என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Research"

    • இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது.
    • சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை விட நல்ல நிலையில் உள்ளன.

    பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து 33 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்துள்ளது . அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் 'Future Free Speech' என்னும் அமைப்பு பேச்சு சுதந்திரம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது.

    பட்டியலில் நார்வே (87.9), டென்மார்க் (87.0), ஹங்கேரி (85.5) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஹங்கேரி (85.5) மற்றும் வெனிசுலா (81.8) போன்ற சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை  விட நல்ல நிலையில் முன்னிலையில் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரசின் கொள்கைகளை விமர்சிப்பது குறித்த பேச்சு சுதந்திரம் உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. தனிப்பட்ட பேச்சு, ஊடகம் மற்றும் இணையம் தொடர்பான தணிக்கை ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    • தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
    • மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகரில் கழிவு நீா்க் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.இதையடுத்து, தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது, சாக்கடைக் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா, மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.  

    • இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி தேர்ச்சி சதவீதம் குறைந்த பாடங்கள், பள்ளிகள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதுசார்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் எடுத்துரைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தால், அதற்கான காரணத்தை உரிய ஆசிரியரே குறிப்பிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான தீர்வையும், அந்த ஆசிரியரே தெரிவிக்க வேண்டும். அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு நடத்தினார்.
    • கூடுதலாக இந்த பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 386 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 19 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

    கூடுதலாக இந்த பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    பள்ளி மைதானம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

    • தாமரைக்குளத்தில், தற்போது நடைபெற்று வரும் மராமத்து பராமரிப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
    • குளத்தின் அளவீடுகள், தாமரை குளத்திற்கான நீர்வழிப்பாதைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆய்வு மேற்கொண்டனர்.

    அவிநாசி:

    அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தாமரைக்குளத்தில், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.இதில் குளத்தின் கரைகள் உறுதித் தன்மை, குளத்தின் அளவீடுகள், தாமரை குளத்திற்கான நீர்வழிப்பாதைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் தாமரைக்குளத்தில், தற்போது நடைபெற்று வரும் மராமத்து பராமரிப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். தாமரைக்குளத்தின் மதகு பகுதியில் இருந்துஉபரிநீர் வெளியேறும் ராஜவாய்க்காலை தூர்வாரி அதன் நீர் வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.விரைவில் இதற்கான சர்வே நடத்தப்படும் என்று உதவி பொறியாளர் கூறினார்.

    • சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் அழுகி மட்கும் நிலையில் உள்ளது.
    • ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக மாநில அரசு நிதி வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் நல்லோர் வேட்டங்குடி மாதானம் இடமணல் பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிரை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறுகையில்,

    மயிலாடுதுறை மாவ ட்டத்தில் வரலாறு காணாத அளவில் 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது.

    ஒட்டுமொத்த மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழி, தரங்கம்பாடி வட்டப் பகுதிகள் கடல் போல காட்சியளிக்கின்றன. மழை பெய்து ஒரு வாரம் கடந்த நிலையிலும் கிராமப் பகுதிகளில் மழை நீர் வடியவில்லை.

    விளை நிலங்களில் தேங்கிய நீர் சிறிதும் வடியாத காரணத்தால் கதிர் வரக்கூடிய நிலையிலிருந்த சம்பா நெற் பயிர்கள் அனைத்தும் அழுகி மட்கும் நிலையில் உள்ளது.

    இனி இந்த பயிர்கள் பிழைப்பதற்கோ, மறு உற்பத்திக்கோ வாய்ப்பில்லை.

    தமிழக அரசு பேரிடர் மேலாண்மை திட்டத்தில், கடந்த 2020-21-ம் ஆண்டில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்கியுள்ளது.

    தற்போ தைய உர விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக பேரிடர் மேலாண்மை திட்ட நிதியிலிருந்து மா நில அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    இப்பகுதியில் புதிய வடிகால் அமைப்பதற்கான திட்டம் நிலுவையில் உள்ள தாகக் கூறப்படுகிறது.

    அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம் தொடர்ந்து பேரிடர் பாதிக்கக் கூடிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    • மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜா உள்பட வட்டாரச் செயலாளா்கள், கல்வி மாவட்டப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.
    • வாரத்தில் 7 நாட்களும் பணி செய்து வருவதால் கடும் மன உளைச்சலில் பணி செய்ய வேண்டியது இருக்கின்றது.

     திருப்பூர்:

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்றது.மாவட்டச்செயலாளா் பிரபு செபாஸ்டியன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் பா.ஜெயலட்சுமி வரவு - செலவு அறிக்கை வாசித்தாா். இதில், மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜா உள்பட வட்டாரச் செயலாளா்கள், கல்வி மாவட்டப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    கல்வித் துறையில் வட்டார மற்றும் மாவட்ட அலுவலா்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், மண்டல ஆய்வுக் கூட்ட குழுக்களின் ஆய்வுகள், மாநில இயக்குநா்கள் ஆய்வு, ஒரே நாளில் வட்டாரத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் குழு ஆய்வு, மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு, வருடாந்திர பள்ளி ஆண்டாய்வு, பள்ளிக் கல்வி அமைச்சா் தலைமையில் குழு ஆய்வு, பள்ளிக் கல்வி துணை மற்றும் இணை இயக்குநா்கள் ஆய்வு, பள்ளிக் கல்வி ஆணையா் ஆய்வு என மாறி மாறி தொடா்ந்து குழு ஆய்வுகள் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன.

    ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆய்வுகள் நடைபெறும்போது, ஒவ்வொரு ஆய்வாளரும், ஒவ்வொரு ஆய்வுக்குழுவும் பலவிதமான ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கூறி வருவதால், இயல்பான கற்றல் கற்பித்தல் பணிகளும், பள்ளி நடைமுறைகளும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன.கடந்த 3 மாதங்களாக வாக்குச்சாவடி அலுவலராக (பிஎல்ஓ) பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஓய்வு இல்லை.வாரத்தில் 7 நாட்களும் பணி செய்து வருவதால் கடும் மன உளைச்சலில் பணி செய்ய வேண்டியது இருக்கின்றது.

    இது போன்ற கூடுதல் பணிச்சுமையால் ஆசிரியா்களின் குடும்பமும், உடல் நலமும், கற்றல் கற்பித்தலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. கற்பித்தல் பணி சிறக்க பி.எல்.ஓ பணியில் இருந்து ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் நெற்குப்பை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையினை எதிர்நோக்கி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஓய்வு அறை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, திருப்பத்தூர்-காரைக்குடி ரோடு வார்டு 10ல் கைவண்டி மூலம் முதல்நிலை சேகரம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ம் ஆண்டின் கீழ் ரூ.195 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் தென்மாபட்டு பகுதியில், தூய்மை பாரத திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிடம், புதுப்பட்டி வார்டு2-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் மருதாண்டி ஊரணியில் ரூ.53.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாதை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சித் தலைவர்கள் கோகிலாராணி (திருப்பத்தூர்), புசலான் (நெற்குப்பை), அம்பலமுத்து (சிங்கம்புணரி), உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பேரூராட்சி துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • மேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர்.
    • அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயந்தி, டாக்டர்கள் செந்தில்குமரன், கார்த்திக், ஆனந்தி, திவ்ய ஷாலினி, ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    மேலூர்

    மேலூர் அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை சார்பாக காயகல்பம்-2022 திட்டத்தின் கீழ் தேசிய நல்வாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளரும், தென்காசி அரசு மருத்துவமனையின் டாக்டருமான கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் காளிராஜ், செவிலியர் அலமேலு மங்கயற்கரசி ஆகியோர் மேலூர் அரசு மருத்துவமனை வளாகம், உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, சமையல் அறை, பிரசவ வார்டு, மருத்துவ அறை, பரிசோதனை ஆய்வு கூடம், அலுவலகம் ஆகியவை தூய்மையாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.

