என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protection"

    • உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பணியாளர்க ளுக்கான விழிப்பு ணர்வுக்கூட்டம் நடை பெற்றது.
    • பாதுகாப்பு முறையில் மோட்டார் வாகனம் மூலம் மட்டும் கழிவுநீர் அகற்றவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பணியாளர்க ளுக்கான விழிப்பு ணர்வுக்கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் வாசுதேவன் கூறுகையில், நகராட்சியில் உரிய அனுமதி பெறாத வாகனங்கள் ஏதுவும் செப்டிக்டேங்க் எடுப்பதற்கு அனுமதிக்கப்படாது ,கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிய நடைமுறையைப் பின்பற்றா மல் சாலை ஓரங்கள், நீர்நிலைகள்,ஓடைகள் மற்றும் இதர பகுதிகளில் கொட்டு வதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் அகற்றுவது சம்பந்தமாக தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகர ணங்கள் அணிந்து பாதுகாப்பு முறையில் மோட்டார் வாகனம் மூலம் மட்டும் கழிவுநீர் அகற்றவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஈடுப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

    • ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • முத்துப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    தில்லைவிளாகம் அடுத்த ஜாம்புவானோடை தெற்கில் நாககாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், கஞ்சிவார்த்தல் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி ஊராட்சி மன்றம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன
    • மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. மடிவீக்க நோயால் கறவை மாடுகள் பாதிக்கின்றன என பால் உற்பத்தியாளர்கள் கூறி வரும் நிலையில் பொங்கலூர் கே.வி.கே., திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவ அறிவியல் துறை இணை பேராசிரியர் சித்ரா விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மடிவீக்க நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்த வழிமுறைகளை விளக்கினார். மாட்டுத்தொழுவம், அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைக்க வேண்டும். சாணம், சிறுநீர் தேங்காமல் உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும்.

    கறவைக்கு முன், கறவை மாடுகளின் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமிநாசினி மருந்தை தண்ணீரில் கலந்து நன்கு கழுவி உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால் கறப்பவரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறந்தவுடன் மாடுகள் உடனடியாக படுத்தால் மடி நோய் ஏற்படும். எனவே அவை படுக்காமல் இருக்க பசுந்தீவனம் அல்லது உலர் தீவனம் ஏதாவது ஒன்றை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பாலை கன்றுகள் குடிக்கும் போது தீவிர இதய தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும்.

    சோற்று கற்றாழையை 250 கிராம் அளவுக்கு சிறு, சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் 50 கிராம் விரலி மஞ்சள், 5 கிராம் சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து, நன்கு அரைத்து இந்த கலவையை 100 மி., தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட மாடுகளின் மடிப்பகுதி முழுக்க, நோய் தாக்குதல் குறையும் வரை தினமும் 8 முதல் 10 முறை பூச வேண்டும்.

    நோய் தாக்குதல் அதிகமாக இருந்தால் கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் கதிரவன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இளம்வயதில் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • திருத்துறைப்பூண்டியில் நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆறு, ஏரி, குளங்கள் ஆகியவை உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ஆறுகள் தினத்தையொட்டி நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுத்தை வெளியிட்டு பேசுகையில்:-

    ஆறு, ஏரி, குளங்கள் போன்றவை அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.

    இவைகளை நாம் மாசுபடாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச்செல்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

    நாட்டின் வளத்திற்கு ஆறுகளே பெரும் பங்கு வகிக்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் கோமதி செந்தில்குமார், கணக்காளர் முத்து மீனாட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் நலன் குறித்து விசாரணை
    • தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தொழிலாளர் துறையின் தொழிலக ஆய்வக பிரிவு அதிகாரி முரளி தலை மையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பாய்லர்கள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதில் 14 தொழிலாளர்கள் உடல் கருகி படுகாயமடைந்தனர். இவர்களில் 11 பேர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த சம்பவம் காரணமாக காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு ள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தொழிலாளர் துறையின் தொழிலக ஆய்வக பிரிவு அதிகாரி முரளி தலை மையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    தீ விபத்து நடந்த ரெக்கவரி யூனிட், டிரை யூனிட் பகுதிகளில் தடயங்களை சேகரித்து ஆய்வகத்துக்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்த அதிகாரிகள், விபத்து குறித்து விளக்கி ஆய்வறி க்கையை ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அந்த தொழிற்சாலையில் மருந்து உற்பத்திக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையாணை நோட்டீஸ் கம்பெனியின் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்களை கொண்டு ஆராயவும் புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

    தீ விபத்து தொடர் பாகவும், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தர விட்டுள்ளனர். தொழிற்சாலை பாதுகாப்பு தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தொழிற்சாலையை நடத்த அனுமதியளிப்பது குறித்து அரசு முடிவு செய்யும். இதனிடையே காலாபட்டில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.இதனால் தொழிற்சாலை முன்பும், சுற்றுப்புற கிராமங்களிலும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

    • இரவில் தலைகுளியல் மேற்கொண்டால் படுக்கை செல்லுவதற்கு மூன்று மணி நேரம் முன்பே தலைக்குளியல் செய்துவிடுங்கள்.
    • சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து இழைகளை பாதுகாத்து கொள்வது அவசியம்.

