது.
இது உலகில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாம், இணக்கமான, சகிப்புத்தன்மையுடன் கூடிய மற்றும் அமைதியான சமுதாயத்திற்காகப் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 30ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசு தலைவர் பங்கேற்கிறார்.
- ஸ்ரீசைலம் கோயிலின் மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் வரும் 30ந் தேதிவரை தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலுக்கு இன்று செல்லும் குடியரசு தலைவர், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மேம்பாடு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்குள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்தையும் பார்வையிடுவார்.
27ந்தேதி ஐதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமிக்கு சென்று பயிற்சியாளர்கள் மத்தியில் உரையாற்றுவார். மேலும் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனத்தின் வைட் பிளேட் மில்லையும் அவர் திறந்து வைக்கிறார்.
28ந்தேதி அன்று, பத்ராசலம் சீத்தாராம சந்திர சுவாமிவாரி தேவஸ்தானத்திற்குச் சென்று பிரசாத வழங்கும் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், புனரமைப்புக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
- ஸ்ரீசைலம் கோவிலை உலகத் தர வழிபாட்டுத் தலமாக மாற்ற நடவடிக்கை.
- வாகன நிறுத்துமிடங்கள், உணவு வசதி, வங்கி வசதி ஏற்படுத்தப்படுகிறது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலில் 43 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்த நிதியை வழங்கி உள்ளது.
ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான பிரஷாத் திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறுகின்றன. ஸ்ரீசைலம் கோவிலை உலகத் தரத்திலான வழிபாட்டுத் தலமாகவும், சிறந்த சுற்றுலா மையமாகவும் மாற்றும் நோக்கில் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.

திறந்தவெளி வட்ட அரங்கங்கள், ஒலி-ஒளி காட்சி அமைப்புகள், வாகன நிறுத்துமிடங்கள், சிறந்த உணவுக்கான வசதிகள், பரிசுப் பொருட்களுக்கான கடைகள், வங்கி வசதி மற்றும் ஏடிஎம் வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்ற பல வசதிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண் ரெட்டி, சுற்றுலாத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் நாயக், ஆந்திர துணை முதலமைச்சர் கோட்டு சத்யநாராயணா, ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும்.
- சாதாரண மனிதர்கள், காவல் துறையினரை நண்பராக கருத வேண்டும்.
தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பை நிலைநாட்டும் பணியின் போது ஆயிரக்கணக்கான காவல் துறையினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். காவல்துறை மக்களின் நம்பிக்கையை பெறும் போது அரசின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். கடைநிலையில் உள்ள காவலர் வரை அனைவரும் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும்.

ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் பணி துவங்கும் போதிலிருந்தே தலைமைப் பண்புடன் திகழ வேண்டும். ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, துணிவு, திறமை மற்றும் உணர்திறன் ஆகிய 5 அடிப்படை பண்புகளை மனதில் வைத்து காவல் துறை அதிகாரிகள் தங்களது திறனை நிரூபிக்க வேண்டும். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் ஏழை கிராமவாசிகளை உள்ளூர் காவல் நிலையங்கள் கருணையுடன் அணுகுவதை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.
குற்றவாளிகள் காவல் துறையினரைப் பார்த்து அச்சம் அடைய வேண்டும், அதே நேரம் சாதாரண மனிதர்கள் காவல் துறையினரை நண்பராகவும் தங்களை காப்பாற்றுபவராகவும் கருத வேண்டும். அந்த வகையில் காவலர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு பெண் காவல் அதிகாரிகள் அதிக அளவில் உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களை சென்றடைய வேண்டும்.
- மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.
ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இன்றைய உலகில் முன்னெப்போதும் கண்டிராத பிரச்சனைகளுக்கும் விரைவான தீர்வை காண, பொறியியலின் பங்கு மிகவும் முக்கியமானது.பொறியியலாளர்களின் கண்டுபிடிப்புகளும், அவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களும் மக்கள் நலனைச் சார்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தின் பலன்கள் ஏழை எளிய மக்களையும் சென்றடைவதுடன், சமூக நீதிக்கான கருவியாக பயன்பட வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்னும் மந்திரத்தை இந்தியா உலகின் முன் வைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் கலந்த எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றின் மூலம் புதிய முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். இந்த முன்முயற்சிகள் மூலம் சிறந்த முடிவுகளை நாம் பெறலாம்.
பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் பரிமளித்து வருகின்றனர். தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, எந்திர வடிவமைப்பு, கட்டுமானப்பணிகள், செயற்கை நுண்ணறிவு உள்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் பங்காற்றி வருகின்றனர். தொழில்நுட்பவியலாளராக இளம் பெண்களை உருவாக்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை நாடு எட்ட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புத்தாண்டு விடியல், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.
- குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவருக்கும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு விடியல், மகிழ்ச்சியையும், இலக்குகளையும், உத்வேகங்களையும், நமது வாழ்வில் பெரிய சாதனைகளையும் கொண்டு வரட்டும்.
தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம். புத்தாண்டில் நமது தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்த மகிழ்ச்சியான தருணம், நமது முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையை உறுதிசெய்து, உத்வேகத்துடன் நமது முயற்சிகளைத் தொடர ஒரு வாய்ப்பாகும். இந்தியாவை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டுடன் புத்தாண்டைத் தொடங்குவோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கும் தேசம், வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு உலகில் மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. நமது வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
- ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தார்.
இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அவர் தீர்மானத்தை வாசித்து கொண்டிருந்த போது கவர்னர் ஆர்.என். ரவி அவையைவிட்டு வெளியேறினார்.
தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடைவதற்குள் கவர்னர் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் செயலுக்கு தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட சபை மீறிய செயலை ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க தி.மு.க. எம்.பி.க்.கள் முடிவு செய்தனர். அதற்காக நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளார்.
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஜனாதிபதியை சந்திக்க நேற்று இரவு அவர்கள் டெல்லி சென்றனர். கூட்டணி கட்சி எம்.பி.க்களும் உடன் உள்ளனர்.
இதற்கிடையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள தி.மு.க. எம்.பி.க்கள்., ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை.
ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
- தமிழக கவர்னரை திரும்பப்பெறக்கோரி மனு அளிக்க உள்ளனர்.
சென்னை :
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சட்டசபை உரையில் சில பகுதிகளை தவிர்த்தது ஏன் என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் 6 அம்சங்களை சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக, கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழக அரசு சார்பில் 6 பக்க தகவல் வெளியானது.
இதற்கிடையே சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்து அவர் மீது ஜனாதிபதியிடம் புகார் அளிக்க தி.மு.க. எம்.பி.க்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க தி.மு.க. எம்.பி.க்களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 11.45 மணியளவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. எம்.பி.க்களுடன் ஜனாதிபதியை சந்திப்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களும் இந்த சந்திப்பில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் ஜனாதிபதியிடம், தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்டவிதம் குறித்தும், அவரை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மனு அளிக்க உள்ளனர்.
- திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தலைவர்-துணைத்தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
- ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழக்கரை
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியத்தலைவர் புல்லாணி தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கமிஷனர் ராஜேந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி:- தமிழக அரசு தற்போது பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் வர்ணம் பூசுதல், மராமத்து உள்பட 80 பணிகள் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டது.
ஆனால் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. சேர்மன் எதிர் கட்சி சேர்மன்போல் செயல்படுகிறார். "தி.மு.க. சேர்மனா அல்லது எதிர்கட்சி சேர்மனா" என்பதை தெளிவுபடுத்த வேண்டும். குழப்பம் ஏற்படுத்தி பள்ளிப் பணியை நிறுத்திவிட்டார். இந்த திட்டத்தை திசை திருப்புவதற்கு காரணம் என்ன?
தலைவர்:- நான் எந்த சேர்மன் என்று மக்களுக்கு தெரியும்.
துணைத்தலைவர் சிவ லிங்கம்:- திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மிகவும் மோசமாக செயல்படுகிறது. இங்கு தி.மு.க. சேர்மனா? அல்லது அ.தி.மு.க.சேர்மனா? என்பது குழப்பமாக உள்ளது எந்த கட்சி சேர்மன் என்றே தெரியவில்லை?
கவுன்சிலர் பைரோஸ் கான்:- டெண்டர் வைத்து ரத்து செய்ததற்கான காரணத்தை முதலில் கூறுங்கள். பள்ளி வர்ணம் பூசுதல் குறித்து கடந்த 4 மாதங்களுக்கு மேலாகவே உரிய நடவடிக்கை மேற் கொண்ட நிலையில் தற்போது நிறுத்தியது ஏன்?
கவுன்சிலர் பைரோஸ் கான்:- என்னை ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்த மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இங்கு நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளால் நான் கடந்த 3 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை.
துணைத்தலைவர் சிவ லிங்கம்:- எதற்கெடுத்தா லும் தலைவர் தடை போடக்கூடாது. நாங்கள் கேட்பது உங்கள் சொந்த நிதியை அல்ல, அரசு நிதியைத்தான் திட்ட பணி களுக்கு ஒதுக்கீடு செய்ய கேட்கிறோம்.
இதைத்தொடர்ந்து தலை வர், துணைத்தலைவரை ஒருமையில் பேசியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே துணைத்தலைவர் அவரது இருக்கை விட்டு எழுந்து பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய ஒன்றிய கவுன்சில் கூட்டம் 2½ மணிநேரம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.79 லட்சம் மதிப்பில் 61 பணிகளுக்கு வருகிற 28-ந் தேதி டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தொடங்கியது முதல் கடைசி வரை தொடர்ந்து தலைவருக்கு எதிராக விவாதங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க.கவுன்சிலர்கள்- தி.மு.க.சேர்மன் இடையே பணிகள் குறித்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்த நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு தேவையான பணிகளை செய்ய வற்புறுத்தாமல் கூட்டம் முடியும் வரை மவுனம் காத்தது புரியாத புதிராக இருந்தது.