    அப்போது மேலூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயந்தி, டாக்டர்கள் செந்தில்குமரன், கார்த்திக், ஆனந்தி, திவ்ய ஷாலினி, ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • வேளாண் திட்டப்பணிகளை இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • உரங்களுடன் மற்ற இணைப்பு பொருள்களை வாங்க விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தினார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் சேர்ந்து 18 ஏக்கர் தரிசு நிலத்தை தொகுப்பாக பதிவு செய்தனர். வேளாண் துறையின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து தரப்பட்டது. விவசாயிகள் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி சோளம் பயிர் செய்திருந்தனர்.

    அதனை வேளாண்மை இணை இயக்குநர் சரசுவதி தரிசு நிலத் தொகுப்பில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்தார். தரிசு நிலத்தில் இருந்து கருவேலம் மரங்களை அகற்றி விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.இதே போல் முஷ்டகுறிச்சி பகுதியிலும், பசும்பொன் கிராமத்தில் விவசாயி ராஜம்மாள் அமைத்திருந்த விதைப் பண்ணையையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, கமுதி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி, உதவி விதை அலுவலர் சரவணன், உதவி வேளாண்மை அலுவலர் உதயலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர் இந்துமதி, தொழில்நுட்ப வேளாண்மை மேலாண்மை முகமை அலுவலர் ஈசுவரி ஆகியோர் உடனிருந்தனர். அபிராமத்தில் உள்ள உரக்கடைகளை ஆய்வு செய்த இணை இயக்குநர் சரசுவதி கடை உரிமையாளர்களிடம் உரங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டும் விற்க வேண்டும், கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது, உரங்களுடன் மற்ற இணைப்பு பொருள்களை வாங்க விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தினார்.

    • பொதுப்பணி-நெடுஞ்சாலைத்துறை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
    • சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும், மருதடியில் உள்ள ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களின் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிாியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அவர் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் இருந்து அருமடல் வரை 3 கி.மீ. தூரத்திற்கு ஒருவழித்தடமாக இருந்த சாலையை அகலப்படுத்தி விரிவுபடுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறையால் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரிவு சாலையை பார்வையிட்டு, அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து, சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

    • தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கழிவறையினை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.
    • மேலும் பல்வேறு பணிகளை குறித்து ஆய்வு செய்து நடடிக்கை மேற்கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்ஆய்வில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உடனிருந்தார்.

    திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட, பாமணி ஊராட்சியில் ரூ.21.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும், பாமணி ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுவரும் கழிவறையினையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    திருத்துறைப்பூண்டி ஒன்றியம், பாமணி ஊராட்சி, அம்பேத்கர் காலணியில் 150 மீட்டர் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவருவதையும் ஆய்வு செய்து பணிகள் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாமணி ஊராட்சியில், ரூ.7.16 லட்சம் மதிப்பீட்டில் நெல் உலர்த்தும் கலம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பாமணி ஊராட்சியில் அங்கான்வாடி மையத்திலுள்ள குழந்தைகளுடைய எடை, உயரம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.

    பாமணி ஊராட்சிக்குட்பட்ட செங்குந்தார் தெருவில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவது குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.

    அதனை தொடர்ந்து எடையூர் ஊராட்சிக்குட்பட்ட அரசினர் உயர்நிலைப்பள்ளியின் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவியர்களிடம் உணவு நல்ல முறையில் வழங்கப்படுகின்றனவா என்பதையும், அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கின்றனவா என்பதையும் கேட்டறிந்தார்.

    எடையூர் ஊராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நோயாளிகள் குறித்த பதிவேடுகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்.

    திருவாரூர் வட்டம், கூடூர் ஊராட்சி, மொசக்குளம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளை சந்தித்து திட்டம் குறித்து ஆய்வு செய்தார். நன்னிலம் ஒன்றியம், முடிகொண்டான் சமத்துவபுரம் பகுதியில் பழுதடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இவ்ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் கீர்த்தனா மணி, சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவல ர்கள் உடனிருந்தனர்.

    ×