    சூரியனிலிருந்து வரும் வெப்பம் கூந்தலுக்கு அதிக ஆக்ஸிஜனேற்ற சேதத்தை உண்டாக்குகிறது. இது உலர்ந்த உடையக்கூடிய மற்றும் கடினமான கூந்தலை உண்டாக்குகிறது. ஏற்கனவே பளபளப்பாக இருக்கும் கூந்தலே சூரியனின் வெப்பத்தால் பல விளைவுகளை சந்திக்கும் போது வறட்சியான கடினமான கூந்தலின் நிலை இன்னும் மோசமானதாக ஆகிவிடுகிறது. ஹேர் கலர் செய்த கூந்தல் மங்கலான தோற்றத்தில் மாறிவிடுகிறது. வெளுத்து வெண்மையாகிவிடுகிறது. இந்த காலத்தில் முடியை பாதுகாக்கும் முறைகள் குறித்து பார்க்கலாம்.

    சூரியனின் புற ஊதாக்கதிர்கள் முடியை உலர்த்தி விட செய்யும். இது கூந்தல் இழையின் மென்மையான அல்லது வெளிப்புற அடுக்கை கடினமாக்குகிறது. இது ஃப்ரீஸ் முடியை கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் சிக்கலான பிரச்சனை வர செய்கிறது. இது முடி உதிர்தலை அதிகமாக்குகிறது.

    கோடையின் வெப்பத்தை தணிக்க நீச்சலில் ஈடுபடும் போது அது மேலும் கூந்தலின் எண்ணெய்ப்பசையை நீக்க செய்கிறது. மேலும் இதில் உள்ள குளோரின் கூந்தலில் இருக்கும் ஈரப்பசையை வெளியேற்ற செய்கிறது. அதிகமான வெப்பத்தால் பாதிக்கப்படும் முடியை எப்படி பராமரிப்பது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


    கோடைக்காலத்தில் முதலில் முடி பிளவை கட்டுப்படுத்துங்கள். அவை வராமல் தடுக்க முன்கூட்டியே கூந்தலை வெட்டி விடுவது பாதுகாப்பானது. அதே நேரம் குளிர்காலத்தை காட்டிலும் கோடைக்காலத்தில் முடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

    அதனால் பெண்கள் தங்கள் கூந்தலின் நுனியில் சிறிதளவு வெட்டி விடுவது நல்லது. ஆண்களும் கழுத்துவரையிலும் காது வரையிலும் ஒட்டியிருக்கும் முடியை மேலும் வளரவிடாமல் வெட்டிவிடுவது நல்லது.

    சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து இழைகளை பாதுகாத்து கொள்வது அவசியம். அதனால் கூந்தலுக்கு முடி பராமரிப்பு பொருளை பயன்படுத்துவதை தினசரி வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்களின் தன்மைக்கேற்ப ஜெல் அல்லது க்ரீம் வகைகளாக இருக்கலாம்.

    இது சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து சேதத்தை தவிர்க்கலாம். இது கலரிங் செய்த முடிக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. உங்கள் பணி அதிகம் வெயில் என்றால் நீங்கள் கூந்தலின் உச்சந்தலையை முழுமையாக மறைக்கும் தொப்பியை அணிவது அவசியம். இது உச்சந்தலையை பாதுகாப்பதோடு சரும புற்றுநோயையும் தடுக்க செய்யும்.

    தலை குளியலுக்கு முன்பு கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்க செய்யுங்கள். குறிப்பாக கண்டிஷனர் பயன்படுத்திய பிறகு என்றால் அது நீங்கள் உப்புநீரில் குளித்தாலும் ரசாயனங்களை உறிஞ்சாது. குறிப்பாக நீங்கள் நீச்சல் குளங்களில் குளிப்பதாக இருந்தால் இது பாதுகாப்பானது. இயற்கை பொருள்களையும் பயன்படுத்தலாம்.

    உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப நீங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் கோடையில் வெளியேறும் வியர்வை பிரச்சனைக்கு நீங்கள் கண்டிப்பாக ஈரப்பதம் அளிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷரை பயன்படுத்த வேண்டும். வியர்வை பிரச்சனையில் கோடையில் வாரம் இரண்டு நாள் வரை நீங்கள் தலைகுளியலை மேற்கொள்வீர்கள்.

    அதனால் இரசாயனம் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கூந்தலின் அடி அடுக்குவரை கண்டிஷனிங் செய்வதை உறுதி செய்யலாம்.


    சூடான கருவிகள் பொறுத்தவரை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை தலைமுடிக்கு சூடான கருவிகள் பயன்படுத்துவதன் மூலம் முடியின் ஈரப்பதம் மேலும் குறைகிறது.

    இரவில் தலைகுளியல் மேற்கொண்டால் படுக்கை செல்லுவதற்கு மூன்று மணி நேரம் முன்பே தலைக்குளியல் செய்துவிடுங்கள். பிறகு தூங்குவதற்கு முன்பு தலையை பின்னலிட்டு தூங்குங்கள். இது கூந்தல் இழைகள் ஒன்றோடொன்று உரசி பாதிப்பில்லாமல் செய்வதை தடுக்கும்.

