என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prime Minister Modi"

    • அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
    • கூட்டணி பற்றி பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக பிரச்சனைகளுக்காக அமித் ஷாவை சந்தித்து மனு அளித்தார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட் டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மத்திய மந்திரி அமித் ஷாவும் உறுதி செய்துள்ளார்.

    அதே நேரத்தில் டெல்லி சென்ற அ.தி.மு.க. மூத்த தலைவரான செங்கோட்டையனும் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இதனால் அ.தி.மு.க.வில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பணியவைப்பதற்காக பா.ஜ.க. செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.


    அதே நேரத்தில் அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை பெரிது படுத்தாமல் அமைதியாக இருக்குமாறு செங்கோட்டையனுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் வருகிற 6-ந்தேதி மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் கூட்டணி ஆகியவை பற்றி இருவரும் பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி வினியோகம் வெளிப்படுத்தியது.
    • சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சசிதருர். இவர் தனது மனதில் உள்ள கருத்துக்களை கட்சிக்கு அப்பாற்பட்டு மிகவும் வெளிப்படையாக தெரிவிப்பார். இதனால் அவருக்கு காங்கிரஸ் கட்சி யிலேயே கடும் எதிர்ப்பு உள்ளது.

    இந்தநிலையில் சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருகிறார். அமெரிக்காவில் அதிபர் டிரப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசியதை பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் செயல்பாட்டையும் பாராட்டினார்.

    அது மட்டுமின்றி கேரள மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசையும் பாராட்டினார். சசிதரூரின் இந்த செயல்பாடு காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்தநிலையில் பிரதமர் மோடியை சசிதரூர் எம்.பி. மீண்டும் பாராட்டியுள்ளார்.

    "கோவிட்-19" காலக் கட்டத்தில் பல நாடுகளுக்கு "கோவிட்" தடுப்பூசிகளை வினியோகிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உதவியதாக கூறியி ருக்கும் அவர், அதற்கு பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சசிதரூர் எம்.பி. கூறியிருப்ப தாவது:-

    "கோவிட்-19" காலத்தில் உலகின் தடுப்பூசி மையமாக இந்திய திகழ்ந்தது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது. "கோவிட்" தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது வளரும் நாடுகளுக்கு இந்தியா, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வினியோகம் செய்தது.

    சமமான தடுப்பூசி வினியோகத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு இந்திய பங்களித்தது. தொற்றுநோயின் இருண்ட காலத்திலும், உலகளாவிய சுகாதார ராஜ தந்திரத்தில் இந்தியா தனது திறமையை வெளிப்படுத்தியது. நெருக்கடியான நேரங்களில் பல்வேறு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி வினியோகம் வெளிப்படுத்தியது.

    பணக்கார நாடுகள், தங்களின் சொந்த குடிமக்களுக்காக அதிக அளவிலான தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கு தங்களின் வளங்களை செலவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்பட வேண்டியிருந்தது. அவை ஏழை நாடுகளுக்கு வினியோகிக்கப்பட்டிருந்தால் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.

    இவ்வாறு சசி தரூர் கூறியிருக்கிறார்.

    சமீபத்தில் ஒரே மாதத்தில் இரண்டு முறை பிரதமர் மோடியை பாராட்டி சசி தரூர் பேசியிருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரத மரை பாராட்டியிருக்கிறார். சசிதரூரின் இந்த செயல்பாடு காங்கிரஸ் கட்சியின் தலை மைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு லட்டு சுமார் 20 கிராம் எடை கொண்டதாக உள்ளது.
    • லட்டுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் விசேஷமானது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேக லட்டு தயார் செய்து வருகின்றனர்.

    இந்த லட்டுகள் ஆதிவாசி கூட்டுறவு சங்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு கர்ப்பிணி பெண்களை பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஒரு லட்டு சுமார் 20 கிராம் எடை கொண்டதாக உள்ளது. செம்பருத்தி பூக்கள், வெல்லம், திராட்சை நல்லெண்ணெய் ஆகியவற்றை கொண்டு இந்த லட்டுகள் தயார் செய்யப்படுகிறது.

    சத்தான இந்த லட்டுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் விசேஷமானது என்பதால் தெலுங்கானாவில் அதிகளவில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும் 20 குவிண்டால் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.

    இந்த லட்டு தயாரிக்கும் பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஆதிவாசி மகிளா சங்கத் தலைவர் குமராம் பகுபாய் கூறுகையில்:-

    பிரதமர் மோடியின் பாராட்டு மகிழ்ச்சியை தருகிறது. எதிர்காலத்தில் அதிக ஆர்வத்துடன் கர்ப்பிணிகளுக்கான லட்டு தயாரிக்கும் தொழிலை விரிவுபடுத்த கடுமையாக உழைப்போம் என்றார்.

