என் மலர்
நீங்கள் தேடியது "priests"
- சிவராத்திரி விழாவுக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 40-க்கும் அதிகமான கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரியகோவில் சார்பில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 18-ந் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. அதன்படி விழா நடைபெறுவதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தஞ்சை வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழகத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், தஞ்சை பெரியகோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நெல்லை நெல்லையப்பர் கோவில், கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வர் கோவில் ஆகிய 5 இடங்களில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகேயுள்ள திலகர் திடலில் மகா சிவராத்திரி விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏறத்தாழ 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான நிதியை திருக்கோவில் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விழாவை அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ நடத்தவில்லை.
அந்தந்த கோவில் நிர்வாகம் தான் நடத்துகிறது.
யானையை நாம் காட்டில் இருந்து கொண்டு வந்து வளர்க்கக் கூடாது. யாராவது நன்கொடையாளர்கள் யானையை கொடுத்தால் கோவிலில் (தஞ்சை பெரிய கோவிலில்) வளர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள 1,250 திருக்கோவில் களுக்கும், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள 1,250 திருக்கோவில்களுக்கும் என மொத்தம் 2,500 கோவில்களுக்கு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.1 லட்சம் வீதம் என இருந்ததை தலா ரூ.2 லட்சமாக உயர்த்தி ரூ.50 கோடியை ஒரே தவணையில் தமிழக முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்தார்.
ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருவாய் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் குழு அமைக்க அரசாணை வெளியிடப்படும். மற்ற கோவில்களுக்கு மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்களின் பரிந்துரை அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.
இதுவரை 22 மாவட்டங்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரத் துக்கும் அதிகமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 40-க்கும் அதிகமான கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்பின்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கல்யாணசுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சதய விழாக்குழு தலைவர் செல்வம் மற்றும் அதிகா ரிகள் உடன் இருந்தனர்.
- டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட பித்தளை தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
- நாங்குநேரி சுங்கச்சாவடியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோவில் பூசாரிகள்
மேலபாட்டம் அருகே உள்ள கொட்டாரம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது தலைமையில் கிராம கோவில் பூசாரிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2001-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது பூசாரிகளுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என தெரிவித்தார். தற்போது தி.மு.க. ஆட்சியில் கோவில் பூசாரி களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. அதனை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
கிராம கோவில்களுக்கு மின்கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே அங்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோவில்களில் குட முழுக்கு திருவிழா க்களை பாரம்பரிய முறை யில் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
மேல குன்னத்தூரை சேர்ந்த பொதுமக்கள் மாவீரன் சுந்தரலிங்கனார் இயக்க நிறுவனர் மாரியப்பபாண்டியன் தலைமையில் கொடுத்த மனுவில், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் உடையார், கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், கடந்த 14-ந் தேதி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் எங்களது கட்சி அலுவலகத்திற்கு வந்து நிர்வாகிகள் துரைபாண்டி, செல்வம், செந்தில்குமார் ஆகியோரை சட்ட விரோதமாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஊதிய உயர்வு
பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜன் தலைமையில் கொடுத்த மனுவில், பழையபேட்டை, டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட பித்தளை தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கு 100 -க்கும் மேற்பட்டோர் பணி யாற்றி வருகிறார்கள். இங்கிருந்துதான் டவுனில் உள்ள பாத்திர கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கேற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
கல்குவாரிக்கு எதிர்ப்பு
பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் நாங்குநேரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார் மற்றும் மங்கல்ராஜ், எழிலரசு, பட்டுவேல் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து கொடுத்த மனுவில், பரப்பாடி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் விஜயநாராயணம் கப்பற்படை தளத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும், தினையூரணியில் 105 அடி தேவாலய கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. எனவே கல்குவாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நாங்குநேரி சுங்கச்சாவடி
நேதாஜி சுபாஷ் சேனா நிறுவன தலைவர் மகாராஜன் தலைமையில் டிரவைர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், நாங்குநேரி சுங்கச்சாவடியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது கட்டணம் வசூலிக்கப்படுவதால் அங்கிருந்து விலை பொருட்களை நெல்லைக்கு கொண்டு வரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை. தற்போது கயத்தாறு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுங்கசாவடி வழியாக சென்ற போது கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கும் அவ்வாறு உள்ளூர் வாகனங்கள் செல்வதற்கு கட்டணத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
- வடகலை, தென்கலை பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.
- இருதரப்பு அர்ச்சகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இங்கு பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கோவிலில் ஸ்ரணவ நட்சத்திரத்தை ஒட்டி வேதாந்த தேசிகர், வரதராஜ பெருமாள் கோவில் அருகே எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருவது வழக்கம்.