    அழகான கூந்தல் அலங்காரத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம். ஆனால் கோடைக்காலத்தில் இதை அதிகமாக செய்ய வேண்டாம். கூந்தலை சிக்கில்லாமல் வைக்க போனிடெயில் அல்லது எளிதான பின்னல் மூலம் அலங்காரத்தை முடிவு செய்யுங்கள்.

    முடி ஃப்ரீஸ் ஆவதற்கு எதிரான பாதுகாப்பை நீங்கள் செய்து கொள்வதன் மூலம் கூந்தலின் ஈரப்பதத்தை காக்கலாம். இந்த காலத்தில் கூந்தல் நிபுணரின் ஆலோசனையின் பெயரில் கூந்தலை மென்மையாக்கும் எண்ணெய், சீரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கண்டிப்பாக தரமானதாக பயன்படுத்துங்கள்.

    • சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
    • சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவலாம்.

    நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றிநோய் ஏற்படவும் காரணமாகிறது.

    * இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கிவிடலாம்.

    * நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந்துபோக வாய்ப்பு அதிகம். நகம்வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்டவேண்டும்.


                             * சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத்தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும்.

    * நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வே ண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    * சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

    * சமையலறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச் சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

    • ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுகிறது.
    • பனைஓலை மற்றும் தார்பாய்களை கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை 9 மாத காலம் உப்பு உற்பத்தி நடைபெறும் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகம் முழுவதும் லாரி மூலம் அனுப்பிவைக்கபடுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு உற்பத்தி துவங்கி முதல் செப்டம்பர் மாதம் வரை விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முனபு பெய்த மழைக்கு பின்பு கடந்த ஒரு வாரத்திற்கு பின் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் துவங்கபட்டது கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கபட்டது.

    மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்க சத்தியமில்லாத நிலையில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சேமித்து வைத்துள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க பனைஓலை மற்றும் தார்பாய்களைக் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    குறைந்த அளவே உப்பு கையிருப்பில் உள்ளதால் நல்ல விலை போகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பணிகளில் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோரின் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததும் விலக்கி கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முறையான அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு 2 ஆண்டு களுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தற்போதே முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி மாநிலம் முழுவதும் இந்து இயக்கங்களை சேர்ந்த 89 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இந்து இயக்கங்களை சேர்ந்த 5 பேருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.சென்னை வேப்பேரி, சூளை கூட்டான்குளம் பகுதியில் வசித்து வரும் பாரத் இந்து முன்னணி அமைப்பின் கிளை தலைவர் ஆர்.டி.பிரபு, பாரத் முன்னணியை சேர்ந்த அகில பாரத இந்து அமைப்பை சேர்ந்த விருகை சிவகுமார், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முகுந்தன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான பாத்திமா ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்து இயக்க பிரமுகர்கள் 89 பேருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் தனிப்பட்ட பாதுகாப்பு பணியை காவலர்கள் தொடங்கியுள்ளனர். இந்த பாதுகாப்பு பணிக்காக 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள 89 பேரில் பெரும்பாலானோரின் பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததும் விலக்கி கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நல்ல முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். சிலைகள் அமைக்கப்படும் இடங்களிலும், அவர்கள் இதர ஏற்பாடுகளை செய்வ தற்காக வெளியில் செல்லும் இடங்களிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும், இதனால் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருதியும் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.
    • கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர், போலி ஆதார் ஆவணங்களை தயாரித்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.

    இந்நிலையில் பாதிக்க ப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கருமுட்டை தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கருமுட்டை தான செயல்முறைக்கு என புதிய விதிமுறைகளை இயற்ற வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    அப்போது கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர்கள் எஸ். எம்.செந்தில், ஈஸ்வரமூர்த்தி, வேதா னந்தம், வக்கீல் அணி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் சின்னத்துரை, குணசேகரன், பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி,

    தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்தி சுப்பிரமணி, செல்வமணி, இந்திரகுமார், ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை, அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன், துணைத் தலைவர் ரவீந்திரன் உள்பட பா.ஜனதா கட்சி பிரிவு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் டாக்டர்.அருணாசலம் தலைமை தாங்கினார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றுப்பேசினார். முன்னாள் செயலாளர் ஆசிரியர் விஸ்வநாதன், துணைச்செயலளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுந்தப்பாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லமுத்து வரவு-செலவு கணக்கு வாசித்தார். மாநில அளவில் கரும்பு விளைச்சலில் சாதனைபடைத்த அரியப்பம்பாளையம் விவசாயி குமார், வேம்பத்தி விவசாயி ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    பெங்களூரில் இந்திய அளவில் நடைபெற்ற தட்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலயாவில் நடைபெறும் சர்வதேசஅளவிலான தட்டெறிதல் போட்டிக்கு தேர்வு பெற்ற தலைமை காவலர் சரவணக்குமார், சென்னை நேருவிளையாட்டு அரங்கில் இந்திய அளவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-ம் பிடித்த சண்முகம் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், சலங்கபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ராமலிங்கம், தலைைமயாசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×