    • விஷால் சமீபத்தில் காசிக்கு தரிசனத்திற்காக குடும்பத்துடன் சென்று பின்னர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
    • நன்றி தெரிவித்த விஷாலுக்கு பிரதமர் மோடி பதில் பதிவிட்டிருந்தார்.

    தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் ஹீரோவான நடிகர் விஷால் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுபற்றி கடந்த மாதம் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தாலே அவர் அரசியலுக்கு வந்து விட்டதாக அர்த்தம். அதனால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். தீவிர அரசியலுக்கு வர இன்னும் காலமாகும் என்றார்.

    குடும்பத்தினருடன் காசிக்கு சென்ற விஷால்

    குடும்பத்தினருடன் காசிக்கு சென்ற விஷால்

     

    இந்நிலையில் காசிக்கு சென்ற விஷால் அங்கு செய்துள்ள புனரமைப்பு பணிகளை பார்த்து வியந்தார். இதற்காக பிரதமர் மோடியை பாராட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், "அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம்-பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களுக்கு தலை வணங்குகிறேன். வணக்கம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

     

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    இவரின் இந்த பதிவுக்கு பிரதமர் மோடியும் பதில் அளித்திருந்தார். அவர் தனது பதிவில் 'காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி அவர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததும் அவர் விஷாலுக்கு பாராட்டு தெரிவித்ததும் அரசியல் தளத்தில் பரபரப்பானது. அவர் பா.ஜனதாவில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.

     

    பிரதமர் மோடி - விஷால்

    பிரதமர் மோடி - விஷால்

    இதுபற்றி அப்போது விஷால் கூறும்போது, "நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேனே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது" என்றார்.

     

    விஷால்

    விஷால்

    இப்போது மீண்டும் அவர் பா.ஜனதாவில் இணையப் போவதாக தகவல் பரவி வருகிறது. பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி திண்டுக்கல் வருகிறார். அப்போது மோடி முன்னிலையில் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை விஷால் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. 

    • யோகா, ஆயுர்வேதம் உலகிற்கு புதிய நம்பிக்கை,
    • 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்தை பாரம்பரிய மருத்துவமுறையாக அங்கீகரித்துள்ளன.

    புதுடெல்லி:

    கோவாவின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியில் உள்ள பனாஜியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகிய 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

    அதன் பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- ஆயுர்வேதம் என்பது சிகிச்சை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. யோகா & ஆயுர்வேதம் உலகிற்கு புதிய நம்பிக்கை. ஆயுர்வேதத்தின் முடிவும் விளைவும் எங்களிடம் இருந்தது, ஆனால் சான்றுகளின் அடிப்படையில் நாங்கள் பின்தங்கியிருந்தோம். எனவே, இன்று நாம் 'தரவு அடிப்படையிலான ஆதாரங்களை' ஆவணப்படுத்த வேண்டும்.

    இந்த 3 நிறுவனங்கள் ஆயுஷ் சுகாதார அமைப்புக்கு வேகம் கொடுக்கும். 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்தை பாரம்பரிய மருத்துவ முறையாக அங்கீகரித்துள்ளன. மற்ற நாடுகளிலும் ஆயுர்வேதத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஆயுர்வேதம் சரியான வாழ்க்கை முறையை நமக்குக் கற்பிக்கிறது.

    நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை எப்படிப் பேணுவது என்பதற்கான வழிகாட்டி ஆயுர்வேதம் தான். 'ஒரே பூமிக்கு ஒரே ஆரோக்கியம்' என்ற எதிர்காலக் கண்ணோட்டத்தை உலகிற்கு முன் வைத்துள்ளோம். இதன் பொருள் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய பார்வை இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழில் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவி ரெட்டி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
    • கேஜிஎப் படங்களை தெலுங்கில் இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 87. அவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 1959 ஆம் ஆண்டு வெளியான 'சிப்பாயி கூத்துரு' படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைத்த அனைத்து வேடங்களையும் சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். இதுவரை 770க்கும் மேற்பட்ட படங்களில் சத்யநாராயணா நடித்துள்ளார். கடைசியாக மகேஷ் பாபுவின் 'மஹார்ஷி' படத்தில் நடித்திருந்தார்.

    தமிழில் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவி ரெட்டி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். இந்தப் படத்தில் கைகலா சத்யநாராயணா பேசிய 'சின்ன கல்லு, பெத்த லாபம்' என்ற வசனம் யாராலும் மறக்க முடியாது. மேலும் 'பெரியார்' படத்தில் பெரியார் அப்பா வெங்கடப்ப நாயக்கராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

    கடந்த 1996 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிபட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினார். இவர் தனது ராமா பிலிம்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஏராளமான படங்களை தயாரித்து உள்ளார்.