அன்படி இன்று காலை வேதாந்த தேசிகர் சுவாமி வீதி உலா வந்து வரதராஜ பெருமாள் கோவில் அருகே சன்னதி வீதியில் நடை பெற்றது. அப்போது வடகலை, தென்கலை பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.
அப்போது, தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்க்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகர் முன்பு பிரபந்தம் பாட எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வடகலை பிரிவினர் பிரபந்தம் பாடத்தொடங்கினர். இதனால் இருதரப்பு அர்ச்சகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதனால் அங்கிருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் விஷ்ணு காஞ்சி போலீசார் மற்றும் கோவில் செயல் அலுவலர் பூவழகி ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இருதரப்பினரையும் சுவாமி ஊர்வலம் முன்பு பாடுவதற்கு போலீசாரும, இந்து சமய அறநிலைத்துறையினரும் அனுமதி அளித்த பின்பு தேசிகர் சுவாமி விதி உலா போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சன்னதி வீதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பிரபந்தம் பாடுவதில் அர்ச்சகர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்
- இந்த திருமணத்தில் எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்
தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக மாநில மகளிரணி பிரச்சாரக்குழுச் செயலாளர் தேன்மொழி அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, மணமக்கள் ரூபன்சாந்தகுமார் - அனுபிரியா தம்பதியரை வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, "இந்த திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்.. அது மந்திரம் அல்ல, என்.சி.சி. யில் சொல்லும் இந்தி கமாண்ட். அம்மாதிரி இல்லாமல் இப்போது எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்" என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
- இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.
- கோவில்களுக்கு நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
உடுமலை :
உடுமலையில் இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.உடுமலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மாநாட்டுக்கு முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.
மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.நாகுமணி மாதாஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பாளர் சேகர் வரவேற்றார்.மாநாட்டில், நலிவடைந்த கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.பூசாரிகளுக்கு பூஜை செய்யும் கோவிலுக்கு அருகிலேயே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.அனைத்து கோவில்களுக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். அதுவும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் இங்கு அதிகமாக இருக்கும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி நாட்டில் ஏற்படப்போகும் விளைவுகளை முன்னதாகவே உணர்த்தி விடும் சக்தி கொண்டது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா நேற்று சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு மதியம் 2 மணிக்கு வந்தார். பின்னர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது அவரை பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் கொடி மரம் அருகே வந்த போது கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் ராஜகோபுரம் நுழைவு வாயிலை அடைத்து நின்றபடி நடிகை ரோஜாவுடன் செல்பி எடுத்து கொண்டனர்
இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். தங்களது பணியை மறந்து நடிகையுடன் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் செல்பி எடுத்ததை பார்த்து பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
உலக அளவில் சில நாடுகளில் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இது சம்பந்தமாக போப் பிரான்சிஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், திருச்சபைகளில் சில இடங்களில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மைதான்.
மத குருக்களால் இவ்வாறு தொல்லை நடப்பது தெரிய வந்துள்ளது. இதை நிறுத்துவதற்காக நான் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
இதில் சம்பந்தப்பட்ட மத குருக்கள் சிலர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற தவறுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PopeFrancis
சென்னை மைலாப்பூரில் உள்ள கோவிலில் இருந்து சிலை காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து காணாமல் போன மயில் சிலைக்கு பதிலாக புதிய சிலை வைத்து குடமுழுக்கு நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கோவிலில் சிலைகளை பாதுகாப்பதில் அர்ச்சகர்களுக்கு பொறுப்பு உண்டு என தெரிவித்துள்ளனர்.
மேலும், அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்றவில்லை என குற்றம்சாட்டிய நீதிபதிகள், இயந்திரத்தன்மையுடன் செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். #ChennaiHC
கேரளாவில் தனது திருமண வாழ்வுக்கு முன்னதாக நடந்த தவறு குறித்து பாவமன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை வற்புறுத்தி பாதிரியார்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் பாதிரியார்கள் மீது குற்றவழக்குகள் பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியாரின் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 6-ம் தேதி வரை குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதிரியார்கள் ஜார்ஜ் மற்றும் சோனி வர்க்கீஸ் ஆகியோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. #Kerala #SupremeCourt
கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா மரபுவழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ராஜா விஜயராகவன், “இந்த புகார் மிகவும் தீவிரமானது. இதுபோன்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் விசாரணை தற்போது தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே முன் ஜாமீன் வழங்க இயலாது” என்று குறிப்பிட்டார். #KeralaHighCourt #KeralaPriests #tamilnews
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து பாதிரியார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் அவர்கள் மீது முறைப்படி போலீசில் புகார் செய்யப்படும் என்று சர்ச் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில டி.ஜி.பி.யை தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பாதிரியார்கள் மீது குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KeralaPriests