    கேஜிஎப் படங்களை தெலுங்கில் இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கைகலா சத்யநாராயணா மறைவு வேதனை அளிக்கிறது. தனது குறிப்பிடத்தக்க நடிப்பு திறன் மற்றும் மாறுபட்ட பாத்திரங்களுக்காக தலைமுறைகள் கடந்து பிரபலமானவர் சத்யநாராயணா. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

    • சீக்கிய மத குருக்களில் 10வது மற்றும் மிகவும் முக்கியமானவர் குரு கோபிந்த் சிங்.
    • அவுரங்கசீப்பும் அவரது மக்களும் வாள் மூலம் குரு கோபிந்த் சிங்கின் குழந்தைகளை மத மாற்றம் செய்ய முயற்சித்தனர்.

    புதுடெல்லி:

    சீக்கிய மத குருக்களில் 10வது மற்றும் மிகவும் முக்கியமானவர் குரு கோபிந்த் சிங். இவரின் நினைவாக 'வீர் பல் திவாஸ்' தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

    அவுரங்கசீப்பும் அவரது மக்களும் வாள் மூலம் குரு கோபிந்த் சிங்கின் குழந்தைகளை மத மாற்றம் செய்ய முயற்சித்தனர். ஆகையால் தான் அவுரங்கசீப் குரு கோபிந்த் சிங்கின் 2 குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்தார்.

    அவுரங்க சீப்பின் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற அவரின் திட்டத்திற்கு எதிராகவும் குரு கோபிந்த் சிங் மலை போல் நின்ற அந்த காலத்தை நினைத்து பாருங்கள் என்றார்.

    • டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • ரிஷப் பண்ட் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.

    டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.

    தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானதை அறிந்து வேதனை அடைந்தேன், அவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட கோரி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
    • கடலாடி வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    கடலாடி பா.ஜ.க. சார்பில் முத்தாலம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில் 3-வது முறையாக 2024-ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமையவும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட கோரியும் 124 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கடலாடி வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் வெற்றி மாலை, ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்சாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

    இதில் மாணவர்களின் சிலம்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொருளாளர் ஜெயராமலிங்கம், மாவட்ட தரவு மேலாண்மைச் செயலாளர் ஹரிஹரன், ஒன்றிய செயலாளர்கள் முருகன், மேகஜோதி, மூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர்கள் சபரிநாதன், முத்துமாரி, மாணிக்க மீனாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • மதுரை பறக்கும் மேம்பாலத்தை பிரதமர் மோடி 8-ந் தேதி திறந்து வைக்கிறார்.
    • இன்று (5-ந் தேதி) பறக்கும் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.

    மதுரை

    தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மதுரை தல்லாகுளம் - ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து, நத்தம் வரை 35 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

    இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்த பறக்கும் பாலத்தின் அடியில் 150 அடி இடைவெளியில் பலமான அஸ்திவாரத்துடன் 268 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. தூண்களின் இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் 'கான்கிரீட் கர்டர்கள்' பொருத்தப்பட்டுள்ளன.மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், மதுரையில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு செல்லும் பயணத் தொலைவை குறைக்கும் வகையிலும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது.

    இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும். இதே போல் இந்த பாலத்தின் வழியாக சென்னை செல்வோர்பயண நேரம் 1 மணி நேரம் குறையும்.

    இந்த நிலையில் வருகிற 8-ந் தேதி சென்னையில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக இந்தப் பாலத்தை திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு இன்று (5-ந் தேதி) பறக்கும் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இதையொட்டி வாகன ஓட்டிகள் பறக்கும் மேம்பாலம் வழியாக ஆர்வமுடன் சென்று வருகின்றனர்். இந்தப் பாலம் தமிழகத் திலேயே மிக நீண்ட பாலமாக கட்டப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.
    • கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம்:

    கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, 100 சதவீதம் வழங்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு 'ஜல் ஜீவன்' திட்டத்தை கொண்டு வந்தது.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் 'பிரதமர் விருது' காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.

    காஞ்சிபுரம் மாவட்டத் தில், 'ஜல் ஜீவன்' திட்டம் தொடங்கியபின், புதிதாக 1.16 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுவதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022 அக்டோபரில் இத்திட்டப்பணிகள் முடிவுற்றன. இதுமட்டுமல்லாமல், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர். கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதை கண்காணிக்க வேண்டும். 'பைப் லைன்' பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மாற்றுக் கட்சியினரை கவர்ந்த பிரதமர் மோடியின் மனதின் குரல்.
    • திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி செல்வேந்திரன் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    மதுரை

    மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமாரின் வன்னி வேலம்பட்டி கிராமத்தில் பிரதமர் மோடியின்

    100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதனை அவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் சுப்பலா புரம் சென்றார். அங்கு திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி செல்வேந்திரன் பா.ஜ.க.வில் இணைந்தார். இதில் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் காளி தாஸ், மண்டல் தலைவர் சாமி ரங்கையா, துணை தலைவர் அய்யனார் கண்ணன், பொதுச் செயலாளர் கருப்பசாமி, நிர்வாகிகள் செல்வம், திருப்பதி, சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மேற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்பட 320 இடங்களில் பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பானது .

    ×